Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈஸ்டர் விடுமுறையில் செல்வதற்காக 29 கர்ப்பிணிகளுக்கு அறுவைசிக்கிச்சை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

கேரளாவில் இரண்டே நாளில் 29 கர்ப்பிணிகளுக்கு சிசேரியன்: விசாரணைக்கு உத்தரவு

திருவனந்தபுரம்: விடுமுறையில் செல்வதற்காக 2 நாளில் 29 கர்ப்பிணிகளுக்கு பிரவச தேதிகளுக்கு முன்பாகவே டாக்டர்கள் சிசேரியன் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கேரளாவில் ஆழப்புழா மாவட்டம் சேர்த்தலாவில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு மகளிர் பிரிவில் 5 பெண் டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். இந்த மருத்துவமனைக்கு அந்த பகுதியைச் சேர்ந்த மீனவ குடும்பத்தினர் அதிகளவில் வருகின்றனர். இங்கு பிரவச அறுவை சிகி்ச்சை வசதியும் உள்ளது.

இந்த மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகளில் 30 பேருக்கு வரும் 24-ம் தேதி வரை பிரவச தேதி குறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் 29 கர்ப்பிணிகளுக்கு அவசர அவசரமாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து குழந்தை வெளியில் எடுக்கப்பட்டது.

இதனால் மருத்துவமனையில் போதிய இட வசதி இல்லாமல் அறுவை சிகி்ச்சை செய்யப்பட்ட பெண்களும், குழந்தைகளும் தரையில் படுக்க வைக்கப்பட்டது

பற்றி அவர்களின் உறவினர்கள் மருத்துவ கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர்.

விசாரணையில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. நேற்று புனித வெள்ளி என்பதால் அரசு விடுமுறை. அத்துடன் சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை. வியாழக்கிழமை ஒருநாள் விடுமுறை எடுத்தால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

இதனால் டாக்டர்கள் விடுமுறையில் செல்வதற்காக 2 நாளில் அவசர அவசரமாக பிரவச தேதிக்கு முன்பாகவே கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பின்னர் 5 டாக்டர்களில் 4 பேர் 21-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு விடுமுறையில் சென்று விட்டனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த சுகாதார துறை இயக்குனருக்கு அமைச்சர் ஸ்ரீமதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நன்றி தற்ஸ்தமிழ்.

வைத்தியர்கள் விடுமுறையை உல்லாசமாக கொண்டாடிக் கொண்டிருக்கும் போது... பிரசவ வலி ஏற்பட்டு தங்கள் விடுமுறை பாழாகி விடுமோ.. என்று, நிறைமாத கர்ப்பிணிமார் எல்லாருக்கும் ஒப்பரேஷன் பண்ணிய டாக்டர்களின் செயலை என்னவென்பது. :o

Edited by தமிழ் சிறி

திகதிகள் குறிக்கப் பட்டாலும், பிரசவ வலி எடுக்கும் முன்பு கர்ப்பிணிகள் ஏன் மருத்துவமனைக்கு சென்றார்கள்? :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திகதிகள் குறிக்கப் பட்டாலும், பிரசவ வலி எடுக்கும் முன்பு கர்ப்பிணிகள் ஏன் மருத்துவமனைக்கு சென்றார்கள்? :unsure:

வீட்டிலை, ஆக்கினை தாங்க முடியாமல் சென்றிருப்பார்களோ... :D

திகதிகள் குறிக்கப் பட்டாலும், பிரசவ வலி எடுக்கும் முன்பு கர்ப்பிணிகள் ஏன் மருத்துவமனைக்கு சென்றார்கள்? :unsure:

இந்தியா , இலங்கை போன்ற நாடுகளில் பாதைகள் சரியாக இருக்கது குத்து வலி வந்ததும் உடனே போவதுக்கும் , 2வது பெண்பிள்ளைகள் என்றால் சொன்ன திகதிக்கு லேட்டாகவும் பிறப்பார்கள்.

அதே நேரம் வந்தவர்களை ஏன் சொன்ன தேகதிக்கு முந்திவருகிறீகள் என்று மருத்துவமனை அனுப்பவும் முடியாது.

இந்தியா , இலங்கை போன்ற நாடுகளில் பாதைகள் சரியாக இருக்கது குத்து வலி வந்ததும் உடனே போவதுக்கும் , 2வது பெண்பிள்ளைகள் என்றால் சொன்ன திகதிக்கு லேட்டாகவும் பிறப்பார்கள்.

அதே நேரம் வந்தவர்களை ஏன் சொன்ன தேகதிக்கு முந்திவருகிறீகள் என்று மருத்துவமனை அனுப்பவும் முடியாது.

தனியார் மருத்துவ மனைகளில் திருப்பி அனுப்ப மாட்டார்கள் தான் ஆனால் செய்தியில் அரசு மருத்துவமனை என்று இருக்கே... அங்கும் திருப்பி அனுப்ப மாட்டார்களோ? :unsure::rolleyes:

வீட்டிலை, ஆக்கினை தாங்க முடியாமல் சென்றிருப்பார்களோ... :D

:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.