Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தயான் ஜெயதிலக அர்ஜெண்டன் நகரிலிருந்து பின்வாங்குகிறார். தமிழீழ மக்களை நேரில் சந்திக்க அச்சமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தயான் ஜெயதிலக அர்ஜெண்டன் நகரிலிருந்து பின்வாங்குகிறார். தமிழீழ மக்களை நேரில் சந்திக்க அச்சமா?

பிரான்சுக்கான சிறி லங்காவின் துதுவர் தயான் ஜெயதிலக அர்ஜெண்டன் நகரில்லிருந்து பின்வாங்குகிறார்.

தமிழீழ மக்களை நேரில் காண அச்சமா?

அர்ஜெண்டன் நகரில் ஏப்ரல் 29 முதல் மே 2ஆம் திகதி நடைபெற இருக்கும் QUASIMODO என்று அழைக்கப்படும் கண்காட்சி களியாட்ட நிகழ்விற்குசிறி லங்காவின் பிரான்சுக்கான தூதுவர் தயான் ஜெயதிலக இந்த நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் தான் பங்கேற்க முடியாது என்று தன் வருகையை ரத்து செய்திருக்கிறார்.

தனக்கு பதிலாக நான்கு ராஜதந்திரிகளை (Diplomates) யை அனுப்பி வைப்பதாக கூறியிருக்கிறார்.

ouest france பத்திரிகை பார்வையிட

இந்த நிகழ்வு நடைபெற இருப்பதாக ouest france பத்திரிகை (மார்ச் 2 ) மூலமாக அறிந்த நாளிலிருந்து பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையினர் தமது தொடர்பில் இருந்த அரசியல் கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநகர சபை நகரபிதாக்கள் அரசு சார்ப்பு அரசியல் சார்பற்ற அமைப்புகள் ஊடாகவும் தமிழீழ மக்கள் பேரவையினர்

"சிறி லங்கா சிறப்பு விருந்தினராக வரவேற்க பட வேண்டிய நாடா?"

என்ற கேள்வியுடன் அர்ஜெண்டன் நகர் பத்திரிகைகள் அரசியல் கட்சிகள் மாநகர சபை உறுப்பினர்கள் என்று அனைவருக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டன அத்துடன் நில்லாமல் அர்ஜெண்டன் நகருக்கே தமிழீழ உறவுகளை அழைத்து கொண்டு சென்று இதே கேள்வியுடன் அந்த நகர மக்களை ஏப்ரல் 9 ஆம் ஏப்ரல் 17 ஆம் திகதி சந்தித்து கதைத்தார்கள் அந்த நகரின் முக்கிய கல்விமான்களின் ஆதரவையும் பெற்றார்கள்

அத்துடன் அடுத்தநாள் அந்த நகரின் நகர பிதா திரு பிறீ பர்விஸ் மற்றும் அந்த பகுதியின் முக்கிய பத்திரிகையாகிய ouest France ஆசிரியரையும் சந்தித்தார்கள். நாம் இந்த சிறிய காலத்தில் தமிழீழ மக்களுடனும் தாய் தமிழகத்து உறவுகள் இருவரின் உதவியுடனும் செய்த முயற்சியினால்

இதுவரை காலமும் இந்த நிகழ்வை சிறப்பாக நடாத்த சிறி லங்கா அரசை சிறப்பிக்க பல தடவை அந்த நகரத்திற்கு விஜயம் செய்து அந்த நகர நகர பிதா செனட்டர் பிரதேச சபை தலைவர் என்று பல மட்ட அரசியல் தலைவர்களை சந்தித்த திரு தயான் ஜெயதிலக இந்த நிகழ்வுக்கு தான் வர முடியாது என்று பின்வாங்கி இருப்பது எமது அனைவரின் முயற்சிக்கு கிடைத்த பலன் எனலாம்.

இந்த செயல் திட்டத்தில் எம்மோடு தனிப்பட்ட முறையில் பலர் பிரான்சு நாட்டின் பலபகுதியில் இருந்தும் ஐரோப்பா மற்றும் சகல உலகநாடுகளில் இருந்தும் தமது கண்டனத்தை தெரவித்த எலோரினதும் முயற்சிக்கு கிடைத்த பலன் என்றே சொல்லலாம்.

இது எமக்கான வெற்றியல்ல அங்கே வர இருக்கும் சிறி லங்காவின் ராஜதந்திரிகளை அந்த நகரத்து வராமல் தடுப்பதும் அங்கே காட்சிக்கு வைக்கப்பட இருக்கும் சிறி லங்காவின் உற்பத்தி பொருட்களை பிரெஞ்சு மக்கள் புறக்கணிக்க வைப்பதே எமது போரரட்டத்தின் மிக பெரிய வெற்றி.

சிறி லங்காவை சிறந்த உல்லாச பயண நாடு என்பார்கள் மலையாக தமிழரின் இரத்தத்தாலும் வியர்வையாலும் உற்பத்தியாகும் சிறி லங்காவின் தேயிலை சிறந்தது என்பார்கள் ஒரு பக்கத்தில் தமிழ் மக்களை கொன்று குவித்து கொண்டும் அவர்களை அவர்கள் நிலத்திற்கு செல்லவிடாமல் தாமே நிலகண்ணிகளை புதைத்து விட்டு பாதுகாப்பு வலயம் என்கிறார்கள் அவர்களை ஏழ்மை நிலையில் வைத்திருந்து கொண்டு.

ஐக்கிய நாடுகள் சபை சிறி லங்கா போர்குற்ற நாடாக அறிக்கை விட தயாராகி கொண்டிருக்கும் நேரத்தில் சிறி லங்காவை சொர்க்க புரியாக காட்ட நினைக்கும் இந்த முயற்சியை முறியடிப்பது தான் எமக்கு கிடைக்கும் மிக பெரிய வெற்றி.

அன்பு தமிழ் உறவுகளே

லண்டன் மாநகரில் இருந்து போற்குற்றவாளி மகிந்த ராஜபக்சேவை துரத்தி துரத்தி ஒட வைத்தார்கள் இங்கிலாந்து வாழ் தமிழ் உறவுகள் பிரான்சில் ஏப்ரல் 30யில் இருந்து "APARTHEID SRI LANKA" "BOYCOTT SRI LANKA" என்று சிறி லங்கா உலக மனித உரிமை சட்டங்களை மதித்து தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமை தமிழ் மக்களின் நில பாதுகாப்பு தமிழீழ மக்களின் தேசிய வளங்களின் பாதுகாப்பு தமிழீழ மக்களின் தேசிய உரிமைகள் 1948க்கு முதல் தமிழ் மக்களிடம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தமிழ் மக்களிடம் கையளிக்கும் வரை சிறி லங்காவை நாம் புலம்பெயர்த்து வாழும் அத்தனை நாடுகளிலும் சிறி லங்காவை புறக்கணிக்கும் போராட்டத்தை நாம் தொடர வேண்டும்.

காலனித்துவ காலத்திலிருந்து அடுத்த இனத்தவர்களுக்கு "YES SIR" என்று வாழ்ந்த காலம் போதும் உலகத்தில் 80 மில்லியன் தமிழர்களை கொண்ட தேசிய இனமாகிய தமிழ் மக்கள் தமது தேசிய உரிமைகளை வலியுறுத்த வேண்டிய காலமிது விடுதலையடையும் காலமிது. இது நாம் அந்த நில மொழி பாதுகாப்புக்காக தியாகங்கள் செய்து வாழும் எமது மக்களுக்கு செய்யும் கடமை.

ஆகவே தமிழ் உறவுகளே ஏப்ரல் 30 ஆம் திகதி அர்ஜெண்டன் நகருக்கு படை எடுப்போம் எமது ஜனநாய உரிமைகளை அர்ஜெண்டன் நகர் மக்களுக்கு எடுத்து சொல்வோம் அந்த பகுதி மக்களை எமது பின்னால் அணிதிரள செய்வோம்.

ஏப்ரல் 30 ஆம் திகதி காலை 10h00 மணிக்கு அர்ஜெண்டன் நகர சபை முன் ஒன்று திரள்வோம்.

அர்ஜெண்டன் நகருக்கு செல்ல வாகன ஒழுங்குகள் செயப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி காலை 6h30 க்கு La Chappelle லிருந்து பேருந்துகள் புறப்படும்.

அதற்குரிய பேருந்து ஒழுங்குகள் செயப்பட்டுள்ளது.

உங்கள் பிரயாண சிட்டுகளை ஈழமுரசு - தாளம் (Rue Predonnet)- தமிழாலயம் (Rue Cail) ஆகிய நிறுவனங்களிழலும்

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (01 43 58 11 42)

பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை (06 58 58 92 90)

பிரான்சு தமிழ்ச்சங்களின் கூட்டமைப்பு ( 06 14 11 46 10 ) ஆகியோரிடம் பெற்றுக் கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு மேல் குறிபிட்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்று தரணியெங்கும் எடுத்துச்சொல்வோம்"

நன்றி - பதிவு இணையம்

France%20Tamils.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.