Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிக்கை வெளியாயிற்று அடுத்தது என்ன?

Featured Replies

பலத்த எதிர்பார்ப்புக்கள், எதிர்ப்புக்கள் மத்தியில் நிபுணர் குழு அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை வெளிப்படையான விசாரணை ஒன்றிற்கு சிபார் செய்துள்ளது. இதே வேளை சர்வதேச ஊடகக்ங்கள் பல ஆய்வுகளை எழுதிய வண்ணம் உள்ளன. இந்த ஆய்வுகள் இலங்கை அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த அறிக்கையில் முக்கிய பாத்திரங்களாக ஐந்து தரப்பு சம்பந்தப்பட்டிருக்கின்றது.

1. இலங்கை

2. தமிழர்கள்

3. இந்தியா

4. ஐக்கிய நாடுகள் சபை

5 சர்வதேசம்

அறிக்கையின் பின்னரான அடுத்த கட்டம் என்பது மேற்குலகு, இந்தியா, மேற்குலக எதிர்ப்பு என்ற முக்கோண சக்திகளின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது.

இதில் மூன்று வகையான நிகழ்தகவுகள் உள்ளன. 1. இலங்கைக்கு ஆதரவாக குரல்கொடுத்து நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் செய்தல். 2. இலங்கைக்கு எதிராகவோ அல்லது நிபுணர் குழு அறிக்கையினை ஆதரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அழுத்தம் கொடுத்தல். 3. ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் உள்ள நிலையினை சமாளித்து ஒரு நடு நிலைமையான தீர்மானத்தினை எடுத்தல்.

தற்போதைய சூழலில் பான்கி மூனைப்பொறுத்த வரை எல்லோரையும் சமாதானம் செய்து ஓர் நடு நிலையான தீர்மானம் ஒன்றை எடுக்கவே முயற்சி செய்வார்? காரனம் அவரது பதவி. இதே வேளை இந்தியாவும் இவ்வாறான தொரு நிலைப்பாட்டிலேயே இருக்கும். இந்தியாவின் தீர்மானம் சிறிலங்கா அரசையும் ஒதுக்க முடியாது தமிழ் நாட்டு தமிழர்களையும் ஒதுக்க முடியாது என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கும்.

சர்வதேசமும் இந்தியா இவ்வாறான விருப்பத்தினை தெரிவித்தால் அதற்கு ஆமா போடலாம். ஆகவே நிபுணர் குழு அறிக்கையின் விளைவு சர்வதேச கண்காணிப்புடனான உள் நாட்டு விசாரணை என்ற வடிவில் நகரலாம். கூடவே கைதிகலை விடுவித்தல், அவசரகால சட்டத்தினை நீக்குதல், 13 ஆவது சீர்திருத்த சட்டத்தின் கீழ் தீர்வு என்ற நகர்வுகளும் நிகழலாம். இந்த விடயத்தில் கூட்டமைப்பு, தமிழ் அரசியல் கட்சிகள் உசாராக இருக்கவேண்டிய சூழல் உள்ளது.

இலங்கையை பொறுத்தவரை அதன் ஆட்சி தலைவர் மஹிந்த இராஜபக்‌ஷ ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக சிங்கள மக்களை அணி திரட்டி போர் செய்ய பிரகடனம் செய்துள்ளது. அதே வேளை இராஜ தந்திர ரீதியாக நட்பு நாடுகளை அணுகி ஐக்கிய நாடுகள் சபையினை நடவடிக்கை எடுக்க விடாமல் பார்த்து கொள்ள பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

ஆனால் மூத்த சிங்கள புத்தி ஜீவிகள் மஹிந்தவின் நடவடிக்கையினை விமர்சனம் செய்துவருவதுடன் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையினை எதிர்கொள்ள உள் நாட்டில் சில மாற்றங்களை கொண்டுவரவேண்டும் என வாதிடுகின்றனர்.

அதில் முக்கியமானது 1. அவசர கால சட்டத்தினை நீக்குதல். 2. தமிழர்களுக்கான ஏதாவது ஓர் தீர்வு. 3. சர்வதேச கொள்கையில் மாற்றம் ( மேற்கை அனுசரித்துப்போகும் தன்மை) மேற்கூறப்பட்ட இந்த ஆலோசனைகளில் இந்தியாவின் செல்வாக்கு இருக்கின்றன.

அடுத்ததாக தமிழர்களைப்பொறுத்தவரை இது இலங்கை அரசினை தண்டிக்கவும் தமக்கான நியாயத்தைப்பெறவும் பாவிக்க கூடிய ஓர் ஆயுதமாக பார்க்கப்படுகின்றது. தமிழர்களின் நியாயத்திற்கும் எதிர்ப்பார்ப்பிற்கும் சர்வதேச ஆதரவுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. சர்வதேசத்தின் ஆதரவிற்கு ஒரே ஒரு தடையாக விடுதலைப்புலிகள் , பயங்கரவாதம் என்ர கருத்துக்கள் கடந்த காலத்தில் நிலவி வந்துள்ளன. ஆனால் இப்போ அவை எல்லாம் இல்லை. ஆகவே சர்வதேசம் துணிந்து தமிழர்களுக்கு ஆதரவினை கொடுக்கும்.

ஆனல் தமிழர்கள் இந்த ஆயுதத்தை இலங்கை அரசுக்கு எதிராக சரியாக பாவிப்பார்களா? யார் பாவிப்பது? யார் முன்னெடுப்பது? என்ற தீர்மானங்களில் தெளிவு இல்லை. இந்த தெரிவுகளுக்கான பதில்களையும் சர்வதேசமா அல்லது இந்தியாவா செய்யப்போகின்றது என்பதிலும் ஓர் குழப்பம் நிலவி வருகின்றது.

என்றாலும் தமிழர்களுக்கு தற்போது கிடைத்துள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தினை கை நழுவ விட்டிடுவார்களோ என்ற அச்சம் சாதாரண தமிழ் மக்களுக்கு இருக்கத்தான் செய்கின்றது.

நிபுணர் குழுவின் அறிக்கையானது

தமிழர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர கூடியது மட்டுமல்ல.

1.தமிழர்களுக்கு ஓர் தீர்வு வேண்டும் என்பதனை வற்புறுத்தும்.

2.தமிழர்கள் இனபப்டுகொலைகுள்ளாக்கப்பட்ட ஓர் இனம் என்பதனை வற்புறுத்தும்

3.தமிழர்கள் இலங்கையில் சம அந்தஸ்துடன் வாழ சர்வதேச ஆதரவு அவசியம் என்பதனை வற்புறுத்தும்.

4.இந்திய அரசின் ஆதரவுடன் தமிழர்களுக்கான தீர்வினை நகர்த்துவதற்கான கட்டாயத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தும்.

5.விடுதலைக்கான ஆயுத போராட்டத்தின் ஒட்டுமொத்த விளைவுகளையும் தீர்மானிக்கும்.

6.தமிழர்களின் பிரச்சினை, அரசியல் தீர்வின் அவசியம், தமிழர்களின் இறுதி இலட்சியமான தமிழீழம் என்ற இலக்கினை அனைத்துலக ரீதியாக மக்களிடம் கொண்டு செல்ல ஓர் சிறந்த வாகனமாக நிபுணர் குழு இருக்கும்.

7. பாதிக்கபட்ட தமிழர்களின் காயங்களை ஆற்றும் ஓர் சிறு மருந்தாக அமையும்.

8.சிறையில் உள்ள போராளிகள் மற்றும் பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு நிபுணர் குழு அறிக்கை உதவலாம்.

ஆகவே இவ்வளவு விடையங்களையும் கொண்ட இந்த நிபுணர் குழு அறிக்கையினை தமிழர்கள் சாதாரணமாக எடைபோட முடியாது.

இந்த நிபுணர் குழு அறிக்கையின் வெற்றி தமிழர் தரப்பின் நகர்வுகளிலேயே தங்கியுள்ளது. குறிப்பாக தமிழ் நாட்டு தமிழர்களின் பங்கு இதில் முக்கியமானது. தமிழ் நாட்டில் இருக்கின்ற 80 மில்லியன் மக்களின் குரலே இந்திய அரசை நிபுணர் குழு அறிக்கைக்கு சாதகமாக திசை திருப்ப வைக்கும்.

தமிழ் நாட்டு மக்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பே சீனா மற்றும் இரஷ்யாவை இணங்க வைக்கும். தென் இந்தியாவின் பூகோள நிலமை அந்த சூழலில் ஓர் நெருக்கடிகள் ஏற்படுவதனை வட இந்தியாவும் விரும்பாது.

மேலும் இரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தமிழ் நாட்டில் உள்ள கிட்டத்தட்ட 80 மில்லியன் மக்களின் எதிர்ப்பினை சம்பாதிக்க விரும்ப மாட்டார்கள்.

ஆகவே தமிழ் நாட்டு தமிழர்களின் பங்கே இந்த நிபுணர் குழு அறிக்கையில் முக்கிய பங்காக இருக்க வேண்டும்.

அடுத்ததாக புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் பங்கு.

புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்கள் முக்கியமாக இரண்டு பணிகளை செய்யவேண்டும்.

1. அந்த நாட்டு பாராளுமன்றங்களில் நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவு கேட்டு தீர்மானங்களை கொண்டுவர செய்ய வேண்டும்.

2. அந்த நாட்டு மக்களிடம் நிபுணர் குழு அறிக்கையினை கொண்டு சென்று வெகுசன ஆதரவை திரட்ட வேண்டும்.

இவை இரண்டுமே இப்போ மிக மிக அவசியம்.

ஏனென்றால் ஐக்கிய நாடுகள் சபைக்கு நாடுகளின் தார்மீக ஆதரவு இருந்தால்தான் நடவடிக்கைகளை எடுக்க முடியும். அதாவது ஏதாவது ஒரு நாடு இந்த அறிக்கையினை மையமாக வைத்து தீர்மானம் ஒன்றை முன்மொழிவது இன்றியமையாதது.

இங்கு ஒரு விடயத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சர்வதேசம், இந்தியா ஆகியவற்றின் நோக்கமும் தமிழர்களின் நோக்கமும் வேறுபட்டது, முரண்பாட்டு நன்மைகள் கொண்டவை. தமிழர்களுக்கு நியாயமும் நிரந்தர தீர்வும் வேண்டும். இந்தியா மற்றும் சர்வதேசத்திற்கு தமக்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே. ஆகவே தமிழர்கள் தமது நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் எனின் இந்தியா, சர்வதேசத்துடன் நெருங்கிய இராஜ தந்திரமும் அதே வேளை மறுமுனையில் வெகுசன எழுச்சி மூலமான அழுத்தங்களையும் செய்யவேண்டும். இல்லாவிடில் தமிழ் மக்களின் நோக்கத்திற்கான வீரியம் குறைக்கப்படலாம்.(Give your feed back to editor@eelanatham.net)

ஈழநாதம் ஆசிரியர் பத்தி

Edited by உமை

புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்கள் முக்கியமாக இரண்டு பணிகளை செய்யவேண்டும்.

1. அந்த நாட்டு பாராளுமன்றங்களில் நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவு கேட்டு தீர்மானங்களை கொண்டுவர செய்ய வேண்டும்.

2. அந்த நாட்டு மக்களிடம் நிபுணர் குழு அறிக்கையினை கொண்டு சென்று வெகுசன ஆதரவை திரட்ட வேண்டும்.

இவை இரண்டுமே இப்போ மிக மிக அவசியம்.

ஏனென்றால் ஐக்கிய நாடுகள் சபைக்கு நாடுகளின் தார்மீக ஆதரவு இருந்தால்தான் நடவடிக்கைகளை எடுக்க முடியும். அதாவது ஏதாவது ஒரு நாடு இந்த அறிக்கையினை மையமாக வைத்து தீர்மானம் ஒன்றை முன்மொழிவது இன்றியமையாதது.

இங்கு ஒரு விடயத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சர்வதேசம், இந்தியா ஆகியவற்றின் நோக்கமும் தமிழர்களின் நோக்கமும் வேறுபட்டது, முரண்பாட்டு நன்மைகள் கொண்டவை. தமிழர்களுக்கு நியாயமும் நிரந்தர தீர்வும் வேண்டும். இந்தியா மற்றும் சர்வதேசத்திற்கு தமக்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே. ஆகவே தமிழர்கள் தமது நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் எனின் இந்தியா, சர்வதேசத்துடன் நெருங்கிய இராஜ தந்திரமும் அதே வேளை மறுமுனையில் வெகுசன எழுச்சி மூலமான அழுத்தங்களையும் செய்யவேண்டும். இல்லாவிடில் தமிழ் மக்களின் நோக்கத்திற்கான வீரியம் குறைக்கப்படலாம்.(Give your feed back to editor@eelanatham.net)

ஈழநாதம் ஆசிரியர் பத்தி

இந்தக்கருத்தை ஒத்துக்கொள்கிறேன். உறங்கிக் கிடந்த இரகசியம் வெளியே கேட்கிறது.

நமக்கு தெரிந்தது எல்லாருக்கும் தெரிந்தே இருக்கும் என எதிர்பார்ப்பது ஆகாது.

தேடித் தேடிப் பார்க்கும் பாதிக்கப்பட்ட எமக்குத்தான் இவை செய்தி. மற்றவர்களுக்கு இது வெறும் விளம்பரமே.

கடல் அலைகளுக்கு கரையைத் தொட்டுவிட்டு சென்றால் அதன் கடைமை முடிந்தது போல் இந்த அறிக்கை பாதிக்கப்பட்ட எம்மையும் ஒரு சில மனித உரிமைவாதிகளையும் தொட்டுவிட்டு அடங்கிப்போக அனுமதிக்கக் கூடாது.

கரைகைளத் தாண்டி பல மைய்ல்கள் தூரம் செல்லக்கூடிய சுனாமியை ஒத்ததாக இந்த அறிக்கை இருக்க வேண்டுமானல், எல்லோரிடத்திலும் இது கொண்டு செல்லப்பட வேண்டும். வீதிக்கு வீதி, நகரங்களுக்கு நகர் கூடாரம் போட்டு இவை பற்றி விளக்க வேண்டும்.

அப்போதுதான் லட்சக்கணக்கான் உயிர்களை குடித்த சிறிலங்காவின் தமிழின அழிப்பு யுத்தம் பற்றிய இந்த போர்குற்ற ஆவணம் எமக்கு நீதியையும், உரிமையையும் பெற்றுத் தரும். இல்லையேல் சிரிலங்காவை தமது வழிக்கு கொண்டுவந்து தமது நன்மைகளை மட்டும் நிறைவேற்றிக்கொள்ளத் துடிக்கும் ஒரு சில முதலை நாடுகளுக்கு (bargain chip) வியாபார பொருளாக ஆகமாறிவிடும்.

இதில், நாடுகடந்த அரசு, உலகத்தமிழ் பேரவை என்னசெய்யவேணும் என்று சொல்லிவிட்டு வீட்டில் கிடந்தால் எமது கடைமை முடிந்து என்று எண்ணாமல் பொது சனங்கள் சின்னச் சின்னதாக என்ன செய்யலாம்?

1. எல்லாரும் பார்த்திருப்பார்கள் என்று விட்டுவிடாமல், எல்லாருக்கும் தெரியபடுத்தணும்.

2. இந்த அறிக்கையினை பிரதி எடுத்து புத்தகமாக்கி நூலகங்களில் மற்றவர்களும் வாசிக்க வைக்க வேண்டும்.

3. உள்ளூர் பா உ களை சந்தித்து ஆதரவு கேட்க வேணும்.

4. நகரங்களில் எல்லாரும் வந்து போகும் இடத்தில் தற்காலிக கூடரங்களில் இதுபற்றிய விளக்க விரிவுரை கொடுக்கவேணும்.

"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்"

Edited by Small Point

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.