Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக ஏகாதிபத்தியங்களின் பிடியில் இலங்கையில் என்ன நடக்கப்போகின்றது?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக ஏகாதிபத்தியங்களின் பிடியில் இலங்கையில் என்ன நடக்கப்போகின்றது?

தமிழர்களின் இனப்பிரச்சனையை வைத்து இலங்கை அரசைத்தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இந்தியா ஈழவிடுதலைக்கு உரமிட்டு வளர்த்து வந்த வேளை இந்தியாவின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்ட விடுதலைப்புலிகள், இந்தியா தமிழர்களுக்குச் சுதந்திரம் பெற்றுகொடுப்பதற்கு மாறாக தமிழர்களை வைத்துக்கொண்டு இந்தியாவின் பாதுகாப்பிற்காக இலங்கை அரசை அடிபணிய வைத்தல் என்ற உள்நோக்கத்தில் செயற்படுவதை ஆழமாகப்புரிந்து கொண்டு தங்கள் போராட்டத்தை சுதந்திர இறைமை கொண்ட போராட்டமாக மாற்றி அமைத்தார்கள். இப்படி மாற்றப்பட்ட வேளை மற்றைய விடுதலை இயக்கங்கள் இந்தியாவின் அடிமையாகச் செயற்பட்டு போராட்டம் திசைமாறுவதைக்கண்டு புலிகள் ஒரு திடகாத்திரமான முடிவை எடுத்து மற்றைய இயக்கங்களின் செயற்பாடுகளைக்கட்டுப்படுத்தி ஒரே ஒரு பேரியக்கமான புலிகள் தங்களைப்பலப்படுத்திப் பேராடினார்கள். அதில் வெற்றியும் கண்டதால் இந்தியாவின் உள்நோக்கம் கொண்ட இந்தப்பாதை இந்தியாவின் கை நழுவிவிட்டது என்பதை இந்தியா உணர்ந்திருந்தவேளை எப்படிக்கட்டுப்படுத்தாலாம் என்பது தெரியாது திகைத்தது இந்தியா.

இவ்வேளை தான் இந்தியாவால் 1987 ஒரு தலைப்பட்சமாக இலங்கை அரசுடன் சமாதானம் ஒப்பந்தம் செய்யப்பட்டு (சிங்களவனிடம் அடியும் வாங்கி) இந்தியாவால் அமைத்pப்படை இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இந்திய இரசும் அமைதிப்படை என்றபெயரில் இலங்கையில் கால் பதித்து, சிறு குழுவான தமிழர்களின் ஆயுதங்களைக்களைந்து தன் சொல்லுக்கு அடங்காத தமிழர் விடுதலை இயக்கங்களை ஆயுதங்களைக்களைந்து கட்டுப்படுத்தி தனது இராணுவத்தை இலங்கையில் நிரந்தரமாக நிறுத்திவிடலாம் என்ற எண்ணமும் பிரேமதாச காலத்தில் வேறுதிசையில் சென்று இல்ஙகையை விட்டு பிச்சைவேண்டாம் நாயைப்பிடி என்ற நிலையில இந்திய இராணுவம் வெளியேறியது. பின்னர் ராஜீவ் காந்தி கொலையுடன் இந்தியா இலங்கை தொடர்பான உளவுகளும் தோல்வியில் முடியவே சிலகாலங்கள் அமைதியாக இருந்து ராஜீவ் கொலையை மையப்படுத்தி திட்டங்களை மாற்றியமைக்க திட்டங்கள் தீட்டப்பட்டன.

இதில் புலிகள் இயக்கத்தை முற்றாக ஓழிப்பது என்பதே முதற்திட்டமாக இருந்ததால், பலமுள்ள ஒரு எதிரியை அழிக்க இன்னொரு எதிரியுடன் சேர்வது தப்பில்லை என்ற எண்ணக்கருவுடன் இலங்கை அரசுடன் இணைந்து திட்டங்கள் உருவாக்கப்பட்டன. புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை இந்தியா வெயிநாடுகளில் இரகசியமாக மேற்கொண்டு சில நாடுகளில் புலிகளுக்கு எதிரான தடைகளையும் உருவாக்கியதும் இந்தியாதான். இலங்கையில் நடப்பது பற்றிய அரசியல் விடயங்களில் மேற்குலகம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்தது. ஏனெனனில் தங்களுடைய அபிலாசைகளுக்கு ஏற்றவகையில் இலங்கையை மாற்றவேண்டும் என்பது இவர்களின் ஏகாதிபத்தியப்போக்கும் நல்லதொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது.

இந்தவேளைதான் அமெரிக்காவில் 911 பிரச்சனை நடந்து பயங்கரவாதச்சட்டங்கள் ஒருதலைப்பட்சமாக நிறைவேற்றப்பட்டதால், தமிழர் விடுதலைப்போராட்டமும் பயங்கரவாதப்பிரச்சனைக்குள் ழமாகத்தள்ளப்பட்டது. இதனால் புலிகள் ஒரு சமாதானபபேச்சுவார்த்தையை உலகஅரசியல் சூழ்நிலைக்கேற்பமாற்றவேண்டி நோர்வேமூலம் சமாதானப்பேச்சுவார்த்தை ஒப்பந்தமானது. இருந்தாலும் மேற்குலகமும் இதுதான் இலங்கையில் நுழைய நல்ல சந்தர்ப்பம் என்று எண்ணியும் புலிகளுடன் சமாதான ஒப்பந்தம் கொள்கையளவில் கைச்சாத்திடப்பட்டது. இருந்தும் பயங்கரவாதச்சட்டத்தின் கீழ் உலகின் வலுவுள்ளதும் ஒழுக்கம் உள்ளதுமான இவ்வியக்கத்தை ஓழிக்கவேண்டும் என்ற எண்ணக்கரு இவர்களிடம் சமாதான ஒப்பந்தம் செய்யும்போதே இவர்களிடம் இருந்தது. இருந்தும் புலிகளிடம் பேசுவதன் மூலம் அவர்களை எங்கள் பக்கம் எடுத்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தால் ஒரு தீர்வைக் கொடுத்து ஆமற்குலகமாகிய நாங்கள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தலாம் என்ங எண்ணப்போக்கு வலுவாக இருந்தபோதும், புலிகள் தனிஈழம் என்ற கோட்பாட்டில் இருந்து சிறிதளவேனும் இறங்கவில்லை. இதனால் இவர்கள் எடுத்துக்கொண்ட புலிகள் ஒழிப்பு என்ற முடிவின்படி சமாதான உடன்படிக்கையை நகர்த்தத்தொடங்கியது. புலிகளை வலிந்து போருக்க இழுத்தலில் புலிகள் வலிந்து போருக்கு இறங்கவில்லை. வலிந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் புலிகள் அமைதி காத்தார்கள்.

இதில் மேற்குலகம் இந்தியாவைப்புறம்தள்ளி தாக்குதல் தொடுத்தால் இந்தியா புலிகளுக்கு உதவக்கூடும். இதனால் புலிகளை அழிப்பது சாத்தியம் இல்லை. அடுத்தாக அண்டை நாட்டில் வேறுசாடுகள் ஆதிக்கம் செலுத்தவதை இந்தியா விரும்பாது. இந்தியாவையும் இணைக்கவேண்டும் என்றநோக்கில் சகல சமாதான பேச்சுக்களும் நல்லிணக்கக்குழுவில் இல்லாத இந்தியாவிற்கும் உடனுக்குடன் எரிக்சொல்கைம்மால் அறிவிக்கப்பட்டது. இது தான் புலிகள் இல்லாமல் இலங்கை அரசுடன் நல்லிணக்கநாடுகளும், சமாதானத்தில் அங்கம் வகிக்காத இந்திவையும் அழைத்து அமெரிக்காவில் புலிகளை ஒழிப்பது பற்றித்தீட்டப்பட்டது. புலிகளை அழிக்கவேண்டும் என்று ஆதங்கத்துடன் புத்தி மழுங்கி இருந்த இந்தியாவிற்கு கரும்பு கிடைத்தது போல் இருந்ததால் மேற்குலகத்துடன் இணைந்து கொண்டது இந்தியா.

ஈழம் கிடைத்தாலோ அல்லது வலுவுள்ள புலிகள் இயக்கம் இருந்தாலோ இலங்கையில் யாரும் இனிமேல் ஆதிக்கம் செலுத்தமுடியாது என்ற எண்ணம் எல்லா ஏகாதிபத்தியங்களுக்கும் புலிகள் முட்டுக்கடடை ஆகியதாலும், அவர்களின் அசுரபோரியல் தந்திரங்களும், போராட்ட வலுவும் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியதால் ஒருதலைப்பட்சமாக சிங்கள அரசைக்கருவியாகப்பாவித்து ஏகாதிபத்தியங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு ஆயுதங்கள் மாத்திரம் அல்ல சகல தொழில் நுட்பங்களும் பாவித்து புலிகளுடன் போர் என்ற ரீதியில் உலகபோர்விதிகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு புலிகளை ஒடுக்கினர். புலிகள் என்ன செய்தாலும் குற்றம் என்ற ரீதியில் உலகில் பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது.

இவர்களின் இந்தப்பலவீனத்தை வைத்துக்கொண்டு இலங்கை அரசான ராஜபக்ஷ, தமிழர்களை எவ்வளவிற்கு கொல்லமுடியுமோ அவ்வளவிற்கு கொனறு குவித்துவிடார். பிரச்சனைக்கு இந்தியாவே முதற்காரணி. இவர்களை இலங்கையிலருந்து ஓரம் கட்டவேண்டும் அதற்கு இன்னொரு வல்லரசு துணைவேண்டும். அது இந்தியாவிற்கு எதிரானதாக இருக்கவேண்டும். நீணடகால உறவாக இருக்கம் சீனாவை கையகப்படுத்தி இலங்கையில் இருத்திவிட்டால் இலங்கையில் அமைதி திரும்பும் என்ற நோக்குடன் போர் நடைபெற்றுக்கொண்டிருக்க மறுபுறம் சீனாவின் பலத்தை இலங்கையில் நிலைநிறுத்திவிட்டது. இதனால் இலங்கையின் பிடி மேற்குலகில் இருந்தும் இந்தியாவிலிருந்தும் நழுவிவிட்டது.

தங்கள் தவறை இவர்கள் உணர்ந்திருந்தாலும் அவசரப்பட்டு எந்தக்காரியத்தையும் செய்யமுடியாது. இரகசியமான பேச்சுகளில் இலங்கையை அடிபணிய வைக்கலாம் என்று நினைத்தனர். முடிவில்லை. போர் முடிந்தும் எல்லாவிதமான போர்குற்றங்கள் தெரிந்திருந்தும் மௌனம் காத்த உலகம் இன்று திடீரென போர்குற்ற விசாரணை காத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது. புலிகள் இயக்கத்தை எப்படி திட்டம் போட்டு ஓடுக்கினார்களோ அதே போல இலங்கை அரசுமீதும் துவங்கியுள்ளார்கள். இது தமிழருக்கான விடியலைக்கொடுப்பதற்கல்ல. தங்கள் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கே. இந்த ஆசைகள் நிறைவேறும் பட்சத்தில் பக்கவிளைவான தமிழருக்கு நன்மைகள் கிடைக்க வாய்ப்புண்டு. எங்கள் வாய்ப்புகளுக்கு ஏற்றவிதத்தில் இந்தப்பிரச்சனையைத் திசைதிருப்பத்தமிழர் அனைவரும் செயல்படுவோம். ராஜபக்ஷ அடிபணியாவிடின் இவரையும் இவர்கள் ஒடுக்குவார்கள். ஆனாலும் புலிகளை ஒடுக்குவதில் ஒன்றுபட்ட வல்லாண்மைகள் இங்கு இருகட்சிகள் ஆகிவிட்டன. சீனாவும் ரஷ்சியாவும் இலங்கையின் கையை ஓங்கவைக்குமா? அல்லது தோல்விகண்ட இந்தியாவினதும் மேற்குலகத்தினதும்; கை ஒங்;குமா? இரண்டிற்கும் நடுவில் தமிழருக்கு உரிமை பிறக்குமா? நகர்வுகளைச்சாதகமாக மாற்றுவது தமிழனின் கையில் தான் உள்ளது.

மேற்குலகின் தேவைதான் இங்கு மேலோங்கி நிற்கும்.தமிழரின் கைகளில் எதுவுமில்லை. தமிழரின் எந்த உந்துதலினாலும் இந்த விசாரணை தொடங்கப்படவில்லை.இலங்கையின் போக்கில் மாற்றம் ஏற்படாவிடின், தமிழருக்கு என்ன அதிகாரப் பரவலைக் கொடுத்தாலும் மேற்குலகம் விட்டுவிடாத நிலைதான் காணப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.