Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'புலி' என்றால் யார் ஒட்டோவாவின் வரவிலக்கணம் பரந்துபட்டதாம் என்கிறார் நீதியாளர்.

Featured Replies

'புலி' என்றால் யார் ஒட்டோவாவின் வரவிலக்கணம் பரந்துபட்டதாம் என்கிறார் நீதியாளர்.

கடந்த ஆண்டு எம்.வி சண் சீ என்ற அகதிகள் கப்பல் ஊடாக 492 ஈழத் தமிழ் அகதிகள் கனடாவின் வன்கூவர் துறைமுகத்தினைச் சென்றடைந்தனர். இவர்களுக்கான கனேடியக் குடிவரவு மற்றும் அகதிகள் அவையினது வழக்கு விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றன.

இந்தக் கப்பலில் பயணித்த இளைஞர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களே எனும் வகையில் கனேடிய அரச வழக்கறிஞர்கள் வாதிட்டு வருகிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு நெல் விற்பனை செய்த விவசாயி முதல் அவர்களது வாகனத் திருத்தகத்தில் பணியாற்றிய ஊழியன் வரை அனைவரும் புலியே என்கிறது கனேடிய அரசாங்கம்.

ஆனால் புலி என்றார் யார் என்ற அரசாங்கத்தின் விரவிலக்கணம் பரந்துபட்டதாகவும் குழப்பத்தினைத் தருவதாகவும் அமைகிறது என்கிறார் குடிவரவு மற்றும் அகதிகள் அவையினைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர்.

ஒருவர் விடுதலைப் புலிகளமைப்பிற்கு எந்தவகையில் உதவியிருந்தாலும், அது சேவையாகவோ அன்றி வேறு ஏதாவது பணியாகவோ இருக்கலாம், அவர் பயங்கரவாத நடவடிக்கைக்குத் துணைப்போனவர்களாகவே கருதப்படுவார்கள் என அரச வழக்கறிஞர்கள் வாதிடுகிறார்கள்.

அண்மையில் தான் விளைவித்த நெல்லைப் புலிகளுக்கு விற்பனை செய்த ஒருவரது வழக்கு விசாரணை இடம்பெற்றது. இதன்போது தான் விடுதலைப் புலிகள் நிர்வகித்த உணவகம் ஒன்றில் உணவு பரிமாறுபவராகக் கடமையாற்றியதாகவும் புலிகளின் நிகழ்வுகளின்போது அலங்காரப் பணிகளில் ஈடுபட்டதாகவும் ஆனால் இந்தப் பணியில் தான் கட்டாயத்தின் பெயரிலேயே பங்கெடுத்ததாகவும் குறிப்பிட்ட அந்த அகதி குறிப்பிட்டிருந்தார். இவர் பயங்கரவாத அமைப்புக்குத் தானாக முன்வந்து தனது சேவையினை வழங்கியமையினால் புலிகளின் உறுப்பினரே என அரச வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

கடந்த வெள்ளியன்று இந்த வழக்கு விசாரணை தொடர்பான தீர்ப்பினை வழங்கியபோதே அகதிகள் மற்றும் குடிவரவு அவையின் நீதியாளர் மார்க் லெஸ்லர் 'புலி' என்பதற்கான அரசாங்கத்தின் வரவிலக்கணம் குழப்பத்தினைத் தருகிறது எனக் குறிப்பிட்டார்.

ஈற்றில், குறிப்பிட்ட இந்த அகதி விடுதலைப் புலிகளின் உறுப்பினரல்ல என்றும் அவர் தனது அகதிக் கோரிக்கையினைத் தொடர்ந்தும் முன்னெடுக்கலாம் என்றும் அவர் தீர்ப்பளித்தார்.

புகைப்படத்துடன்கூடிய செய்திக்கு.........

http://www.thedipaar.com/news/news.php?id=27655

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் எவ்வாறு புலி என்று ஒட்டுமொத்தத் தமிழனையும் வேரறுக்கிறானோ அதேபோலவே தற்போதைய பழமைவாத அரசும் நடந்துகொள்கிறது..! ராகவன் பரஞ்சோதியைத் தவிர்த்து வேறு எந்தத் தொகுதியிலும் தமிழர்கள் இவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது..! :unsure:

நான் ஒரு பழமைவாத கட்சி உறுப்பினர், பணம் கட்டும் உறுப்பினர். நான் இணைந்தது தடைக்கு பின்னர். காரணம், ' உன் நண்பர்களை கிட்ட வைத்திரு ஆனால் உன் எதிரிகளை அதைவிட அருகில் வைத்திரு' என்பதற்கு அமைய.

ஆனால் இந்த தேர்தலில் அவர்களுக்கு வாக்களிக்கப்போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.