Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச அதிபரின் நிறைவேற்று அதிகாரத்தை மேலும் அதிகரிக்கும் 19வது திருத்தச் சட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May 7, 2011 / பகுதி: செய்தி /

அரச அதிபரின் நிறைவேற்று அதிகாரத்தை மேலும் அதிகரிக்கும் 19வது திருத்தச் சட்டம்.

சிறீலங்காவில் 18வது திருத்த சட்டத்தைத் தொடர்ந்து 19வது திருத்தச் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறீலங்காவின் அரச அதிபருக்கான நிறைவேற்று அதிகாரத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலேயே இந்த சட்டமூலம் கொண்டு வரப்படவுள்ளது.

நீதிமன்ற சேவை ஆணைக்குழுவின் செயலாளரை நியமிக்கும் அதிகாரத்தை அரச அதிபருக்கு வழங்குதல் மற்றும், பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு வரையறுத்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையிலேயே இந்த திருத்தம் முன்வைக்கப்படவுள்ளது.

தற்போதைய அரசியல் அமைப்பின் 127ம் சரத்தின் அடிப்படையில் பிரதம நீதியரசர் ஓய்வூதியம் பெறும் அகவையை 65 என்றும் விதந்துரைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற சேவை ஆணைக்குழுவின் செயலாளரை நியமிக்கும் அதிகாரம் தற்போது நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் உள்ளது. சிறீலங்காவின் 19 வது திருத்தச்சட்டத்தின் மூலம் இந்த அதிகாரம் அரச அதிபரான மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட உள்ளது.

19வது திருத்தச் சட்டமூலம் சுதந்திரமான நீதிச் சேவைக்கு இடையூறு! - முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா எச்சரிக்கை!!

சிறிலங்காவின் 19வது திருத்தச் சட்டமூலம் சுதந்திரமான நீதிச் சேவைக்கு இடையூறுகளை விளைவிக்கும் என சிறிலங்காவின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரடியாக தலையீடு செய்வதற்கான வாய்ப்பை இச் சட்டமூலம் ஏற்படுத்திவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.<br />&nbsp;<br />சிறிலங்காவின் பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு வரையறுத்தல் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குதல் ஆகியன நீதிமன்றங்களின் சுதந்திரத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிடுவதற்கான வாய்ப்பை உருவாக்கிவிடும் எனவும், இது தர்க்க ரீதியில் முரணானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபொன்றதொரு விவகாரம் இலங்கையின் 200 ஆண்டுகால நீதித்துறை வரலாற்றிலோ அல்லது உலகில் வேறெங்கிலுமோ இடம்பெற்றதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டால் 65 வயதுக்கு முன்னர் ஓய்வு பெற வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் எனவும், அவர் 65 வயதை அடைவதற்கு இன்னமும் பத்து ஆண்டுகளே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் பிரதம நீதியரசர் பதவி ஒப்பந்த அடிப்படையிலானது போன்று அமைந்திருக்கும் எனவும், இது நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மைக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரை ஜனாதிபதியே நியமிப்பதன் மூலம் ஏனைய நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரத்தைப் அவர் பெற்றுக் கொள்கின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், செயலாளரை ஜனாதிபதி நியமித்தால் அது அரசியல் நியமனமாகவே கருதப்படும் எனவும், இதனுடாக நீதிமன்றத்தின் செயற்பாடுகளை ஜனாதிபதியின் விரலால் கட்டுப்படுத்தக் கூடிய நிலைமை உருவாகும் எனவும் சிறிலங்காவின் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={CFA334F6-A411-4725-B0A3-8287A0A03FA8}

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதித்துறையை ஜனாதிபதியின் காலடிக்குள் கொண்டுவரும் 19 ஆவது திருத்தச்சட்டம்

சனி, 07 மே 2011 08:03

E-mail அச்சிடுக PDF

அரசியல் யாப்பில் 19 ஆவது திருத்தத்தை மேற்கொள்ள முயற்சிப்பதன் மூலம் நீதித்துறை அதிகாரங்கள் அனைத்தையும் ஜனாதிபதியின் காலடிக்குள் கொண்டு செல்லப்போகிறது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பில் 19 ஆவது திருத்தத்தை செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியானது, சுதந்திரமான நீதித்துறை செயற்பாடுகளில் ஜனாதிபதியின் தலையீட்டுக்கு வழிவகுக்கும்.

இந்த உத்தேச திருத்தச் சட்டமானது பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளுக்கு வரையறுப்பதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு அதிகாரத்தை கொடுக்கிறது. அதுமட்டுமன்றி நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரை நியமிக்கும் அதிகாரத்தையும் அவருக்கு வழங்குகின்றது என்று சரத் என் சில்வா தெரிவித்தார்.

இதன்மூலம் ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டின்கீழ் உயர்நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களை வைத்திருக்க முடியும். இவ்வாறானதொரு இலங்கையின் 200 வருடகால நீதித்துறை வரலாற்றிலோ அல்லது உலகில் வேறெங்குமோ இடம்பெற்றதில்லை.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் உயர்நீதிமன்றத்தின் ஏனைய நீதியரசர்கள் 65 வயது வரை பணியாற்ற முடியும். ஆனால் பிரதம நீதியரசர் மாத்திரம் 65 வயதுக்கு முன்னரே ஓய்வுபெற வேண்டிய நிலையை ஏற்படுத்தும். இது முரண்பாடான விடயமாகும்.

புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்படவுள்ள சிராணி பண்டாரநாயக்க அடுத்த 10 ஆண்டுகளுக்கு பதவிவகிக்கும் வாய்ப்புள்ள போதும், இத்த திருத்தச் சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்பட்டால் 65 வயதை எட்ட முன்பே பிரத நீதியரசர் ஓய்வுபெற வேண்டி ஏற்படும்.

இந்நிலை நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாகவே அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

tamilcnn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.