Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுடில்லியில் இருந்து வரும் (அதிசய) அரசியல் சிக்னல்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுடில்லியில் இருந்து வரும் (அதிசய) அரசியல் சிக்னல்!

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Viruvirupu, Monday 09 May 2011, 08:43 GMT

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புதுடில்லி, இந்தியா: போர்க்குற்றம் பற்றிய ஐ.நா.வின் பரிந்துரை அறிக்கை கிளப்பிய புயல், சுலபத்தில் ஓயப்போவதில்லை போலிருக்கிறது. இந்த அறிக்கையை வைத்து என்ன செய்யலாம் என்பது தொடர்பான அடுத்த சுற்று ராஜதந்திரச் சந்திப்புக்கள் விரைவில் நடைபெறவுள்ளதாகத் தெரியவருகின்றது.

ஸ்ரீலங்கா, மற்றும் இந்திய ராஜதந்திரிகளே தற்போது சந்திக்கவுள்ளனர்.

இவ்விரு நாடுகளின் ராஜதந்திரிகளும் உயர்மட்டச் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளலாம் என்ற செய்தி சென்ற வார இறுதியில் அடிபட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அதுபற்றி இரு தரப்பிலிருந்து உறுதியான தகவல்கள் கிடைத்திருக்கவில்லை.

தற்போது இந்தியத் தரப்பிலிருந்து இந்தச் சந்திப்புப் பற்றிய சிக்னல் ஒன்று கிடைத்திருக்கின்றது. “ஸ்ரீலங்கா உயர்மட்ட ராஜதந்திரிகளை விரைவில் சந்திக்கவுள்ளோம்” என இந்திய ராஜதந்திரி ஒருவர் ஒப்புக்கொண்டிருப்பதாக புதுடில்லிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வார இறுதியில் வெளியான கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை சண்டே டைம்ஸ், இந்த உயர்மட்டச் சந்திப்பு இம்மாதம் 13ம் திகதி கொழும்பில் நடைபெறும் என்று செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் புதுடில்லி வட்டாரங்கள் அதை மறுக்கின்றன.

“சந்திப்பு நடைபெறவுள்ளது நிஜம். ஆனால் என்ன தேதியில் என்பதோ, எந்த இடத்தில் என்பதோ இன்னமும் முடிவாகவில்லை. சந்திப்பு கொழும்பிலோ அல்லது புதுடில்லியிலோ நடைபெறலாம்” என இந்திய ராஜதந்திரி ஒருவர் கூறியதாக புதுடில்லிச் செய்திகள் கூறுகின்றன.

கொழும்பிலுள்ள, ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சின் அலுவலகம், தமக்கு இந்தச் சந்திப்புப் பற்றி எதுவும் தெரியாது என்று கூறுகின்றது. ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் உயங்கொட “இந்தச் சந்திப்புப் பற்றி என்னிடம் எந்தத் தகவலும் இல்லை” என்கிறார்.

ஆனால் அதேநேரத்தில், ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 16ம் திகதி புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளதான தகவலை அதே வெளிவிவகார அமைச்சு உறுதி செய்திருக்கின்றது.

இதுவரை காலமும் ஸ்ரீலங்காவுடன் இந்திய ராஜதந்திரிகள் சந்திக்கலாம் என்ற செய்தி ஊகங்களாக இலங்கைத் தரப்பிலிருந்தே ஊடகங்களில், ஊகங்களாக அடிபட்டுக் கொண்டிருந்தன. இப்போதுதான் முதல்முதலாக புதுடில்லியில் இருந்து, ஒரு சந்திப்புப் பற்றிய சிக்னல் வந்திருக்கின்றது.

இந்தச் சந்திப்பு நடைபெற்றால், அதன் அர்த்தம் ஒன்ற ஒன்றுதான். அது-

இந்தியா, நிச்சயம் ஸ்ரீலங்காவை (ஐ.நா. பரிந்துறை அறிக்கை விஷயத்தில்) கைவிடப் போவதில்லை.

நன்றி - விறுவிறுப்பு.கொம்

http://viruvirupu.com/2011/05/09/1490/

  • கருத்துக்கள உறவுகள்

விறுவிறுப்புக்கு இதில் என்ன விறுவிறுப்பு இருக்கிறதோ தெரியவில்லை.

மூலவியாதிக்காரருக்கு நல்ல டாக்டராக பார்த்து காட்டினால் நல்லது.

நூறு கோடி ஹிந்தியர்களை காக்க பத்துக் கோடி தமிழர்களின் உணர்வுகளை மதிக்காது லட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்யக் காரணமானவன் வந்து எமக்கு உதவி செய்யப் போகிறானா...?

இந்தியா தமிழர்களுக்கு ஆதராவாக நடக்கும் என்று கருதினால் அதைவிட முட்டாள் தனம் வேறு எதுவும் இருக்க முடியாது...... இந்தியா தமிழர்களுக்கு உதவும் என்று கருதுவது ஒரு போர்க்குற்றவாளி தானே வந்து தன குற்றத்தை ஒப்புக் கொள்வான் என்பதற்கு ஒப்பானது. இரண்டு போர்க்குற்றவாளிகளும் தாங்கள் தப்பிக்க ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வார்களே ஒழிய தமிழனுக்கு எக்கால கட்டத்திலும் உதவ மாட்டார்கள். அப்படி ஒன்று நடக்குமானால் அதில் சுயநலம் மட்டுமே இருக்கும்....தமிழர்கள் வேண்டுமானால் இந்தியாவுக்கு சார்பாக நடக்கலாம்......

சர்வதேசத்தின் நலனும் தமிழ் மக்களின் நலனும் ஒரு கோட்டில் சந்தித்தால் என்பதே ஒரு சாத்தியமில்லாத கூற்று...அதை திரு உருத்திர குமாரன் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

அமெரிக்காவின் நலனும் தமிழர்களின் நலனும் ஒரு கோட்டில் சந்திக்க வைக்க சிந்திப்பதே மேலானது...முதன்மையானது... ஏனென்றால் அமெரிக்க ராஜதந்திரம் தெரிந்தவான்.... துணிச்சல்காரன்....

ஒரு செயலில் பல வழிமுறைகள் இருந்தாலும் இந்தியாவைப் போன்று முதுகில் குத்துவது இல்லை பயந்தாங் கொல்லியும் இல்லை ....அமெரிக்காவுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தி அவன் கூட நடப்பதே நல்லது..... இல்லையென்றால் நமக்கு சாதகமாக உள்ள இந்த முக்கியமான சூழ்நிலையும் பறிபோய்விடும்....

இல்லையேல் பத்துக்கோடி தமிழனை ஒன்றரைகோடி சிங்களவன் மீண்டும் மீண்டும் வெல்வான்......

  • கருத்துக்கள உறவுகள்

ஆள் கொடுத்து

ஆயுதம் கொடுத்து

வரைபடம் கொடுத்து

கொலை செய்யச்சொன்னவனையே

கொலைக்கு சாட்சியாக நினைப்பது தமிழன் ஒருவன்தான் :(:(:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.