Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தேசிய நூதன சாலையில் துட்டகைமுனுவின் அஸ்தி" - செய்திக்கான எதிர்வினை

Featured Replies

"தேசிய நூதன சாலையில் துட்டகைமுனுவின் அஸ்தி" என்ற செய்திக்கான எதிர்வினையினை சிந்தனைக்கூடம்-யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் இயக்குனரும் தமிழரசுக்கட்சி முக்கியத்தவருமான பேராசிரியர் இரா.சிவசந்திரன் வெளியிட்ட ஊடக அறிக்கை.

கொழும்பு தேசிய நூதன சாலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக பார லங்கா கண்காட்சியை திங்களன்று ஆரம்பித்து வைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் கிறீஸ்துவுக்கு முன்னர் முதலாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த துட்டகைமுனு மன்னனின் அஸ்தியை புதிய கலசத்தில் இட்டு காட்சிப்படுத்தியே நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார். இது ஒரு தேசிய பாரம்பரிய கண்காட்சி என கூறப்படுகின்றது.

இலங்கை தேசிய பாரம்பரியம் எனும் போது ஆட்சியாளர்கள் சிங்களப் பாரம்பரியத்தையே முதன்மைப்படுத்துகின்றார்கள். தமிழர் பாரம்பரியங்கள் திட்டமிட்ட அடிப்படையில் மூடி மறைக்கப்படுகின்றன. யுத்தம் முடிவடைந்து கடந்த இரண்டு வருடங்களாக தமிழர் பாரம்பரியப் பிரதேசங்களில் பௌத்த சின்னங்களை தேடி அலைவதும், சிங்கள மக்கள் இப் பகுதிகளில் வரலாற்றுக்கு முன்னர் குடியிருந்தார்கள். என்ற கதையை பரப்புவதும் திட்டமிட்ட அடிப்படையில் நிறுவனமயப்படுத்தப்பட்டு பரப்பப்பட்டு வருகின்றது.

சங்கிலி மன்னனுடன் கந்தரேடையை இணைத்து 52 புத்த பிக்குகளை சங்கிலி கொன்றான் என்றும், புத்த பிக்குகக்களின் புனித சடலங்கள் புதைக்கப்பட்ட இடுகுழிகளே சிறிய தூபிகளாக கந்தரோடையில் பரந்துள்ளதென்றும் அங்கு கதிரக்கொட என்ற தூபி இருந்ததாகவும் இன்றும் கந்தரோடையில் பாதுகாப்பு படையினரால் சிங்களத்தில் எழுதிவைக்கப்பட்ட விளக்கத்தை காணக்கூடியதாக உள்ளது. இவை இலங்கையில் இன்று எல்லோரும் வரலாற்று ஆசிரியர்களாக மாறும் போக்கை காட்டுகின்றது. யாழ்ப்பாணத்தில் புதிதாக வருகை தந்துள்ள வணிக நிறுவனங்களும், வர்த்தக வங்கிகளும் திட்டமிட்ட அடிப்படையில் தமிழ்ப் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றி விளம்பரம் செய்வதையும் நாம் காண்கின்றோம். அண்மையில் வேலணையில் திறக்கப்பட்ட இலங்கை வர்த்தக வங்கிக்கிளை யினர் தமது திறப்புவிழா பத்திரிகை விளம்பரத்தில் வேலணை என்ற பெயர் சிங்கள மொழியிலிருந்து திரிபடைந்தது என்ற குறிப்பினை வெளியிட்டிருந்தனர். கிளிநொச்சி கிளை திறந்தபோதும் கிளிநொச்சி சிங்கள மொழியிலிருந்து திரிபடைந்தது என அவர்களது விளம்பரம் கூறி இருந்தது. இப்பிரதேசம் வாழ் தமிழ் மக்கள் இவற்றை கண்டும் காணாமல் இருந்ததாலும் வர்த்தக வங்கியாளர்களே வரலாற்று விற்பன்னர்களாக மாறுவதை நீண்ட நாட்களுக்கு சகிக்க முடியாது என மக்கள் தெரிவித்தனர். எனவே இப்படியான வர்த்தக நிலையங்கள், வங்கிகளின் சேவையை புறக்கணிப்பதன் மூலம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் வரும் என பெருமளவினர் பேசிக்கொண்டனர். மேலும் இவற்றை புறக்கணிப்பதன் மூலம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும எனப் பலர் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி அவர்கள் காட்சிப்படுத்திய துட்டகைமுனு அஸ்தி என்பது சிங்கள வரலாற்று ஆசிரியர்களும், தமிழ் வரலாற்று ஆசிரியர்களும் வெளியிட்ட பல நூல்களில் அநுராதபுரத்தை ஆறு தசாப்தங்களாக ஆண்ட சோழத் தமிழ் மன்னனான எல்லாளனின் அஸ்தி என்றே குறிப்பிட்டுள்ளார்கள். 1981 இல் "எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும்" என்ற தலைப்பில் கலாநிதி ஜேம்ஸ் தே. இரத்தினம் ஆங்கிலத்தில் எழுதி, திரு ஏ.ஜே.கனகரட்னா தமிழாக்கம் செய்த நூல் ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தென்னாசிய ஆய்வு மையத்தினரால் வெளியிடப்பட்டது.

“இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு மேலாக இலங்கை மக்கள் ஒரு வீரனாகவும், நீதியும் மனித பண்பும் கொண்ட மன்னனாகவும் விளங்கிய எல்லாள மன்னனுக்கு தொடர்ந்தும் அஞ்சலி செலுத்தி வந்துள்ளமை இம் மக்களிற்குரிய சிறப்பைக் காட்டும் என” திரு.பு.P. மல்லசேகர என்ற காலஞ்சென்ற பிரபல சிங்கள பௌத்தத் தலைவரும் அறிஞரும் தனது “The Pali Literature of Ceylon” (Colombo 1928) எனும் நூலில் பாராட்டிய கூற்று இதனை துலாம்பரமாக விளக்குகின்றது. இவர்கள் தற்போது காட்சிப்படுத்தியுள்ள துட்டகைமுனு அஸ்தி என்பது உண்மையில் எல்லாளனின் அஸ்தியே ஆகும் என மல்லசேகராவும் மற்றும் பல சிங்கள வரலாற்றாசிரியர்களும் நிறுவியுள்ளார்கள். இதுபற்றி விபரங்களை மேலும் பெறுவதற்கு http://www.noolaham.net/project/01/17/17.htm என்ற இணைய தளத்தில் உள்ள சிறு நூலைப் பார்வையிடலாம்.

மேற்படி நூலை எழுதிய கலாநிதி இரத்தினம் அவர்கள் தமிழ் வரலாற்றாசிரியர்களிற்கு பின்வரும் வேண்டுகோளை முன்வைக்கின்றார்.

"மரணத்தின் பின்பும் வாழ்வு நீடிக்கின்றது. அதுவும், இந்த பூமியில் தான் நீடிக்கின்றது. அது அவனவன் ஆற்றிய கடமைகளில் உயிர் வாழ்கின்றது. அநியாயங்களை எந்தவகையிலாயினும் எதிர்ப்பவர்களது ஆன்மாக்கள் மரணத்தின் பின்பும் பூமியில் பிரகாசிக்கின்றன. இராமரணை கட்டுதற்கு அணில் தன் இயல்புக்கேற்ப தன்னாலான சிறு கற்களைப் பொறுக்கி கொடுத்தது போல பௌத்த சிங்களப் பெருந்தேசியவாத அடக்கு முறையிலிருந்து தமிழ் தேசியத்தைக் கட்டிக்காக்க ஒவ்வொருவரும் தத்தம் இயல்புக்கேற்ப தம்மாலான கடமைகளைச் செய்ய வேண்டும"

மேற்படி வேண்டுகோளை மனங்கொண்டு புலமையாளர்கள் செயல்ப்பட வேண்டும். ஆட்சியாளர்கள் இவ்வாறாக தமிழ் மக்களை புண்படுத்தும் நடவடிக்கைகள் மூலம் அவர்களது மனங்களை வெல்லவோ? தேசிய இணக்கப்பாட்டை ஏற்படுத்தவோ முடியாது என்பதை உணர்தல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நூதன சாலையில் வைக்கப்பட்டிருப்பது துட்டகைமுனுவின் அஸ்தி அல்ல- அது எல்லாளனின் அஸ்தி!

Published on May 20, 2011-10:13 am · No Comments

கொழும்பு தேசிய நூதன சாலையில் வைக்கப்பட்டிருப்பது துட்டகைமுனுவின் அஸ்தி அல்ல என்றும் அது தமிழ் மன்னான எல்லாளனின் அஸ்தி என்றும் யாழ். சிந்தனைக்கூடம் ஆய்வு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் தெரிவித்துள்ளார்.

‘தேசிய நூதன சாலையில் துட்டகைமுனுவின் அஸ்தி’ என்ற செய்திக்கான எதிர்வினையினையை சிந்தனைக்கூடம்-யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் இயக்குனரும் தமிழரசுக்கட்சி முக்கியத்தவருமான பேராசிரியர் இரா.சிவசந்திரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்த அறிக்கையின் முழு விபரங்களையும் இங்கே தருகிறோம்…….

கொழும்பு தேசிய நூதன சாலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக பார லங்கா கண்காட்சியை திங்களன்று ஆரம்பித்து வைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் கிறீஸ்துவுக்கு முன்னர் முதலாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த துட்டகைமுனு மன்னனின் அஸ்தியை புதிய கலசத்தில் இட்டு காட்சிப்படுத்தியே நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார். இது ஒரு தேசிய பாரம்பரிய கண்காட்சி என கூறப்படுகின்றது.

இலங்கை தேசிய பாரம்பரியம் எனும் போது ஆட்சியாளர்கள் சிங்களப் பாரம்பரியத்தையே முதன்மைப்படுத்துகின்றார்கள். தமிழர் பாரம்பரியங்கள் திட்டமிட்ட அடிப்படையில் மூடி மறைக்கப்படுகின்றன. யுத்தம் முடிவடைந்து கடந்த இரண்டு வருடங்களாக தமிழர் பாரம்பரியப் பிரதேசங்களில் பௌத்த சின்னங்களை தேடி அலைவதும், சிங்கள மக்கள் இப் பகுதிகளில் வரலாற்றுக்கு முன்னர் குடியிருந்தார்கள். என்ற கதையை பரப்புவதும் திட்டமிட்ட அடிப்படையில் நிறுவனமயப்படுத்தப்பட்டு பரப்பப்பட்டு வருகின்றது.

சங்கிலி மன்னனுடன் கந்தரேடையை இணைத்து 52 புத்த பிக்குகளை சங்கிலி கொன்றான் என்றும், புத்த பிக்குகக்களின் புனித சடலங்கள் புதைக்கப்பட்ட இடுகுழிகளே சிறிய தூபிகளாக கந்தரோடையில் பரந்துள்ளதென்றும் அங்கு கதிரக்கொட என்ற தூபி இருந்ததாகவும் இன்றும் கந்தரோடையில் பாதுகாப்பு படையினரால் சிங்களத்தில் எழுதிவைக்கப்பட்ட விளக்கத்தை காணக்கூடியதாக உள்ளது. இவை இலங்கையில் இன்று எல்லோரும் வரலாற்று ஆசிரியர்களாக மாறும் போக்கை காட்டுகின்றது.

யாழ்ப்பாணத்தில் புதிதாக வருகை தந்துள்ள வணிக நிறுவனங்களும், வர்த்தக வங்கிகளும் திட்டமிட்ட அடிப்படையில் தமிழ்ப் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றி விளம்பரம் செய்வதையும் நாம் காண்கின்றோம். அண்மையில் வேலணையில் திறக்கப்பட்ட இலங்கை வர்த்தக வங்கிக்கிளை யினர் தமது திறப்புவிழா பத்திரிகை விளம்பரத்தில் வேலணை என்ற பெயர் சிங்கள மொழியிலிருந்து திரிபடைந்தது என்ற குறிப்பினை வெளியிட்டிருந்தனர். கிளிநொச்சி கிளை திறந்தபோதும் கிளிநொச்சி சிங்கள மொழியிலிருந்து திரிபடைந்தது என அவர்களது விளம்பரம் கூறி இருந்தது. இப்பிரதேசம் வாழ் தமிழ் மக்கள் இவற்றை கண்டும் காணாமல் இருந்ததாலும் வர்த்தக வங்கியாளர்களே வரலாற்று விற்பன்னர்களாக மாறுவதை நீண்ட நாட்களுக்கு சகிக்க முடியாது என மக்கள் தெரிவித்தனர். எனவே இப்படியான வர்த்தக நிலையங்கள், வங்கிகளின் சேவையை புறக்கணிப்பதன் மூலம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் வரும் என பெருமளவினர் பேசிக்கொண்டனர். மேலும் இவற்றை புறக்கணிப்பதன் மூலம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும எனப் பலர் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி அவர்கள் காட்சிப்படுத்திய துட்டகைமுனு அஸ்தி என்பது சிங்கள வரலாற்று ஆசிரியர்களும், தமிழ் வரலாற்று ஆசிரியர்களும் வெளியிட்ட பல நூல்களில் அநுராதபுரத்தை ஆறு தசாப்தங்களாக ஆண்ட சோழத் தமிழ் மன்னனான எல்லாளனின் அஸ்தி என்றே குறிப்பிட்டுள்ளார்கள். 1981 இல் ‘எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும்’ என்ற தலைப்பில் கலாநிதி ஜேம்ஸ் தே. இரத்தினம் ஆங்கிலத்தில் எழுதி, திரு ஏ.ஜே.கனகரட்னா தமிழாக்கம் செய்த நூல் ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தென்னாசிய ஆய்வு மையத்தினரால் வெளியிடப்பட்டது.

‘இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு மேலாக இலங்கை மக்கள் ஒரு வீரனாகவும், நீதியும் மனித பண்பும் கொண்ட மன்னனாகவும் விளங்கிய எல்லாள மன்னனுக்கு தொடர்ந்தும் அஞ்சலி செலுத்தி வந்துள்ளமை இம் மக்களிற்குரிய சிறப்பைக் காட்டும் என’ திரு.G.P. மல்லசேகர என்ற காலஞ்சென்ற பிரபல சிங்கள பௌத்தத் தலைவரும் அறிஞரும் தனது “The Pali Literature of Ceylon” (Colombo 1928) எனும் நூலில் பாராட்டிய கூற்று இதனை துலாம்பரமாக விளக்குகின்றது. இவர்கள் தற்போது காட்சிப்படுத்தியுள்ள துட்டகைமுனு அஸ்தி என்பது உண்மையில் எல்லாளனின் அஸ்தியே ஆகும் என மல்லசேகராவும் மற்றும் பல சிங்கள வரலாற்றாசிரியர்களும் நிறுவியுள்ளார்கள். இதுபற்றி விபரங்களை மேலும் பெறுவதற்கு http://www.noolaham.net/project/01/17/17.htm என்ற இணைய தளத்தில் உள்ள சிறு நூலைப் பார்வையிடலாம்.

மேற்படி நூலை எழுதிய கலாநிதி இரத்தினம் அவர்கள் தமிழ் வரலாற்றாசிரியர்களிற்கு பின்வரும் வேண்டுகோளை முன்வைக்கின்றார்.

‘மரணத்தின் பின்பும் வாழ்வு நீடிக்கின்றது. அதுவும், இந்த பூமியில் தான் நீடிக்கின்றது. அது அவனவன் ஆற்றிய கடமைகளில் உயிர் வாழ்கின்றது. அநியாயங்களை எந்தவகையிலாயினும் எதிர்ப்பவர்களது ஆன்மாக்கள் மரணத்தின் பின்பும் பூமியில் பிரகாசிக்கின்றன. இராமரணை கட்டுதற்கு அணில் தன் இயல்புக்கேற்ப தன்னாலான சிறு கற்களைப் பொறுக்கி கொடுத்தது போல பௌத்த சிங்களப் பெருந்தேசியவாத அடக்கு முறையிலிருந்து தமிழ் தேசியத்தைக் கட்டிக்காக்க ஒவ்வொருவரும் தத்தம் இயல்புக்கேற்ப தம்மாலான கடமைகளைச் செய்ய வேண்டும’

மேற்படி வேண்டுகோளை மனங்கொண்டு புலமையாளர்கள் செயல்ப்பட வேண்டும். ஆட்சியாளர்கள் இவ்வாறாக தமிழ் மக்களை புண்படுத்தும் நடவடிக்கைகள் மூலம் அவர்களது மனங்களை வெல்லவோ? தேசிய இணக்கப்பாட்டை ஏற்படுத்தவோ முடியாது என்பதை உணர்தல் வேண்டும்.

எல்லாளனின் அஸ்தியை துட்டகைமுனு மட்டுமல்லமகிந்தவும் வணங்குகின்றார்.

10shf5w.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.