Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

50 வீதத்துக்கும் அதிகமான தமிழர்கள் வடக்கிற்கு வெளியே தான் உள்ளனர் அதனால் அதிகாரப் பகிர்வு தேவையில்லையாம்- பீரிஸ்

Featured Replies

அரசதரப்புடன் கடைசியாக நடந்த பேச்சுகளுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஊடகம் ஒன்றுக்கு வெளியிட்ட கருத்தில் “இனிமேல் பேச்சுகள் கடினமாகவே இருக்கும்““ என்று கூறியிருந்தார். அவர் எதற்காக அப்படிக் கூறினார் என்பதை இரண்டொரு நாட்களில் புரிந்து கொள்ள முடிந்தது.

பேச்சுகள் தொடர்பாக இனிமேல் இரு தரப்பும் கருத்து எதையும் வெளியிடுவதில்லை என்று கூறியே கடைசியாக நடந்த சந்திப்புக்குச் சென்றிருந்தனர். ஆனால் பேச்சு நடந்த அன்றே அமைச்சரவைப் பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல செனெட் சபை அமைப்பது பற்றிய தகவலை வெளியிட்டிருந்தார்.

அதிகாரப்பகிர்வு பற்றிய பேச்சுக்குள் நுழைந்து கொண்டிருக்கும் சமயத்தில் அரசதரப்பு அவசரமாக இப்போது செனெட் சபை பற்றிய விவாதத்தை கிளப்பியுள்ளது. அதிகாரப்பகிர்வு பற்றிப் பேச அரசாங்கம் தயாராக இல்லாத நிலையை சமாளிப்பதற்கே செனெட் சபை பற்றிய விவகாரத்தைக் கிளப்பியுள்ளது.

செனெட் சபையை அமைப்பதற்கு அரசாங்கம் கூறியுள்ள யோசனைக்கும், தமிழர் பிரச்சினைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்பது முதலாவது விவகாரம். அடுத்து அதிகாரப்பகிர்வு பற்றிப் பேசுகின்ற நேரத்தில் இந்த செனெட் சபை பற்றிய பிரச்சினையைக் கிளப்பியுள்ளது இரண்டாவது விவகாரம்.

போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகி விட்டநிலையில் கூட இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. இதுவரை பல முறை அதிகாரப்பகிர்வை முன்வைப்பதாகக் கூறி ஏமாற்றி விட்ட அரசாங்கம் கடந்த முறை கூட அதுபற்றி தமது கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசிக்கவில்லை என்ற விந்தையான காரணத்தைக் கூறி விவகாரத்தை திசைதிருப்பியது.

இரண்டு ஆண்டுகளாக அதிகாரப்பகிர்வு பற்றிப் பேசுவதைத் தவிர்ப்பதில் இருந்தே இந்த விடயத்தில் அரசாங்கம் எந்தளவுக்கு அசிரத்தையுடன் இருக்கிறது என்பதைக் கணிக்க முடியும். கூட்டமைப்புடன் அதிகாரப்பகிர்வு பற்றிப் பேசுகின்ற நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து, அவர்களையும் அழைத்து விட்டு இன்னும் கூட்டணிக் கட்சிகளுடன் ஆராயவில்லை என்று கூறுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

இதை இழுத்தடிக்கும் செயல் என்று உறுதியாகவே கூற முடியும்.அரசாங்கம் எப்படியெல்லாம் பேச்சுகளை இழுத்தடிக்க முடியுமோ அப்படியெல்லாம் இழுத்தடித்து வருகிறது. ஆனால் இப்போது நிலைமைகளில் கொஞ்சம் மாற்றங்கள் நிகழ்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. குறிப்பாகப் வெளிவிவகார அமைச்சர் பீரிஸின் இந்தியப் பயணத்தின் பின்னர் அரசின் போக்கில் நிச்சயம் மாற்றம் ஏற்பட்டேயாக வேண்டிய நிலை உள்ளது.

ஏற்கனவே அமெக்காவும் அதிகாரப்பகிர்வு, அரசியல் தீர்வு பற்றியே அழுத்தம் கொடுத்துள்ளது. இப்போது இந்தியாவும் அதையே செய்துள்ளது. ஆக மொத்தத்தில் அரசியல்தீர்வு ஒன்றுக்கு, அதிகாரப்பகிர்வு ஒன்றுக்கு இணங்க வேண்டிய நிலை இலங்கை அரசுக்கு வந்துள்ளது.

இதைச் செய்யாது போனால் அரசாங்கத்தினால் நீடித்து நிலைத்திருக்க டியாது அல்லது சர்வதேசப் பொறி ஒன்றுக்குள் சிக்கிக் கொள்ள நேடும்.

இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு எப்படியாவது அரசாங்கம் அரசியல்தீர்வுக்கு, அதிகாரப் பகிர்வுக்கு வந்தேயாக வேண்டிய நிலை உருவாகி வருகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தை தமிழர்தரப்பு எந்தளவுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பது கேள்விக்குயது. அடுத்த கட்டப்பேச்சுகள் நடக்க இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.

அதற்கிடையே அரசாங்கம் கூட்டணிக் கட்சிகளின் இணக்கப்பாட்டைப் பெற்றுக் கொண்டு வருமா? இல்லையா என்பதெல்லாம் தெயவில்லை. ஆனால், அதிகாரப்பகிர்வு பற்றிப் பேச முன் வரலாம்.

இந்தக் கட்டத்தில் அரசதரப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், சர்வதேச சமூகத்தையும் தவறாக வழிநடத்தும் முயற்சிகளில் இறங்க வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக செனெட் சபை போன்ற விவகாரங்களுக்குள் சிக்க வைத்து முதலில் இந்தப் பிரச்சினையை பேச்சு மேசைக்கு வெளியே கொண்டு வரும் காரியங்கள் முன்னெடுக்கப்படலாம்.

செனெட் சபை விவகாரம் கூட அப்படிப்பட்டதொன்று தான். இரண்டாவது சபையான இதை அதிகாரப்பகிர்வின் ஒரு திட்டம் இல்லை என்று புதுடெல்லியில் கூறியுள்ளார் அமைச்சர் பீரீஸ்.

ஆனால் அதையே ஒரு மாற்றுத் திட்டமாக கூட்டமைப்பிடம் முன்வைத்துள்ளது அரசதரப்பு.

இந்தநிலையில், அதிகாரங்களை வடக்குடன் பகிர்வதானால், அங்குள்ளதை விடவும் அதிகமான தமிழர்கள் வேறு இடங்களில் தானே வசிக்கின்றனர் என்ற ஒரு கருத்தையும் பீஸ் புதுடெல்லியில் கூறியுள்ளார்.

50 வீதத்துக்கும் அதிகமான தமிழர்கள் வடக்கிற்கு வெளியே தான் உள்ளனர் என்று அவர் கூறியுள்ள கருத்தும் சிக்கல் ஒன்றுக்குயதாகவே தென்படுகிறது.

வடக்கில் வாக்காளர் பட்டியல் மீளாய்வு என்ற பெயரில் வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்கும் காரியம் நடந்து வருகிறது. இந்தநிலையில் தமிழர்கள் வடக்கில் குறைந்தளவிலேயே உள்ளனர் என்று காண்பிக்கப்பட்டு, அதிகாரப்பகிர்வு திட்டத்தைக் குழப்பும் முயற்சிகளும் நடப்பதாகத் தெகிறது. இதற்காகவே செனெட் சபையை அமைக்கப் போவதாக அரசாங்கம் கூறியது.

ஆனால் செனெட் சபை தமிழருக்கு எத்தகைய பாதுகாப்பைக் கொடுக்கும் என்பதற்கு அரசதரப்பிடம் விளக்கம் ஏதுமில்லை. 13ஆவது திருத்தத்தை அடிப்படையாக வைத்து அரசியல்தீர்வு ஒன்றைக் காணும் முயற்சியில் இறங்க வேண்டும் என்கிறது இந்தியா.

இல்லை அதற்கு மேலேயும் போகத் தயார் என்று புதுடெல்லியில் கூறியுள்ளார் அமைச்சர் பீரீஸ். ஆனால் உள்ளூலோ மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்க முடியாது என்று பிடிவாதம் பிடிக்கிறது அரசாங்கம்.

உண்மையில் பேச்சு மேசையில் அரசதரப்பு கூறுவதற்கும், வெளியே நடப்பதற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதை அரசின் செயல்களில் இருந்து புரிந்து கொள்ள டிகிறது.

இப்போது அனைத்துலக நெருக்கடிகளைச் சமாளிக்க அரசாங்கம் வேறு வழியின்றி அதிகாரப்பகிர்வு ஒன்றை நோக்கி, அரசியல்தீர்வு ஒன்றை நோக்கி வரவேண்டிய கட்டாயம் உருவாகி வருகிறது.

இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமயோசிதமாகவும், விட்டுக் கொடுக்காமலும் செயற்பட கங்கணம் கட்டி நின்றால் உறுதியான சில தீர்வுகளை எட்ட முடியும்.இப்போது கிட்டத்தட்ட எல்லோராலும் கைவிடப்பட்ட நிலைக்கு அரசாங்கம் வந்துள்ள நிலையில் வாய்ப்புகள் சில தமிழரின் கதவுகளைத் தட்டத் தொடங்கியுள்ளன.

ஏற்கனவே அரசதரப்புகள் தமிழர்தரப்புகளைப் பல முறை, பலவாறாக ஏமாற்றியுள்ளன.அதேபோல இனிமேலும் நடக்காத வகையில் பொறிகளிலும், குழிகளிலும் விழுந்து விடாமல் பயணத்தைத் தொடர்வதில் தான் தமிழர்தரப்பின் அரசியல் வெற்றிகள் தங்கியுள்ளன

http://akkinikkunchu.com/new/

50 வீதத்துக்கும் அதிகமான தமிழர்கள் வடக்கிற்கு வெளியே தான் உள்ளனர் என்று அவர் கூறியுள்ள கருத்தும் சிக்கல் ஒன்றுக்குயதாகவே தென்படுகிறது.

பிரித்தானியா இலவச சுதந்திரத்தை சிங்களத்திடம் தாரைவார்த்து சென்ற பின்னர் :

-- கொடிய யுத்தங்கள் தமிழர் தாயாக நிலங்களில் நடாத்தப்பட்டுள்ளன

-- சிங்கள குடியேற்றங்கள் தமிழர் தாயகங்களில் இடம்பெற்றுக்கொண்டு உள்ளது

-- 50 வீதத்திற்கு மேலான சிங்கள இராணுவம் தமிழர் தாயகத்தில் நிறுத்தப்பட்டு இராணுவ ஆட்சி

-- எந்தவித பொருளாதார அபிவிருத்தியும் தமிழர் தாயகங்களில் திட்டமிட்டு தடுக்கப்பட்டது

இன்னும் ஆயிரம் சொல்லலாம்

பிரித்தானியா இலவச சுதந்திரத்தை சிங்களத்திடம் தாரைவார்த்து சென்ற பின்னர் :

-- கொடிய யுத்தங்கள் தமிழர் தாயாக நிலங்களில் நடாத்தப்பட்டுள்ளன

-- சிங்கள குடியேற்றங்கள் தமிழர் தாயகங்களில் இடம்பெற்றுக்கொண்டு உள்ளது

-- 50 வீதத்திற்கு மேலான சிங்கள இராணுவம் தமிழர் தாயகத்தில் நிறுத்தப்பட்டு இராணுவ ஆட்சி

-- எந்தவித பொருளாதார அபிவிருத்தியும் தமிழர் தாயகங்களில் திட்டமிட்டு தடுக்கப்பட்டது

இன்னும் ஆயிரம் சொல்லலாம்

இதனால் தான் ஏர் கண்ட தமிழன் போர் கொண்டகோலம் பூண்டான் என்று பேராசிரியர் பீரிசுக்கு விளங்கவில்லையா????????????????.

  • கருத்துக்கள உறவுகள்

50 வீதத்துக்கும் அதிகமான தமிழர்கள் வடக்கிற்கு வெளியே தான் உள்ளனர்

ஆம்.சிங்கள இராணுவத்தின் அராஜகத்தால் தான் இவ்வளவு மக்களும் வெளியேறினார்கள் . இன்றும் இராணுவ பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அவர்களின் நிலங்கள் சூறையாடப்பட்டுள்ளன.ஆனால் அவர்களின் தாய் நிலம் வடக்கு கிழக்கு தான் என்பதை கட்சி தாவும் குரங்கு பீரிஸ் புரிந்தும் புரியாதது போல் நடிப்பது வேடிக்கையானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.