Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் மரணம்

Featured Replies

தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் மரணம்

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மரியம் பிச்சை, இன்று காலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடன் காரில் வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி காயமடைந்தார்.

சமீபத்தில் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் என்.மரியம் பிச்சை. திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேருவை வீழ்த்தியதால் இவரை பதவி தேடி வந்தது.

இன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா சட்டசபையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மரியம் பிச்சை,திருச்சியிலிருந்து சென்னை கிளம்பினார். சென்னை நோக்கி காரில் வந்த அவருடன் விளையாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதியும் பயணித்தார்.

இவர்களது கார் சமயபுரம் அருகே பாடாலூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென முன்னாள் சென்ற பஸ் மீது கார் பலமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் மரியம் பிச்சை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அமைச்சர் சிவபதிக்கு விபத்தில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மரியம் பிச்சை முதல் முறையாக எம்.எல்.ஏ. தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர். முதல் முறையிலேயே அவர் அமைச்சர் பதவிக்கும் உயர்ந்தவர்.

மரியம்பிச்சை திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர். பி.ஏ. வரலாறு படித்துள்ளார். இவருக்கு பாத்திமாகனி என்ற மனைவியும், ஆசிக் மீரா, ராஜ்முகமது, அமீர்முகமது என்ற 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

60 வயதான மரியம் பிச்சை ஆரம்பத்தில் திரைப்பட விநியோகஸ்தராக இருந்தவர். தியேட்டர் ஒன்றையும் நடத்தி வந்தார். திருச்சி மாநகர அதிமுக அமைப்பாளராக செயல்பட்ட இவர் 27வது வார்டு கவுன்சிலராக இருந்தார். தேர்தலில் நிற்பதற்காக அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார்.

விபத்தில் உயிரிழந்த மரியம் பிச்சையின் உடல் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு-தமிழரசன்

அமைச்சர் மரியம் பிச்சை மரணமடைந்த போதிலும், எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தற்காலிக சபாநாயகர் செ.கு. தமிழரசன் அறிவித்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2011/05/23/tn-minister-mariam-pichai-killed-road-mishap-aid0091.html

  • தொடங்கியவர்

ம‌ரிய‌ம் ‌‌பி‌ச்சை மரண‌ம்: சி.‌பி.‌சி.ஐ.டி ‌விசாரணை‌க்கு ஜெயல‌லிதா உ‌த்தரவு

திங்கள், 23 மே 2011( 16:26 IST )

ம‌ரிய‌ம் ‌பி‌ச்சை மரண‌ம் கு‌றி‌த்து‌ ‌சி‌.பி.‌சி.ஐ.டி ‌விசாரணை‌க்கு முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

‌திரு‌ச்‌சி அடு‌த்த பாடாலூ‌ர் அருகே இ‌ன்று அ‌திகாலை நட‌ந்த சாலை ‌விப‌த்‌தி‌ல் சு‌ற்று‌ச்சூழ‌ல் அமை‌ச்ச‌ர் ம‌ரிய‌ம் ‌பி‌ச்சை ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே உ‌யி‌ரி‌ந்தா‌ர்.

இவரது மறைவு‌க்கு இர‌ங்க‌ல் தெ‌ரி‌‌வி‌‌த்த முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌‌லிதா, இ‌ன்று ‌பி‌ற்பக‌ல் த‌னி ‌விமான‌ம் மூல‌ம் ‌திரு‌ச்‌சி செ‌ன்றா‌ர். ‌அ‌ங்கு அமை‌ச்ச‌ரி‌ன் சொ‌ந்த ஊரான ச‌ங்‌‌‌கி‌லியா‌ண்டபுர‌த்‌தி‌‌ற்கு கா‌ரி‌ல் செ‌ன்றா‌ர்.

‌பி‌ன்ன‌ர் அமை‌ச்ச‌ர் ம‌ரிய‌ம் ‌பி‌ச்சை உடலு‌க்கு மல‌ர்வளைய‌ம் வை‌த்து அ‌ஞ்ச‌லி செலு‌த்‌தினா‌ர். மனை‌வி, குடு‌ம்ப‌த்‌தினரு‌க்கு ஜெயல‌லிதா ஆறுத‌ல் கூ‌றினா‌ர்.

‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம் பே‌சிய ஜெயல‌‌லிதா, பொதும‌க்க‌ளி‌ன் கரு‌த்தை ஏ‌ற்று ‌சி‌.பி.‌சி.ஐ.டி ‌விசாரணை‌க்கு உ‌த்தர‌வி‌‌ட்டு‌‌ள்ளதாக தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அமை‌ச்ச‌ர் ம‌ரிய‌ம் ‌பி‌ச்சை மரண‌த்‌தி‌ல் ம‌ர்ம ‌நீடி‌ப்பதா‌ல் இ‌ந்த ‌விசாரணை‌க்கு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளதாக அவ‌ர் கூ‌றினா‌ர்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1105/23/1110523038_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த சட்டசபை உறுப்பினருக்கு இரங்கல்கள்..! :(

திருச்சி மேற்குத் தொகுதியை மதிமுகவுக்கு வழங்கி அதிமுக கட்சி தனது பெருந்தன்மையக் காண்பிக்க வேண்டும். :rolleyes:

  • தொடங்கியவர்

அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிய லாரி மேற்கு வங்கத்தில் சிக்கியது

சுற்றுச்சூழல் அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிய லாரி மேற்கு வங்கத்தில் வைத்து பிடிபட்டுள்ளது. தூத்துக்குடியிலிருந்து அந்த லாரி ஜிப்சம் ஏற்றி வந்தபோதுதான் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது ஒரு கண்டெய்னர் லாரியாகும். அந்த லாரியை போலீஸார் தமிழகத்திற்குக் கொண்டு வருகின்றனர். டிரைவரும் பிடிபட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் மரியம் பிச்சை. பதவியேற்று ஒரு வாரம் கூட ஆகியிராத நிலையில், மே 23ம் தேதி காலையில் பெரம்பலூர் அருகே பாடாலூர் என்ற இடத்தில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தார்.

அவரது மரணம் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிப்பார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சிபிசிஐடி போலீஸார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மரியம் பிச்சை பபயணித்த கார் டிரைவர் ஆனந்த்தை துருவித் துருவி விசாரித்தனர். அதேசமயம், விபத்துக்குக்காரணமான லாரியைப் பிடிக்கவும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.

அந்த லாரி எங்கே போனது என்பது பெரும் குழப்பமாக இருந்து வந்தது. நாகர்கோவில், சேலம் உள்ளிட்ட பல இடங்களில் தனிப்படை போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த நிலையில்,சம்பந்தப்பட்ட லாரி எது என்பது தற்போது தெரிந்து விட்டது. அது ஒரு கண்டெய்னர் லாரியாகும். தூத்துக்குடியிலிருந்து சம்பவ தினத்தன்று ஜிப்சம் ஏற்றிக் கொண்டு அந்த லாரி மேற்கு வங்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போதுதான் பாடாலூரில் வைத்து அமைச்சரின் கார் விபத்துக்குள்ளாக காரணமாகியது. தற்போது இந்த லாரியை போலீஸார் மேற்கு வங்கத்தில் வைத்துப் பிடித்துள்ளனர். டிரைவரும் பிடிபட்டுள்ளார். லாரியையும், டிரைவரையும் தற்போது தமிழகத்திற்குக் கொண்டு வந்து கொண்டுள்ளனர்.

இந்த லாரியின் உரிமையாளர் ஆந்திராவைச் சேர்ந்தவராவார். அவரையும் விசாரணைக்காக போலீஸார் அழைத்து வரவுள்ளனர்.

விரைவில் இந்த வழக்கில் மேலும் பல திருப்புமுனைத் தகவல்கள் வெளியாகலாம் என்று பேசப்படுகிறது.

நான்கு பேர் கோர்ட்டில் வாக்குமூலம்:

இந்த நிலையில், விபத்தை நேரில் பார்த்தவர்களான கார்த்திகேயன், வெங்கடேசன், சீனிவாசன், சரவணன் ஆகிய நான்கு பேரையும் சிபிசிஐடி போலீஸார், அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது மாஜிஸ்திரேட் ராஜ்குமார் முன்னிலையில் சட்ட விதி 164ன் கீழ் நான்கு பேரும் தனித் தனியாக ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.

http://thatstamil.oneindia.in/news/2011/05/30/lorry-which-caused-the-death-minister-aid0091.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.