Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பூரண விசாரணை நடத்தி உண்மைத்தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பூரண விசாரணை நடத்தி உண்மைத்தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்- சமாதானத்திற்கும் நீதிக்குமான இயக்கம்!

Published on May 23, 2011-2:12 pm · No Comments

யுத்தத்தின் இரண்டாவது வருட நிறைவில் யுத்தம் முடிந்து வி;ட்டது என்று நாம் சந்தோஷப்படலாம். ஆனால் யுத்தத்தின் கடைசி வாரங்களில் இடம்பெற்றவை கடந்த காலத்தினதும் நிகழ்காலத்தினதும் பெரும் துன்பியலாகும். நடந்தவற்றை நியாயப்படுத்துவதை விட பூரண விசாரணை நடத்துவதும் உண்மைத்தன்மையை ஏற்றுக் கொள்ளுதலுமே நல்லிணக்கம் காணுவதை சாத்தியமாக்கும் என சிறிலங்காவின் சமாதானத்திற்கும் நீதிக்குமான இயக்கத்தின் தலைவர் எட்வேர்ட் மோர்டிமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து முழு அளவிலான விசாரணை நடத்தும் படி அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக பல நாடுகள் கொழும்பில் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சினால் நடத்தப்படும் மூன்று நாள் கருத்தரங்கில் பங்குபற்றி சிறிலங்கா இராணுவத்தின் கொடுமைகளிலிருந்து எதனை கற்றுக்கொள்ளலாம் என்று பார்க்க இருக்கிறார்கள் என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் சிவில் யுத்தம் முடிந்து இரண்டாவது வருடம் நிறைவடைந்து விட்;டது. ‘ 40,000 க்கு அதிகமான மக்கள் யுத்தத்தில் கடைசிக்கட்டத்தில் இறந்தனர், ஐநா அறிக்கையின்படி கடைசிக்கட்டத்தில் இரு தரப்பினரும் போர்க்குற்றங்களை புரிந்துள்ளனர்.

ஆஸ்பத்திரிகள் மீது ஷெல் தாக்கதல்கள் நடத்தப்பட்டமை, சிவிலியன்கள் மற்றும் சரணடைந்தவர்களை விசாரணையின்றி கொலை செய்தது, சிவிலியன்களை திட்டமிட்டு இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியமை போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

கடைசி வாரங்களில் என்ன நடந்தன என்ற முழு உண்மையும் இன்னும் எமக்குத் தெரியவில்லை. மேலும் இன்னும் பலருக்கு இந்த அவலம் முடியவில்லை. ஐந்து வயதுக்குட்பட்ட 5000 சிறார்கள் உட்பட 30,000 பேர் வரையில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள இடம்பெயர் முகாம்களிலும் மற்றும் 4000 பேர் வரையில் வெளியுலகுடன் தொடர்பு இல்லாத ‘புனர்வாழ்வு நிலையங்கள்’ என்றழைக்கப்படும் இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அறியவருகின்றது.

திரும்பி வந்தவர்கள் சிதைந்து போன நகரங்களில் இருள்மயமான காலத்தை எதிர்நோக்கியிருக்கின்றார்கள். சில இடங்களில் 80 சதவீமான வீடுகள் அழிக்கப்பட்டு விட்டன. ‘ இச்சூழ்நிலையில் போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து முழு அளவிலான விசாரணை நடத்தும்படி அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக பல தேசிய அரசாங்கங்கள் கொழும்பில் மூன்று நாள் கருத்தரங்கில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அதிதிகளாக பங்குபற்றி ஸ்ரீலங்கா இராணுவத்தின் கொடுமையிலிருந்து எதனைக் கற்றுக்கொள்ளலாம் என்று பார்க்க இருக்கின்றார்கள்.

யுத்தத்தின் இரண்டாவது வருட நிறைவில் யுத்தம் முடிந்து வி;ட்டது என்று நாம் சந்தோஷப்படலாம். ஆனால் கடைசி வாரங்களில் இடம்பெற்றவை கடந்த காலத்தினதும் நிகழ்காலத்தினதும் துன்பியலாகும்.

பூரண விசாரணை நடத்துவதும் உண்மைத்தன்மையை ஏற்றுக் கொள்ளுதலுமே நல்லிணக்கம் காணுவதை சாத்தியமாக்கும் என சிறிலங்காவின் சமாதானத்திற்கும் நீதிக்குமான இயக்கத்தின் தலைவர் எட்வேர்ட் மோர்டிமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எட்வேர்ட் மோர்டிமர் 2006ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் சபையின் தொடர்பாடல் பணிப்பாளராக பணியாற்றியவராவார்.

source:thinakkathir.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.