Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவீந்திரா டீ சில்வாவை வெளியேற்றுமாறு அமெரிக்க அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை மனு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சவீந்திரா டீ சில்வாவை வெளியேற்றுமாறு அமெரிக்க அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை மனு!

Published on May 23, 2011-7:46 pm · No Comments

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களின் அடிப்படையில், ஐ.நா.வுக்கான சிறிலங்காவின் நிரத்தர பிரதிநிதி பிரிகேடியர் சவீந்திரா டீ சில்வா மீது நடவடிக்கை எடுத்து அவரை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு கோரி அமெரக்கா அரசிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அமெரிக்க பல்கலைக்கழகத்தின் UNROW மனித உரிமைகளுக்கான சட்ட ஆலோசனை நிறுவனம், SPEAK மனித உரிமைகளுக்கான முன்னெடுப்பு மையம் ஆகியன இணைந்து இந்த கோரிக்கையை அமெரிக்க அரசிடம் முன்வைத்துள்ளன.

சிறிலங்கா இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் தளபதியாக இருந்த பிரிகேடியர் சவீந்திரா டீ சில்வா, இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர் தற்போது அனுபவித்து வரும் ஐ.நா.வுக்கான இராஜதந்திரிகளுக்கு உரிய சட்டவிதிவிலக்கின் பாதுகாப்பை இழந்தவர் ஆகின்றார் என கோரிக்கை மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, இராஜதந்திர விசாவை இரத்து செய்து அமெரிக்காவில் இருந்து அவரை வெளியேற்றுமாறும் கோரப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் நிபுணர் குழுவின் அறிக்கை, மனித உரிமைகள் அமைப்புகளின் அறிக்கைகள் உட்பட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் போர்க்குற்றங்களுக்கான பிரிவின் ஒக்ரோபர் 29ம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையும் இந்தக் கோரிக்கை மனுவில் இணைக்கப்பட்டுள்ளன.

இனப்படுகொலை, ஏனைய மக்களை அவர்களின் நம்பிக்கைகளுக்காக தண்டித்தல், சித்திரவதை செய்தல், சட்டத்துக்கு புறம்பான வகையில் மரணதண்டனை வழங்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களும், இவ்வாறான செயல்களுக்கு துணை போனவர்களும், இந்த செயற்பாடுகளில் பங்குபற்றியவர்களும் அமெரிக்காவில் இருந்து அகற்றப்படக்கூடியவர்கள் என அமெரிக்காவின் குடிவரவு சட்டத்தில் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ள சரத்தை இந்த கோரிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.

இராஜதந்திரிகளுக்கு உரிய சட்டவிதிவிலக்கின் பாதுகாப்பு – பிரிகேடியர் சவீந்திரா டீ சில்வாவை அமெரிக்க மண்ணில் இருந்து அகற்றப்படுவதில் இருந்து பாதுகாக்கவில்லை என்பது இந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டப்பரிமாணத்தின் இன்றைய நிலையில் சர்வதேச குற்றங்கள் இராஜதந்திரிகளுக்கு உரிய சட்டவிதிவிலக்கின் பாதுகாப்பை ஊடறுத்து செல்கின்றன.

வெரினி எதிர் ஜேர்மனி வழக்கில் இத்தாலிய உச்ச நீதிமன்றம், வெளிநாடு ஒன்றின் வழக்கில் உள்ள சட்டங்களில் இருந்து ஒரு இராஜதந்திரிக்கு தனது நாட்டின் இறையாண்மையின் வெளிப்பாடான செயற்பாடுகளுக்கு இராஜதந்திர பாதுகாப்பு வழங்கப்பட்டாலும், அந்த செயற்பாடுகள் சர்வதேச குற்றங்களானால் இந்த இராஜதந்திர பாதுகாப்பு அகற்றப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா.வுக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையிலான உடன்பாட்டின் பிரகாரம், பொதுவாக ஐ.நா. தூதுவர்கள் இராஜதந்திர பாதுகாப்பை பெற்றுள்ள போதிலும், ஒரு இராஜதந்திரி அமெரிக்காவில் இருப்பது அமெரிக்க அரசிற்கோ அல்லது அதன் சட்டவிதிகளுக்கு பாதகமாக இருக்குமானால் அந்த இராஜதந்திரியின் விசாவை இரத்து செய்யும் அதிகாரம் அமெரிக்கா அரசுக்கு உண்டு.

முன்னர் பல தடவைகள் அமெரிக்க அரசு தனது செயற்பாட்டின் மூலம் இதனை வெளிப்படுத்தியுள்ளது.

உதாரணமாக நாசி ஜேர்மனியின் செயற்பாடுகளில் பங்கு கொண்டதன் காரணத்தால் ஆஸ்திரிய ஜனாதிபதிக்கும் முன்னாள் ஐ.நா. செயலாளர் நாயகம் கெர்ட் வால்ட்ஹெய்முக்கும் 1987ல் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கு விசா மறுக்கபட்டது.

இராஜதந்திரிகள் உட்பட அமெரிக்காவுக்கு வருபவர்கள் அமெரிக்க வெளியுறவு கொள்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கான காரணங்கள் இருப்பின், அவர்களின் குடிவரவு தவிர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்க குடிவரவு சட்டம் குறிப்பிடுகிறது.

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், பிரிகேடியர் சவீந்திரா டீ சில்வா அமெரிக்காவில் இருப்பது, சிறிலங்காவில் நீதியும், போர்க்குற்றங்களுக்கான பொறுப்பேற்றலும் இடம்பெறுவதற்கான அமெரிக்க அரசின் முயற்சிகளை பாதிப்பதாக கோரிக்கை மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு பிரிகேடியர் சவீந்திரா டீ சில்வாவுக்கு இராஜதந்திர விசா வழங்கியுள்ள முடிவை முற்றுமுழுதாக அமெரிக்க அரசு மீளாய்வு செய்ய வேண்டும் என்று இந்த கோரிக்கையில் முடிவாக கேட்கப்பட்டுள்ளது.

source:thinakkathir.

  • கருத்துக்கள உறவுகள்

போர்க் குற்றவாளியான அவரைக் கைது செய்யும் படி வழக்குப் போட முடியாதா?(இராஜ தந்திரிகளுக்குரிய சட்ட விலக்கு முட்டுக்கட்டையாக இருக்குமா?)

சாதரணமாக இவர்களை, அதாவது இராசதந்திர அனுமதியின் கீழ் உள்ளவர்களை, இலகுவாக அனுப்பமுடியாது. சர்வதேச நாணய நிதியின் தலைவர் செய்தமாதிரி எதாவது சட்டத்தை மீறுவாரானால் அதன் மூலம் அகற்றலாம்.

ஆனால், இந்த வழக்கின் வெற்றி என்னவென்றால் இப்படியான கொலையாளிகளை அடையாளம் காட்டுவதும், தொடரும் எமது இனஅழிப்பை சுட்டிக்காட்டுவதுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.