Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் ஜனநாயக விரோத சர்வதிகார ஆட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May 27, 2011

இந்தியா, பாகிஸ்தான் உட்பட 85க்கும் அதிகமான ஜனநாயக நாடுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தகவல் சுதந்திரம் இலங் கையில் செல்லாக்காசாகியுள்ளது. பாராளுமன்றத்தில் பொது மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட ஜனநாயக விரோத சர்வதிகார ஆட்சியையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவால் அரசாங்கத்துக்கு தலைவீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜனநாயக விழுமியங்களாக கருதப்படும் தகவல் சுதந்திரம் தொடர்பாக ஐ.தே.க முன் வைத்த தனிநபர் திருத்தச் சட்டமூல யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது ஜனநாயக விரோத ஆட்சியை அரசு வெளிப்படுத்தியுள்ளது என்றும் அக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த ஐ.தே.க.வின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கருஜயசூரிய கூறுகையில்

கடந்த வருடத்தில் நான் பாராளுமன்றத்தில் தகவல் சுதந்திரம் தொடர்பாக தனிநபர் திருத்தச் சட்டமூல யோசனையை முன் வைத்தேன். இதன்போது அரசாங்கம் இச்சட்ட மூலத்திற்கு ஒத்த வேறு ஒரு சட்ட மூலத்தை கொண்டு வரவுள்ளதால் மேற்படி சட்ட மூல யோசனையை வாபஸ்பெறுமாறு கூறியது. ஆனால் தற்போது சுமார் ஒன்பது மாதங்கள் கடந்துள்ள நிலையில் அரசாங்கம் உறுதியளித்த தகவல் சுதந்திர சட்ட மூலம் இதுவரையில் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்படவில்லை.

ஐ.தே.க முன்வைத்த தகவல் சுதந்திர சட்ட மூல யோசனையில் உத்தியாக பூர்வமாக தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக சுதந்திரம், அதன் அடிப்படையில் இவற்றைப் பெற்றுக் கொள்வது அல்லது மறுக்கப்படல் என்பதை வரையறை செய்தல், தகவல் சுதந்திர ஆணைக்குழுவை ஸ்தாபித்தல், தகவல் அதிகாரிகளை நியமித்தல், தகவல்களுக்காக கோரிக்கைகளை விடுப்பதற்கான செயல்முறை வகுத்தல் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடை நேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்தல் என்பன உள்ளடக்கமாக காணப்பட்டது.

இந்த சட்ட மூல யோசனைக்கு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்துகொள்கின்றைமையானது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். அத்தோடு நேற்று முன்தினம் புதன்கிழமை மேற்படி சட்டமூலம் தொடர்பில் விவாதிக்கும் வகையில் நிகழ்ச்சி நிரல் காணப்பட்டபோதிலும் அதற்கு எனக்கு அனுமதியளிக்கப்பட வில்லை. எனவே அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஏற்பாடுகள் பாராளுமன்றத்துக்குள்ளும் மேலோங்கியுள்ளது.

பாராளுமன்றத்தை பொறுத்தவரையில் அமைச்சர்களாலும் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் சமமாகவே கருதப்படவேண்டும். ஆனால் இன்று மக்கள் உரிமைகளுக்காக சட்டமூல யோசனைகளைக் கூட பாராளுமன்றத்தில் முன்வைக்க முடியவில்லை என்றார்.

Written by Thurai · Filed Under News Alaikal.

Edited by tamil arasu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.