Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றம் வருமா?. மீனவர்களின் எதிர்ப்பார்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும், தங்கள் வாழ்க்கையில் மாற்றம் வராதா என ஏக்கத்தோடு காத்திருப்பவர்கள் தமிழக மீனவர்கள் தான். இலங்கைக் கடற்படை கு ருவிகளைச் சுடுவது போல் மீனவர்களை சுட்டுத்தள்ளும்போது, இந்திய அரசு அதைக் கண்டுகொள்வதே இல்லை. இலங்கையில் போர் நடைபெறும் காலங்களில் விடு தலைப் புலிகளுக்கு உதவுவதாக குற்றம் சுமத்தப்பட்டு மீனவர்கள் கொல்லப்பட்டனர். போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும், மீனவர்கள் மீதான தாக்குதல் மட்டும் நிறுத்தப்படவில்லை. வெறும் கடிதங்களோடும், மௌனங்களோடும் அந்த மரணங்களைக் கடந்து போனது கடந்த அரசு.

தொடர்ந்து போர்களில் ஈடுபட்டு பகை நாடுகளாக இருக்கும் ஈரான், ஈராக், குவைத் நாடுகளின் கடல் எல்லை மிகக் குறுகியது. கடலிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்குக் கூட சவால் விடக்கூடியது. ஈராக் போரில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்தின் ராயல் கடற்படையின் சிறப்புப் பிரிவினர் ஈரானிய கடல்படையால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். கடற்படை வீரர்கள் எல்லை தாண்டியதாக ஈரான் குற்றம் சாட்டியது.

மிகப் பதற்றமான சூழ்நிலையில்,. ‘‘மிகக் குறுகிய கடல் பகுதியில் எல்லை கண்டுபிடிக்க முடியாமல் தவறு நடந்துவிட்டது’’ என இங்கிலாந்து அறிவித்தது. இதையடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். சகல சாட்டிலைட் வசதிகளும் கொண்டிருந்த உலகின் வலிமை வாய்ந்த ஒரு கடற்படையின் வீரர்கள் தவறுதலாக அடுத்த நாட்டின் கடல் பகுதியில் செல்வது குற்றமாகப் பார்க்கப்படவில்லை. ஈரானை பகை நாடாகக் கருதும் இங்கிலாந்தின் கடற்படை வீரர்களை ஈரான் சகல மரியாதைகளுடன் நடத்தியது. எந்த ஒரு நாகரிகமடைந்த நாடும் இவ்வாறே சக மனிதர்களை நடத்துகிறது. இலங்கையைத் தவிர!

தமக்கான எல்லையை எந்த ஒரு நாடும் விட்டுக் கொடுப்பதில்லை, இன்று வரை மக்மகான் எல்லை வரையறையை சீனா ஏற்றுக் கொள்ளவில்லை. புழு, பூச்சி கூட வசிக்க முடியாத சியாச்சின் மலைப்பகுதிக்காக இந்தியா பெரும் பொருட்செலவையும், உயிர்ச் சேதத்தையும் தாங்கி வருகிறது. ஆனால், நாட்டிற்கு பெரும் வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் தருகிற மீனவர்களின் பாரம்பரிய சொந்த நிலமான கச்சத்தீவை அரசியல் நிர்ணய சாசனத்திற்கு எதிராக சட்டவிரோதமாக இந்தியா தாரை வார்த்தது. இதன்மூலம் மீனவர் படுகொலைக்கான அடிப்படையை இந்தியா தொடர்ந்து காத்து வருகிறது.

செயற்கைக்கோள் உதவியுடன் கூடிய நீண்ட தூர தடம் அறியும் சாதனங்கள் (எல்.ஆர்.ஐ.டி.), சென்சார் கருவிகள், ஏரேஸ்டட்ஸ் சாதனங்கள், ஆளில்லாத கண்காணிப்பு விமானங்கள் ஆகியவை கடலோர காவல் படையினருக்கு வழங்கப்பட்டுள்ளன. அனைத்தும் இருந்தும் மிகக் குறுகிய கடல் பகுதியில் நடக்கும் மீனவர் படுகொலையைத் தடுக்க இந்தியக் கடற்படை முயற்சிப்பதுஇல்லை. இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டு காயமடைந்த, உயிருக்குப் போராடும் மீனவர்களைக் காப்பாற்ற இந்தியக் கடற்படை உதவுவதும் இல்லை.

கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழக மீனவர்கள் நான்கு பேர் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டனர். ஒன்றுக்கும் மேற்பட்ட இலங்கைக் கடற்படை படகுகளால் சூழப்ப ட்ட மீனவர்களின் கை வெட்டித் துண்டிக்கப்பட்டும், நகக்கண்கள் ஊசியால் குத்தப்பட்டும், தலை அறுத்துத் துண்டிக்கப்பட்டும், ஒரு மீனவரின் ஆணுறுப்பு வெட்டி எ டுக்கப்பட்டும்... என ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக இந்த சித்திரவதை கடலில் நிகழ்த்தப்பட்டது. இந்த நீண்ட நேரத்தின்போது கூட இந்திய கடலோரக் காவல்படை அந்தப் பகுதிக்கு வரவில்லை. மேலும், இந்தப் படுகொலைகளை மறைக்க இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சிகளையும் இந்தியா கண்டுகொள்ளவில்லை.

கொலை செய்யப்பட்ட மீனவர்களை பிரேதப் பரிசோதனை செய்து உண்மையை எழுதிய யாழ்ப்பாண மருத்துவர் சிவரூபன் காணாமல் போனதும், தொடர்ந்து கொலை மிரட்டலுக்கு ஆளாவது பற்றியும் இந்திய அரசு மௌனம் காக்கிறது. இறந்த மீனவர்களின் உடலைப் பெற்றுக்கொள்ள யாழ்ப்பாணம் சென்ற மீனவர்களின் உறவினர்கள் மிரட்டப்பட்டு மீனவர்களின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. இறந்த மீனவர்களின் உறவினர்களுக்கு உதவி செய்வதற்காக, தமிழே தெரியாத அதிகாரிகள் தான் இந்திய தூதரகத்தால் அனுப்பப்படுகின்றனர். இதே போல இந்தியப் பகுதியில் மீனவர் மனித உரிமை என்கிற பெயரில் இலங்கைக்கு உளவு சொல்லும், ஒட்டுக்குழு நபர்களே மீனவர் போராட்டம் எனும் பெயரில் மீனவர்களை மட்டுப்படுத்துகின்றனர்.

”இலங்கை கடல் பகுதிக்குள் எல்லை மீறி நுழையும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியாது. சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மதித்து இந்திய கடல் பகுதிக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்’’ என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதை அன்றைய தமிழக அரசு கண்டிக்க மறந்தது. புதிய தமிழக சட்டசபை தம்மை தேர்ந்தெடுத்த மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் முன்வைக்க வேண்டும்.

எல்லை கடந்து சட்ட விரோதமாக அமெரிக்க நாட்டில் படிக்கச் சென்ற இந்தியர்களைக் காக்க இந்திய அரசு உறுதியாய் நின்றது போல் மீனவர்கள் பக்கம் ஏன் நிற்பதில் லை என்பது சந்தேகத்திற்கு இடமளிப்பதாக உள்ளது. மீனவர்கள் கடல் எல்லையைக் கடந்தாலும் அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகளே. மேலும், ‘‘உலகெங்கிலும் மீனவர்களுக்கு கடலில் எல்லை கிடையாது. எல்லை தாண்டி மீன்பிடிப்பதை சட்ட நோக்கிலன்றி மனிதாபிமான அடிப்படையில் பார்க்க வேண்டும்’’ என்பது ஐ.நா.வின் அறிவுரை. மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மறுப்பது தமது கடமையை செய்ய மறுப்பதற்கு ஒப்பாகும்.

மீனவர்கள் படுகொலைகளின் ஆணிவேர் கச்சத்தீவு ஒப்பந்தத்தில்தான் தொடங்குகிறது. கச்சத்தீவை திரும்பப் பெறுவது சாத்தியமான ஒன்றுதான். சட்டத்திற்குப் புறம்பான ஒப்பந்தத்தை கிழித்தெறிவதில் இந்திய அரசு ஏன் தயக்கம் காட்ட வேண்டும்?

‘‘கச்சத்தீவை இந்திய அரசு திரும்பப் பெறவேண்டும்’’ என்று ஒரு வழக்கு ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்டது. இதற்கு முன்னால் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியை பாகிஸ்தானுக்கு கொடுக்க மத்திய அரசு முடிவெடுத்தது. நாடாளுமன்றத் தின் மூன்றில் இரண்டு பங்கு ஒப்புதலையும், மூன்றில் ஒரு பங்கு உள்ள இந்திய சட்டமன்றங்களின் ஒப்புதலையும் பெறவில்லை என்பதால் அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது.

அதேபோல கச்சத்தீவு ஒப்பந்தமும் இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவையும், மூன்றில் ஒரு பங்கு சட்ட மன்றங்களின் ஒப்புதலையும் பெறவில் லை என்று உச்சநீதிமன்றத்தில் சுட்டிக் காட்டப்பட்டது. ஆக, இது சட்டவிரோத ஒப்பந்தமே! இந்த உண்மையை இரு அரசுகளும் அறியும்.

தமிழக மீனவர்களை எந்தக் கடல் எல்லையில் வைத்துக் கொலை செய்தாலும் அது நியாயமாகாது. போலீஸ் பிடியில் இருக்கும் ஒரு கைதி அடித்துக் கொல்லப்பட்டால், போலீஸை எப்படி கொலையாளிகள் என வரையறுக்கிறோமோ அதே போலத்தான் இந்தப் படுகொலைகளும். இலங்கை அரசின் ஜெயவர்த்தனா முதல் ராஜபக்ஷே வரையிலான இலங்கை அதிபர்களை சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்த முடியும்.

மீனவர்கள் படுகொலைகளின் பின்னணியில் இப்போது புதிதாக பல கதைகள் சொல்லப்படுகின்றன. கட்டவிழ்த்து விடப்படும் கதைகளை புதிதாகப் பொறுப்பேற்ற தமிழக அரசும் நம்பிவிடக் கூடாது.

“இழுவைப் படகுகளை வைத்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதால் இலங்கையின் மீன்வளம் அழிகிறது. அதுவே அனைத்து பிரச்னைகளின் மையம்’’ என்னும் பொய்யை இலங்கை அரசும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். அந்தப் பொய்யை இந்திய அளவில் கொண்டு செல்ல சென்னையில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவர்களின் மீனவர் விரோத பிரசாரத்தை, திசைதிருப்பலை தமிழக அரசு கண்டிக்க வேண்டும்.

ஏனெனில், இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவருமே பாரம்பரிய மீன்பிடித்தலைச் செய்பவர்கள். கடல் வளத்திற்கு ஊறு விளை விக்காதவர்கள். ‘இழுவலை’ மீன்பிடி உரிமையாளர்களை இலங்கைக் கடற்படை கொல்வது இல்லை.

மீனவர்கள் படுகொலைகளை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதன் பின்னணியில் வேறு பல காரணங்களும் உள்ளன. உலக வர்த்தக ஒப்பந்தப்படி தமிழக கடல் மீன்வள ங்களை பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது அதில் முக்கியமானது. இந்த ஒப்பந்தத்திற்கு மீனவர்கள் இடையூறாக இருப்பார்கள் என்பதால், மீன்பிடித் தொழிலை ஆபத்தான ஒன்றாக அரசு மாற்ற விரும்புகிறது.

மேலும் கடலோரத்தில் இருக்கும் மீனவர்கள் அப்புறப்படுத்தப்பட்டால்தான் கடற்கரையை, நட்சத்திர விடுதிகளுக்கும், தீம் பார்க்குகளுக்குமான ரியல் எஸ்டேட் தொழிலாக மாற்ற முடியும். கடல் வளத்தையும், மீனவர்களையும் பாதுகாக்க இருக்கும் கடற்கரை ஒழுங்கு பகுதி அரசாணையை மாற்ற சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் செய்யப்படும் சதியினை தமிழக அரசு எதிர்கொண்டு தடுக்க வேண்டும். இந்த நோக்கத்திற்கு உதவவே கிழக்குக் கடற்கரைச் சாலைகள் தமிழக கடற்கரையை ஒட்டி விரிவுபடுத்தப்பட்டன என்பதை உணர்ந்து இது போன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது மக்களிடத்தில் எதிர்ப்பையே உருவாக்கும்.

மீனவர்களை மீன்பிடித் தொழிலில் இருந்து வெளியேற்றி அவர்களை மறுசீரமைப்பது என்கிற போர்வையில், கடல்சார் ஆராய்ச்சி என்கிற பெயரில் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றை அகற்றி பாரம்பரிய மீன்பிடித்தலுக்கான அனைத்து உதவிகளையும் அரசே வழங்கிடல் அவசியம். ‘செபா’ எனப்படும் இருதரப்பு பெரு வணிக ஒப்பந்தத்தை இலங்கை அரசு கையொப்பமிடாமல் 4 வருடங்களாக தவிர்த்து வருவதைப் பற்றி புதிய அரசு கேள்வி கேட்க வேண்டும்.

எந்த ஒரு அரசாலும் சாதிக்க முடியாமல் இருக்கும் கச்சத்தீவு ஒப்பந்தத்தை அ.தி.மு.க. அரசு ரத்து செய்தால் தமிழக அரசின் இறையாண்மை உறுதி செய்யப்படும். இதை நிறைவேற்றிட பெரும்பான்மை பலத்துடன் அமைந்துள்ள புதிய அரசு சட்டசபையில் பின்வரும் தீர்மானங்களை இயற்றுதல் அவசியம்.

கச்சத்தீவு தமிழகத் தமிழருக்குச் சொந்தமானது. கச்சத்தீவு ஒப்பந்தம் 1974, 1976 சட்டவிரோதமானது, செல்லுபடியாகாது.

இழுவைப்படகு மீன்பிடி ஒழுங்கமைக்கப்பட்டு பாரம்பரிய மீன்பிடித்தலையும், கடல் வளத்தினையும் அழிக்காமல் காக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இரு கரைகளில் உள்ள மீன்பிடிச் சமூகங்களான தமிழக மீனவர், தமிழீழ மீனவர், சிங்கள மீனவர் உள்ளடக்கிய மீனவ உழைப்பாளர்களின் வாழ்வியல் மீன்பிடி உரிமைகள், பண்பாட்டு உரிமைகள் காக்கப்படுதல் அவசியம்.

‘மீனவர் மனித உரிமை, மீனவர் மறுவாழ்வு’ என்கிற பெயரில் தமிழக மீனவர்களுக்கு ஆதரவான செயல்களை வெளியிடுவது போல சிலர் செயல்படுகிறார்கள். ஆனால், இவர்கள் பரப்பும் கருத்துக்கள் இலங்கை அரசைக் காப்பது போலவும், இலங்கை அரசின் மறைமுகத் திட்டத்திற்கு உதவுவது போலவுமே தொடர்ந்து இருக்கிறது. மீனவர் களுக்காகப் பேசும் இவர்கள் அனைவரும் மீன்பிடி சமூகத்தில் இருந்து வராதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் நிறுவனங்கள் விசாரணைக்கு உட்படும் போது மேலும் பல உண்மைகள் வெளிவரும். இந்த சவாலை மேற்கொள்ளும் மன உறுதி புதிய அரசுக்கு இருக்குமா என்பதே மக்களின் கவலை.

மீனவர்களைக் காப்பதற்காக எந்தச் செயலையும் செய்யும் வலிமை தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசிற்கு இருக்கிறது. அரசு அதை செய்யும் என மீனவர் சமுதாயம் நம்பிக்கையோடு காத்திருக்கிறது.

-குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.