Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இவர்கள் மாறுவார்களா??????????????

Featured Replies

யாழ்ப்பாணத்துக் கோயில்களில் எல்லாம் இப்போது திருவிழா சீசன். வண்ண மின் விளக்குகள், கச்சேரிகள், காதைப்பிளக்கும் ஒலிபெருக்கிகள், மணிக் கடைகள் என்பவற்றுக்கு இனிப் பஞ்சமிருக் காது. வழமையாகவே இத்தகைய தடல் புடல்களுடன் நடந்தேறுகின்ற திரு விழாக்களை தமது பணச்செருக்கை வெளிப்படுத்த உதவும் நிகழ்வாகவே பெரும்பாலான உபயகாரர்கள் பயன் படுத்துவதுண்டு.

முதல்நாள் திருவிழாவை விடவும் தங்களுடைய திருவிழாவை எப்படி வித்தியாசப்படுத்தலாம்? மற்றவர்கள் வியக்கும்படி என்ன செய்யலாம்? என்பதெல்லாம் ரூம் போட்டு யோசித்து அரங்கேற்றுவார்கள். பணம் தண்ணீராய்ச் செலவழிவது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்குத் தேவையானதெல்லாம் "உன்னை மாதிரி ஒருத்தரும் திருவிழாச் செய்யமுடியாது'' என்ற பெயர் மட்டும்தான். அனேக ஆலயங்களில் திருவிழா முடிந்த கையோடு விடிய விடிய இசைக்குழுக்களை அழைத்து வந்து, "கும்மாங்குத்துப்" பாடல்களை கேட்டு ரசிக்கும் கலாசாரமும் பெருகி விட்டது. பகல் முழுவதும் விரதமிருந்த வர்கள் இசைக்கச்சேரிகளில் "மச்சப்" பாடல்களைக் கேட்டுத் தங்கள் பொச்சங்களைத் தீர்த்துக்கொள்வார்கள். சில கோயில்களில் ஒரு படி மேலே சென்று இசைக்குழுக்களுக்கு ஏற்றவாறு நடன மாட நடனக்குழுக்களையும் பெருந்தொகைப் பணத்தைச் செலவழித்து அழைத்து வருவார்கள். முன்பெல்லாம் யாழ்ப்பாணத்தில் இயங்கிய இசைக் குழுக்களை மாத்திரமே கோயில் திருவிழாக்களுக்கு அழைத்துவந்தவர்கள் இப்போது கொழும்பு வரை செல்லத் தொடங்கிவிட்டார்கள். ஏனென்றால் கொழும்பிலிருந்து வரும் இசைக் குழுக்களில்தான் அரை குறை ஆடைகளோடு மங்கையரின் நடன விருந்தைப் பருக முடியும்.

இளைஞர்களும் விசில் கச்சேரிகளோடு நாலாபுறத்திலிருந்தும் கிளம்பி விடுவார்கள். கூட்டம் கூடினால்தானே திருவிழாக்காரர்களுக்குப் பெருமை. இந்தத் திருவிழாப்போட்டி இப்போது உபயகாரர்களுக்கிடையே மாத்திரம் நில்லாமல் கோயில்களுக்கு இடையிலான போட்டியாகவும் மாறிவிட்டது. அதிலும் அருகருகாக அமைந்திருக்கும் ஆலயங்களில் தங்களின் செல்வச் செருக்கை வெளிப்படுத்த போட்டிக்குத் திருவிழாக்களை நடத்தத் தொடங்கி யிருக்கிறார்கள்.

அண்மையில் யாழ்ப்பாணம் நோக்கி மாலை நேரம் வந்துகொண்டிருந்தபோது ஒலிபெருக்கிச் சத்தங்கள் காதைப் பிளந்து கொண்டிருந்தன. வழமையாக ஓர் ஒலி பெருக்கியில் குறித்த ஒரு விடயம் மாத்திரமே கேட்பதுண்டு. ஆனால் அன்றைக்கு இருவேறு ஒலித்துண்டங்கள் ஒன்றை ஒன்று குறுக்கீடு செய்து எல்லா வற்றையும் தெளிவற்ற சத்தங்களாக இரைச்சல்களாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. முதலில் ஒன்றும் புரியாவிட்டாலும் சிறுதூரம் சென்றதும் தான் இவ்வாறான ஒலிக் குழப்பத்துக்கான காரணம் தெரிந்தது; இருபாலை கற்பக விநாயகரும், கட்டைப்பிராய் குளத்தடி வைரவரும் வட்டக் குளத்தடியில் ஒலி பெருக்கிகளால் யுத்தம் செய்து கொண்டிருந்தார்கள் என்பது. குறித்த இரு கோயில்களிலும் ஒரே சமயத்தில் திரு விழா நடந்துகொண்டிருந்தது. பகலை விடவும் இரவில்தான் இரண்டு ஆலயங்களிலும் திருவிழாக்கள் களைகட்டும். மாலை 5 மணிக்கே வீதியில் ரியூப் லைட்டுகள் மின்னத் தொடங்கிவிடும். ஆலயத்துக்கு வரும் அடியவர்களை விடவும் எண்ணிக்கையில் அதிகமான ஒலிபெருக்கிகள் மின்சாரத் தூண்களில் தொங்கி நின்று பக்திப் பாடல்களை உச்சஸ்தாயியில் உச்சரிக்கத் தொடங்கிவிடும். வழக்கமாக ஒலிபெருக்கிகளை ஆலயத்தின் இரு புறத்திலும் சம அளவில் பொருத்துவார்கள். ஆனால் மேற்குறித்த இரண்டு ஆலயங்களிலும் இதற்கு மாறாக ஒற்றைப் பக்கமாகவே ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டிருந்தன. அதுவும் மற்றைய ஆலயம் இருந்த பக்கத்தை நோக்கியே ஒலிபெருக்கி வரிசை சென்றுகொண்டிருந்தது.

இரண்டு கோயில்காரர்களினதும் முக்கிய நோக்கம் பக்திப்பாடல்களையோ அல்லது கோயிலில் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகளையோ ஊரெங்கும் பரப்புவ தாக அல்லாமல் மற்றைய ஆலயத்தின் ஒலிபெருக்கிச் சத்தத்தை அமுக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. இதனையே தமக்குப் போட்டியான ஆல யத்தை நோக்கி நீண்டுசென்ற ஒலி பெருக்கிகள் நிரூபித்தன.

இந்த ஒலி யுத்தத்தால் பாதிக்கப்பட் டது ஆலயத்துக்கு வரும் அடியார்க ளும், வீதிகளால் பயணித்தவர்களும் தான். இரண்டு ஆலயங்களில் இருந்தும் நீண்டுவந்த ஒலி பெருக்கி வரிசை இடைவெட்டும் பகுதியாக சந்திக்கும் இடமாக வட்டக்குளத்தடி இருந்தது. அவ்விடத்தில் இருந்த இரு பகுதியினரது ஒலி பெருக்கிகளில் இருந்தும் என்ன பாடல் ஒலிக்கிறது அல்லது என்ன சிறப் புரை நடக்கிறது என்பதை எவராலும் உய்த்துணர முடியாதிருந்தது. ஆனால், காதைக் கிழியச்செய்யும் ஒரு விநோதச் சத்தம் மட்டும் அந்த இடத்தில் மேலெழுந் தது. இதனால் அப்பகுதியில் இருந்த மாணவர்கள் பலரும் உயர்தரப் பரீட்சைக்குத் தம்மைத் தயார்படுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்கவேண்டியிருந்தது. அத்துடன் இவற்றுக்கு அருகில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் பயில்கின்ற பெருமளவான மாணவர்கள் ஒலிகளின் இடையூறுகளால் பாடங்களைக் கிரகிக்க முடியாது கஷ்டப்பட்டனர். அங்கு கற்பித்த ஆசிரியர் களுக்கு கத்திக் கத்தி தொண்டை கட் டிப்போய்விட்டது.

குறித்த வீதியூடாக மினிபஸ்ஸில் பயணித்த பலர் தாம் இறங்கவேண்டிய இடத்தை எவ்வளவுதான் பலமாகச் சொன்னபோதும் அது நடத்துநரின் காதில் விழுவதை ஒலிபெருக்கிகளின் சத்தம் தடைசெய்துகொண்டிருந்தன. இதனால் கட்டைப்பிராயில் இறங்கவேண்டியவர் கள் கல்வியங்காட்டுச் சந்தியில் இறங்கிய சம்பவங்களும் நிறைய நடந்தன. அத்துடன் ஒலிபெருக்கிகளின் பேரிரைச் சலால் வாகனங்களின் கோர்ண்சத்தங்களும் அமுங்கிப்போய்விடுவதால் ஓரிரண்டு சிறிய விபத்துக்களும் இப் பகுதியில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.ஆடான ஆடெல்லாம் தீனுக்கு அழுகுதாம், நொண்டியாடு பாலுக்கு அழுகுதாம் என்று சொல்வார்கள். நாடு இருக்கும் நிலையில் இன்னமும் போரின் வடுக்களை ஆற்றமுடியாத வலியோடு எமது இனம் இருக்கையில் தேவையற்ற வகையில் இவ்வாறான ஒலி பெருக்கி யுத்தங்களை நடத்துவது சரிதானா என் பதை உரியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வெறும் காற்றோடு தொலைந்து விடுகிற ஒலிபெருக்கி ஆடம்பரத்துக் காக அநியாயமாகச் செலவிடுகின்ற தொகையை ஓர் ஏழைச் சிறுவனின் பசியைப் போக்கவோ அல்லது அவனது கல்விக்கு வளம் சேர்க்கவோ பயன் படுத்தினால் அது காலம் முழுதும் அவர் களுக்கு புண்ணியத்தைத் தேடிக்கொடுக்கும் அல்லவா? அதற்காக ஆலயங்களில் திருவிழாக்களை நடத்தக்கூடாது என்று அர்த்தமல்ல. சூழ்நிலையின் பொருத்த மறிந்து வீண் ஆடம்பரங்களைக் குறைத்து அமைதியாக அவற்றை அனுஷ்டிக்கலாமே.

வெள்ளை நிறப்பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது விபுலானந்தர்.

http://onlineuthayan.com/News_More.php?id=14263289701205263

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.