Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைதிப் பேச்சுகளை நோர்வே தவிர்ந்த

Featured Replies

புலிகளுடனான அமைதிப் பேச்சுகளை நோர்வே தவிர்ந்த வேறு ஒரு ஐரோப்பிய நாட்டில் நடத்துவதற்கு இலங்கை அரசு தயா ராக இருக்கிறது.

அதற்கான பிரதிபலிப்பை புலிகளிடம் இருந்து தாம் எதிர்பார்த்திருக் கின்றார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்துத் தமது அமைச்சரவைச் சகாக்களுக்கு தெரிவித் திருக்கின்றார்.

வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்னிரவு சுமார் நான்கு மணிநேரம் நடைபெற்றது.

அப்போதே மேற்படி தகவலை ஜனாதி பதிஇ ஏனைய அமைச்சர்களுக்குத் தெரிவித்தார்.

ஆசிய நாடு ஒன்றில்தான் பேச்சு என்ற நிலைப்பாட்டை அரசுத் தலைமை தளர்த்திக் கொண்டுள்ளது. ஆனாலும் புலிகளின் கோரிக் கையான நோர்வேயில்தான் பேச்சு என்ற நிலைப்பாட்டுக்கு அரசுத் தரப்பு இணங்க மறுப்பதாகத் தெரிகின்றது.

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவுக் குப் பதிலாக சுவிட்ஸர்லாந்து போன்ற வேறு ஒரு நாட்டில் பேச்சை நடத்தலாம் என்று அர சுத் தரப்பு இப்போது ஆலோசிப்பதாகவும்

இது தொடர்பாகப் புலிகளுக்கு அரசுத் தரப்பால் கோடிகாட்டப்பட்டிருப்பதாகவு

  • தொடங்கியவர்

நோர்வேயில்தான் பேச்சு என்பதில் விடுதலைப் புலிகள் விடாப்பிடிநிலை

அடுத்த சுற்று அடுத்த கட்ட பேச்சு நோர்வேயில்தான். அதில் விட்டுக்கொடுப் புக்கு இடமில்லை. பேசுவது என்றால் நோர் வேயில். இல்லையேல் பேச்சு இல்லை.

இவ்வாறு விடுதலைப் புலிகளின் தலைமை மிக உறுதியாக இருப்பதாகத் தெரியவரு கின்றது.

பேச்சுக்கான முன் ஆயத்தங்கள் நடை பெற முன்னரே ஜே.வி.பியைத் திருப்திப் படுத்தும் நோக்கில் ஆசிய நாடு ஒன்றில்தான் பேச்சு என்று அரசுத் தரப்பு நிபந்தனை விதித்தமை புலிகளின் தலைமையை சீற்றத்துக் குள் ஆழ்த்தியிருப்பதாகத் தெரிவிக்கப் படுகின்றது.

ஆகவே இந்த விடயத்தில் விட்டுக் கொடுப்பதில்லை என்று புலிகளின் தலைமை மிக உறுதியுடன் இருப்பதாகத் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

""பேச்சுக்கான இடம் குறித்து நிபந்தனை யுடன் கூடிய அறிவிப்பை முதலில் விடுத்து நிலைமையைச் சிக்கலாக்கியது இலங்கை அரசுத்தரப்புத்தான். எனவே பொது இட மாகஇ இந்தப் பிரச்சினையில் அனுசரணைப் பணி வகிக்கும் நோர்வே தான் இதற்கு மாற் றான பொருத்தமான நிலையமாகும். எனவேஇ அங்கு சென்று முதலில் பேசுவோம். அப்பேச் சுகளின் போது அடுத்த சுற்றுப் பேச்சை எங்கே நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யலாம்'' என்று புலிகளின் தலைமை கூறுவ தாகத் தெரிகின்றது.

முதலில் ஆசிய நாடு ஒன்றில்தான் பேச்சு என்று நிபந்தனை விதித்த இலங்கை அரசுத் தரப்பு அதிலிருந்து இறங்கிஇ வேறுஓரிடத் தில் ஒஸ்கோ தவிர்ந்த ஏதேனும் ஐரோப்பிய நாட்டில் பேசலாம் என்ற நிலைப்பாட்டுக்கு இப்போது வந்திருப்பது பற்றிய தகவல் புலி களின் தலைமைக்குக் கோடிகாட்டப்பட்டிருப்பதாகவு

  • தொடங்கியவர்

நோர்வே நாட்டுடன் பேச முடியாது: ஜே.வி.பி. நிராகரிப்பு

இலங்கை அமைதி முயற்சிகள் தொடர்பாக ஜே.வி.பி.யினருடன் பேச்சுகளை நடத்த தயாராக இருப்பதாக நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் விடுத்திருந்த அழைப்பை ஜே.வி.பி. நிராகரித்துள்ளது.

ஜே.வி.பி.யின் பிரச்சாரப் பிரிவின் செயலாளர் விமல் வீரவன்ச கூறியுள்ளதாவது:

அமைதி முயற்சிகளுக்கான அனுசரணையாளர் என்ற நிலையிலிருந்து நோர்வே விலகினால் அந்த நாட்டுடன் எந்தப் பிரச்சனை குறித்தும் பேசுகிறோம். நோர்வேயை சிறிலங்கா நாட்டின் எதிரணியாகவே பார்க்கிறோம். விடுதலைப் புலிகளுக்கு அந்நாடு பக்கச்சார்பாக இருப்பதில் எமக்கு எதுவித சந்தேகமும் இல்லை.

நோர்வேயுடன் பேச்சுகளை நடத்தி எமது நேரத்தை நாம் வீணடிக்க விரும்பவில்லை என்றார் அவர்.

புதினம்

சிங்களவன் ஆப்புக்குள் மாட்டுப்படுவது போல்தெரிகிறது.

வால உள்ளுக்க விட்டிட்டு ஆப்பை அசைத்துக்கொண்டிருக்கினம்:wink

  • தொடங்கியவர்

சமாதான முயற்சியில் மீண்டும் ஈடுபடவுள்ள சொல்ஹெய்முக்கு பேரினவாதிகளால் ஆபத்து

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாமென பேரினவாதிகளால் எச்சரிக்கப்பட்ட நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்இ மீண்டும் சமாதான முயற்சிகளில் ஈடுபடவுள்ளதால் அவரின் உயிருக்கு ஆபத்துள்ளதால் அரசாங்கம் அவருக்குப் போதிய பாதுகாப்பினை வழங்க வேண்டுமென ஊவா மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் மாகாணப் பொறுப்பாளருமான அ. அரவிந்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கை இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அனுசரணையாளராக இருந்து அளப்பரிய பங்காற்றி வந்த எரிக் சொல்ஹெய்ம் தற்போது இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான பொறுப்புமிகு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை சமாதான விரும்பிகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வரவேற்கத்தக்கதோர் விடயமாகும்.

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களில் ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான பங்களிப்பினை நோர்வே நாட்டைச் சேர்ந்த எரிக் சொல்ஹெய்ம் மேற்கொண்டிருந்ததை எவரும் மறுக்க முடியாது. அத்தகையவரையும் "வெள்ளைப்புலி" என்று விமர்சித்ததோடுஇ அவரை இந்நாட்டு உள்விவகாரங்களில் தலையிட வேண்டாமென்று பேரினவாத சிறு கூட்டமொன்று கோஷமிட்டு வந்தது.

பேச்சுவார்த்தைகள் எந்த நாட்டில் நடத்தப்பட வேண்டும் என்பதில் கூட இணக்கப்பாட்டை மற்றும் விட்டுக் கொடுப்பினை முன்னெடுக்க முடியாத பேரினவாதிகள் ஏனைய விடயங்களில் எத்தகைய நிலைப்பாட்டினை மேற்கொள்வார்கள் என்பது கேள்விக்குறியாகும். பேச்சுவார்த்தை எந்த நாட்டில் நடைபெறல் வேண்டும் என்ற அற்ப விடயத்திலும் தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பேரினவாத சிறு கூட்டம் எதிர்கால முன்னெடுப்புகளுக்கு எந்த வகையில் நடந்து கொள்வார்கள் என்பது புரியாத புதிராக இருக்கின்றது.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷஇ நோர்வே அரசு இலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான விடயங்களை மேற்கொள்ள தனியானதொரு அமைச்சகத்தை நியமித்திருப்பதை விரும்பியோஇ விரும்பாமலோ ஏற்க வேண்டிய நிலையிலுள்ளார். இதுபோன்று பேரினவாத சிறு கூட்டங்களின் கோஷங்களை ஜனாதிபதி உதாசீனம் செய்து இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான விடயங்களையும் முன்னெடுக்க வேண்டும்.

இலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான விடயங்களை மேற்கொள்ளும் வகையில் நோர்வே அரசு தனியானதொரு அமைச்சரை நியமித்திருப்பது பேரினவாதிகளுக்கு விழுந்திருக்கும் பலத்த அடியேயாகும்.

இதுவரை காலமும் அனுசரணையாளராக இருந்து வந்த எரிக் சொல்ஹெய்ம் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற ஸ்தானத்துடனேயேஇ இலங்கை இனப்பிரச்சினை தீர்வு நடவடிக்கைகளை இனிமேல் முன்னெடுக்க விருக்கின்றார். அவ்வேளையில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற ரீதியில் அவருக்கான பாதுகாப்புகளை வழங்க வேண்டிய பாரிய பொறுப்பும் இலங்கை அரசைச் சார்ந்ததாகும்.

இத்தகையதோர் நல்ல சந்தர்ப்பத்தினை சம்பந்தப்பட்டவர்கள் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். இந் நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதன் மூலமே இந்நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

மேலும்இ அண்மைக்காலங்களில் இடம்பெறும் சுற்றிவளைப்புகள்இ தேடுதல்இ பாதுகாப்புக் கெடுபிடிகள்இ கைதுகள் ஆகியனவும் நாட்டிற்கு ஆரோக்கியமான சூழலைத் தோற்றுவிக்காது. இத்தகைய நடைமுறைகளை அரசு தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். இதுபோன்ற செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் தமிழ் மக்கள் அரசின் மீது அதிருப்தி கொண்டு தனி வழி போகக் கூடிய நிலை ஏற்படும். அண்மைக் காலமாக ஏற்பட்ட சம்பவங்கள் எம்மால் ஜீரணிக்க முடியாதிருக்கின்றன. இச் சம்பவங்கள் குறித்து மலையக மக்கள் முன்னணி பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது. அத்துடன்இ இதுபோன்ற நடவடிக்கைகள் மலையகத்திலும் விஸ்தரிக்கப்படுமேயானால். "சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்பதற்கிணங்க ஏற்படப்போகும் எதிர் விளைவுகள் கட்டுக் கடங்காது போய்விடுவதுடன் அரசினாலும் சமாளிக்க முடியாமல் போய்விடும்.

லங்காசிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.