Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிஞர் அண்ணாவுக்கு பானுமதி..! செந்தமிழன் சீமானுக்கு ஒரு சின்னத்திரை விஜயலட்சுமி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதிந்தவர்: ஈழப்பிரியா திங்கள், 6 ஜூன், 2011

சீமான் விஜயலட்சுமி கூத்தாட்டத்தைச் சிந்திப்பதற்கு முன்னர் ஒரு தடவை அண்ணா காலத்து அரசியலை சிந்திக்க வேண்டும்…

சீமான் போலவே அன்று அண்ணாவும் பதிலளிக்க முடியாத பல கேள்விகளை இந்திய சமுதாயத்தின் மீதும், அதன் போலி முகங்கள் மீதும் தயக்கமின்றி முன் வைத்தார்…

அவருடைய வாதங்களை எதிர்கொள்ள பத்தாம்பசலிகளாக இருந்த அன்றைய காங்கிரஸ்காரரால் முடியவில்லை. அதனால் அவர்கள் அண்ணாவிற்கு எதிராக வகுத்த வியூகம் அக்காலத்து பிரபல நடிகை பானுமதி..!

பானுமதிக்கும் அண்ணாவுக்கும் தொடர்பு என்று காங்கிரஸ் கதை பரப்ப ஆரம்பித்தது..

அண்ணா சிந்தித்தார்… எப்படி இந்த சதிவலையை அறுத்தெறியலாம்…?

சீமான் போல போலீஸ் வழக்கை சந்திக்கவோ.. பானுமதியின் கற்பை வைத்திய பரிசோதனை செய்யவோ அண்ணா சந்தர்ப்பம் கொடுக்கவில்லை.. தனது பாணியிலேயே பதில் கொடுத்தார்..

- நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல..! பானுமதி படிதாண்டா பத்தினியும் அல்ல… ! –

கதை முடிந்தது.. பானுமதியை வைத்து ஆட முற்பட்ட காங்கிரசின் வியூகம் அறுந்து, காங்கிரஸ் ஆட்சியும் வீழ்ந்தது..

இது அண்ணா காலத்து வியூகம்..

இப்பொழுது செந்தமிழன் சீமான் காலம்..

அண்ணா போல சில பதிலளிக்க முடியாத கேள்விகளை அவரும் முன் வைக்கிறார்.. அவருடைய கேள்விகளுக்கான பதில் காங்கிரசிடம் இல்லை.. ஆகவே பானுமதி பாணியில் விஜயலட்சுமியை களமிறங்கியுள்ளார்கள்…

இந்த நேரம்…

- நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல..! விஜயலட்சுமி படிதாண்டா பத்தினியும் அல்ல..! – என்று சொல்ல சீமானிடம் நெஞ்சுரமில்லை..

சட்டப்படி வழக்கை சந்திப்பேன் என்று கூறி வருகிறார்..

போயும்போயும் தமிழ்நாடு சட்டத்தையா சந்திக்கப்போகிறார்… நெற்றிப் புருவங்கள் உயர்கின்றன.. இதற்குள் :

ஒரு பாக்கட் கஞ்சாவை சீமான் வீட்டில் வைத்து, அவரைக் கைது செய்யாமல் விஜயலட்சுமியின் கற்புப் புனிதத்தை பரிசோதனை செய்கிறதாம் தமிழ்நாடு போலீஸ்…

சிரிப்பதா.. அழுவதா..? ஆனால் :

நான் தற்கொலை செய்யப்போகிறேன் என்று ஒரு எஸ்.எம்.எஸ்சை சீமானுக்கு அனுப்பியுள்ளார் விஜயலட்சுமி..

ஒருத்தி சம்மந்தமில்லாத ஒருவனுக்கு தற்கொலை செய்யப்போவதாக எஸ்.எம்.எஸ் அனுப்பினால் ஒன்று அவளுக்கு மூளையில் எங்கோ பிழை இருக்க வேண்டும்.. இல்லை அவளுடைய எஸ்.எம்.எஸ்சிற்கு ஏதோ ஒரு நோக்கம் இருக்க வேண்டும்.

அதைவிட முக்கியம்…

விஜயலட்சுமி உண்மையாகவே சீமானை விசுவாசமாக காதலித்திருந்தால் அவருக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ்கள், உரையாடல்களை ஏன் சேமித்து வைத்தாள்..? ஆகவே அவருடைய மனதில் கபடமான ஒரு நோக்கம் இருந்துள்ளது தெரிகிறது.

இப்படியெல்லாம் சிந்திக்க வேண்டும் என்ற விவஸ்த்தை தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு இருக்கிறதா..?

தமிழ்நாடு வெள்ளை வேட்டி அரசியல்வாதிகளை எடுத்துப்பார்த்தால், குறைந்தது இரண்டு மனைவிகள், பல சின்னவீடுகள் இல்லாத பேர்வழிகளை தேடிப்பிடிப்பது மாபெரும் கடினம்.

கற்பும், கண்ணகியும், சிலம்பும், செந்தமிழும், குறளோவியமும், புறநானூற்றுப் பூங்காவுமாக தமிழ் வேதம் ஓதும் மூதறிஞர் மு.கருணாநிதிக்கு எத்தனை மனைவிகள் என்று கேட்டால் இது குறித்து மேலதிகமாக பேச வேண்டிய தேவை வராது.

தி.மு.க தலைவர்கள் விபச்சாரியுடன் படுத்துவிட்டு, அவளுடைய பணத்தைக் கொடுக்காது அடித்து விரட்டிய கதை கண்ணதாசனின் வனவாசத்தில் இருக்கிறது. அவரும் இவர்களோடு சேர்ந்து படுத்துவிட்டுத்தான் எழுதினார். அவருக்கும் பல மனைவிகள்..

கோடம்பாக்கம் போனால் பல செவிவழி கதைகளைக் கேட்கலாம், பெண்கள் விடயத்தில் அங்கு நிலவும் அறியாமையை நினைத்து கவலைப்படலாம்.

அத்தனை பழமும் சொத்தைகள் தாண்டா ஆண்டவன் படைப்பினிலே இதில் அத்திப் பழத்தை குற்றம் சொல்ல யாருக்கும் வெட்கமில்லை என்கிறது ஒரு பாடல்..

ஒரு நடிகையைத் தவிர, சீமானைக் குற்றம் சொல்ல தகுதியுள்ள அரசியல் தலைவர் யார்..? சினிமா நடிகர் யார் ?

……………!!

சீமான் மீது போடப்பட்டுள்ளது மோசமான அரசியல் வியூகம்.. இதிலிருந்து தப்பவும், காங்கிரசை மேலும் முகவரி இல்லாமல் செய்யவும் ஒரே வழி சீமான் அண்ணா பாணியில் உண்மையை வெளிப்படையாகப் பேசுவதுதான்..

ஆளுக்கு இரண்டு பெண்டாட்டிகள், கூடவே ஆறேழு வைப்பாட்டிகள்.. ஆனால் இங்கிருக்கும் பெண்கள் எல்லாம் கண்ணகிகள்…

ரெண்டும் ரெண்டும் நாலு விடையாவருது ஏழு..!

கணக்கிட்டாள் நடிகை குஸ்பு.. அதுதான் அவள் கற்புக்கு துணிச்சலாக விளக்கம் தந்தாள்.. அந்த விளக்கம் அவளுடைய வட இந்திய அனுபவமல்ல.. கோடம்பாக்கத்தில் வைத்து அவள் கண்ட கற்பிற்கு அவள் கொடுத்த விளக்கம்.

தலைவர் பிரபாகரனின் தம்பி சீமான்..!

செந்தமிழன் சீமான்..!

பாயும்புலி சீமான்..!

அந்தப்புலி பாய வேண்டிய இடம் சிங்களவரின் கோட்டை..!

அப்படிப்பட்ட செந்தமிழ் புலி விஜயலட்சுமி வீட்டிற்குள் பாய்ந்துவிட்டதாகக் கூறுவது கொஞ்சம் ஓவர்..!

இருந்தாலும்:

ஆபும்.. புல்லும் அடித்து ஓவரா இருப்பவர்களின் வாயில் சிக்குப்படாமல் சீமான் தப்ப வேண்டுமானால் ஒரே வழி..

அண்ணாவைப் போலவும்.. ஐஸ்வர்யா ராய் போலவும் நடந்ததை வெளிப்படையாகப் போட்டுடைப்பதுதான் ஒரே வழி..!

சீமான் முற்றும் துறந்த முனிவனுமல்ல..! விஜயலட்சுமி படிதாண்டா பத்தினியுமல்ல..!

சீமான் ஒரு மனிதன் !

இதுவரை அவனுடைய கொள்கைகள் உன்னதமானவை..!

சீமான் எமக்கு வேலைக்காரனல்ல.. நாம் வாய்க்குவந்தவாறு கதைக்க: அவனும் மனிதன்தான்..

அவனுடைய மனித உணர்வையும் விஜயலட்சுமியையும் சம்மந்தப்படுத்துவது வேறு..

அவனுடைய அரசியலையும் விஜயலட்சுமியையும் சம்மந்தப்படுத்துவது வேறு..

இப்போது தமிழ்நாட்டில் இரண்டாவது சம்மந்தப்படுத்தல் நடப்பது தெளிவாகத் தெரிகிறது..

அலைகள்.

Edited by தமிழ் அரசு

- நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல..! பானுமதி படிதாண்டா பத்தினியும் அல்ல… ! –

... சீமானும் ஒரு சராசரி மனிதனே! ... அவனின் மறுபக்கங்கள் தேவையற்ற ஒன்று ... கதைப்பவர்கள் யாராவது தாம் ராமர்கள் என்று கூறட்டும் பார்க்கலாம் ... இன்று ஆங்கில ஊடகவியலாள மேதை டி.பி.எஸ்ஸுக்கும் இந்த கொசிப்பை விட்டால் வேறு வழீல்லை!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.