Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிகுஜிரோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிகுஜிரோ

தாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை உள்ளத்தை உருகவைக்கும் கொடுமை.

நமக்கெல்லாம் துவக்கப்பள்ளி பருவத்தில் கோடை விடுமுறை விட்டால் எங்கே போவோம்... ?? உறவினர் வீட்டிற்கு அல்லது பாட்டி வீட்டிற்கு சென்று குதித்து கும்மாளமிடுவோம்.

அதேபோல் பள்ளியின் இறுதி நாளன்று துள்ளி குதித்து வீடு வந்து சேருகிறான் மாசோவ். தனக்காக வைக்கப்பட்டிருக்கும் உணவை சாப்பிட்டு விட்டு கால்பந்தை தூக்கி கொண்டு மைதானத்தை நோக்கி ஒடுகிறான். ஆனால் பயிற்ச்சியாளரோ விடுமுறையில் பயிற்சி கிடையாதென்றும் எங்காவது சென்று விடுமுறையை கழிக்குமாறு சொல்லி விட்டு கிளம்புகிறார். விளையாட யார் துணையுமின்றி தன்னந்தனியே நிற்கிறான் மாசோவ்.

சோகமே உருவாகி வீட்டினுள் அடைந்து கிடக்கிறான். பாட்டி வேலை முடித்து வந்ததும் எங்கே போவது என்று கேட்கிறான். பாட்டியும் உன் தந்தை இறந்து விட்டார்,தாயும் தொலை தூரத்தில் உனக்காக கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறாள், உன்னை எங்கேயும் கூட்டிப்போக யாரும் இல்லை என்கிறாள்.

மனமுடைந்து போகிறான் மாசோவ். மறு நாள் பாட்டி வேலைக்கு கிளம்பியதும் சிறிது பணத்தையும், தாயின் போட்டோக்களையும் முகவரியையும் எடுத்து கொண்டு தனியே கிளம்புகிறான்.

மாசோவ் தனது தாயை தேடிக்கண்டுபிடிக்க தயாராகிறான். வழியில் உறவினரான ஒரு தம்பதியினரை சந்திகிறான். அவர்களும் அவனிடம் இதமாக பேசி அவன் பயணத்தை அறிந்து கொண்டு அந்த பெண்மணி தனது கணவரையும் அனுப்பி வைக்கிறாள். அவர் பெயர் கிகுஜிரோ. கிகுஜிரோவோ சற்று போக்கிரி என்றும் மறை கழண்டு போனவர் என்றும் அனைவராலும் பாராட்டப்படுபவர்.

வேறும் யாரும் இல்லாத நிலையில் மாசோவும் கிகுஜிரோவின் துணையோடு எங்கோ தொலை தூரத்தில் இருக்கும் தாயை கண்டுபிடிக்க பயணமாகிறான். இந்த நீண்ட பயணத்தில் இருவருக்குள்ளும் இது நாள் வரை ஒளிந்துகிடந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதே இந்த ஜப்பானிய திரைப்படம்.

ஆரம்பத்திலேயே பணம் முழுவதையும் சைக்கிள் பந்தயத்தில் இழந்து விட்டு கையில் சல்லி காசில்லாமல் பயணத்தை தொடங்குகின்றனர் இருவரும்.

இந்த பயணத்தில் மகிழ்ச்சி, இன்பம், விளையாட்டு, நகைச்சுவை, சிறு சிறு ஆனந்தம், நடுநடுவே ஏமாற்றம் என ஆர்ப்பாட்டமில்லாத ஆனால் அதே நேரத்தில் சுவாரசியமாக கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர்.

நீண்ட பயணத்திற்கு பிறகு விலாசத்தை அடைகின்றனர். வீட்டை நோக்கி நடக்கிறார் கிகுஜிரோ. அதிர்ச்சியாக அந்த விலாசத்திலுள்ள அம்மாவிற்கு வேறோரு குடும்பம் உள்ளது. இதை எப்படி அவன் ஜீரணிக்கப்போகிறான் என்று அவர் தவிக்கும் போது மாசோ அழுது கொண்டு இருக்கிறான்.

உண்மை நிலை அறிந்தால் அவன் துடித்து போவான் என்று நினைத்து அந்த விலாசத்தில் வேறு யாரோ இருக்கிறார்கள் என்று சொல்லி சமாளிக்கிறார் கிகுஜிரோ. மாசோவின் அழுகை நின்றபாடில்லை. அவனை எப்படியாவது தேற்ற எண்ணி ஒரு பொம்மை மணியை கொடுத்து உங்கம்மா நீ வந்தா உன்கிட்ட கொடுக்க சொல்லி கொடுத்துட்டு போயிருக்காங்க.. உனக்கு கவலை வந்தால் இந்த மணியை அடித்தால் தேவதை வந்து உனக்கு உதவும் என்று சொல்லி ஒரு வழியாக அவனை தேற்றுகிறார்.

மீண்டும் ஊருக்கு செல்ல ஆயத்தமாகி நட்க்க தொடங்குகிறார்கள். வழியில் அந்த பிஞ்சு மனதின் ஏமாற்றத்தை எண்ணி மாசோவை மகிழவைக்க பல உத்திகளை கையாள்கிறார். பெரிய இலைகளை வெயிலுக்கு குடையாக சட்டையில் சொருகியபடி நடப்பதும், சோளத்தோட்டத்தில் புகுந்து சோளங்களை உண்டு பசியாறுவதும் ஊர் சுற்றி திரியும் எழுத்தாளரை சந்திப்பதும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான காட்சிகள்.

வரும் போது சந்தித்த பல வித மனிதர்களை மீண்டும் திரும்பி செல்லும் போது ஏதேச்சையாக சந்திப்பதும் அனைவரும் அவர்களுக்கு உதவுவதும் ஜப்பானின் ஒரு சாராரது வாழ்க்கை முறையை சமூகப் பார்வையுடன் பதிவு செய்துள்ளார் இயக்குநரும் கிகுஜிரோகவாக நடித்தவருமான டகேஷி கிட்டானோ.

குழந்தைகளின் தனிமை உலகத்தையும் நகர வாழ்க்கையில் அவர்கள் தொலைத்த கேளிக்கை விளையாட்டுகளையும் ஒவ்வொரு காட்சியிலும் அத்தனை தெளிவாக பதிய வைத்த ஒரு மிகச்சிறந்த திரைப்படம். என்னதான் நகைச்சுவையுடன் பதிய வைத்தாலும் அதுனுள் இழையோடியிருக்கும் சோகம் நம்மை கலங்க வைக்கிறது.

ஒவ்வொர் காட்சியும் குழந்தைக் கதைகளில் வருவது போல் ஒரு சிறு தலைப்புடன் தொடங்குவது புதுமையானதும் தனித்துவம் வாய்ந்ததாகும். குளோசப் ஷாட்டுகளை போன்றே லாங் ஷாட்டுகளிலும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தி அசர வைக்கிறார் இயக்குநர்.

இறுதி காட்சிகளில் வசனங்கள் பேசாது இசையின் மூலமே படத்தை பேசவைப்பது அத்தனை அருமை.

ஒரு சிறுவனுக்கும் இரண்டாவது பாலக மனதில் இருக்கும் வயோதிகருக்கும் இடையேயான நட்பையும் ஆழ்ந்த அன்பையும் இதைவிட ஆழமாக சொல்ல இயலுமா..?? தெரியவில்லை..

1999ல் வெளியாகி கேன்ஸ் உலக திரப்ப்பட விழாவில் தங்கப்பனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதுடன் உலக அரங்கில் பல விருதுகளை வாரிக் குவித்த திரைப்படம். சினிமா ரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய அதிஉன்னத திரைப்படம்.

http://www.youtube.com/watch?v=FxHkQMB7E9c

http://www.youtube.com/watch?v=TRS45SS8-L0&feature=related

http://www.youtube.com/watch?v=sngrd432a1Q&feature=related

http://www.youtube.com/watch?v=m8Pp4OD8h-s&feature=related

http://www.youtube.com/watch?v=5x7GAwmYZIc&feature=related

http://www.youtube.com/watch?v=xNKM2R1HKbE&feature=related

http://www.youtube.com/watch?v=1q-G9ZCADtY&feature=related

http://www.youtube.com/watch?v=a9YlJRMEaFg&feature=related

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.