Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகத்தின் சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம்

Featured Replies

தமிழகத்தின் சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-06-10 07:11:38| யாழ்ப்பாணம்]

இலங்கை மீது பொருளாதாரத் தடையை இந்திய மத்திய அரசு விதிக்கவேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தின் பிரகாரம் இந்திய மத்திய அரசு செயற்பட வேண்டும் என்ற தேவை எதுவும் கிடையாது. அப்படியானால் தமிழக சட்டசபையில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஈழத்தமிழ் மக்களுக்கு எத்தகைய நன்மையைத் தரும் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததே.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டசபை மேற்கொண்டதன் மூலம் இந்திய மத்திய அரசுக்கு ஒரு மறைமுகமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இலங்கை விடயத்தில் இந்திய மத்திய அரசு சார்புநிலைப் போக்கைக் கடைப்பிடிப்பதை தமிழகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே அதுவாகும்.

இதன் ஊடாக இலங்கையில் நடந்த போர்க்குற்ற விசாரணை தொடர்பில் ஐ.நா. சபை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சியில் இந்திய மத்திய அரசு ஈடுபடுவது என்பது தமிழகத்தின் எட்டுக்கோடி மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிப்பதாக இருக்கும். அதேநேரம் இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்தத் தவறினால், தமிழக சட்டசபை தொடர்ந்தும் இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றும் என்பது மத்திய அரசிற்கு நன்கு தெரியும்.

இத்தகைய தீர்மானங்களை தமிழக சட்டசபை தொடர்ச்சியாக நிறைவேற்றுவதும் அதற்கு மத்திய அரசு பாராமுகமாக இருப்பதுமான நிலைமை, தமிழகத்தில் குழப்பத்தை உருவாக்க வாய்ப்பாகிவிடும். ஆக, இலங்கையில் விடுதலைப்புலிகளை தோற்கடிக்காவிட்டால் அங்கு தனி நாடு தோற்றம்பெற, அது இந்திய தேசத்தின் உடைவுக்கு காரணமாக அமைந்து விடும் என்ற அச்சமே வன்னிப் போருக்கான இந்திய உதவி எனலாம்.

நிலைமை இதுவாக இருக்கும்போது, மத்திய அரசின் போக்கினால் தமிழகம் குழம்பிப்போகுமாயின் இலங்கையில் தமிழர்கள் நடத்திய விடுதலைப் போராட்டம் தமிழகத்திற்கு இடம் நகர்ந்த கதையாக முடிந்துவிடும்.

எந்த நோக்கத்திற்காக விடுதலைப்புலிகளை தோற்கடிக்க வேண்டும் என இந்திய மத்திய அரசு எண்ணியதோ, அந்த நோக்கம் தனது தவறான போக்கினால் நடந்தேறிவிட்டது என்ற துரதிர்ஷ்டமான நிலைமை ஏற்பட இந்தியா ஒருபோதும் விரும்பாது. எனவே தமிழக சட்டசபையின் தீர்மானங்களோடு ஒப்புர ஒழுகவே அது விரும்பிக்கொள்ளும்.

ஆகையால் இலங்கை மீது பொருளாதாரத் தடையை விதிக்கவேண்டும் என்ற தமிழக சட்டசபையின் தீர்மானம் மறைமுகமான தாக்கத்தை இலங்கை மீது ஏற்படுத்தவே செய்யும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=20051

தமிழக சட்டசபை தீர்மானத்துக்கு ஜெயலலிதா அவர்களையும் ஆதரவு வழங்கிய ஏனையோரையும் பாராட்டலாம்.

தமிழின அழிப்பில் ஈடுபட்டு வரும் சிங்கள பயங்கரவாதிகளை கூண்டோடு அப்புறப்படுத்தும் வரை தமிழர் ஓயக்கூடாது. இதை நிச்சயம் சாதிக்க முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.