Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூழ்ச்சியில் இறங்கிய ராஜபக்சே.

Featured Replies

ஆட்சியில் அமர்ந்த கையோடு இலங்கை விவகாரத்தில் முதல்வர் ஜெ. இப்படித் தடாலடியாக இறங்குவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

இலங்கை மீது பொருளாதாரத் தடை, கச்சத்தீவை மீட்க வேண்டும்.. என அதிரடியாக அ.தி.மு.க. அரசு நிறைவேற்றிய தீர்மானங்களால் அதிர்ந்து போனது இலங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும்தான்.

இதையடுத்து சிவசங்கர் மேனன் இலங்கை கிளம்பினார். செல்லும் வழியில் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இலங்கை சென்ற சிவசங்கர் மேனன், வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் அடங்கிய இந்திய அரசின் உயர்மட்டக் குழு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

பின்னர், பிளாட் எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். என்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்ரீதரன் ஆகியோரிடம் இந்தியக் குழு பேசியிருக்கிறது.

இந்தியக் குழுவினர் இலங்கையின் அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவையும், வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸையும் சந்தித்தனர். பின்னர் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் இந்தியாவுக்கான இலங்கை அதிகாரி பிரசாத் காரியவசம் ஆகியோரைச் சந்தித்தனர். எனினும் இலங்கையின் உயர்மட்டக் குழுவில் இடம் பெற்றிருக்கும் அதிபரின் சகோதரரும், அமைச்சருமான பசில் ராஜபக்ஷே இந்தச் சந்திப்பில் இடம் பெறவில்லை. பசில் ராஜபக்ஷே கடந்த வாரம் இந்தியா வந்து பேச்சுவார்த்தை நடத்த விரும்பியபோதும், அதற்கான வாய்ப்பு கிட்டாமல் இலங்கை திரும்பியதும் குறிப்பிடத்தக்கது.

“பதின்மூன்றாவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை இலங்கை அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும். அதன்படி மாகாண சபைகளுக்கு போலீஸ் உள்ளிட்ட அதிகாரங்களை வழங்க வேண்டும். அதோடு ஆறு மாதங்களுக்குள் தமிழ் மக்களுக்கு சிறந்ததொரு அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும்’’ என்று அ ண்மையில் இந்தியாவுக்கு வந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் இந்திய அரசு தெரிவித்திருந்ததாம். அவரும் சரி என்றாராம். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

எனவே, “இலங்கை சென்ற இந்திய உயர்மட்டக்குழு இதையும் ராஜபக்ஷேவிடம் நினைவுபடுத்தியதாம். அத்துடன் அமைச்சர்கள் விமல் வீரவங்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்தும் கடும் அதிருப்தியை இந்தியா பதிவு செய்தது’’ என இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், உண்மையில் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை ராஜபக்ஷே தரத் தயாராக இல்லை. எனவே, ‘இந்திய அரசின் அழுத்தத்துக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள இலங்கை அரசு ரகசிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

‘‘அதிபர் மஹிந்த ராஜபக்ஷே தனது அமைச்சர்களான விமல் வீரவங்ச மற்றும் சம்பிக்க ரணவக்க இருவரிடமும் இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். பொதுமக்களைத் தூண்டிவிட்டு நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் இந்திய அழுத்தங்களைத் தவிர்க்க முடியும் என்று அதிபர் மஹிந்த ராஜபக்ஷே காய் நகர்த்துகின்றார்...’’ என்று பலப்பல பகீர் தகவல்கள் வருகின்றன.

ஜெயிக்கப்போவது இந்தியா விதித்த கெடுவா? ராஜபக்ஷேவின் தந்திரமா?

நன்றி, குமுதம் ரிப்போர்ட்டர்.

இச்செய்திகள் குறித்த படங்கள் பார்க்க...

http://www.thedipaar.com/news/news.php?id=29584

Edited by easyjobs

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.