Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

றெஜி மற்றும் இரும்பொறையை குறிவைக்கும் சிறிலங்கா புலனாய்வுத்துறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Wednesday, June 15, 2011, 21:22சிறீலங்கா, தமிழீழம்

போர்குற்றங்கள் குறித்தான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் சிறிலங்கா அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் மீது சில போர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஐநா நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசு தொடர்சியாக மறுத்து வரும் நிலையில் விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறவும் விசாரணைகளுக்கு தயாரெனவும் தமிழர் புனர்வாழ்வுக்கழக பணிப்பாளர் றெஜி அவர்கள் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

விடுதலைப்புலிகளின் நிலைப்பாடாக றெஜி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு தெரிவிக்கப்பட்ட இக்கூற்று சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

ஐ.நாவின் நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுக்களை தொடர்சியாக நிராகரித்து வரும் சிறிலங்கா அரசுக்கு – விடுதலைப் புலிகளின் இந்த இராஜதந்திர நகர்வு பெரும் நெருக்கடியை சர்வதேச மட்டத்தில் தோற்றுவித்துள்ளதான இராதந்திர அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள இருதரப்பில் ஓரு தரப்பு விசாரணைகளை சந்திக்க தயார் எனும் நிலைப்பாடு – மறுதரப்புக்கு சங்கடத்தை ஏற்படுத்தை ஏற்படுத்துவது முக்கியமானதொரு சர்வதேச இராதந்திர பொறிமுறை.

இந்நிலையிலயே றெஜியின் இந்த நிலைப்பாட்டை நோக்கி சர்வதேச சமுகம் நகர்வதற்கு முன்னர் – றெஜியை பலவீனப்படுத்துவன் ஊடாக விடுதலைப்புலிகளின் சர்வதேச நிலைப்பாட்டடை பலவீனப்படுத்தலாம் என சிறிலங்கா அரசு செயற்படத் தொடங்கியுள்ளதாக கொழும்பில் இருந்து இயங்கி வரும் ஆங்கில இணைய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை கொழுப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துரைத்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல ‘ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை முடக்குவதற்கு சிறிலங்கா தயாராகி வருவதாக தெரவித்துள்ளார்.

றெஜியை பணிப்பாளராக கொண்டு வெளிநாடுகளில் இயங்கி வருகின்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை சிதைப்பதை முதற்பொறிமுறையாக சிறிலங்கா அரசு வகுத்துள்ளது.

ஏற்கனவே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் இயங்கி வருகின்ற புனர்வாழ்வுக் கழகத்தை முடக்க வேண்டிய நிலையை சிறிலங்கா எடுத்துள்ளது.

குறிப்பாக வெளிநாடுகளில் தமிழர்கள் பரந்தளவில் பெருவாரியாக ஒன்றுகூடுகின்ற நிகழ்வுகளில் ஒன்றாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தமிழர் விளையாட்டு விழாவும் ஒன்றாகவுள்ளது.

இந்நிலையிலேயே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் பிரான்சில் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழர் விளையாட்டு விழாவை முடக்குவதற்கு சிறிலங்கா முனைந்து வருகின்றது.

கடந்த இருவாரங்களுக்கு முன்னர் கொழும்புக்கு அவசர அவசரமாக அழைக்கப்பட்ட பிரான்சுக்கான சிறிலங்கா தூதுவரிடம் இதற்கான வேலைத்திட்டத்தை கையளித்துள்ள சிறிலங்காவின் சா்வதேச புலனாய்வுத்துறை – இதற்கு பக்கத்துணையாக சிறிலங்கா கைக்கூலிகளாக இருக்கின்ற சில தமிழர்களையும் இணைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரும்பொறை எனும் அரவிந்தன் எனும் நபரே தமிழர்களுக்கான சர்வதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இரும்பொறையின் செயற்பாடுகள் குறித்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை உள்ளக அறிக்கையில் எச்சரிக்கை செயற்பாட்டாளர்களுக்கு விடுத்திருந்தது.

பிரான்சில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழர் விளையாட்டு விழாவை முடக்கும் சதி நடவடிக்கைகளின் தொடக்கமாகமாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கே.பியின் வசமாகியிருந்தது எனும் செய்தி சமீபத்தில் திட்டமிட்டு பரப்பப்பட்டிருந்தது.

சிறிலங்கா சர்வதேச புலனாய்வுத் துறையின் திட்டமிட்ட சதிவலைச் செய்தியை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உடனடியாக மறுத்ததுடன் தெளிவான அறிக்கையூடாக மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

சிறிலங்கா அரசின் சதிநடவடிக்கைகளின் தொடர்சியாக விளையாட்டு விழா ஆண்டு தோறும் இடம்பெற்று வருகின்ற மைதான முன்றலை முடக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

குறித்த மைதானத்தை உள்ளடக்கியதான நகரசபையினைத் தொடர்பு கொண்டு கைக்கூலிகள் ‘பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பணம் சேர்க்கவே விளையாட்டு விழா இடம்பெறுவதாக’ கதைஅகூறியுள்ளனர்.

யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலங்களில் இத்தகைய செய்பாடுகளை சிறிலங்காத் தூதரகம் முன்னெடுத்துள்ள நிலையில் தற்போது சிறிலங்காவின் கைக்கூலிகளாக தமிழர்கள் ஈடுபவது குறித்து நகரசபை ஆச்சரியம் கொண்டுள்ளது.

இந்தச் சதிவலை வேலைத்திட்டங்களை முடியடிக்கும் நோக்கில் நீண்டகாலமாக விடுதலைக்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தமிழர் விளையாட்டு விழாவை திறம்பட நடாத்துவதற்கு தயாராகி வருவதாக பாரிஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரான்சுக்கான சிறிலங்காத் தூதுவர் தயான் ஜெயதிலக மற்றும் இரும்பொறை ஆகியோரின் கூட்டுச் சதி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உள்ளக அறிக்கை மூலம் செயற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருதாக தமிழர் அமைப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐ.நாவின் நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுக்களை தொடர்சியாக நிராகரித்து வரும் சிறிலங்கா அரசு – விசாரணைகளுக்கு ஒத்துழைக்க தயார் என அறிவித்துள்ள விடுதலைப் புலிகளின் இராஜதந்திர நிலைப்பாட்டை – அனைத்துல சமூகத்தின் சாதகமாக நோக்குவதற்கு முன்னர் – தமிழர்களை பலவீனப்படுத்த சிறிலங்காவின் செய்திட்டத்துடன் கைக்கூலிகளாக தமிழர்கள் சிலர் மாறியுள்ளமை இன்றைய அவசரமானதும் அபாயகரமானதுமான எச்சரிக்கை எனலாம்.

http://www.tamilthai.com/?p=19375

பிரான்சுக்கான சிறிலங்காத் தூதுவர் தயான் ஜெயதிலக ஐரோப்பாவில் பல திட்டங்களை தமிழருக்கு எதிராக நடாத்திவரும் ஒரு சிங்கள இராசதந்திரி.

நெதர்லாந்து, நோர்வே உட்பட அண்மையில் ஏற்பட்ட பல நிகழ்வுகளின் பின்னர் இவர் உள்ளார் எனவும் அடுத்த செப்டெம்பர் மாதம் ஐ.நா. சபையின் மனித உரிமை குழுவில் சிங்களம் மீது எந்த பாதிப்பும் வராமல் இருக்க இவரே கடுமையாக உழைப்பதாயும் சொல்லப்படுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.