Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறம், நெறி என்னும் தமிழரின் கோட்பாடுகளை கொண்ட ஒரே போராட்ட அமைப்பு நமது புலிகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011 12:55

சேனல்4 வெளியிட்ட காணொளியில் புலிகளை மிக கொடுமையான போராட்ட குழு, கொடூரவாதிகள் என்று தெரிவிக்கிறார்கள். ஒரே சாட்சியமாக முகாம்களுக்கு நுழையும் முன் ஒரு வெடிகுண்டு வெடித்து நிறைய சிங்கள ராணுவமும், சில பொதுமக்களும் இறக்க நேரிட்டது. இதை புலிகள் தான் செய்தார்கள் என்று இராணுவம் கூறுகிறது. மக்கள் கூறவில்லை புலிகளும் மக்களை கொன்றார்கள் என நிரூபிக்க ஏதும் ஆதாரங்கள் எவரிடமும் உண்டா?

நிர்பந்தத்தின் பெயரால் சிலரின் பேட்டிகள் தவிர, அவர்கள் புரிந்ததாக கூறப்படும் தவறுகளை அடையாளப்படுத்த உண்மையான சாட்ச்சிகள் காணொளிகள் புலிகள்; மீது குற்றம் சாட்டுபர்களிடம் உண்டா? அறம், நெறி என்னும் தமிழரின் கோட்பாடுகளை கொண்ட ஒரே போராட்ட அமைப்பு தமிழீழ தேசியத் தலைவரின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே.

மக்களுக்காகவே வாழ்ந்து, மக்களின் வாழ்வுரிமைக்கு நெஞ்சுரம் கொண்டு போர் புரிந்து, இன்று வீராச்சாவை தழுவி நிற்கும் வீரத் தமிழர்களின் தரம் எங்களுக்கு தெரியும். விசக் குண்டுகளை இலங்கைக்கு விற்ற நாடுகளுக்கு எப்படி தெரியும் எங்கள் வீரம் என்னும் பொருள், போர் புரியும் அரண் பற்றி. அன்று தலைவன் பிரபாகரன் பார்த்துக் கொள்வான் என்று விட்டுவிட்டு, இன்று கொலையுண்ட சொந்தங்களுக்காக கதறி அழுவது நம் தவறு. நமக்கான கடமைகளை நாம் முன்னெடுக்க வேண்டும். இன்று தலைவனின் அமைதியான நிலைக்கு நாமே பொறுப்பு, இந்த நிலையை நீக்குவதும் நமது பொறுப்பே.

இனி பிரபாகரன் போல ஒரு மாபெரும் வீரனை நம் வாழ்வில் காணப்போவது இல்லை. இந்த மாபெரும் தலைவனின் காலத்தில் உன் இனத்திற்கு விடுதலைக்கு நீயும் நானும் பாடுபடாது விட்டால், வேறு எவனும் அதை உனக்காக செய்ய மாட்டான். அடுத்தவர் செய்வார் என நீ காத்துக்கிடந்து காலம் கடத்தினால் உன்னை உன் உணர்வை என்னவென்று சொல்வது?

தலைவன் நமக்கு ஆயுதம் கொடுக்கவில்லை என்றாலும், போராட தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் எமது ஒன்றுபட்ட எழிச்சியையும் புரச்சியையும் கணக் காத்திருக்கிறான் எம் தலைவன். உருவாகப் போகும் ஈழத்தின் ஆணிவேரில் நீயும் நானும் கலந்திடுவோம். நமக்கான சூழல் இது தான், ஆயுதம் இல்லையேல் அறம், சனநாயகம். தமிழனே ஒன்று படு, ஈழம் வென்று எடு. தேசியத் தலைவரின் கைகளால் தமிழீழம் எங்கும் பட்டொளி வீச ஏற்றுவோம் எமது தேசியக்கொடியை.

நாம் வாழ்வது ஒருமுறை அதை வாழ்த்தட்டும் இனிவரும் தலைமுறை.

-தி.தமிழரசன்.

http://www.uyarvu.com/index.php?option=com_content&view=article&id=10312:2011-06-17-13-00-51&catid=45:news&Itemid=67

Edited by தமிழ் அரசு

சேனல்4 வெளியிட்ட காணொளியில் புலிகளை மிக கொடுமையான போராட்ட குழு, கொடூரவாதிகள் என்று தெரிவிக்கிறார்கள்
.

அன்பான உறவுகளே சனல் 4 இல் வெளிவந்த இராணுவத்தின் கொடூரத்தை நிரூபிப்பதற்கு நாம் எவ்வளவு கடுமையாக உழைக்க வேண்டுமோ அவ்வளவிற்கு அவ்வளவு தமிழீழவிடுதலைப்புலிகள் குற்றமற்றவர்கள் என நிரூபிப்பதற்கும் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம் என நான் கருதுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைவன் நமக்கு ஆயுதம் கொடுக்கவில்லை என்றாலும், போராட தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் எமது ஒன்றுபட்ட எழிச்சியையும் புரச்சியையும் கணக் காத்திருக்கிறான் எம் தலைவன்.

அனைவரும் ஒன்று சேர்ந்து,வாருங்கள் சனநாய வழியில் என்னென வழிகள் உள்ளனவோ அந்தந்த வழிகளில் போராடி, ஈழத்தை வென்றெடுப்போம்.

Edited by தமிழ் அரசு

Channel 4, சீமான் போன்றவர்களின் குற்றம் குறைகளை கவனத்தில் எடுக்காதீர்கள். நிறைய மூடுபனி. சரியை தேடுகிறது கஷ்டம். அணைக்கிற கை ஒருக்கால் அடித்தால் போச்சு என்று விட்டு விடுங்கள். ஆரோ எங்களை 24/7 சித்திரவதை செய்கிறார்கள். அதுக்கு முடிவு வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவன் நமக்கு ஆயுதம் கொடுக்கவில்லை என்றாலும், போராட தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் எமது ஒன்றுபட்ட எழிச்சியையும் புரச்சியையும் கணக் காத்திருக்கிறான் எம் தலைவன்.

இந்த தளம் கூட சாதாரணமாக உருவாக இல்லை, 40000 மக்களையும், ஒட்டு மொத்த விடுதலை அமைப்பையும் காவு கொடுத்தே இத்தளம் அமைக்கபட்டது, இத்தளத்தின் பெறுமதி அறிந்து விரைந்து போராடுவோம், எமது போராட்டம் மூலம் சர்வதேச விசாரனைக்கு சிறிலங்காவை உட்படுத்தி விட்டோம் என்றால், மிகுதியை சத்தியம் தனதுபாதையில் எமது வேலையை முடித்து விடும், இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து விசாரனை மேற்கொள்ளபட்டாலே எமக்கு தேள்வையான உண்மைகள் வெளிவந்து விடும்,

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளைக் கண்டுகொள்ளாமல் பலாச்சுளையை உண்ணக் கற்றுக்கொள்வோம்..! :rolleyes::wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.