Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயக்குனர்கள் சங்கத் தேர்தல் - கொதிப்பும், கசப்பும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குனர்கள் சங்கத் தேர்தல் - கொதிப்பும், கசப்பும்

ameer110408_1.jpg

bharathiraja.jpg

இயக்குனர்கள் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடக்கயிருக்கிறது. தேர்தல் அறிவுப்பு வெளிவந்த நாள் முதல் சங்கத்தில் நடந்து வரும் மாற்றங்களும், மோதல்களும் தமிழ் சினிமாவின் ஸ்கி‌‌ரீன் ப்ளேயைவிட மர்மங்கள் நிறைந்தது.

பாரதிராஜா தலைமையில் ஒரு அணியினரும், அமீர் தலைமையில் இன்னொரு அணியினரும் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தனர். இவர்கள் தவிர உதவி இயக்குனர்கள் புதிய அலைகள் என்ற பெய‌ரில் தனி அணியாக களத்தில் குதித்தனர். பாரதிராஜா அணிக்கும், அமீர் அணிக்குமான போட்டி அரசியலை முன்வைத்து என்பதை அனைவரும் அறிவர். சீமான் தமிழர் பிரச்சனைக்காக சிறை சென்ற போது சீமானின் தனிப்பட்ட விஷயம் அது, அதற்கும் சங்கத்துக்கும் தொடர்பில்லை என்று கை கழுவினார் பாரதிராஜா. இந்த‌ச் செய்கை அமீர் போன்றவர்களுக்கு கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. தொடர்ந்து கருணாநிதியை ஆத‌ரிக்கும் முகமாக பாரதிராஜா அவரது விழாக்களில் கலந்து கொண்டார். தமிழர் பிரச்சனையில் கருணாநிதிக்கு எதிரான முடிவை எடுத்திருந்த இளம் இயக்குனர்களுக்கு இந்த‌ச் செய்கை கொதிப்பை ஏற்படுத்தியதில் வியப்பில்லை. அவர்கள் பாரதிராஜாவை எதிர்த்து அணி திரண்டதும் இயல்பானதே.

பாரதிராஜா, அமீர் மோதல் அரசியல் தொடர்பானது, சங்கம் தொடர்பானது அல்ல என்பது தெ‌ளிவு. உதவி இயக்குனர்களின் பிரச்சனை முழுக்க அவர்களின் வாழ்வாதாரம் சார்பானது. இயக்குனர்கள் சங்கத்தில் இயக்குனர்களைவிட உதவி இயக்குனர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். என்றாலும் சங்கத்தின் தலைவர், பொருளாளர், செயலாளர் போன்ற நிர்வாகப் பதவிக்கு அவர்கள் போட்டியிட முடியாது. செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மட்டுமே அவர்கள் போட்டியிட அனுமதி உண்டு.

உதவி இயக்குனர்கள் சங்க நிர்வாகப் பதவிக்கு போட்டியிட அனுமதியில்லை என சங்கத்தில் எந்த விதிமுறையும் இல்லை என்று சிலர் தெ‌ரிவித்தாலும் இதுவரை அவர்கள் எந்த நிர்வாகப் பதவியையும் வகித்ததில்லை என்பதே உண்மை. இந்தமுறை முரளி என்பவர் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். மற்றபடி இந்தமுறையும் உதவி இயக்குனர்களின் புதிய அலைகள் செயற்குழு உறுப்பினர் பதவிக்கே போட்டியிடுகிறது.

புதிய அலைகளின் கோ‌ரிக்கை தெ‌ளிவானது. முறையான சம்பளம் வேண்டும். இந்த ஒற்றைக் கோ‌ரிக்கைக்காகதான் அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் லைட் பாய் உள்ளிட்ட உடல் உழைப்பை தரும் எந்த ஒரு தொழிலாளியையும் சம்பளம் தராமல் ஏமாற்ற முடியாது. அவர்களுக்கென இருக்கும் சங்கம் கறாரானது. வேலை முடிந்த உடனேயே சம்பளம் அவர்களின் பாக்கெட்டுக்கு வந்துவிடும். மேலும், ஒரு தொழிலாளியை பிடிக்கவில்லை என்று அவரை விலக்கவும் முடியாது, சங்கத்தில் இல்லாதவர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தவும் வழியில்லை. சுருக்கமாக சொல்வதென்றால் அவர்களின் வேலையும், சம்பளமும் முறையாகவும் கறாராகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் உதவி இயக்குனர்களின் நிலை ப‌ரிதாபமானது. ஒரு படத்தின் இயக்குனர்தான் இவர்களுக்காக தயா‌ரிப்பாள‌ரிடம் சம்பளம் பேசுவார். இந்த சம்பளம் எவ்வித அடிப்படையும் அற்றது. நாள் கணக்கோ, மணிக் கணக்கோ இல்லை மாதக் கணக்கோ இதற்கு கிடையாது. உதாரணமாக ஒரு படத்துக்கு உதவி இயக்குனர் ஒருவருக்கு 20,000 ரூபாய் சம்பளம் பேசப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். இது மாதாமாதம் தவணை முறையில் அவரது கைக்கு வரும். நான்கு மாதங்களில் படம் முடிந்தால் பிரச்சனையில்லை.

அதே படம் எட்டு மாதங்கள் ஒரு வருடம் என இழுத்தால் அப்போதும் இதே இருபதாயிரம்தான் அவருக்கு வழங்கப்படும். ஆனால் மற்ற தொழிலாளர்களுக்கு இப்படி பேக்கே‌ஜ் சிஸ்டம் இல்லை. நாள் கணக்கு. பத்து மணி நேரம் தாண்டினால் இரட்டிப்பு சம்பளம் தந்தாக வேண்டும். இந்த நியாயமான நடைமுறை எதுவும் உதவி இயக்குனர்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படுவதில்லை.

உதவி இயக்குனர்களுக்கு பேசும் சம்பளத்தில் கணிசமானப் பகுதியை தங்களுக்கென வைத்துக் கொள்ளும் இயக்குனர்களும் இருக்கிறார்கள். இதை எதிர்த்து யாரும் குரல் எழுப்புவதில்லை. எழுப்பினால் அடுத்தகணம் அவர் படத்திலிருந்து வெளியேற்றப்படுவார். அடிமட்ட தொழிலாளிக்கு உள்ள வேலை உத்தரவாதம் உதவி இயக்குனர்களுக்கு நூறு சதவீதம் மறுக்கப்பட்டே வருகிறது. இப்படி இயக்குனர்கள் சங்கத்தில் பெருவா‌ரியாக இருக்கும் உதவி இயக்குனர்களின் நிலை உத்தரவாதமில்லாத அடிமைத் தொழிலாகவே இருந்து வருகிறது. தற்போதுள்ள நிர்வாகிகள், உதவி இயக்குனர்களின் சம்பளம் சங்கம் மூலமாக பெற்றுத் தரப்படும் என்று ஒரேயொரு தீர்மானத்தை மட்டுமே உருப்படியாக நிறைவேற்றியிருக்கிறார்கள். அதிலும் பல்வேறு குறைபாடுகள்.

உழைப்புக்கேற்ற ஊதியம் என்ற நியாயமான கோ‌ரிக்கையை முன்வைத்தே உதவி இயக்குனர்கள் அணி திரண்டுள்ளனர். இது இயக்குனர்களுக்கு தீராத கசப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தளவுக்கு என்றால், அரசியல் பகையை மறந்து பாரதிராஜாவும், அமீரும் கைகோர்க்கும் அளவுக்கு. உதவி இயக்குனர்கள் வெற்றி பெறுவதை இயக்குனர்களால் யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. இரண்டு அணியாக எதிரும் புதிருமாக நின்ற பாரதிராஜாவும், அமீரும் ஒரே அணியில் புதிய அலைகளை எதிர்த்து கரம் கோர்த்திருக்கிறார்கள். சங்கத்தின் கணக்குகள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை, கணக்கை சமர்ப்பிக்கும் வரை தேர்தலை தள்ளிப்போட வேண்டும் என சிலர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள்.

இந்த திடீர் நடவடிக்கை தேர்தலை தள்ளிப்போட்டு, அந்த கால அவகாசத்தில் புதிய அலைகளை உடைத்து உதவி இயக்குனர்கள் அணியை பலவீனப்படுத்துவதற்கே என்று பலரும் அச்சம் தெ‌ரிவித்துள்ளனர்.

இந்த இடத்தில் புதிய அலைகள் மீதான குற்றச்சாற்று ஒன்றையும் கவனத்தில் கொள்வது அவசியம். இயக்குனர்கள் சங்கத்தில் நேடியாக ஆதிக்கம் செலுத்த முடியாத சிலர் - நடிகர்கள், தயா‌ரிப்பாளர்கள், அரசியல் தரகர்கள் - சங்கப் பொறுப்பில் இருக்கும் தங்களின் எதி‌ரிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் முகமாக உதவி இயக்குனர்களுக்கு பணமும், பொருளாதார பின்புலமும் அளித்து அவர்களை துண்டிவிடுவதான குற்றச்சாற்று ஒன்றும் பலமாகப் பேசப்பட்டு வருகிறது. சென்ற தேர்தலின் போது இந்தப் பிரச்சனை வெளிப்படையாக வெடித்ததையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சங்கப் பிரச்சனைகளில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு இடம் கொடாமல் இருப்பதுதான் பிரச்சனைகளை களைவதற்கான முதல்படியாக இருக்கும். இயக்குனர்களும், உதவி இயக்குனர்களும் இதனை உணர வேண்டும்.

http://tamil.webdunia.com/entertainment/film/article/1106/15/1110615041_1.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.