Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அளவெட்டியில் விழுந்த அடியின் அடிப்படை நோக்கம் என்ன?

Featured Replies

அளவெட்டியில் விழுந்த அடியின் அடிப்படை நோக்கம் என்ன?

அளவெட்டிப் பகுதியில் நேற்று முன்தினம் 16ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்திய கூட்டம் ஒன்றிற்குள் நுழைந்த படையினர் அங்கிருந்த பொதுமக்களை தாக்கிய சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய இந்தக் கூட்டம் சட்டப்படி அனுமதி பெறப்படவில்லை எனக் கூறப்பட்டால் அதனைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் அந்தப் பகுதி பொலிஸாருக்கே உண்டு.

ஆனால் அது விடயத்தில் பொலிஸார் தலையிடவில்லை. அதேநேரம் தேர்தல் காலங்களில் பிரசாரக்கூட்டம் என்பது வழமையான ஒன்று. அதிலும் வடபுலத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டம் என்பது பெருந்திரளான மக்களுடன் நடைபெறுவதுமல்ல. மாறாக ஒரு சிறு கூட்டத்தினருடன் நடத்தப்படும் நிகழ்வாகவே தமிழ்ப் பகுதிகளில் அண்மைக்கால தேர்தல் பிரசாரங்கள் அமைந்துள்ளன.

எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குள் நுழைந்து அங்கிருக்கக் கூடிய ஒரு சிறு கூட்டத்தை அடித்துத் துரத்துவது, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாக்க முற்படுவது என்பன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தேர்தலில் தோற்கடிப்பதற்கான வழியன்று.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குள் நுழைந்து அங்கிருக்கின்றவர்களை அடித்துத் துரத்துவதான செயல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஆதரவை அதிகரிப்பதற்கான வழியே அன்றி ஒருபோதும் வாக்குகளைக் குறைக்கும் வழியன்று. இது படைத்தரப்பிற்கோ அல்லது தாக்குதல் நடத்துவது என்ற முடிபை எடுத்தவர்களுக்கோ தெரியாமல் இல்லை.

அப்படியானால் தாக்குதல் நடத்தியது எதற்காக? சனல் 4 ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கும் இவ்வேளையில் உலகம் முழுவதும் இலங்கை அரசிற்கு எதிரான உணர்வைக் கொண்டிருக்கையில், அதிலிருந்து விடுபடுவதற்காக எத்தனையோ நேர்க்கணிய விடயங்களை ஆற்ற வேண்டிய பொறுப்பில் அரசு இருக்கும் போது- அளவெட்டியில் அவசரப்பட்டு ஏன் இப்படிச் செய்யப்பட்டது?

நடக்கப்போகும் உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கில் வெற்றிலை வெல்ல வேண்டும் என அரசின் சில மட்டங்கள் விரும்பவில்லையா? என்ற கேள்வியை இந்நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் வடக்கில் ‘வெற்றிலை’ போட்டி என்பது அரசுடன் நிற்கும் தமிழர் சார்பு, அரசுடன் நிற்கும் அரச சார்பு என்ற இருநிலைத் தரப்புடன் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.

எதுவாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அரசுடன் பேச்சு நடத்திக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், இத்தகைய தாக்குதல்களை ஜனாதிபதி ஒருபோதும் விரும்ப மாட்டார் என்பது இராஜதந்திர ரீதியான அனுமானம்.

நிலைமை இதுவாக இருக்கையில் அவர்கள் தாக்குதல் நடத்தியது ஏன்? மர்மம் துலங்க வேண்டும் அதற்காக விசாரணை வேண்டும் என ஒருபோதும் கேட்கமாட்டோம்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=20354

  • தொடங்கியவர்

அளவெட்டியில் தாக்கியவர்களை அடையாளம் காட்ட முடியும்! - த.தே.கூட்டமைப்பு தெரிவிப்பு

அளவெட்டிப் பகுதியில் தாம் நடத்திய கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய படையினரையும் வழிநடத்திய படை அதிகாரிகளையும் தம்மால் அடையாளம் காட்ட முடியுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அளவெட்டியில் நேற்றுமுன்தினம் நடந்த படையினரின் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதன் பிரகாரம் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் மேற்படி சம்பவம் தொடர்பாக தாங்கள் முறைப்பாட்டைச் செய்திருந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது.

நேற்றைய பத்திரிகையாளர் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சரவணபவன், சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர். ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையிலேயே இந்தத் தகவலை அவர்கள் வெளியிட்டனர்.

பொலிஸார் மேலதிகமான வாக்கு மூலங்களை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் வைத்துப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்த அவர்கள், தாங்கள் இத்தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய, தம்முடன் உரையாற்றிய படை அதிகாரிகளையும் மேற்படி தாக்குதல் நடத்திய படைச்சிப்பாய்களை வழிநடத்திய படை அதிகாரியையும் அடையாளங் காட்டத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரிலேயே இந்தக் கூட்டம் நிறுத்தப்பட்டதாக அங்கு வந்த படை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக சுமந்திரன் தெரிவித்தார்.

முன்னதாக தம்முடன் உரையாடிய படை அதிகாரி தமது மெய்ப்பாதுகாவலர் ஊடாக மேற்படி கூட்டத்தை இடைநிறுத்துமாறு அறிவுறுத்தியதாகவும் இதையடுத்து அவர்களுடன் உரையாடுவதற்காக மேடையைவிட்டு தாம் இறங்கிச் சென்றபோது அதிகாரி பாதுகாப்பு படை அதிகாரி, பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று இக்கூட்டம் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் உடனடியாக இக்கூட்டத்தை நிறுத்த அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அதற்குப் பதிலளித்த சுமந்திரன், இக்கூட்டம் பொதுவான கூட்டமல்ல எனவும் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பு எனவும் இது மூடப்பட்ட மண்டபம் ஒன்றிலேயே இடம்பெறுவதால் இதற்கான அனுமதி பெறப்பட தேவையில்லையயனவும் தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்த இழுபறிகளின் மத்தியிலேயே இன்னொரு குழுவினரை படை அதிகாரியொருவர் வழிநடத்தி வந்ததாகவும் சுமார் 40 முதல் 50 வரையான படையினர் மேடையைச் சூழ்ந்து கொண்டு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடத்திய தாக்குதலின்போது மெய்ப்பாதுகாவலர்கள் தம்மை அடையாளம் காட்டி தடுக்க முற்பட்டபோது அவர்களும் தாக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்தச் சம்பவத்தை யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியின் கவனத்திற்கு கொண்டுசென்ற வேளை யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி 10 நிமிடத்தில் தாம் பதிலளிப்பதாக தெரிவித்ததாகவும் பின்னர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு படை அதிகாரிகளை தம்முடன் அனுப்பி அவர் தம்மை சமாளிக்க முற்பட்டதாகவும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

ஆனாலும் இந்தச் சம்பவம் ஒட்டுமொத்தமாக தேர்தல் வன்செயல் என்பதற்கு அப் பால் யாழ்.மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள படைத்தரப்பு இராணுவ ஆட்சியயான்றை நிலைநிறுத்த மேற்கொள்கின்ற சதி முயற்சி எனவும் இதனைத் தாங்கள் அனுமதிக்கப் போவதில்லையயனவும் இராணுவம் யாழ்ப் பாணத்தில் அதாவது வடக்குக் கிழக்குப்பகுதி யில் தொடர்ந்தும் நிலை கொண்டிருந்தால் இவ்வாறான மோசமான நிலை ஏற்படும் என் பதை இது அப்பட்டமாக வெளிப்படுத்தி விட்ட தாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக நேற்றைய சம்பவத்தின்போது இளைஞர்கள் யாராவது கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்த அவர், மேற்படி சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல் ஆணையாளர் ஆகியோருக்கு தாங்கள் மகஜர்களை அனுப்பியிருப்பதாகவும் இந்த மகஜர்களுக்கான பதிலை தாம் எதிர்பார்ப்பதாகவும் அடுத்த ஓரிரு தினங்களில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுகூடி முடிபு செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=20363

  • கருத்துக்கள உறவுகள்

எந்த கூட்டமெனினும் காணொளியில் எடுத்து வெளியிட வேண்டியது தான் (சனல் 4 பாணியில்) இத்தகைய செயல்களை குறைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.