Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா கடற்படைக்கு ஜெயலலிதா கண்டனம்

Featured Replies

அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதா?: சிறிலங்கா கடற்படைக்கு ஜெயலலிதா கண்டனம்

[திங்கட்கிழமை, 9 சனவரி 2006, 01:53 ஈழம்] [ம.சேரமான்]

தமிழக அப்பாவி மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக இந்தியக் கூட்டரசின் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஜெயலலிதா அனுப்பியுள்ள கடித விவரம்:

சிறிலங்கா கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். பாக் நீரிணை அருகே உள்ள பகுதியான கச்சத் தீவில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் இதுபோன்ற தாக்குதலுக்கு அடிக்கடி ஆளாகின்றனர். இதுபோன்ற சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது.

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் சனிக்கிழமை இரவு இயந்திரப் படகு மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் அதிகாலை 3 மணி அளவில் நிகழ்ந்துள்ளது. இதில் ஆண்ட்ரூஸ் என்ற மீனவர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது.

அவர் தற்போது ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவருடன் மீன் பிடித்துக்கொண்டிருந்த மற்ற மூவரும் உயிர் தப்பியுள்ளனர்.

தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதைத் தடுக்க வேண்டும் என்று பிரதமராகிய உங்களுக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளேன்.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மீன் பிடித் தொழிலையே சார்ந்துள்ளது. இப்பகுதி மீனவர்கள் பெரும்பாலும் கச்சத் தீவு பகுதியைச் சுற்றியுள்ள இடங்களிலேயே மீன் பிடித்து வருகின்றனர்.

கச்சத் தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான உரிமையை மத்திய அரசு நிலை நாட்ட வேண்டும். அதன் மூலம்தான் இப்பகுதியில் மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க இயலும்.

பாக் நீரிணை பகுதியில் மீனவர்களுக்கு எதிராக சிறிலங்காக் கடற்படையினர் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல முறை மத்திய அரசை வலியுறுத்தியுள்ளேன். அப்பாவி மீனவர்களுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்துவதை எவருமே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இந்த விடயத்தில் இந்திய அரசின் கடும் கண்டனத்தை சிறிலங்கா அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

எனவே இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை மத்திய அரசு காண வேண்டும்.

கச்சத் தீவை குத்தகை எடுப்பதன் மூலம் இப்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதில் உள்ள பாரம்பரிய உரிமையை நிலை நாட்ட முடியும் என்று அதில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

http://www.eelampage.com/?cn=23229

  • தொடங்கியவர்

இதையே வேறு மானிலகாரனோ இல்லை வேற மொழிகாரனா இருந்தா அந்த மானிலகாரன் சும்ம விட்டுவனா? இல்லை அந்த மொழிகாரன் சும்ம இருபான?

டில்லிய ஒரு வாங்கு வாங்க மாட்டன? :twisted: :twisted: :twisted:

எங்கள் உறவுகளை கொன்றொழிக்கும் சிறீலன்க பயங்கரவாத அரசை நாமும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

கடற்ப்படை டம்பீமார் அம்மா கண்டனம் போட்டிருக்கிறா

கவனம்

:wink: :wink: :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

நம்மடை அம்முவா??

சிறிலங்கா கடற்படைக்கு ஜெயலலிதா கண்டனம்

அட கடற்படைக்குத்தானே?

இலங்கை அரசுக்கு இல்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அஜீவன் அண்ணா இதுதாவது செய்தாவே என்று மகிழ்ச்சிப்படுங்கள்.

என்ன அஜீவன் அண்ணா இதுதாவது செய்தாவே என்று மகிழ்ச்சிப்படுங்கள்.

சரி.....

கொஞ்சம் ஓங்கி கத்தியிருந்தா நல்லாயிருக்குமே?

ஒரு நப்பாசைதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அ"றோ"கராவெண்டானாம் ஈழ்பதீஸான்....

ம்ம்ம்ம்ம்.... தமிழ்நாட்டிலை இருந்து வார நியூஸுகள், இந்தியா பூச்சாண்டு காட்டி "அறசியள் வாணொழி" நடாத்தும் கூட்டத்துக்கு வயிற்றைக் கலக்கியுள்ளதாம்!! "விழுந்தாலும் மண் முட்டவில்லைக் கதைகள்தானாம்"!!

எல்லாத்துக்கும் மேலாக தமிழ்நாட்டிலிருக்கும் கூலித்தலைக்கும் ஏதாவது ஆக்கினை வந்திடுமோ என்ற பயமுமாம்!!! அத்தோடு கடவுள் "றோ" கையைக் கழுவி விடுவாரோ என்ற பயம் வேறாம், பின் சோத்துக்கும் தடுங்கினத்தோம்தானாம்!!!

"றோ"காரா... "றோ"கரா....

கச்சத் தீவை குத்தகைக்கு எடுக்க ஜெ கோரிக்கை

ஜனவரி 09, 2006

சென்னை:

தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கச்சத்தீவை இந்திய அரசு நிரந்தர குத்தகைக்கு எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் வெறி தாக்குதல் நடத்துவது அவ்வப்போது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர், எண்ணற்றோர் காயமடைந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்கள், படகுகள், மீன் பிடி வலைகள் பறிபோய் உள்ளன.

இலங்கைக் கடற்படையின் இந்த அட்டூழியச் செயலுக்கு முடிவு காண¬முடியாமல் ராமேஸ்வரம் மீனவர்கள் பரிதவித்து வருகின்றனர். மத்திய அரசின் சார்பில் இதுவரை உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் தொடர்ந்து வருகிறது இலங்கை கடற்படையின் வெறியாட்டம்.

இந் நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நேற்று வீரர்கள் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதில் ஆண்ட்ரூஸ் என்ற மீனவர் படுகாயமடைந்தார். இது ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார். அதில், வங்கக் கடலில் பாக் ஜலசந்திப் பகுதியில், கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கண்மூடித்தனமாக தாக்கப் படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

இது தொடர்பாக நான் பலமுறை உங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். இதுபோன்ற தாக்குதல் சம்பவம் நேற்றும் நடந்துள்ளது. எனவே இப்பிரச்சினை தொடர்பாக தங்களுக்கு மீண்டும் கடிதம் எழுதுவதில் மிகவும் வருத்தப்படுகிறேன்.

கச்சத்தீவு அருகே இயந்திரப் படகில் சென்று 8.1.2006 அன்று காலை 8 மணிக்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டனர். அத்தோடு மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், மீன்பிடி வலைகளையும் பறித்துக் கொண்டு சென்றனர்.

தாக்குதலில் ஆண்ட்ரூஸ் என்ற மீனவருக்கு துப்பாக்கி குண்டு உடலில் பாய்ந்து காயம் ஏற்பட்டது. மற்ற மூன்று மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆண்ட்ரூஸ் தற்போது ராமேஸ்வரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஏழை மீனவர்கள் நடுக்கடலில், இலங்கை கடற்படையால் கண்மூடித்தனமாக தாக்கப்படும் மனிதாபிமானமற்ற செயலை தாங்கள் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். இப் பிரச்சினையில் அதிக கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துத்தான் தங்களது வயிற்றைக் கழுவுகிறார்கள். மீன்பிடி தொழில்தான் அவர்களுக்கு ஜீவாதாரமே. முன்பு இருந்ததைப் போல கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமை தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதற்கு மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

இப்பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர முடிவு காண முயற்சிக்க வேண்டும். கச்சத்தீவை நிரந்தரமாக குத்தகைக்கு எடுப்பதுதான் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்ற யோசனையையும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் வேளையில், இப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண இதுவே சரியான தருணம் ஆகும். எனவே மத்திய அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Thatstamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.