Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உச்சிப்புளி கடற்படை விமான தள விரிவாக்க பணி தொடங்கப்படுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக கடற்பகுதியில், இலங்கைக்கு மிக அருகில் உள்ளது ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதி. இந்த பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே கடற்படை, கடலோர காவல்படையினருக்கு பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, உச்சிப்புளியில் இயங்கி வந்த கடற்படை ஹெலிகாப்டர் தளம், 2009&ம் ஆண்டில் ‘ஐ.என்.எஸ். பருந்து’ என்ற பெயரில் கடற்படை விமான தளமாக தரம் உயர்த்தப்பட்டது.

இங்கிருந்து தற்போது ஹெலிகாப்டர்கள், சிறிய ரக விமானங்கள், ஆளில்லாத உளவு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது விமானப்படை தளமாக தரம் உயர்த்தப்பட்டதால் ரோந்து மற்றும் போர் விமானங்களும் இங்கிருந்து இயக்கப்படும்.

இங்கு ஓடுதள விரிவாக்கம், விமானங்கள் நிறுத்த ஷெட் மற்றும் பழுதுபார்க்கும் இடங்கள், வீரர்களுக்கான தங்குமிடம் உள்ளிட்ட பணிகளுக்காக கூடுதலாக நிலம் கையகப்படுத்தி தருமாறு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் கோரப்பட்டது.

இந்த தளத்தை சுற்றி தென்னந்தோப்புகள் அதிகளவில் இருப்பதால் ஹெலிகாப்டர்கள், விமானங்கள் வந்து செல்வதில் சிரமம் இருப்பதாகவும், அந்த நிலங்களை கையகப்படுத்தி மரங்களை அகற்றவும் கடற்படையினர் கோரியிருந்தனர்.

2001&ல் இப்பகுதி தென்னை விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நிலம் கையகப்படுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் நிறுத்தியது. விமானதளத்தின் அருகே தெற்கு பகுதியில் மதுரை & ராமேஸ்வரம் அகல ரயில்பாதை செல்வதால் நிலம் கையகப்படுத்துவதில் சிரமம் உள்ளது.

அதனால் ரயில் பாதையை வேறு வழியில் மாற்றித்தர நடவடிக்கை எடுத்தால் நிலத்தை கையகப்படுத்தி தருவதாக மாவட்ட நிர்வாகம் கூறியது. பல ஆண்டுகளாக இதற்கு பதில் இல்லாத நிலையில், ஓராண்டுக்கு முன்பு அகல ரயில்பாதையை மாற்றித்தர ரயில்வே துறை ஒப்புக்கொண்டது.

முதற்கட்டமாக, மாற்றுப்பாதை அமைப்பதற்கான ஆய்வுப்பணிக்காக ரூ.1 கோடியை கடற்படையிடம் ரயில்வே துறை கேட்டது. தற்போது அந்த தொகையை கடற்படை நிர்வாகம் செலுத்திவிட்டது.

இதுகுறித்து வருவாய் அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘‘அகல ரயில்பாதையை மாற்றி அமைக்க அனுமதி கிடைத்ததும், விமான தளத்தை சுற்றியுள்ள 200 ஏக்கரும், அகல ரயில்பாதைக்கு அருகில் தெற்கு பக்கம் உள்ள 320 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்த சர்வே செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவல்கள் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் உத்தரவு வந்தால் உடனடியாக கடற்படைக்கு தேவையான நிலம் கையகப்படுத்தி தரப்படும்’’ என்றார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=56247

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் பாகிஸ்தான் பக்கத்தில் இருந்து வரும் அச்சுறுத்தலை விடவும், இப்போது ஸ்ரீலங்கா பக்கம் இருந்து வருகின்ற அச்சுறுத்தல்தான் இந்தியாவுக்கு பெரிய பிரச்சனை போல இருக்கு !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.