Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் பகுதியில் எண்ணை அகழ அரசு முஸ்தீபு!

Featured Replies

தமிழர் தாயகத்தின் இதயமாகவும், கேந்திர நிலையமாகவும், பெருமளவு இயற்கைக் கனியவளங்கள் புதைந்து கிடக்கும் இடமாகவும் கருதப்படும் மன்னார் வளைகுடாவில் உள்ள பெற்றோலிய வளங்களை அகழ்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு முனைப்புடன் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றது.

இந்தத் திட்டம் நடவடிக்கை தமிழர் தரப்பில் பெரும் சீற்றத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச சக்திகளுடன் சேர்ந்து தமிழர் தாயகத்தின் மூலவளத்தைச் சுரண்டி, சூறையாடி, கொள்ளையிடும் சதித் திட்டத்தை சிங்கள அரசு செயற்படுத்துவதாகத் தமிழர் தரப்புக் கருதுகின்றது.

இலங்கை அரசின் இந்தச் செயற்பாடு குறித்து விடுதலைப் புலிகளின் தலைமையும் கோபமுற்றிருப்பதாகத் தெரிகின்றது.

மன்னார் வளைகுடாவில் நிலத்துக்கடி யில் இருக்கும் மதிக்க முடியாத பெறுமதி கொண்ட கனியவளங்களை அகழ்வதற்கான பொறுப்புகளை வெளிநாட்டு நிறுவனங்களிடம் வழங்குவதற்கான கேள்வி மனுக்களை அரசு வெகுவிரையில் உத்தியோகபூர்வமா கக் கோரவிருக்கிறது.

இவ்வாறான கேள்வி மனுக்கோரலில் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற் காக அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் தயாராகியிருக்கின்றன எனவும், இதன் பொருட்டு அரச உயர்மட்டத்தை அந்த நிறு வனங்கள் நாடியிருக்கின்றன எனவும் மிக நம்பகரமாகத் தெரியவருகிறது.

முன்னதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தான் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு சில வாரங்களே இருக்கையில் இந்த விட யத்தை இலக்குவைத்து, தனியாக பெற்றோ லியத்துறை அமைச்சு என்ற ஒன்றை உருவாக்கினார். இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு, இந்த அகழ்வு வேலை களை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.

ஆழ்கடல் எண்ணெய் அகழ்வில் உல கில் முன்னணியில் இருக்கும் நாடு நோர்வே என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் வடமேற்குக் கடலோரப் பரப்பில் எண்ணெய் அகழ்வு வேலைத் திட் டத்தில் இலங்கை இந்தியா நோர்வே கூட் டுச் செயற்பாடும் இடம்பெறும் என்றும்

இதற்கான பூர்வாங்கப் பேச்சுகள் முடி வடைந்து விட்டன என்றும்

ஒரு தகவல் தெரிவித்தது.

நோர்வேயின் புதிய பிரதமர், அண்மை யில் புதுடில்லிக்குச் சென்றிருந்த சமயத்தில் இதுகுறித்து புதுடில்லியில் ஆராயப்பட்டதா கவும் கூறப்பட்டது.

தமிழர் தாயகத்தை ஒட்டிய பிரதேசத்தில் தமிழர் தரப்பின் இணக்கமின்றி இத்தகைய பணிகளைத் தொடங்குவது சிக்கல்கள் நிறைந் தது என்பதை சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் ஏற்கனவே உணர்ந்திருப்பதாகக் கூறப்ப டு கின்றது.

எனினும், சேது சமுத்திரக் கால்வாய் அகலமாக்கும் திட்டத்துடன் இணைந்து இப் பணியும் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு ஓரளவு பாதுகாப்பு உண்டு என சில வட்டாரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாம

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.