Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு: தமிழர்களின் தலைவர் என்ற தானே வரித்துக்கொண்ட நிலையினை இழக்கிறார் கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ புதன்கிழமை, 22 யூன் 2011, 10:19 GMT ] [ அ.எழிலரசன் ]

சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டமையானது தமிழ்நாடு அரசியலில் புதியதொரு திருப்பம் மாத்திரமன்று.

மாறாக, 'உலகத் தமிழர்களின் தலைவர்' தான்தான் எனக் கூறிக்கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகத்தினது தலைவர் எம். கருணாநிதி தனது அந்த நிலையினை இழப்பதையே காட்டுகிறது.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உலகத் தமிழர்களின் ஒரேயொரு தலைவர் தான்தான் என அங்கீகரிக்கப்படவேண்டும் என எப்போதும் விரும்பிய ஒருவர்தான் கருணாநிதி.

யூன் 2010ம் ஆண்டு தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இடம்பெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் க.சிவத்தம்பி உள்ளிட்ட மூத்த தமிழ் அறிஞர்கள் 'உலகத் தமிழரின் தலைவர்' கருணாநிதிதான் என விபரிப்பதை இந்த மாநாட்டின் ஊடாகக் கலைஞர் உறுதிப்படுத்தியிருந்தார் எனலாம்.

தமிழ் மக்கள் மீதும் தமிழ் மொழி மீதும் தான் அளவுகடந்த பாசத்தினைக் கொண்டிருப்பதாக எப்போதுமே தனது எழுத்துக்களிலும் அரசியல் பேச்சுக்களிலும் கூறிவருவதை அடிப்படையாகக் கொண்டு நோக்குமிடத்து உலகத் தமிழர்களின் தலைவன் தான்தான் என்ற அவரது எண்ணம் உறுதிப்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசியலில் பெரும்பாலான அரசியல்வாதிகளை அவர்களது பெயர்கொண்டு அழைக்காமல் அடைமொழியால் அழைக்கும் ஒரு கலாசாரம் இருந்து வருகிறது.

உலகத் தமிழனின் தலைவன் தான்தான் என்பதை வலியுறுத்தும் வகையில் கடந்த காலங்களில் கருணாநிதி தனக்கென எண்ணற்ற அடைமொழிகளை உருவாக்கிக்கொண்டார். தமிழ் மொழியினதும் கலாச்சாரத்தினதும் காவலன் என்றும் மீட்பர் என்றும் எண்ணற்ற அடைமொழிகளை அவர் தனதாக்கிக்கொண்டார்.

ஆனால் இன்று ஒரே அடியில் ஜெயலலிதா கருணாநிதியைத் தட்டி விழுத்திவிட்டார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில் சிறிலங்கா அரசாங்கம் போர்க் குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டிருக்கிறது எனக்கூறி சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராகப் பொருளாதாரத் தடை கொண்டுவரப்படவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியதன் ஊடாக தமிழர்களுக்காகத் துடிக்கும் ஒரு தலைவி என்றதொரு நிலைமையினை ஏற்படுத்திவிட்டார்.

2009ம் ஆண்டு இடம்பெற்ற நான்காவது கட்ட ஈழப்போரை நிறுத்துவதற்காகவும், அதன் பின்னர் போரின் பின்னர் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவும் ஈற்றில் அதிபர் ராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் எனக் கோரியும் பல தமிழ் அமைப்புகள் போராட்டங்களை நடாத்தின. ஆனால் இத்தகைய போராட்டங்கள் எதற்குமே கருணாநிதி தனது ஆதரவினை வழங்கவில்லை.

2009 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் இடம்பெற்ற தேர்தலிகளின் போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மேற்குறித்த இந்தத் தமிழ் குழுக்கள் தங்களது கோபத்தினையும் வெறுப்பினையும் வெளிப்படுத்தியபோதும் ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரிநிற்கும் தங்களது போராட்டங்களுக்குக் கருணாநிதி தனது அனுதாபத்தினையாவது வழங்குவார் என இந்தத் தமிழ்க் குழுக்கள் கருதின. ஆனால் காங்கிரசினை எதிர்க்கமுடியாத நிலையிலிருந்த திராவிட முன்னேற்றக்கழகம் மிகவும் அவதானமாகச் செயற்பட்டது.

அண்மையில் தமிழ்நாடு சட்டசபையில் சிறிலங்காவிற்கு எதிரான பொருளாதாரத் தடையினைக் கொண்டுவரவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது இந்தத் தமிழ் அமைப்புக்கள் ஜெயலலிதாவின் புகழ் பாடுகின்றன.

சீமானின் நாம் தமிழர் இயக்கம், பெரியார் திராவிடக் கழகம் என்பன ஜெயலலிதாவினைப் புகழ்ந்து தள்ளியிருக்கின்றன. இது தவிர வேறு பல அமைப்புக்களும் ஜெயலலிதாவினை வாழ்த்தியிருக்கின்றன.

ஜெயலலிதாதான் உண்மையான தமிழிச்சி என மீனவர்களின் கூட்டமைப்பு புகழ்ந்திருக்கிறது.

கருணாநிதியின் தமிழருக்கு எதிரான போக்கினை வெளிப்படுத்தியமைக்காக 'உண்மையான தமிழிச்சிக்கு' வாழ்த்துகிறோம் என தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டிருக்கும் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மறு வளத்தில் கூறுவதானால், தமிழர்களுக்கான ஒரே தலைவர் ஜெயலலிதாதான் என தற்போது தமிழ்நாட்டில் தமிழ் அமைப்புக்கள் புகழ்ந்துவரும் நிலையில் கருணாநிதி தமிழ் மொழி அரசியலில் தனது பிடியினை இழந்துவிட்டார்.

செய்தி வழிமூலம்: Express News Service, The New Indian Express

http://www.puthinappalakai.com/view.php?20110622104124

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.