Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடிவடையாத காணாமற்போனோர் தொடர்பான தேடுதல்கள் - பிபிசி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ வியாழக்கிழமை, 23 யூன் 2011, 06:13 GMT ] [ நித்தியபாரதி ]

சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் முடிவுற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், யுத்த காலப்பகுதியில் காணாமற்போன தமது உறவுகள் தொடர்பான விபரங்களைப் பார்வையிடுவதற்காக கடந்த பத்து நாட்களாக சிறிலங்காவின் வட பகுதியில் அமைந்துள்ள வவுனியா காவற்துறை நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

பத்து நாட்களின் முன்னர் காணாமற்போனவர்களின் விபரங்களைப் பார்வையிட முடியும் என சிறிலங்கா காவற்துறையினர் அறிவித்திருந்தனர். காணாமற் போனவர்களின் நெருங்கிய உறவினர் தவிர வேறெவரும் விபரங்களைப் பார்வையிட முடியாது என காவற்துறைப் பேச்சாளர் SP பிறிசந்தா ஜெயக்கொடி பி.பி.சியின் சிங்கள சேவையிடம் தெரிவித்திருந்தார்.

காவற்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் [the police Terrorist Investigation Division - TID] கீழ் உள்ள காணாமற் போனோர் தொடர்பான விபரங்கள் சிறிலங்காவின் வடக்கு, தெற்கு மற்றும் தலைநகர் கொழும்பு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிலையங்களில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் இவர் தெரிவித்தார்.

காணாமற் போன உறவுகள் தொடர்பான விபரங்களைப் பார்வையிடுவதற்காக வவுனியாவிற்குச் சென்றிருந்த ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவர் மட்டுமே தனது பிள்ளை உயிருடன் இருக்கின்றார் என்ற தகவலைப் பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இவரது மகன் சிறிலங்காவின் தென் பகுதியில் அமைந்துள்ள காலி என்னும் இடத்தில் உள்ள ஒரு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அறிந்து கொண்ட இவர் தனக்கு இந்தச் செய்தி கிடைத்தவுடனேயே வவுனியாவிலிருந்து பல நூற்றுக்கணக்கான மைல்கள் தூரத்தில் உள்ள காலி தடுப்பு முகாம் நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்தார்.

பெருந் தொகையான மக்கள் வவுனியா நிலையத்தை சென்றடையும் போதிலும், நாளொன்றிற்கு 200 பேருடன் மட்டுமே காவற்துறையினர் சந்தித்துக் கலந்துரையாடுகின்றனர்.

விபரங்களை அறிந்து கொள்வதற்காக இந்த நிலையங்களிற்குச் செல்கின்ற பத்திரிகையாளர்கள் அங்கிருக்கும் காவற்துறையினரால் தடுக்கப்பட்டதால், வீதியோரத்தில் மிகவும் ஏமாற்றத்துடனும் கண்ணீருடனும் நின்ற உறவுகளுடன் மட்டுமே இவர்களால் உரையாட முடிந்தது.

காணாமற் போன தமது உறவுகள் தொடர்பான விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியாத தமிழ் மக்கள் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

"26 வயதான எனது மகன் பிரதீப் 2008ல் தனக்கான கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு சென்றுகொண்டிருந்த போது குற்ற விசாரணைப் பிரிவால் CID கூட்டிச் செல்லப்பட்டார். அது மட்டுமே எமக்குத் தெரியும்" என தெல்லிப்பளையைச் சேர்ந்த காணாமற் போன இந்த உறவின் தந்தையார் மைலு சண்முகதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிலிருந்து இவர் தனது மகனைக் கண்டுபிடிப்பதற்காக எடுத்த முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போயுள்ளன. காவற்துறை நிலையங்கள், மனித உரிமை நிறுவனங்கள், இராணுவ முகாங்கள் எனப் பல இடங்களிற்குச் சென்ற போதிலும் எந்த விதமான பதில்களும் இந்தத் தந்தைக்கு கிடைக்கவில்லை. சண்முகதாஸ் குடும்பத்திற்கான பிரதான உழைப்பாளி காணாமற் போன பிரவீன் ஆவார்.

"எனக்கென்று யாருமே இல்லை. இந்த நிலையில் நான் படுக்கையில் விழுந்தால் என்னை யார் பராமரிப்பார்கள்?" 2007ல் காவற்துறையால் அழைத்துச் செல்லப்பட்ட பிறிதொரு காணாமற் போன தமிழ் உறவின் தாயாரின் கதறலே இதுவாகும்.

1979ல் உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒருவர் 90 நாட்கள் வரை மட்டுமே வெளித் தொடர்புகள் எதுவுமின்றி தடுத்து வைத்திருக்க முடியும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தடுத்து வைத்திருப்பதற்கான கட்டளையை மீளப் புதிப்பிக்கின்ற அல்லது நீக்குகின்ற உரிமை பாதுகாப்புச் செயலாளருக்கு மட்டுமே உள்ளது.

சிறிலங்கா அதிபரின் சகோதரரான கோத்தாபய ராஜபக்ச தற்போது பாதுகாப்பு செயலாளர் பதவியில் உள்ளார். ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் போன்றன சிறிலங்காவில் தற்போது நிலவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

'காணமாற் போனோர்' தொடர்பான விபரங்களைத் தம்மால் வழங்க முடியாதிருப்பதாக வவுனியாவிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2006 இலிருந்து காணாமற் போன 5000 இற்கும் மேற்பட்டோர் தொடர்பான விபரங்கள் தம்மிடம் உள்ளதாக சிறிலங்காவின் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமது காணாமற் போன உறவினர் தொடர்பான விபரங்களைத் திரட்டுவதற்காக ஒவ்வொரு நாளும் வுவனியா நிலையத்திற்கு ஆவலுடன் செல்லும் மக்கள் தமது நம்பிக்கைகளை இழந்து திரும்பி வருகின்றனர்.

தமிழ்ப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட 5000 இற்கும் மேற்பட்டோர் தற்போது புனர்வாழ்வு நிலையங்களில் பயிற்சிகள் பெற்று வருவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திடம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

செய்தி வழிமூலம்: BBC - Dinasena Ratugamage.

மொழியாக்கம்: நித்தியபாரதி.

http://www.puthinappalakai.com/view.php?20110623104128

Edited by தமிழ் அரசு

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், நாகரிக மனித வேடம் தாங்கியிருக்கும் அசல் காட்டுமிராண்டிகள், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், போர்க் குற்றவாளிகள், ஏமாற்றிகள், ………….., சிங்களவர் வந்தேறு குடிகள், போலி வரலாறுகளை தயாரித்து மகா பொய்வம்சத்தை உருவாக்கி வருபவர்கள், வெகுமதிகளையும் மதுவகைகளையும் பெண்களையும் வழங்கி சர்வதேச பிரதிநிகளை மடக்கி சர்வதேசத்தை ஏமாற்றும் ஈனர்கள், ......, ……

வட இந்தியர், அவன் வால்கள் = ஜனநாயக வேடம் தாங்கியிருக்கும் அசல் பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள், பொய்யர், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், போர்க் குற்றவாளிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ……, ஹிந்தி வெறியர்கள் - வந்தேறு குடிகள், ஊழல் பேர்வழிகள், வெகுமதிகளையும் மதுவகைகளையும் பெண்களையும் பெற்று மனிதப் படுகொலைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குபவர்கள், ....., ......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் முடிவுற்று இரண்டு ஆண்டுகள் ....................?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.