Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தி.மு.க.வுடன் சேர்ந்து சகவாசதோஷத்தில் காங்கிரஸும் பாதிக்கப்பட்டுவிட்டது! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

Featured Replies

தேர்தல் தோல்விக்குப் பின் கப்&சிப்பென்று அமைதி காத்த தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து & தங்களை கடுமையாக விமர்சிப்பவர்களை எதிர்த்து முதல் குரல் கொடுத் திருப்பவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். காங்கிரஸ் கட்சி மீது கூட்டணிக் கட்சியினரே வைக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு தமக்கேயுரிய பாணியில் சரவெடிபோல் பதிலளித்தார்.

காங்கிரஸ் கட்சி இலங்கைப் பிரச்னையில் காட்டிய அலட்சியம்தான் உங்கள் கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறதே?

‘‘தங்களைத் தாங்களே பொய்யாக சமாதானப்படுத்திக் கொள்ள இங்குள்ள திராவிடத் தலைகள் இப்படி எதையாவது சொல்லலாம். தோல்விக்கான உண்மையான இரு காரணங்கள் - பெருக்கெடுத்த லஞ்ச லாவண்யம், ஊழல்.அடுத்தது குடும்ப ஆட்சியால் நடந்த அலங்கோலங்கள்! அவ்வளவுதான். தி.மு.க.வுடன் சேர்ந்து சகவாசதோஷத்தில் காங்கிரஸும் பாதிக்கப்பட்டுவிட்டது!

இலங்கைப் பிரச்னையைப் பொறுத்தவரை, நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தே வந்திருக்கிறோம். கடந்த ஓர் ஆண்டாக மூத்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேரிடையாகவே இலங்கை சென்றுள்ளார். அதேபோல் வெளியுறவுத் துறை அதிகாரிகள், சிறப்புத் தூதர் என்று வரிசையாக பலர் இலங்கை சென்று பேச்சுவார்த்தை நடத் தியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கோடிக்கணக்கில் உதவிகள் செய்து, சாலைகள், பள்ளிகள், வீடுகள் என்று கட்டித் தரப்பட்டுள்ளன. இதற்கும் மேலாக, தமிழக காங்கிரஸ் கட்சியினர் மற்ற கட்சியினருடன் இணைந்து மத்தியஅரசை இன்னும் தீவிரமாக இலங்கைத் தமிழர் நலன் காக்க வற்புறுத்தி வருகிறார்கள்!’’

இதெல்லாம் சம்பிரதாய பேச்சுகள் என்றுதானே காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறார்கள்?

‘‘தோல்விக்கு காங்கிரஸ் காரணம் என்று இப்படி அவதூறு கிளப்புவதெல்லாம் அவர்களாக சொல்கிறார்களா அல்லது வயதான முதியவர்கள் தூண்டுதலால் சொல்கிறார்களா என்பது என் சந்தேகம். இப்படிச் சொல்பவர்கள் இங்குள்ள தமிழர்கள் நல்வாழ்வுக்கும் பாடுபடுபவர்கள் அல்ல.. இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வுக்கும் அக்கறை காட்டு பவர்கள் அல்ல... கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் எல்லாம் காங்கிரஸைப் பற்றி பேசக் கூடாது.’’

தோல்விக்குக் காரணம் ‘தி.மு.க.வின் ஊழல், குடும்ப அரசியல்’ என்று சொல்லும் நீங்கள், அதே கட்சியுடன் சேர்ந்துதானே ஊர் ஊராய் சென்று பிரசாரம் செய்தீர்கள்? உங்கள் பேச்சு உங்களுக்கே முரண்பாடாக இல்லையா?

‘‘முரண்பாடாக இருந்தாலும், தேசிய கட்சியான காங்கிரஸுக்கு இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாமல் இருக்க வருங்காலத்தில் நடவடிக்கை எடுப்பார்கள் என தமிழக காங்கிரஸ் நம்புகிறது! சொல்லப்போனால் இதுபோன்ற சூழ்நிலை தேசிய கட்சிகள் எல்லோருக்குமே ஏற்பட்டுள்ளது. (சற்றுநேரம் யோசிக்கிறார்) சில சமயங்களில் ஆத்ம விசாரணை செய்யும்போது கசப்பான நிஜங்களை சொல்லித்தானே ஆகவேண்டும்? அப்போதுதான் தெளிவு பிறக்கும்!’’

இலங்கை அதிபரை ‘போர்க் குற்றவாளி’ என்கிறது ஐ.நா. அறிக்கை. நீங்களோ தூத்துக்குடியில் கப்பல் போக்குவரத்தை துவக்கி வைக்கிறீர்கள்... நியாயமா?

‘‘இலங்கையோடு இப்போது திஜிகி (Free Trade Agreement) ஒப்பந்தத்தில் இருக்கிறோம் நாம். இந்த நிலையில் நமக்கும், இலங்கைக்கும் பெரிய அளவில் வியாபாரத் தொடர்பாலும், அதேபோல் பல வெளிநாடுகள் நமக்கு அனுப்பும் சரக்குகளை ஸ்ரீலங்கா வழியாக அனுப்புவதன் மூலமாக அதிக பயணிகள் பிரயாணம் செய்வதாலும் கப்பல் விடுவது அவசியமாகிறது. ‘உலக அளவில் வியாபாரம்’ என்று சொல்லப்படும் இந்தக் காலத்தில் இதெல்லாம் அவசியமாகிறது.’’

இந்தத் தேர்தலில் பரபரப்பாக பேசப்பட்ட ‘ராகுல் ஃபார்முலா’ என்பது அர்த்தமற்றதாகிவிட்டதா?

‘‘அப்படிச் சொல்ல மாட்டேன். இது ஒரு ஆரம்பக் கட்டம். இந்த நடவடிக்கைகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்படும்போது, அது காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன். தமிழக காங்கிரஸ் மீண்டும் எழும். பொறுத்திருங்கள்.’’

அது சரி, தமிழக காங்கிரஸுக்கு இப்போது யார் தலைவர்?

‘‘சீக்கிரமாக முடிவு செய்ய வேண்டும். மேலிடம் சற்று மெத்தன மாக உள்ளது! விரைவில் எல்லாம் சீரடையும் என்று நம்புகிறேன்.’’

பாபா ராம்தேவ், அன்னா ஹஸாரே போன்றவர்கள் ஊழல், கறுப்புப் பணத்திற்கு எதிராக குரல் கொடுத்தால் உடனே அதற்கு ஏன் மதச் சாயம் பூசி அமுக்கப் பார்க்கிறது காங்கிரஸ்?

‘‘தப்பு... தப்பு. ஊழல், கறுப்புப் பணத்திற்கு எதிராக யார் பேசினாலும் அதை வரவேற்கிறோம். அது எங்களுக்கும் ஏற்புடையதுதான். ஆனால் இப்படி குரல் கொடுப்பவர்கள் வைத்திருக்கும் பணம் கணக்கில் உள்ள பணமா? தங்களைக் காண வருபவர்களிடம் ஒரு லட்சம், பத்தாயிரம் என்று வாங்குகிறார்களே... வாங்கிய பணத்திற்கு கணக்கு உண்டா? தொகை செக்காக வருகிறதா? கள்ளப் பணமா? என்பதெல்லாம் தெளிவுபடுத்தவேண்டும். சுயலாபத்திற்காக சிலர் செயல்படும்போது நாமும் அவர்களை அடையாளம் காண வேண்டியுள்ளது.’’

ஜெயலலிதாவின் ஒரு மாதகால ஆட்சி எப்படியுள்ளது?

‘‘ஆரம்பம் நன்றாக இருக்கிறது. அவரது நடவடிக்கைகளில் பக்குவம் தொடர்கிறது. முதிர்ச்சி தெரிகிறது. இப்படியே தொடரவேண்டும். சமச்சீர் கல்வியைப் பொறுத்தவரை, தேவையற்ற, சுயவிளம்பரப் பக்கங்கள் இடம்பெற்றிருந்தால் அவற்றை நீக்கிவிட்டு அமல்படுத்தியிருக்கலாம்!’’.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குடும்பத்தின் படங்கள் பார்க்க....

http://www.thedipaar...ws.php?id=30001

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.