Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவை எதிர்த்து முதல்முறையாக பிரித்தானியா எச்சரிக்கை GTF அறிவிப்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர் பேரவையானது (GTF) தமிழருக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவுடன் (APPG-T) இணைந்து ஒரு நாடாளுமன்ற வரவேற்பு நிகழ்வை வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள போர்ட்கல்லிஸ் இல்லத்தின் அற்லி அறையில் (Attlee Suite of Portcullis House) 2011 சூலை 5ஆம் நாள்,

செவ்வாய்க்கிழமை நடத்தவுள்ளது. இந்நிகழ்வில் பங்குபற்றுவோரென உறுதிசெய்யப்பட்ட பேச்சாளர்களில் வெளியுறவு மற்றும் பொதுநலவாய நாட்டு அலுவல்களுக்கான அரசத் துணைச் செயலரான அலிஸ்ரெயர் பேர்ட், நா.உ., நிழல் வெளியுறவுச் செயலரான டக்லஸ் அலெக்சான்டர, நா.உ. தொழில் உறவுத்துறை நுகர்வோர் மற்றும் அஞ்சல் துறைகளுக்கான அமைச்சரான எட் டேவி, நா.உ. ஆகியோர் அடங்குவர்.

மேலும் பல அமைச்சர்கள், மூன்று முதன்மைக் கட்சிகளையும் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரபுகள் சபை உறுப்பினர்கள் என 30 க்கும் மேற்பட்டோர் இதில் பங்குபற்றுவார்கள். அத்தோடு இலண்டனிலுள்ள வெளிநாட்டுத் தூதராலயச் சான்றாளர், அனைத்துலக மனிதவுரிமை அமைப்புகள், ஊடகவியலாளர், கல்விமான்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்குபற்றி தமிழ்ச் சமூகச் சான்றாளர்களுடன் கூடி அளவளாவுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை அரசாங்கம் 2011 நவம்பர் மாத முடிவுக்குள் நம்பகரமான பக்கசார்பற்ற விசாரணை ஒன்றுக்கு ஏற்பாடு செய்யத் தவறுமேயானால் அனைத்துலகச் சமூகம் 'அனைத்து வழிவகைளையும்' நாடும் ஒரு நிலைக்கு வழிவகை செய்யுமெனப் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் இக்கூட்டத்தில் மீளவலியுறுத்துவார் என்று அறியப்படுகிறது. அமெரிக்கர்களும் இதனையே இலங்கையிடம் திரும்;பத் திரும்பக் கூறிவந்துள்ளனர். ஐக்கிய அமெரிக்காவுக்குத் தற்சமயம் வருகை தந்துள்ள இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் திரு. றணில் விக்கிரமசிங்க அவர்களிடமும் இதே செய்தியைச் சென்ற வாரம்கூட அமெரிக்கா கூறியுள்ளது.

அத்தோடு அமெரிக்க அரசச் செயலர் ஹிலாறி கிளின்ரன் மற்றும் அரச உதவிச் செயலர் றொபேட் ஓ'பிளேக் ஜூனியர் ஆகியோரைச் சந்திப்பதற்கு முயன்ற றணிலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கையை விட்டுப் புறப்படுமுன்பாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் வேளையில் தான் அமெரிக்க அரசச் செயலரைச் சந்திக்கப்போவதாக றணில் இலங்கை சனாதிபதியிடம் சொல்லி இருந்தார். 'இராஐபக்சவின் முகவர்' ஆகத் தற்போது செயற்பட்டுவரும் எதிர்க்கட்சித் தலைவர் ரணிலுக்கு இம்மறுப்பு ஒரு தெளிவான அவமதிப்பாக அமைந்துள்ளதென கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகச் சமூகத்திலுள்ள பலர் கருதுகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு இலங்கை வந்திருந்த மூவரடங்கிய இந்தியத் தூதுக் குழுவும் இந்நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தி இருந்தது. அவர்கள் எதிர்க்கட்சித் தலைவரைத் தவிர இலங்கையிலுள்ள சம்பந்தப்பட்ட மற்றைய எல்லா அரசியல் குழுக்களையும் தலைவர்களையும் சந்தித்தனர். தனது குடும்பத்தில் ஏற்பட்ட இறப்பின் காரணமாக அவர்கள் தம்மைத் தொல்லைப்படுத்த விரும்பவில்லை என்று றணில் அவர்கள் இதற்கு விளக்கம் கூறியுள்ளார். இந்தியக் குழுவினர் கொழும்புக்கு வருவதற்கு சில தினங்களுக்கு முன்பாகவே றணிலின் தாயார் இறந்துவிட்டார் என்பதே உண்மை.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கீ மூன் அவர்களை றணில் 2011 சூலை 6ஆம் நாள் புதன்கிழமை சந்திக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின்போது இந்த ஆண்டு இறுதிக்குள் நம்பகரமானதும் பக்கசார்பற்றதுமான விசாரணை நடத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை பான் கீ மூன் வலியுறுத்துவார் என நம்பப்படுகின்றது. அரசியல் உறுதிப்பாடும் நீதியும் ஒன்றோடொன்று கைகோர்த்துச் செல்லவேண்டியதன் அவசியத்தையும் பான் கீ மூன் எடுத்துரைப்பார். இவற்றில் ஒன்றில்லாமல் மற்றையது நிலைக்குமாற்றல் அற்றது.

உலகத் தமிழர் பேரவையும் தமிழருக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவும் இணைந்து இலண்டன் நாடாளுமன்றத்தில் ஒழுங்குபடுத்தியுள்ள மேற்படி வரவேற்பு நிகழ்வானது பெரும் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. சனால் 4 இல் வெளியான 'இலங்கையின் கொலைக் களங்கள்' என்ற ஆவணக் குறுந் திரைப்படமும் அதனைத் தொடர்ந்து தமிழருக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லீ ஸ்கொற், நா.உ. அவர்கள் முதலமைச்சரின் கேள்வி நேரத்தின் போது எழுப்பிய கேள்விகள் மற்றும் துணைத் தலைவர் சியோப்ஹெயின் மக்டொனா, நா.உ. தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் முயற்சியை நிறுத்துவதற்குக் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் ஓர் அவசர விவாதத்திற்கு அழைப்பு விடுத்தமை போன்றவை இந்த ஆர்வ ஈர்ப்புக்குக் காரணமாக அமைந்துள்ளன. பக்கசார்பற்ற நம்பகமான ஒரு விசாரணை கட்டாய தேவையென ஐக்கிய நாடுகளின் முதலமைச்சர் அடுத்தடுத்துக் கூறியுள்ளார். மேலும், அவ்வாறான எந்தவொரு செயல்முறையிலும் ஐக்கிய நாடுகள் சபையின் ஈடுபாடு இருத்தல் வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

வலிமை மிக்க சனல் 4இன் ஆவணக் குறுந் திரைப்படமானது அவுஸ்திரேலியாவின் ஏபீசீ 1இல் சூலை 4, திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு சமகாலச் செய்தி நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும்.இலங்கையின் சண்டே ரைம்ஸ(http://sundaytimes.lk/110703/Columns/political.html) செய்தித்தாளில் அறிவிக்கப்பட்டுள்ளவாறு டெல்கியிலுள்ள முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றும் சனல் 4இன் 'இலங்கையின் கொலைக் களங்கள்' ஆவண வீடியோப் படத்தை ஒளிபரப்புச்செய்யும் உரிமையைப் பெற்றுள்ளது. இந்த உரிமையைப் பெற்றுக் கொடுப்பதில் சனால் 4க்கும் இந்திய ஒளிபரப்பாளருக்குமிடையே பேரம் பேசுவதில் உலகத் தமிழர் பேரவை முக்கிய பங்காற்றியுள்ளதெனவும் அச்செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டுத் தமிழர் மட்டுமல்லாது அனைத்து இந்திய மக்களும் இந்திய அரசியல் மேலிடமும் இலங்கையில் அப்பாவித் தமிழருக்கெதிராக நடந்தேறிய போர்க் குற்றங்கள் மற்றும் மனித இனத்திற்கெதிரான குற்றங்கள் பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட உருப்படியான சான்றுகளை அறியச் செய்வதை உலகத் தமிழர் பேரவையானது அதன் உத்தியாகக் கொண்டுள்ளதென அவ்வமைப்புடன் தொடர்புடைய நம்பகமான வட்டாரமொன்று எமக்கு அறியத்தந்துளது. இந்தியா ருடே குழுமத்தைச் சேர்ந்த ஹெட் லைன்ஸ் ருடே, ஆஜ் ரக் (Headlines Today, Aaj Tak TV � India Today Group) ஆகியன 'இலங்கையின் கொலைக் களங்கள்' ஆவண வீடியோப் படத்தை சூலை 7, வியாழக்கிழமை மாலை 10 மணிக்கும் சூலை 8, வெள்ளிக்கிழமை மாலை 11 மணிக்கும் சூலை 9, சனிக்கிழமை மாலை 10 மணிக்கும் ஒளிபரப்புச் செய்யவுள்ளன.

இந்த அமைப்பின் அனைத்து அலைவரிசைகளிலும் ஒளிபரப்பப்படவுள்ள இந்த ஆவண வீடியோப் படத்தை தமிழ் நாட்டுச் செய்தித் தாள்கள், சென்னையிலுள்ள விளம்பரப் பதாகைகள், இந்தியாவில் பரந்துபட்ட வானொலிகள் தொலைக்காட்சிகள் ஆகியனவற்றில் விளம்பரப்படுத்துவதற்கு இந்த முன்னணி அலைபரப்பு அமைப்பு (India Today Group) கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளது. அண்மையில் பிரதமர் மன் மோகன் சிங் அவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழரின் பிரச்சினைகள் பற்றியும் போர்க் குற்றங்கள் பற்றிய குற்றச் சாட்டுகளுக்கெதிராக அவசரமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் முனைப்பிட்டுக் காட்டிய மனு ஒன்றைக் கையளித்து இலங்கையில் நடைபெற்றது தமிழருக்கெதிரான இனப்படுகொலையே எனக் கூறிய தமிழ் நாட்டின் புதிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களிடம் இந்தப் படம் பற்றிய கருத்துக்களை நேர்காணல் ஒன்றின் மூலம் பெற்றுப் பதிவு செய்வதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளுக்கெதிரான போர் முடிவடைந்துவிட்டது என இலங்கை அரசு அறிவித்து இரண்டாண்டுகள் சென்ற பி;ன்னரும் இந்தியா இலங்கைத் தீவிலுள்ள சிறுபான்மைத் தமிழரின் குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றது. இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்புவதன் மூலம் அண்மைத் தீவில் வாழும் தமிழரின் அவலங்களைத் தென்னகத்தில் வாழும் பெருந்தொகைத் தமிழரினதும் பிற இந்திய மாநிலங்களில் வாழும் மற்றைய சமூகங்களினதும் உணர்வுகளை மீண்டும் தூண்டி எழுப்பலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.

http://youtu.be/0NM58qzbVxs

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=8323:-----gtf--&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

உலகத்தமிழர் பேரவையில் இந்த முயற்சிகள் நாளை வெற்றியளிக்கவேண்டும்.

அதேவேளை அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் நிச்சயம் இந்தியாவுடன் இணைந்தே செயல்படும். எனவே இவர்கள் இந்தியாவை தமது பக்கம் திருப்பி இல்லை இந்தியா மறைமுக ஆதரவை வழங்கியே எந்த ஆக்கபூர்வமான நிகழ்வும் நடக்கவேண்டும். அதுவே எமக்கு நல்லது.

இந்தியாவைச் சம்மதிக்க வைப்பின் தமிழருக்கான தீர்வின் நகர்வுகள் எவ்வகையிலும் சாத்தியமே.

  • கருத்துக்கள உறவுகள்

Global Tamil Forum mobilizes international opinion against Sri Lanka over alleged war crimes......

Global Tamil Forum (GTF) is taking steps to mobilise International opinion against Sri Lanka over alleged war crimes & crimes against humanity.

The GTF together with Britain`s All Party Parliamentary Group for Tamils (APPGT) will co -host a parliamentary reception on Tuesday July5th.

The political meeting cum reception co-hosted by the GTF & APPGT will be held at the Attlee Suite of Portcullis House in Westminster.

Chief speaker at the event will be Alastair Burt MP & British Parliamentary Under-Secretary of State for Foreign and Commonwealth Affairs.

Burt may re-iterate that All Options are at disposal of international community if SL govt fails to set up credible investigation by Dec2011.

Among other confirmed speakers at event are Douglas Alexander MP & Shadow Foreign Secretary & Ed Davey MP & Minister for Employment Relations.

Invitations have also been sent out to a large number of British ministers, all Members of Parliament & to 30 members of the House of Lords.

Several diplomats,media persons,human rights organization representatives & academics interested in Sri Lankan affairs have also been invited.

GTF is exploiting the wide concern in Britain on Sri Lankan situation after the screening of film Killing Fields on Channel -4 British TV.

Questions were raised in British Parliament by APPG-T chair Lee Scott MP & Vice-Chair Siobhain McDonagh MP on Sri Lanka at different times.

British Prime Minister David Cameron stated in the House that Britain wanted the UN & Sri Lankan Govt conduct investigations on the issues.

The GTF has also reportedly brokered a deal with New Delhi TV channels to telecast the channel 4 documentary for three days in India.

Headlines Today & Aaj Tak TV (India Today Group) will telecast Sri Lanka`s Killing Fields on 7th July (10pm) 8th July (11pm) & 9th July (10 pm).

Tamil Nadu state is being inundated with advertisements in newppapers, TV, radio & billboards telling people to watch the documentary on TV.

Efforts are also on to interview & televise Tamil Nadu chief minister Ms. Jayalalithaa Jayaram about her reactions to The Killing Fields .

Meanwhile The Killing Fields will be aired on Australia`s ABC1 today 4th July at 8:30pm during the current affairs program Four Corners .

Source(s)

http://www.lankanewspapers.com/news/2011/7/68656_space.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.