Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சன் டிவி சக்சேனா கைது. பட்டாசு வெடித்து கொண்டாடிய தயாரிப்பாளர்கள்.

Featured Replies

தி.மு.க. ஆட்சியில் தனி ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்தது மு.க. குடும்பத்தினர் மட்டுமல்ல, அவரது குடும்பத்தில் வேலை பார்ப்பவர்களும், குடும்ப உறுப்பினர்களின் நண்பர்களும்தான். அவர்கள் அனைவரது முகத்திலும் ஆட்சி மாறியதுமே பயம் தென்பட ஆரம்பித்து விட்டது. சன் டி.வி. தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட, அத்தனை அதிகார மையங்களும் அதிர்ந்து போயுள்ளன.

‘சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு படங்களைக் கேட்டு மிரட்டுகிறார், வாங்கிய படங்களுக்கு பணத்தை செட்டில் செய்ய மறுக்கிறார்’ என சன் டி.வி. தலைமை நிர்வாகி ஹன் ஸ்ராஜ் சக்சேனா மீது கடந்த ஆட்சியில் ஏராளமான புகார்கள் சொல்லப்பட்டன. ஆனால் மாறன் சகோதரர்களின் ஆதரவை மீறி போலீஸாரால் அவரை நெருங்க முடியவில்லை. இவர்களது அநியாயத்திற்கு ஒரு முடிவு கிடைக்காதா என திரைப்படத் துறையினர் ஏங்க ஆரம்பித்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு, கிண்டியில் உள்ள செக்கர்ஸ் ஹோட்டலை அடித்து நொறுக்கிய சக்சேனாவும் அவரது அடியாட்களும், அடையாறில் ஒரு பெண்ணை மிரட்டி அவரது காரை உடைத்து அராஜகம் செய்தனர். அப்போதும் காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. திரையுலகிற்கு மட்டும் தெரிந்த சக்சேனாவின் அட்டகாசம் இந்த விவகாரங்கள் மூலம் பொதுமக்களுக்கும் தெரிய ஆரம்பித்தது.

அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், சக்சேனா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரால் பாதிக்கப்பட்டவர்கள் நம்பத் தொடங்கினார்கள். சக்சேனா கைது செய்யப்படுவார் என கடந்த ஒருவாரமாகவே, செய்திகள் வந்தன. இந்நிலையில், கடந்த 3-ம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் வைத்து சக்சேனா கைது செய்யப்பட்டார்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சக்சேனாவை காணோம் என சன் டி.வி. நிருபர்கள் தேட ஆரம்பித்ததும்தான் ஊடகங்களுக்குத் தகவல் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சக்சேனா நேரடியாக அசோக் நகர் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தன்னைக் கைது செய்த போலீஸாரிடம், ‘‘நான் யார் தெரியுமா? என் பவர் தெரியாமல் கைது செய்து விட்டீர்கள். என்மீது பொய் வழக்குப் போட்டால் உங்களை சும்மா விடமாட்டேன். டெல்லிவரை சென்று உங்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன்’’ என அவர் மிரட்ட, போலீஸார் அலட்டிக் கொள்ளவே இல்லை. வேறு வழியி ல்லாமல் கடைசியில், ‘‘என்னை எதற்காக கைது செய்தீர்கள் என்றுகூட சொல்ல மாட்டீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார் சக்சேனா.

‘‘பொய் வழக்கு போடச் சொல்வது உங்கள் பழக்கம். உங்கள் மீது புகார் வந்திருக்கிறது. உங்களைக் கைது செய்து இருக்கிறோம். எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பேசுங்கள்’’ என்று போலீஸார் சொல்லிவிட்டனர். சக்சேனாவின் வழக்கறிஞர் காவல்நிலையம் வந்து தகராறு செய்ய, இரவு ஒன்பது மணிக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் திருமகள் முன்பு போலீஸார் அவரை ஆஜர்படுத்தினர்.

சச்சேனாவை படம் எடுக்க விடாமல் அவரது ஆதரவாளர்கள் தடுத்தனர். சக்சேனாவும் மாஜிஸ்திரேட்டிடம், ‘‘என்னை அவமானப்படுத்த போலீஸார் திட்டமிட்டு மீடியாக்களை வரவழைத்துள்ளனர்’’ என்று சொல்ல, மீடியாக்களை அங்கிருந்து செல்லுமாறு உத்தரவிட்டார் மாஜிஸ்திரேட். வெளியே வந்த பத்திரிகையாளர்கள், ‘‘சக்சேனாவை படம் எடுக்காமல் செல்ல மாட்டோம். அவர்களும் மீடியாவை வைத்துள்ளனர். இதுபோல அவர்கள் எத்தனை பேரை படம் எடுத்துப் போட்டார்கள். நாங்கள் போக மாட்டோம்’’ என்று கோஷம் போட்டபடியே ஆர்ப்பாட்டம் செய்ய, போலீஸார் தவித்துப் போனார்கள்.

மாஜிஸ்திரேட்டிடம் சக்சேனா, ‘‘என்னை எதற்காக கைது செய்தார்கள் என்று போலீஸார் கூறவில்லை’’ என்று சொல்ல, புகாரைப் படித்துக் காட்டினார் மாஜிஸ்திரேட். அதில், ‘‘கந்தன் ஃபிலிம்ஸ் விநியோகஸ்தரிடம், விஷால் நடித்த ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்திற்கான விநியோக உரிமையைத் தருமாறு மிரட்டியதாகவும், மேலும், பேசிய விலைப்படி ரூ.1.25 கோடியைத் தராமல் குறைந்த தொகையை மட்டும் தந்துவிட்டு, 82.53 லட்சம் பணத்தைக் கொடுக்காமல் மிரட்டியும் வந்துள்ளதாக புகார் கொடுக்கப்பட் டுள்ளது’’ எனத் தெரிவித்தார் மாஜிஸ்திரேட்.

மேலும் 420(மோசடி), 406(கையாடல்), 385(மிரட்டல்), 506(2)(கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதையும் சொன்ன மாஜிஸ்திரேட், அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைப்பதாகச் சொல்லி சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தார்.

விஜய் நடித்து வெளியான ‘காவலன்’ படத்தின் தயாரிப்பாளர் ரொமேஷ்பாபு சக்சேனா ஒன்றரைக் கோடி ரூபாய் தராமல் ஏமாற்றுவதாகவும், கேட்டால் வீட்டுக்கு வந்து மிர ட்டுவதாகவும் புகார் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. புகார் கொடுக்கப்பட்டதும் ரொமேஷ்பாபுவை, போனில் மிரட்டியுள்ளார் சக்சேனா. ‘‘உனக்கு ரூ.2 கோடி தரமுடியாது. அதற்காக ரூ. 20 கோடிகூட செலவு செய்வேன்’’ என்று சொன்னாராம். அடுத்து, செக்கர்ஸ் ஓட்டலை அடித்து நொறுக்கிய வழக்கும், அடையாறில் தன்னைத் தாக்கியதாக ஒரு பெண் கொடுத்த புகாரும் கிண்டி காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

சன் பிக்சர்ஸ் இதுவரை ‘எந்திரன்’ தவிர வேறெந்த படத்தையும் நேரடியாகத் தயாரிக்கவில்லை. சன் பிக்சர்ஸுக்காக சக்சேனா பல தயாரிப்பாளர்களை மிரட்டி படங்களை வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. சக்சேனா கைது செய்யப்பட்டதை அடுத்து இவர் மீது புகார் கொடுக்க 18 தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். சக்சேனா கைது செய்யப்பட் டதை அடுத்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் திரண்ட நிர்வாகிகளும், விநியோகஸ்தர்களும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி சக்சேனா கலாநிதி மாறனோடு லயோலா கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர். கலாநிதி ‘பூமாலை’ நெட்வொர்க் ஆரம்பித்த காலத்தில் இருந்தே உடன் இருப்பவர். சக்சேனா கைது தொடர்பாக அவரது வழக்கறிஞர் சரவணன், ‘‘எந்தவொரு ஆவணங்களும், ஆதாரங்களும் இல்லாமல் சன் குழு மத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் இந்தக் கைது நடந்துள்ளது. போலீஸார் வழக்குகளை ஜோடித்துள்ளனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்’’ என்றார்.

வழக்கு தொடர்பாக போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “சக்சேனா மீது பல புகார்கள் வந்துள்ளன. தயாரிப்பாளரை ஏமாற்றிய பணத்தை இவரே எடுத்துக் கொண்டாரா? அல்லது சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு இதில் தொடர்பிருக்கிறதா? என்ற அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. இதற்காக இவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்’’ என்றார்.

சக்சேனா மீது புகார் செய்த செல்வராஜ், ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளாராம். அவரை விலைபேசியோ, மிரட்டியோ பணிய வைக்க முயற்சி நடக்கலாம் என் பதால், அவர் இருக்கும் இடம் ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறதாம்.

விமான நிலையத்தில் சக்சேனா கைது செய்யப்பட்டு, போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டார். இரவு 9 மணிக்கு கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்டார். சிறைக்குச் செ ல்லும்முன், லுங்கியும், புதிய சட்டையும் கொடுத்தனுப்பப்பட்டது. முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக்சேனா, அதிர்ச்சி விலகாமல் காணப்பட்டார்.

தி.மு.க.வின் மிக மோசமான தோல்விக்கு, அவரது குடும்பத்தினர் திரைத்துறையிலும், ஊடகங்களிலும் செலுத்திய ஆதிக்கம் மிக முக்கியமான காரணம். தனது குடும்பத் தினரின் அராஜகங்களை அனுமதித்து விட்டு, இன்று ஆட்சியையும் இழந்து குடும்பத்தினரையும் காப்பாற்ற முடியாமல் கட்சியை விட மோசமான நிலையில் இருக்கிறது அதன் தலைமை.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

இச்செய்தி குறித்த படம் பார்க்க

http://www.thedipaar.com/news/news.php?id=30470

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.