Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் விவகாரமாக இதுவரை இருந்த ஈழத்தமிழர் பிரச்சனை இந்தியா முழுவதும் பரவியது.

Featured Replies

தமிழர்கள் மத்தியில் மட்டு​மே ஒலித்துக்​கொண்டு இருந்த ஈழ மக்கள் ஆதர​வுக் குரல், இப்போது மாநில எல்லை கடந்து நாடு முழுக்க ஒலிக்​கத் தொடங்கி இருக்கிறது!

இந்தியாவிலேயே முதல் முறையாக கடந்த 8-ம் தேதி, போரால் பாதிக்கப்பட்ட 'இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தரும் தினம்’ என அறிவித்து, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி நடத்தியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. டெல்​லியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், துணைப் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் டி.ராஜா உட்படப் பலர் பங்கேற்றனர்.

ஆந்திரத்தில் ஹைதராபாத், விசாகப்பட்டினம், திருப்பதி, நெல்லூர் நகரங்களிலும், கேரளத்தில் 14 மாவட்டத் தலைநகரங்களிலும் ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் நடந்து உள்ளன. இது வரை கேரளத்திலும் ஆந்திராவிலும் இதுபோன்ற ஆதரவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது இல்லை. முதல் முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே இதனை சாதித்து இருக்கிறது.

இது குறித்து எழுத்தாளரும், கட்சியின் மாநிலத் துணைச் செயலாள​ருமான சி.மகேந்திரனிடம் பேசினோம்.

''இலங்கையில் ஈழத் தமிழ் மக்களுக்கு மிகப் பெரும் உயிர் அழிவு, சொத்துகள் அழிவு ஏற்பட்டுள்ளன. ஐ.நா. வல்லுநர் குழுவும் இதை உறுதிபடுத்தியது. ஆனாலும், இந்தப் பிரச்னை இந்திய அளவில் ஜனநாயக சக்திகளின் ஆதரவைப் பெறும்படியாகக் கொண்டுசெல்லப்படவில்லை என்பதே வருத்தமான யதார்த்தம். இதனால்தான், போர்க் குற்றவாளிகளுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது ஆழமான தீர்மானம் மட்டும் அல்ல, தமிழக மக்களின் உள்ளார்ந்த விருப்பமும்கூட.

ஆகவே, முதல் கட்டமாக, 'ஜூலை 8-ல் இலங்கைத் தமிழருக்கு ஆதரவு இயக்கம்’ வெற்றிகரமாக நடத்தப்பட்டது. எங்கள் கட்சியைப் பொறுத்த வரையில், தமிழர் பிரச்னைக்கு திடீரென குரல் கொடுக்கவில்லை. ஏற்கெனவே தேசிய அளவில், காஷ்மீர், அஸ்ஸாம், அகாலிதளம், தெலுங்கானா விவகாரங்களில், நாடு முழுக்கப் போராட்டங்களை நடத்தினோம்.

2007-ல் ஹைதராபாத்தில் நடந்த கட்சியின் மாநாட்டிலும், இலங்கைத் தமிழ் மக்கள் மீதான போரை நிறுத்துமாறு தீர்மானம் நிறைவேற்றினோம். போர் நிறுத்தக் கோரிக்கைக்காக 2008-ல் தமிழகம் முழுவதும் அறப் போராட்டங்கள் நடத்தினோம். அதையடுத்துதான், மற்ற அகில இந்தியக் கட்சிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கின.

சிலர் துர்பிரசாரம் செய்வதுபோல, தனி ஈழத்தையும் ஈழத் தமிழ் மக்களுக்கான ஆதரவையும் சேர்த்துக் குழப்பக் கூடாது. தனி நாடு, பிரிவினைவாதம் அடிப்படையில் நாங்கள் இதைப் பார்க்கவில்லை. இலங்கையில் தமிழ் மக்கள், அவர்களின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு உரிமையைப் பாதுகாக்கும் சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. ஐ.நா-வின் வழிகாட்டுதல்களும் இதைத்தான் கூறுகின்றன. ஆனால், 60 ஆண்டுகளாக இதை மறுக்கக்கூடிய தந்திரங்களையே சிங்கள அரசாங்கம் முன்வைத்து வருகிறது. இதை எதிர்த்துத்தான் இந்தப் போராட்டம்!'' என்றார் மகேந்திரன்.

இந்திய அளவில் தமிழர் பிரச்னையை எடுத்துச் செல்வது நல்ல தொடக்கம் என்றாலும், ரஷ்யா, சீனா போன்ற கம்யூனிஸ நாடுகள், இலங்கை அரசுக்கு துணையாக இருப்பதில் தமிழின உணர்வாளர்களுக்கு ஏகப்பட்ட வருத்தம். இந்த புகாரையும் சரிசெய்யும் முயற்சியாக, ஈழத் தமிழர் பிரச்னை குறித்து உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்ய கடிதம் அனுப்பி உள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. 60-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளில் 10 கட்சிகள் சாதகமான பதில் அனுப்பி இருக்கின்றன. இதற்கிடையில், ரஷ்யா, சீனா போன்ற சிங்கள ஆதரவு 'கம்யூனிஸ’ அரசுகளையும் தூதரகம் மூலம் தொடர்புகொள்ளும் பணியில் இறங்கி இருக்கிறார்கள்.

'முதலில் போர்க் குற்ற விசாரணை, அடுத்து அரசியல் தீர்வு’ என்கிற கோணத்தில் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு இருக்கிறது, கட்சி. இதற்காக, கட்சியின் கட்டளைப்படி, ஈழப் பிரச்னைபற்றி கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆங்கிலத்தில் ஒரு சிறு புத்தகம் எழுதி வருகிறார். இதை இந்தியிலும் மொழிபெயர்த்து நாடு முழுவதும் லட்சக்கணக்கில் விநியோகிக்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

''ராஜபக்ஷே கும்பல், 'தமிழர்களே, நடந்ததை மறந்துவிட்டு, சமாதானமாக வாழ்வோம்’ எனச் சொல்லி, போர்க் குற்றத்தில் இருந்து தப்பித்துவிடக் கூடாது. இதை ஒப்புக்கொண்டால், நாமும் அவர்களுக்கு ஆமாம் சாமி போட்டதுபோல ஆகிவிடும். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வும் கிடைக்காது. இன அழிப்புப் போர்க் குற்றத் தண்டனையில் இருந்தும் அவர்கள் தப்பித்துவிடுவார்கள். எனவே, நாங்கள் இதை சாதாரணமாக விட்டுவிடப் போவது இல்லை...'' என்கிறார் மகேந்திரன் அழுத்தமாக.

புதிய முயற்சிகளாவது... விடியல் தேடட்டும்!

நன்றி ஜூனியர் விகடன்

இச்செய்தி குறித்த படங்கள் பார்க்க.....

http://www.thedipaar.com/news/news.php?id=30826

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.