Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மொழியை மெலினப்படுத்தலாமா?

Featured Replies

தமிழ் மொழியை மெலினப்படுத்தலாமா? – ம. இரமேசு.

நடைமுறை என்று ஒரு வார்த்தையை வைத்துகொண்டு தமிழ் மொழியை மெலினப்படுத்தலாமா?

ஆமாம் இங்கே ஒரு உண்மையினை சுத்தத்தினை சொல்ல வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றது.

நீண்டகாலமாக எனக்குள் ஒரு ஆத்திரம் பெரிய புகழ்வாய்ந்த எழுத்தாளர்கள் என்று தமிழ்க்குலத்தினால் போற்றப்பட்டவர்களின் எழுத்துக்கள் மேல் இருந்து வந்தது இப்பொழுதும் இருக்கின்றது அப்படி என்ன கொடுமை செய்தார்கள் என்று நீங்கள் கேட்க வருவது புரிகின்றது. ஆசையாக ஒரு புத்தகத்தை படிப்போம் என்று விழித்தால் அங்கே தமிழை சீரழிக்க ஆங்கில வார்த்தைப்பிரயோகம் கலக்கப்பட்டிருக்கும் கேட்டால் நடைமுறையில் மக்கள் பேசுவதை வைத்து எழுதுகின்றோம் என்று சமாதானம் சொல்லி தப்புவார்கள்.

ஆனால் அப்படி எழுதியவருக்கு பட்டங்களும் பரிசுகளும் கொடுத்து கவுரவிக்கப்படும். என்ன கொடுமைஎன்றால் தமிழர்கள் அந்த புத்தகத்தை தமிழ்ப்புத்தகம் என்று வாங்கி படிப்பார்கள் ஆனால் உணரமாட்டார்கள் தான் மொழியின் பெயரால் ஏமாற்றப்பட்டுகொண்டிருக்கின்றேன் என்று, அது அவர்களின் அறியாமை என்பதினைவிட அது பற்றியெல்லாம் பெரிதாக எண்ணிப் பார்ப்பதில்லை என்றே தோன்றுகின்றது. நேர்த்தியின்பால் கரிசனம் வேண்டும் அதிலும் தாய்மொழியின் நேர்த்தியினை உயிராய் மதிக்கவேண்டும். இதை அறியாதார் எத்தனை இலக்கியம் இலக்கணம் படித்தும் பயனில்லையாம் கேட்பதெல்லாம் எங்காவது ஆங்கில புத்தகம் அல்லது செர்மானிய,பிரஞ்சு,இத்தாலிய புத்தகம் மறந்து தன்னும் வேற்று மொழிக்கலப்பில் நடைமுறை என்று பொருந்தாத வாதத்தினை முன்வைத்து எழுதப்பட்டிருக்கின்றதா என்பதே. ஏன் மேற்சொன்ன நாட்டுமொழிகளை எடுத்துக்காட்டினேன் என்றால் அவர்களை உலகத்தோர் அறிவியலிலும் நூலியியலிலும் வல்லவர்களாக போற்றும் கணக்கீடு இருப்பதினாலேயே. ஒரு மொழியில் எழுதுபவன் அந்த மொழியினை மதித்து மரியாதைகொடுத்து மொழியின் மாண்பினை போற்றி எழுதவேண்டும்.

வெறும் வியாபாரத்துக்குதானே என்று மொழியினை சீரழிப்பது மொழிப்பற்று உள்ள என்போன்றோரால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கர்வமாக சொல்ல அஞ்சவில்லை யாருக்கும். வியாபாரத்துக்கு என்று வெளிவந்த புத்தகங்களின் வழிநடத்தலும் மொழியின் சுத்தம் நீங்க ஆங்கில கலப்பு உண்டாக மக்கள் நாக்கில் நோயாய் தவழ வழிகோலியது என்றால் மிகையாகாது.

மொழியின் நேர்த்தியில் அழகிய அமைதி உண்டாகும் அமைதியான இடத்தில் ஆனந்தம் தவழும் இன்பம் பெருகும். ஆங்கில கலப்பில் எழுதப்பட்டு வந்த நாவல்கள் எனப்படும் வியாபார புத்தகங்களை நான் எனது பதினாறாவது வயதிலிருந்தே வெறுத்து ஒதுக்கினேன் அந்த வயதில் இருந்தே வாசிப்பு பழக்கத்தினை எனக்குள் இட்டு நடக்க தொடங்கினேன் அராலியை அண்மித்த ஊர்களின் பெரிய நூலகங்கள் எனது நண்பர்கள்போலவே எனக்கு தோன்றியது அன்று. மிதிவண்டியில் வேகமாக சுற்றி அறிவை வளர்க்க படிக்கின்றேன் என்று தெரியாமலே தமிழை வாசிக்கும் ஆசையில் தமிழாக இருந்த கண்ணில்பட்ட புத்தகங்களை வாசித்து பருகியது இன்று அறிவுடைய நல்லமனிதர்கள் மத்தியில் பணிவுடன் பண்புடன் நடந்துகொள்ள வைத்திருக்க செய்துள்ளது என்று நினைத்து பார்க்க வைத்துள்ளது. வாரத்தின் இரண்டு விடுமுறைநாளின் முற்பகல் வேளையிலிருந்து மதியத்துக்குமேல் இரண்டுமணிவரை நூலகம் என்னை எம்ஜியார் படம்போல் கட்டிப்போட்டிருக்கும் என்று சொல்வதில் மெல்லிய மகிழ்வு.

சங்கானை நூல்நிலையமே என்னை தீவிரவாசிப்பாளனாக மாற்றியது என்று நினைத்து பார்க்கின்றேன். அந்த நூலகத்துக்கு பெருநன்றி உடையேன். நாம் உண்ணும் உணவுக்குள் ஒவ்வாத வேற்று உணவை எப்படி வைக்கமாட்டோமோ அதைப்போலவே அன்றில் அதற்கு மேலாகவே மொழியின் நேர்த்தி ஒழுங்கு தனித்தன்மை மிளிர்தல்வேண்டும் .

பணம் ஒன்றை தவிர மற்ற எதையுமே முழுதாக கரிசனத்துடன் பெரும்பாலானோர் மதிப்பதில்லை என்று அழுது வேதனையடைந்த மொழிப்பற்றுமிகுந்த ஆசிரியர் எனக்கு அறிவுரை சொன்னதை நினைத்துப்பார்க்கின்றேன்.வயிறு நிறைந்தால் போதும் என்று வாழும்

மனிதர்களுக்குள் மனம் நிறையவேண்டும் என்று வாழும் வாழ்க்கையை மதிப்பவர்கள் சொற்பமே. ( கொடுப்பதுவும் துய்ப்பதுவும் இல்லார்க்கு அடுக்கியகோடி உண்டாயினும் இல்) என்ற 1005 வது வள்ளுவன் குறளை எண்ணிப்பார்க்கின்றேன். மாரி எப்படி உலகை காத்தருள்கின்றதோ அங்ஙனம் நம் தமிழர்கள் கலப்பீடு இன்றி தமிழ்மொழியை காப்பாற்ற வருவார்களா என்ற ஏக்கத்துடன் – ம.இரமேசு.

இத்தருணத்தில் நிலத்திலும் ஏதிலார் புலத்திலும் அடியேன் தமிழ் படிக்க தட்டிக்கொடுத்த. ஐயங்கள் தீர்த்த ஆசிரியப்பெருமக்களை நினைக்கின்றேன்.

நிலத்தில் ஆசிரியப்பெருமக்கள்- திரு திருமதி சின்னம்மா அராலி. திரு சதாசிவம் கலைநகர் சித்தங்கேணி. திரு நெல்லினாதர் அராலி. திரு நடராசா குலனையூர். திரு டானியல் காரைநகர். திருமதி சுவாமிநாதன் அராலி. ஏதிலார் புலத்தில் – கேர்ணிங் திரு கி.செ.துரை வல்வெட்டித்துறை. சுவன்போ திரு ஆதவன் அளவெட்டி. திருமதி ஆதவன் கண்டி.

http://www.alaikal.com/news/?p=76211

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

நீண்டகாலமாக எனக்குள் ஒரு ஆத்திரம் பெரிய புகழ்வாய்ந்த எழுத்தாளர்கள் என்று தமிழ்க்குலத்தினால் போற்றப்பட்டவர்களின் எழுத்துக்கள் மேல் இருந்து வந்தது இப்பொழுதும் இருக்கின்றது அப்படி என்ன கொடுமை செய்தார்கள் என்று நீங்கள் கேட்க வருவது புரிகின்றது. ஆசையாக ஒரு புத்தகத்தை படிப்போம் என்று விழித்தால் அங்கே தமிழை சீரழிக்க ஆங்கில வார்த்தைப்பிரயோகம் கலக்கப்பட்டிருக்கும் கேட்டால் நடைமுறையில் மக்கள் பேசுவதை வைத்து எழுதுகின்றோம் என்று சமாதானம் சொல்லி தப்புவார்கள்.

இந்த எழுத்தாளர்கள் உபயோகிப்பது, ஒரு முற்றிலும் புதிய மொழி அகூதா!

இதற்குப் பெயர் 'தமிங்கிலம்'

இதில் தமிழ் சொற்கள் சில வரும்!

'மெல்லத் தமிழ் இனிச் சாகும்" - மகாகவி பாரதியார்.

நன்றி... எம் தமிழ் மொழி என்றால் இனிமை தான்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.