Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரக்கனை அழித்தால் தீபாவளி கொண்டாடத்தானே செய்வார்கள் -எஸ். ஏ. சந்திர சேகர் தடாலடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சன் பிக்சர்ஸ் தலைமைச் செயல் அதிகாரி சக்சேனா கைது செய்யப்பட்டதை திரையுலகமே கொண்டாடி வருகிறது. தி.மு.க. ஆதரவாளராகவே பல ஆண்டுகள் இருந்த நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூட, விஜய்க்கு அப்போது கொடுக்கப்பட்ட நெருக்கடிகளைப் பார்த்து கொதித்து எழுந்தார்.

கடந்த சில நாட்களாக சன்பிக்சர்ஸ் மீது வழக்குகள் பாயும் நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து கேள்விகளைத் தொடுத்தோம்...

சன் பிக்சர்ஸால் விஜய்க்கு எந்த வகையில் பாதிப்பு இருந்தது?

‘‘ஈரோட்டில் விஜய்யின் மக்கள் இயக்க நற்பணி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விஜய்யின் காலடி அந்த ஊரில் படக்கூடாது என்று அப்போதைய தி.மு.க. மந் திரியின் மகன் போலீஸுக்கு உத்தரவு போடுகிறார்... போலீஸாரும் நெருக்கடி கொடுத்தனர். இது குறித்து, முதல்வராக இருந்த கருணாநிதியிடம் போய் சொன்னேன். சன் தொலைக்காட்சி நெருக்கடி கொடுப்பது பற்றியும் சொன்னேன். அதற்கு அவர், ‘என்னால அவங்கள ஒண்ணும் செய்ய முடியல. நான் சொன்னாலும் கேட்க மாட்டாங்க’ என்றார். எதுவும் செய்ய முடியாத இயலாமை உள்ளவரை விட ‘சக்தி’யை நம்புவதுதான் நல்லது என்று அன்றைக்கு முடிவு செய்தேன்.’’

ஒருவர் கைது செய்யப்பட்டதை பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது சரியா?

‘‘கருணாநிதி குடும்பத்தினர் சினிமாவுக்கு வந்தது தவறு இல்லை. சினிமாதுறை மொத்தமும் அவர்களுக்கே சொந்தம் என்று நினைத்தது தான் தவறு. சன் டி.வி.யின் சக்சேனா செய்த அராஜகம் கொஞ்சம்நஞ்சமல்ல. அரக்கன் அழிந்ததற்காகத்தானே பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுகிறார்கள். அதைப் போலவே சக்சேனா கைதானதும் மகிழ்ச்சியாக வெடி வெடித்துக் கொண்டாடி இருக்கிறார்கள்.’’

சன் டி.வி. மீதான போலீஸ் அதிரடி நடவடிக்கைகளுக்கு நீங்கள்தான் காரணம் என்கிறார்களே?

‘‘தேர்தல் முடிவுகள் வந்ததும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து ராம.நாராயணன், சிவசக்தி பாண்டியன் இருவரும் ராஜினாமா செய்துவிட்டனர். து ணைத் தலைவரான என்னை தற்காலிகத் தலைவராக பொறுப்பு ஏற்கவேண்டும் என்று சொன்னார்கள். சன் டி.வி.யால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்ற என் போராட்டத்தைத் தொடர நீங்கள் சம்மதித்தால் தற்காலிகத் தலைவர் பதவியில் உட்காருவேன் என்றேன்... அவ்வளவுதான்.’’

தி.மு.க. ஆட்சியால்தான் சினிமா அழிந்தது என்று சொல்வது சரியாகத் தெரியவில்லையே...?

‘‘கடந்த ஒன்றரை வருடத்தில் 180 படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. இதில் சன் டி.வி.யின் படங்கள் ஒன்பது. கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின், நிறுவனங்களின் படங்கள் இருபத்தொன்று. கலைஞர் கதை வசனம் எழுதிய படங்கள் மூன்று. இந்தப் படங்களை ஒவ்வொரு விநியோகஸ்தரையும் கூப்பிட்டு தலையில் க ட்டினார்கள். இதுதான் ஏரியா, இதுதான் விலை என நிர்ணயம் செய்து தள்ளினார்கள். இந்தப் படங்கள் நீங்கலாக மற்ற 156 படங்களும் சிறு படங்கள். சிறிய தயாரிப்பாள ர்கள் கடன் வாங்கி எடுத்த படங்கள். இந்தப் படங்களை ரிலீஸ் ஆக விடாமல், அப்படியே ரிலீஸ் ஆனாலும் அவர்கள் சொல்லும் நேரத்தில் தூக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் ஐநூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுமட்டும் அல்ல, இனி தயாரிக்கப்படுகிற சிறிய தயாரிப்பாளர்களின் படங்களுக்கு விநியோகஸ்தர்கள் கிடைக்கவும் மாட்டார்கள். காரணம், விநியோகஸ்தர்கள் கடந்த கால ஆட்சியினரால் அழிக்கப்பட்டுவிட்டார்கள். போண்டியாகிவிட்டார்கள். படம் எடுப்பவர்கள் அவர்களே இனி விநியோகஸ்தர்களாக மாற வேண்டியதுதான். கடந்த ஆட்சியில் அடித்து, உதைத்து அவமானப்படுத்தப்பட்டதால் ஒதுங்கி விட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள்தான் இப்போது புகார் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.’’

அண்மையில் நடந்த தி.மு.க. இளைஞர் அணிக் கூட்டத்தில் விஜய் பற்றியும் பேசப்பட்டதாமே?

‘‘என் காதுக்கும் அந்தச் செய்தி வந்தது. தி.மு.க.வின் படுமோசமான தோல்விக்கு விஜய்யை பகைத்துக் கொண்டதை மூன்றாவதாக வரிசைப் படுத்தி இருக்கிறார்கள். தி.மு.க.வின் ஆதரவாளர்களாக இருந்த பலர் விஜய்யின் அறிக்கைக்குப் பின்னர் தி.மு.க.வை உதறிவிட்டுப் போனதை மாவட்டச் செயலாளர்கள் எடுத்துச் சொன்னார்களம்.’’

விஜய்யை நீங்கள்தான் இயக்குவதாகச் சொல்லப்படுகிறதே?

‘‘நான் இயக்குவதையே விட்டுவிட்டேன். அவரை எப்படி இயக்கமுடியும்?

அவருக்கு என்னை விட அரசியல் மிக நன்றாகத் தெரியும். உலக அரசியலும், உள்ளூர் அரசிய லும் அவருக்கு அத்துபடி. எந்த மாதிரியான அரசியல் சீரழிவுக்கு, எந்த மருந்து கொடுத்தால் சரியாகும் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்.

அரசியலில் அவர் எனக்குத் தலைவர். அவர் என்னுடைய மகன், அவரை சினிமாவில் அறிமுகம் செய்தவன் என்பதால் ஆசிரியர். அவ்வளவுதான். மற்றபடி நான் மக்கள் இயக்கத் தொண்டன். ‘புரட்சித் தலைவி அம்மாவுக்கு நாம் ஆதரவு தர வேண்டும். தி.மு.க.வைத் தோற்கடிக்க வேண்டும்’ என்று அவர்தான் உத்தரவிட்டார். அதன் படி, மக்கள் இயக்கத்தினருடன் சேர்ந்து நான் தேர்தல் பணியாற்றினேன்.’’

மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறுவது எப்போது? உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் எண்ணம் இருக்கிறதா?

‘‘விஜய்க்கோ, எனக்கோ உடனே அரசியலுக்கு வந்து சாதிக்க வேண்டும் என எதுவும் இல்லை. மக்களுக்கு நல்லது செய்கிறவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை. சமூகப்பணி செய்வதற்கு அந்தந்த ஊர்களில் அங்கீகாரம் வேண்டுமல்லவா? அவர்களுக்கு ஏதாவது செய்ய நினைக்கிறார் விஜய்’’ என்று முடித் துக்கொண்டார் எஸ்.ஏ.சி.

- குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.