Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒயின் ஷாப் ஊழியர் தயாரிப்பாளரான கதை - வெளிவராத பகீர் பின்னணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒயின் ஷாப் ஊழியர் தயாரிப்பாளரான கதை - வெளிவராத பகீர் பின்னணி

நமது அடிமைச் சங்கிலியை அறுத்தெறிவதற்கான காலம் இன்று இல்லாமல் போகலாம். நாளை... நாளை மறுநாள்...’

நீக்ரோ இன மக்கள் தங்கள் விடுதலைக்காகப் பாடிய இந்தப் பாடல் தான், தற்போது தமிழக திரையுலகினருக்கு சுதந்திர கீதமாகியிருக்கிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தான் பட்ட வேதனைகளை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார் செல்வராஜ். இதன்பிறகு பதிவு செய்யப்பட்ட புகாரில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சக்சேனா கைது செய்யப்பட்டார். சக்சேனா கைது செய்யப்பட்டதை விட, அவருக்கு ‘ஆல் இன் ஆலாக’ இருந்த ஐயப்பன் கைது செய்யப்பட்டதுதான் திரையுலகினருக்கு இனிப்பூட்டும் செய்தி.

இந்நிலையில், ஐயப்பன் மீதான புகார்கள் அணிவகுக்க ஆரம்பித்து விட்டன. ‘எந்திரன்’ பட விநியோகத்தில் ஒரு கோடியே ஐம்பத்தைந்து லட்சத்தைத் தராமல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஐயப்பன் ஏமாற்றிவிட்டார் என தியேட்டர் உரிமையாளர் சங்க இணைச் செயலாளர் ஸ்ரீதர், கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார், அடுத்த பரபரப்புக்கு அடிபோடப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து திரையுலக வட்டாரத்தில் விசாரித்தோம்.

“தேனி மாவட்டம் குச்சனூர்தான் இவரது பூர்வீகம். சிறுவயதிலேயே பிழைப்புத் தேடி மதுரை திருமங்கலம் வந்துவிட்டார். சந்தைப்பேட்டையில்தான் குடியிருந்தார். வறுமையின் காரணமாக தனது பள்ளிப்படிப்பைக் கூட ஐயப்பன் முடிக்கவில்லை. திருமங்கலத்தில் உள்ள மீனாட்சி தியேட்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலை பார்த்தார். லோடு மேன், ஆட்டோ ஓட்டுறது என கிடைக்கும் வேலைகள் எல்லாம் செய்து வந்தார். முன்னாள் சபாநாயகருக்கு நெருக்கமான அரசியல் புள்ளியின் ஒயின் ஷாப்பில் வேலை பார்த்தார். அவருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக சின்னச் சின்ன பஞ்சாயத்துகளில் ஈடுபட்டார். அதன் பின்னர் மதுரையில் பரோட்டா கடை நடத்தி வந்தார். அவர் பெயரே ‘பரோட்டா கடை’ ஐயப்பன்தான். இடையிடையே கட்டப்பஞ்சாயத்து, அடிதடி என உள்ளூர் அளவில் குட்டி தாதாவாக மாறினார்.

கொஞ்சம் பணப்புழக்கம் ஏற்பட்டவுடன் சந்தைப்பேட்டையில் இயங்கி வந்த கேபிள் டி.வி.யை ‘லீஸுக்கு’ எடுத்து நடத்தினார். அப்போது சுமங்கலி கேபிள் நெட் வொர்க்குடன் தொடர்பு ஏற்பட்டது. அதன்பின்னர் பலரிடம் பணத்தை வாங்கி மோசடி செய்துவிட்டு சென்னைக்கு ஓடிவிட்டார். மதுரையில் ஏமாற்றிய பணத்தை சினிமா புள்ளிகள் சிலருக்கு வட்டிக்குக் கொடுத்து வந்தார். வட்டி கட்ட முடியாத சினிமா புள்ளிகளை மிரட்டி அந்தப் படங்களை, தானே ரிலீஸ் செய்து வந்தார். இந்நிலையில், தென்சென்னை தி.மு.க. முக்கிய பிரமுகர் ஒருவரின் ‘அன்பு’ கிடைக்க, ஏறுமுகம் தொடங்கியது.

சினிமா தொழிலில் சிறிய பட்ஜெட் படங்களை விநியோகம் செய்யத் தொடங்கினார். ஏற்கெனவே இருந்த கேபிள் தொடர்பைப் பயன்படுத்தி, சக்சேனாவை நட்பாக்கிக் கொண்டார். அதன் பின்னர் அவர் வாழ்க்கையில் பணம் கொட்ட ஆரம்பித்தது. தான் ஃபைனான்ஸ் செய்யும் படங்களின் சேட்டிலைட் உரிமையை சன் டி.வி.க்கு குறைந்த விலையில் வாங்கிக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் எதைச் சொன்னாலும் செய்து முடிக்கும் வல்லமை ஐயப்பனுக்கு வந்தது.

சன் பிக்சர்ஸ் புதிதாக எந்தப் படத்தை வாங்கினாலும் கதை கேட்பது, பணத்தை முடிவு செய்வது எல்லாம் ஐயப்பனிடம் விடப்பட்டது. அடிமாட்டு விலைக்குப் படத்தைப் பேசுவது சன் டி.வி.யின் பழக்கம். ஐயப்பன் கும்பல் கதை கேட்கும் லட்சணம் தயாரிப்பாளர்களை ரொம்பவே நோகடிக்கும்.

படத்தை சன் டி.வி.க்கு விற்க வருகிறவர்கள் கதை பற்றிச் சொல்லும்போது, ஐயப்பனும், அவரது அடியாட்களும் கால் மேல் காலைப் போட்டுக் கொண்டு, ‘நீ என்ன கதை சொன்னாலும் சன் டி.வி. மனசு வைத்தால்தான் ஓடும். கொடுக்கற காசை வாங்கிட்டுப் போ’ என மிரட்டுவார். படத்திற்காக செலவு செய்த தொகையைவிட பலமடங்கு நஷ்டத்திற்குப் படத்தைக் கொடுத்துவிட்டு நொடிந்துபோன தயாரிப்பாளர்கள் ஏராளம்.

அது மட்டுமல்ல... படத்தை விற்க ஐயப்பனை தனியாக கவனிக்க வேண்டுமாம். ஒரு தேங்காய் உடைக்கணும் என்றால், ஒரு கோடி ரூபாய் கொடுக்கணுமாம்.

ஒரு படத்துக்கு இவ்வளவுதான் ரேட் என ஐயப்பன் குறித்துவிட்டால், அதை மீறி யாரும் எதுவும் பேச முடியாது’’ என்றனர்.

பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ஐயப்பனின் திருவிளையாடல் குறித்து விவரித்தார்...

‘‘சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் தேர்தல் நடந்தபோது ராம.நாராயணனை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் மிரட்டப்பட்டனர். தேர்தல் அன்று ஓட்டுப் பெட்டியை ரோட்டில் போட்டு சாகசம் செய்ததில் ஐயப்பனுக்கும் பங்கு உண்டு.

ஒருமுறை தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் வயதில் மூத்த ஒரு தயாரிப்பாளர், ‘டி.வி.க்களுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். சன் டி.வி.க்கு மட்டும் அதிகமான வி ளம்பரம் போவது சரியில்லை’ என காட்டமாகப் பேசினார்.

கூட்டம் முடிந்து வெளியே வந்த அந்தத் தயாரிப்பாளரை வயது வித்தியாசம் பார்க்காமல் அடித்து உதைத்தார் ஐயப்பன். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிழலாகவே வலம் வந்தவர் ஐயப்பன். சக்சேனாவுக்காக செக்கர்ஸ் ஓட்டலை அடித்து நொறுக்கியதும் ஐயப்பனின் சகாக்கள்தான்.

இவரைப் போலவே இன்னும் மூன்று பேர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடியாட்கள் குழுவின் தலைவர்களாக இருக்கிறார்கள். இவர்களையும் கைது செய்தால்தான் திரையுலகம் நிம்மதிப் பெருமூச்சுவிடும்’’ என்றார் கொதிப்போடு.

‘சக்சேனாவிற்கு இவர் செய்து கொடுத்த காரியங்களுக்கு நல்ல பலன் கிடைத்தது. கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார், சென்னை அலுவலகத்தில் 12-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள், பங்ளாக்கள் என உச்சத்திற்கே சென்றுவிட்டார் ஐயப்பன்.

இவரது கதையை டி.வி. சீரியலாக எடுத்தாலே சன் டி.வி.யில் பத்து வருடத்துக்கு ஒளிபரப்பலாம்’ என்று அடுக்கிக் கொண்டே போகிறார் அந்தத் தயாரிப்பாளர்.

ஆ.விஜயானந்த், வெற்றிப்பாண்டி

- குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.