Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

3 லட்சம் மக்கள் இறந்தாலும் பரவாயில்லை வெல்ல வேண்டும் என்றே போர் செய்தது அரசு:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

3 லட்சம் மக்கள் இறந்தாலும் பரவாயில்லை வெல்ல வேண்டும் என்றே போர் செய்தது அரசு: புரிந்துகொண்டு வாக்களியுங்கள் என்கிறார் மாவை எம்.பி.

[Thursday, 2011-07-21 09:13:04]

2009 மே திங்களில் முல் லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நாலு இலட்சத்து இருபதாயிரம் (420000) அப் பாவித் தமிழ் மக்கள் பாதுகாப் பற்று இருக்கிறார்கள் என்று அதிகாரபூர்வமாகத் தெரிந்தும் ஜனாதிபதியும் அரசும் அமைச் சர் டக்ளஸ் தேவானந்தாவும் திட்டமிட்டே (70,000) எழுபதாயிரம் பேர்தான் இருக்கிறார்கள் என ஐ.நா. மன்றம் வரை சென்று பேசினார்கள். அப்படியானால் 3,50,000 மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை போரை வென்று விடவேண்டும் என்பது தானே திட்டமாக இருந்தது? இவ்வாறு கேள்வி எழுப்பினார் மாவை சேனாதிராசா.

பருத்தித்துறை, நெல்லண்டை அம்மன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

சர்வதேச நாடுகளின் அழுத் தத்தால் (3,17000) மூன்று இலட் சத்து பதினேழாயிரம் மக்கள் உயிர் பிழைத்து அகதிகளாய் முட்கம்பி வேலிகளுக்குள் தஞ்சமடைந்தனர். ஆனால் ஏழுபது ஆயிரம் பேருக்குக்கூட போதிய உணவு, மருந்து போன்றவை அனுப்பப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்படுகிறது.இராணுவத்தினர், மட்டு மல்ல அரசின் முழு வளங்களும் அரச நிர்வாக முழு இயந்திரங் களும் அமைச்சர் குழாமும் எப்படியும் இந்தத் தேர்தலில் வெற்றியீட்ட வேண்டும் என அனைத்து வியூகங்களையும் வகுத்துள்ளது. போரில் அரசுக்கு கருணாஅம்மான் உதவியதைப்போலவே யாழ்ப் பாணத்தை தேர்தலில் கைப்பற்ற டக்ளஸ் துணை புரிகிறார்.

கடந்த அறுபது ஆண்டுகளில் மட்டுமல்ல 2009 முள்ளிவாய்க்கால் போருக்குப்பின்னரும் ஜனநாயக ரீதியில் எந்த தென்னிலங்கை அரசுகளோ சிங்களத்தலைமைகளோ தமிழ் மக்களை வெற்றிகொள்ளவில்லை என்பதே வரலாறு. இந்தத் தேர்தலிலும் தமிழ் மக்கள் அந்தப் பாடத்தை அரசுக்குப் புகட்டி தம் இலக்கை நோக்கி அரசியலில் தீர்வு ஒன்றை பெற திடசங்கற்பம் பூண்டிருப்பதை நிரூபிப்பார்கள் என நம்புகின்றோம்.

குடிப்பரம்பலில் எங்கே பலமாக தமிழ் மக்கள் இருக்கிறார்களோ அங்கேயே அவர்கள் சிறு பான்மையினராக்கப்பட்டு அதிகாரமிழந்தவர்களாக வாழ்வுரிமையைக் கூட இழந்தவர்களாக ஒரு கலப்பினமாக மாற்றப்படும் அபாயகரமான நிலையில் இன்று உள்ளனர். அதுதான் மஹிந்த சிந்தனையின் "ஒரே மக்கள், ஒரே நாடு'' எனும் சித்தாந்தம் ஆகும்.

எத்தனை ஆண்டுகளும் எம் தமிழ் மக்கள் செய்த தியாகங்களும் விட்டுவரும் கண்ணீரும் சிந்திய செந்நீரும் அற்ப சலுகை களுக்காக அல்ல. இந்த அற்ப சலுகைகள் எந்த வகையிலும் தமிழர் தியாகங்களுக்கு ஈடாக. எங்கள் தாய்மார் விடுகின்ற பெருமூச்சுக்கும் கண்ணீருக்கும் ஈடாகமுடியாது.தமிழ் மக்களை இந்தத் தேர்தலில் எவ்வாறாயினும் வென்று விட வேண்டும் என்று எத்தணிக்கும் அரசு இராணுவத்தையும், அரச நிர்வாகங்களையும், ஊழியர்களையும் அதில் ஈடுபடுத்துவதானது ஜனநாயக மற்றும் தேர்தல் சட்ட விதிகளை அப்பட்டமாக மீறுகின்ற செயலாகும்.

போர்க்குற்ற விசாரணை நடத்தவேண்டும் என்று சிபார்சு செய்துள்ள ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கையில் இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றது. இந்த அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றது. 2009 மே 23 இல் வெளியான பான் கீ மூன் ஜனாதிபதி கூட்டறிக்கையிலும் அரசியல் தீர்வுக்கு வற்புறுத்தப் பட்டிருக்கின்றது. அதைத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப் புடன் பேச்சு நடத்தி தீர்வுகாண வேண்டும் என்று நாம் வற்புறுத்து கின்றோம். அவ்வாறே இந்தியா வும், அமெரிக்காவும் ஏனைய சர்வதேச நாடுகளும் அரசுடன் வற்புறுத்திவருகின்றன. ஆனால் அரசிடம் ஒரு அரசியல் தீர்வுக்கான விருப்பமோ, அரசியல் திட்டமோ, திடசங்கற்பமோ இல்லை.

இந்த நிலையில் அரசு பெரும் பொருளாதார சீர்குலைவுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. விலை வாசி உயர்வை கட்டுப் படுத்த முடியாமல் உள்ளது. அரசு சர்வதேச நாடுகளிடம் பட்ட கடனை தீர்க்க முடியாதுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு வீட்டைத் தானும் எங்கள் வரிப்பணத்தில் கொடுக்காத அரசு இராணுவச் செலவீனங் களுக்காக போர் முடிந்தது என்ற நிலையிலும் வரவு செலவுத் திட் டத்தில் மிகப் பெரும் நிதியை ஒதுக்கியுள்ளது. சர்வதேசத்தினதும் இந்தியாவினதும் அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் அரசு ஆளாகி வருகின்றது.

இந்த நிலையானது தமிழ்த் தேசிய இனத்துக்கான அரசியல் தீர்வுக்கும் விடுதலைக்கும் சாதகமாகி வரும் சூழ்நிலையாகும். இன்று சர்வதேசத்துக்கும், சர்வ தேச நாடுகளுக்கும் அரசுக்கும் இடையிலான இராஜதந்திரப் போரானது தமிழ் மக்களின் விடுதலைக்கும் அரசியல் தீர்வு ஒன்றுக்கும் சாதகமான நிலை யையும் ஏற்படுத்தி வருகின்றது. இத்தகைய ஒரு சூழ்நிலையை மாற்றி அமைத்து சர்வதேசத்திலும் தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் பலவீனப்படுத்தவும் அரசுக்குப் போர்க்குற்றமோ, அரசியல் தீர்வோ இல்லை எனக் கூறுவதற்கே தமிழ் மக்களை அரசுக்கு சாதகமாக வாக்களிக்குமாறு அரசு கோரி நிற்கிறது. இதற்கு தமிழ் மக்கள் ஒரு பொழுதும் இடமளிக்க மாட்டாது என்று நம்புகின்றோம்.

தமிழ் மக்கள் இன்று நடைபெறும் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். அதற்காக ஒரு வாக்குத்தானும் சிதறவிடாமல் வீட்டுச் சின்னத்துக்கே வாக்களித்து எம் மக்கள் எதிலும், எங்கும் வெற்றிபெற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம் என்று தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46854&category=TamilNews&language=tamil

2009 மே திங்களில் முல் லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நாலு இலட்சத்து இருபதாயிரம் (420000) அப் பாவித் தமிழ் மக்கள் பாதுகாப் பற்று இருக்கிறார்கள் என்று அதிகாரபூர்வமாகத் தெரிந்தும் ஜனாதிபதியும் அரசும் அமைச் சர் டக்ளஸ் தேவானந்தாவும் திட்டமிட்டே (70,000) எழுபதாயிரம் பேர்தான் இருக்கிறார்கள் என ஐ.நா. மன்றம் வரை சென்று பேசினார்கள். அப்படியானால் 3,50,000 மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை போரை வென்று விடவேண்டும் என்பது தானே திட்டமாக இருந்தது? இவ்வாறு கேள்வி எழுப்பினார் மாவை சேனாதிராசா.

பருத்தித்துறை, நெல்லண்டை அம்மன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

சர்வதேச நாடுகளின் அழுத் தத்தால் (3,17000) மூன்று இலட் சத்து பதினேழாயிரம் மக்கள் உயிர் பிழைத்து அகதிகளாய் முட்கம்பி வேலிகளுக்குள் தஞ்சமடைந்தனர். ஆனால் ஏழுபது ஆயிரம் பேருக்குக்கூட போதிய உணவு, மருந்து போன்றவை அனுப்பப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்படுகிறது.இராணுவத்தினர், மட்டு மல்ல அரசின் முழு வளங்களும் அரச நிர்வாக முழு இயந்திரங் களும் அமைச்சர் குழாமும் எப்படியும் இந்தத் தேர்தலில் வெற்றியீட்ட வேண்டும் என அனைத்து வியூகங்களையும் வகுத்துள்ளது. போரில் அரசுக்கு கருணாஅம்மான் உதவியதைப்போலவே யாழ்ப் பாணத்தை தேர்தலில் கைப்பற்ற டக்ளஸ் துணை புரிகிறார்.

கடந்த அறுபது ஆண்டுகளில் மட்டுமல்ல 2009 முள்ளிவாய்க்கால் போருக்குப்பின்னரும் ஜனநாயக ரீதியில் எந்த தென்னிலங்கை அரசுகளோ சிங்களத்தலைமைகளோ தமிழ் மக்களை வெற்றிகொள்ளவில்லை என்பதே வரலாறு. இந்தத் தேர்தலிலும் தமிழ் மக்கள் அந்தப் பாடத்தை அரசுக்குப் புகட்டி தம் இலக்கை நோக்கி அரசியலில் தீர்வு ஒன்றை பெற திடசங்கற்பம் பூண்டிருப்பதை நிரூபிப்பார்கள் என நம்புகின்றோம்.

குடிப்பரம்பலில் எங்கே பலமாக தமிழ் மக்கள் இருக்கிறார்களோ அங்கேயே அவர்கள் சிறு பான்மையினராக்கப்பட்டு அதிகாரமிழந்தவர்களாக வாழ்வுரிமையைக் கூட இழந்தவர்களாக ஒரு கலப்பினமாக மாற்றப்படும் அபாயகரமான நிலையில் இன்று உள்ளனர். அதுதான் மஹிந்த சிந்தனையின் "ஒரே மக்கள், ஒரே நாடு'' எனும் சித்தாந்தம் ஆகும்.

எத்தனை ஆண்டுகளும் எம் தமிழ் மக்கள் செய்த தியாகங்களும் விட்டுவரும் கண்ணீரும் சிந்திய செந்நீரும் அற்ப சலுகை களுக்காக அல்ல. இந்த அற்ப சலுகைகள் எந்த வகையிலும் தமிழர் தியாகங்களுக்கு ஈடாக. எங்கள் தாய்மார் விடுகின்ற பெருமூச்சுக்கும் கண்ணீருக்கும் ஈடாகமுடியாது.தமிழ் மக்களை இந்தத் தேர்தலில் எவ்வாறாயினும் வென்று விட வேண்டும் என்று எத்தணிக்கும் அரசு இராணுவத்தையும், அரச நிர்வாகங்களையும், ஊழியர்களையும் அதில் ஈடுபடுத்துவதானது ஜனநாயக மற்றும் தேர்தல் சட்ட விதிகளை அப்பட்டமாக மீறுகின்ற செயலாகும்.

போர்க்குற்ற விசாரணை நடத்தவேண்டும் என்று சிபார்சு செய்துள்ள ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கையில் இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றது. இந்த அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றது. 2009 மே 23 இல் வெளியான பான் கீ மூன் ஜனாதிபதி கூட்டறிக்கையிலும் அரசியல் தீர்வுக்கு வற்புறுத்தப் பட்டிருக்கின்றது. அதைத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப் புடன் பேச்சு நடத்தி தீர்வுகாண வேண்டும் என்று நாம் வற்புறுத்து கின்றோம். அவ்வாறே இந்தியா வும், அமெரிக்காவும் ஏனைய சர்வதேச நாடுகளும் அரசுடன் வற்புறுத்திவருகின்றன. ஆனால் அரசிடம் ஒரு அரசியல் தீர்வுக்கான விருப்பமோ, அரசியல் திட்டமோ, திடசங்கற்பமோ இல்லை.

இந்த நிலையில் அரசு பெரும் பொருளாதார சீர்குலைவுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. விலை வாசி உயர்வை கட்டுப் படுத்த முடியாமல் உள்ளது. அரசு சர்வதேச நாடுகளிடம் பட்ட கடனை தீர்க்க முடியாதுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு வீட்டைத் தானும் எங்கள் வரிப்பணத்தில் கொடுக்காத அரசு இராணுவச் செலவீனங் களுக்காக போர் முடிந்தது என்ற நிலையிலும் வரவு செலவுத் திட் டத்தில் மிகப் பெரும் நிதியை ஒதுக்கியுள்ளது. சர்வதேசத்தினதும் இந்தியாவினதும் அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் அரசு ஆளாகி வருகின்றது.

இந்த நிலையானது தமிழ்த் தேசிய இனத்துக்கான அரசியல் தீர்வுக்கும் விடுதலைக்கும் சாதகமாகி வரும் சூழ்நிலையாகும். இன்று சர்வதேசத்துக்கும், சர்வ தேச நாடுகளுக்கும் அரசுக்கும் இடையிலான இராஜதந்திரப் போரானது தமிழ் மக்களின் விடுதலைக்கும் அரசியல் தீர்வு ஒன்றுக்கும் சாதகமான நிலை யையும் ஏற்படுத்தி வருகின்றது. இத்தகைய ஒரு சூழ்நிலையை மாற்றி அமைத்து சர்வதேசத்திலும் தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் பலவீனப்படுத்தவும் அரசுக்குப் போர்க்குற்றமோ, அரசியல் தீர்வோ இல்லை எனக் கூறுவதற்கே தமிழ் மக்களை அரசுக்கு சாதகமாக வாக்களிக்குமாறு அரசு கோரி நிற்கிறது. இதற்கு தமிழ் மக்கள் ஒரு பொழுதும் இடமளிக்க மாட்டாது என்று நம்புகின்றோம்.

தமிழ் மக்கள் இன்று நடைபெறும் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். அதற்காக ஒரு வாக்குத்தானும் சிதறவிடாமல் வீட்டுச் சின்னத்துக்கே வாக்களித்து எம் மக்கள் எதிலும், எங்கும் வெற்றிபெற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம் என்று தெரிவித்தார்.

http://onlineuthayan.com/News_More.php?id=34453439521389538

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று லட்சத்துக்கும் மேல் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் இருந்தபோது 70,000 பேர்தான் இருக்கினம் எண்டு மகிந்தன் சொன்னபோதே லட்சக்கணக்கில் கொலை செய்யப்படுவினம் எண்டு தெரிஞ்சு வச்சிருக்கிறான்..! :unsure:

தவறாகப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாக்கும் எமது அழிவுக்கான ஆயுதமாக அமையும் - யாழ்.பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம்

யாழ்.மக்கள் தவறாகப் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு வாக்கும் எமது இருப்பையும் உரிமையையும் அழிப்பதற்கான ஆயுதமாகவே பயன்படும் என யாழ்.பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றைய காலத்தில் யதார்த்தத்தை சரியாகப் புரிந்துகொண்டு தமிழ்த் தேசிய சிந்தனையுடன் வாக்குகளை அளிக்க வேண்டுமெனவும் மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

அந்த அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலானது, எமது இனத்தைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான தேர்தல் மட்டுமன்றி சர்வதேசத்தின் கண்களை எமது பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய ஒரு தேர்தலாகும். காலம் காலமாக எமது நாட்டில் நடைபெற்று வந்த பல்வேறு தேர்தல்களை காலத்தின் கடப்பாடு உணர்ந்து எமது மக்கள் சரியாக எதிர்கொண் டனர் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

இதுவரை காலமும் இல்லாத அள வுக்கு அடிமை வாழ்க்கை எம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. திட்ட மிடப்பட்ட ரீதியில் எமது காலாசாரம் அழிக்கப்பட்டு நாம் பூர்வீகமாக வாழ்ந்த தமிழர் தாயகப்பகுதிகள் அபிவிருத்தி என்ற போலிச்சொற்களைப் பயன்படுத்தி சிங்கள மயமாக்கலுக்கு உட்படுவதுடன், மூத்தோர் பெயரிலும் எமது கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அழைக்கப்பட்டு வந்த எமது வீதிகள் கூட சிங்களப் பெயருக்கு மாற்றப்பட்டு சந்திகள் தோறும் அறிவிப்புப் பலகைகள் மாட்டப்பட்டுள்ளன. நாம் சுதந்திரமாக உலாவி வந்த வீதிகளில் கூட இன்று நிம்மதியாகத் திரியமுடியவில்லை. மாலை 6 மணிக்கே வீடுகளுக்குள் முடங் கிக் கிடக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக் குத் தள்ளப்பட்டுள்ளோம்.

எமது சகோதரிகள் சுதந்திரமாக கற்றல் செயற்பாடுகளுக்குச் செல்வதற்கோ, தொழில் நிறுவனங்களுக்குச் செல்வதற்கோ வீதி களில் பயணிக்க முடியவில்லை. யுத்தம் முடிந்து விட்டது என்று மார் தட்டியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் எமது மக்களை தமது வாழ்விடங்களில் மீளக் குடியமர்த்தாமல் அகதிமுகாம் என்ற துயரவாழ்க்கைக்குள் தள்ளியுள்ளனர். ஏராளமான தமிழர் நிலங் கள் உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டு இராணுவத்தினரால் தமது சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எமது மக்களினால் போரின்போது விட்டுச்செல்லப்பட்ட பெறுமதி மதிப்பிடமுடியாத சொத்துக்கள் தென்னிலங்கைப் பகுதிக்கு இராணுவத்தினரின் அனுமதியுடன் எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றது. அண்மைக்காலமாக வடபகுதி பல இளைஞர், யுவதிகள் மர்மமான முறையில் யாரும் சந்தேகிக்காத வகையில் தற்கொலை என்ற பெயரில் தடயங்கள் அழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

வருகின்ற தேர்தலில் தமிழ்த்தேசியம் என்ற கொடியின் கீழ் அணிதிரள்வதன் மூலம் எமது ஒற்றுமையையும் அவாவையும் எல்லோருக்கும் தெரியப்படுத்தலாம் என்பது எமது அசைக்கமுடியாத நம்பிக்கை.எனவே அன்பான மக்களே இன் றைய காலத்தின் யதார்த்தத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு உங்கள் பொன்னான வாக்குகளை தமிழ்த்தேசிய சிந்தனையுடன் பயன் படுத்துமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்வதோடு நாம் தவறாகப் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு வாக்கும் எமது இருப்பையும் உரிமைகளையும் அழிப்பதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் என்பதையும் முள்ளிவாய்க்காலில் உயிர் இழந்த மக்கள் அனைவருக்கும் நாம் செய்யும் துரோகமாகும் என்பதனையும் நினைவிற் கொண்டு தமிழ்த்தேசிய ஒற்றுமையுடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

http://onlineuthayan.com/News_More.php?id=21628440721319572

தமிழ் மக்களை வைத்து சிங்களம் நடாத்தும் பொருளாதார அரசியல்/அரசியல் பொருளாதாரம்

இந்த நிலையில் அரசு பெரும் பொருளாதார சீர்குலைவுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. விலை வாசி உயர்வை கட்டுப் படுத்த முடியாமல் உள்ளது. அரசு சர்வதேச நாடுகளிடம் பட்ட கடனை தீர்க்க முடியாதுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு வீட்டைத் தானும் எங்கள் வரிப்பணத்தில் கொடுக்காத அரசு இராணுவச் செலவீனங் களுக்காக போர் முடிந்தது என்ற நிலையிலும் வரவு செலவுத் திட் டத்தில் மிகப் பெரும் நிதியை ஒதுக்கியுள்ளது. சர்வதேசத்தினதும் இந்தியாவினதும் அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் அரசு ஆளாகி வருகின்றது.

இதில் தமிழை அடிமையாக்குவதும், அழிப்பதும் அடங்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.