Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'கிரேக்கத்தின் மீட்சி'

Featured Replies

'கிரேக்கத்தின் மீட்சி'- பிரசல்ஸ் மாநாட்டில் பேச்சு

கிரீஸுக்கான இரண்டாவது பொருளாதார மீட்சித் திட்டத்திலுள்ள மிக சிக்கலான விடயங்கள் பற்றி ஐரோப்பியத் தலைவர்கள் விவாதித்துவருகின்றனர்

கடன் நெருக்கடி ஏனைய ஐரோப்பாவில் யூரா நாணயத்தைப் பயன்படுத்துகின்ற மற்றைய நாடுகளுக்கும் பரவிவிடாதபடி நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியில் இந்தப் பேச்சுவார்த்தைகள இடம்பெறுகின்றன.

ஆட்சித் தலைவர்களான நிக்கோலா சார்கோஸி மற்றும் அங்கேலா மேர்க்கல் ஆகியோருக்கு இடையில் புதன்கிழமை நடைபெற்ற ஏழு மணிநேர பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட கூட்டுத் தி்ட்டமொன்றை ஜேர்மனியும் ஃபிரான்ஸூம் பிரசல்ஸ் மாநாட்டில் முன்வைத்திருக்கின்றன.

புதிய திட்டம் பற்றிய விளக்கங்கள் இன்னும் பகிரங்கப்படுத்தப்பட வில்லை.

கிரேக்கத்தின் கடன்களை மீள ஒழுங்கமைக்கும் திட்டங்களும் புதிய மீட்சியில் அடங்கும் என்ற தொனிப்பட டச்சு நிதியமைச்சர் கூறியிருக்கிறார்.

கிரேக்கத்துக்கான புதிய கடன் திட்டம் மற்றும் கடன்களை மீள ஒழுங்கமைப்பதில் தனியார் துறையினரின் பங்களிப்பு தொடர்பாக கொள்கை வகுப்பாளர்கள் பிரசல்ஸி்ல் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு மே மாதத்தில் கிரேக்கம் தனக்கான முதலாவது மீட்சி உதவித் தி்ட்டத்தைப் பெற்றுக்கொண்ட போதிலும், தற்போதும் தொடர்கின்ற பெரும் நெருக்கடி சூழ்நிலை யூரோவின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விடுமோ என்கிற அச்சத்தையும் ஏற்படு்த்தியுள்ளது

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/07/110721_greekdept.shtml

-------------------------------------------

'யூரோ'வை கைவிடுகிறது ஜெர்மனி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=87897

  • தொடங்கியவர்

ஐரோப்பிய கடன் நெருக்கடி பற்றிய பிளவுகள் ஆழமடைகின்றன By Stefan Steinberg

டிரோய்கா எனப்படும் முக்கூட்டிற்குள் —சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை — பெரும் கருத்து வேறுபாடுகள் எழுந்து கொண்டிருக்கின்றன; அதேபோல் தனிப்பட்ட ஐரோப்பிய நாடுகளிடையேயும் யூரோப்பகுதி சிதைதலை எப்படித் தடுக்கப்படலாம் என்பது பற்றி முக்கிய வேறுபாடுகள் எழுந்துள்ளன.

வளர்ந்து கொண்டிருக்கும் யூரோ நெருக்கடியை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றிய பெருகிய பிளவுகள் நிதியச் சந்தைகள் முக்கூட்டை அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகளுக்குப் புதிய பெரும் நிதிகளை அளிப்பதற்கு அழுத்தம் கொடுத்த இணைந்த நடவடிக்கைக்குப் பின் வந்துள்ளன; அதே நேரத்தில் தனியார் முதலீடுகள் எவ்வித பிணை எடுப்பிற்கும் உதவி கொடுக்கக் கட்டாயப்படுத்தப்படவில்லை.

கடந்த வார இறுதியில் நிதியச் செய்தி ஊடகத்தில் இத்தாலிய அரசாங்கம் கடுமையான சிக்கன நடவடிக்கைச் செயல்படுத்தும் திறன் பற்றி ஐயங்களை எழுப்பியது; இது இத்தாலியக் கடன் பற்றி கிட்டத்தட்ட ஒரு பெரும் பீதியை ஏற்படுத்தியது.

கடந்த ஓராண்டாக வங்கிகள் மற்றும் ஊகவணிகர்களின் முக்கிய இலக்குகள் ஐரோப்பிய ஒன்றியத்தை சுற்றியுள்ள சிறு பொருளாதாரங்களான போர்த்துக்கல், அயர்லாந்து, கிரேக்கம் ஆகியவற்றின்மீது உள்ளன. இப்பொழுது அவை ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தின்மீது தங்கள் கவனத்தை திருப்பியுள்ளன. இத்தாலியின் மொத்தக் கடன் கிட்டத்தட்ட 1.8 டிரில்லியன் யூரோக்கள் என்பது கிரேக்கத்தின் கடன் தொகையை (340 பில்லியன் யூரோக்களை) மிக அற்பமாக்குகிறது; மேலும் இது ஐரோப்பிய பிணை எடுப்புப் பொதி நிதியிலுள்ள மொத்த நிதியான 750 பில்லியன் யூரோக்கள் என்பதைப்போல் இரண்டரை மடங்கு அதிகம் ஆகும்.

இத்தாலியின் பத்திரச் சந்தையானது, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளை அடுத்து உலகில் மூன்றாவது பெரிய சந்தை ஆகும். இத்தாலிய வங்கிகளில் இருந்து ஏராளமான நிதியத்தை எடுப்பது சர்வதேச வங்கி முறையில் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும். இதையொட்டி, இத்தாலி “தோற்க முடியாத அளவிற்குப் பெரிய நாடு”, அதே நேரத்தில் “காப்பாற்ற முடியாத அளவிற்குப் பெரிய நாடு” என்று விவரிக்கப்படுகிறது.

தரம் பிரிக்கும் நிறுவனங்களின் தாக்குதல் புதன் அன்றும் தொடர்ந்தது; அன்று பிட்ச் ரேட்டிங்ஸ் மீண்டும் கிரேக்க அரசாங்கக் கடனைக் கீழிறக்கி நாடு கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை என்பது “உண்மையாக ஏற்படக்கூடிய நிகழ்வு” எனத் தான் கருதுவதாக தெரிவித்தது.

நிதிய உயரடுக்கின் திமிர்த்தனம், ஐரோப்பா முழுவதிலுமுள்ள அரசாங்கங்களுக்கு ஆணைகளை இடுவது என்பது, ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் தலைவரான பிலிப் மேஸ்டாட்டால் சுருக்கமாக கூறப்பட்டது. இந்த வார இறுதியில் ஐரோப்பிய தலைவர்களின் புதிய அவசரக்கால உச்சிமாநாடு தேவை என்பதற்கு ஆதரவு தெரிவிக்கையில், அவர் கூறினார்: “சந்தைகள் உறுதியற்ற தன்மையை வெறுக்கின்றன. ஒரு நிலைமை தெளிவாக இல்லை என்றால் சந்தைகள் மோசமானவற்றைத்தான் சிந்திக்கின்றன. எனவே அவற்றிற்கு மறு உத்தரவாதம் கொடுக்கப்பட வேண்டும், அது தெளிவுடன் கொடுக்கப்பட வேண்டும்.”

இக்கட்டுரை ஜேர்மனிய மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஒரு செல்வாக்கு மிக்கப் பிரிவின் சிந்தனை பற்றிய உட்பார்வையை அளிக்கிறது. பேர்லினிலுள்ள முக்கிய சமூக ஜனநாயக மற்றும் பசுமைக் கட்சி அரசியல் வட்டங்களுடன் முங்கலர் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.wsws.org/tamil/articles/2011/july/110718_fiss.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.