Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் விவகாரங்களே போருக்கான அடிப்படைக் காரணி!

Featured Replies

அரசியல் விவகாரங்களே போருக்கான அடிப்படைக் காரணி! - ஏசியா ரைம்ஸ் கட்டுரை!!

இலங்கையில் இடம்பெற்ற போருக்கான அடிப்படைக் காரணியாக அரசியல் விவகாரங்கள் மட்டுமே உள்ளது என்பதையும், இப்பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண வேண்டும் என்பதையும் அங்கீகரிக்க சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மறுப்பதானது தமிழ் மக்கள் அந்நியப்படுத்தப்படும் தன்மை மிக உயர்ந்த மட்டத்திலேயே தொடர்ந்தும் இருக்க வைத்திருக்கும். இத்தகைய சூழ்நிலைகளில் தேசிய நல்லிணக்கம் என்பது நீண்டதூரக் கனவாகவே தொடர்ந்தும் இருக்கும்.

இவ்வாறு ஏசியா ரைம்ஸ் எனும் சர்வதேச ஊடகத்தில் ஊடகவியலாளர் சுதா இராமச்சந்திரன் எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இலங்கையில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அபிவிருத்தியை மையப்படுத்திய மகிந்த ராஜபக்சவின் தந்திரோபாயமானது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டதாகத் தெரிவிகின்றது.

வடக்குக் கிழக்கிற்கு அதிகாரப் பகிர்வை வலுப்படுத்துவதாக முன்னர் மகிந்த ராஜபக்ச வழங்கியிருந்த வாக்குறுதிகளை போர் முடிவடைந்த காலம் முதல் அவரின் அரசாங்கம் பலவீனப்படுத்தி வருகிறது.

அதிகாரப் பகிர்வுக்கான தேவை இல்லை என்ற கருத்துடன் சிறிலங்கா அரசாங்கம் இருப்பதாகத் தோன்றுகின்றது. மாறாக, அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியும் என சிறிலங்கா அரசாங்கம் கருவதாகத் தெரிகின்றது' என சுதா இராமச்சந்திரண் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். இக்கட்டுரையில் அவர் தெரிவித்து முக்கிய பகுதிகளை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

'இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான மகிந்த ராஜபக்சவின் போருக்குப் பின்னரான அபிவிருத்தி தந்திரோபாயமானது வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் மக்களைச் சென்றடைவதில் தோல்வி கண்டுள்ளதை உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது.

வடபகுதியில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மகிந்த ராஜபக்சிவின் நிலைப்பாட்டை தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர். வடபகுதி மக்கள் மீள்கட்டுமானம் மற்றும் பொருளாதார அபிவிருத்தியையே விரும்புவதாக மகிந்த ராஜபக்ச தலைரமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் கூறிக் கொண்டிருந்தது. ஆனால், இவ்விடயம் தவறானது என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான திணைக்களத்தின் தலைவர் சூசைப்பிள்ளை கீதப்பொன்கலன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தமக்கு பொருளாதார அனுகூலங்களை வழங்க முடியாது என்பதை தமிழ் மக்கள் நன்றாகத் தெரிந்திருந்தும், அம்மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களித்துள்ளனர். இதன் மூலம் அரசியல் விவகாரங்களே இப்போதும் மிகவும் முக்கியமானவை என்பதை தமிழ் மக்கள் மீண்டும் அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தியுள்ளனர் என கீதப்பொன்கலன் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் சர்வதேச கவனத்தை அதிகளவுக்கு ஈர்ப்பதில்லை. ஆனால், கடந்த 23ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற 65 சபைகளுக்கான உள்ளூராட்சி தேர்தல் சர்வதேச நாடுகளில் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டன.

வடக்கில் இடம்பெற்ற தேர்தலானது தமிழ் மக்கள் மத்தியில் மகிந்த ராஜபக்சவின் செல்வாக்கிற்கு ஒரு பரீட்சையாக நோக்கப்பட்டது. இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் போருக்குப் பின்னரான அபிவிருத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் மகிந்த ராஜபக்சவின் அணுகுமுறைக்கு மக்கள் அங்கீகாரம் வழங்கியதாக அமைந்திருக்கும்.

இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த வெற்றியும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வடக்குக் கிழக்கில் நிராகரிக்கப்பட்டமையும் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் அணுகுமுறைக்கு அங்கீகாரம் வழங்கவில்லை என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் சகல முயற்சிகளையும் மேற்கொண்டது. சிறிலங்கா ஜனாதிபதி உட்பட குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள் வடக்கில் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தனர். அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னிறுத்துவது தொடர்பாகவே ஆளும் கட்சியின் தேர்தல் பரப்புரைகள் அமைந்திருந்தது.

சர்வதேச ரீதியில் போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொட்ர்பில் கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் வெற்றி பெறுவதன் மூலம் தமிழ் மக்கள் அரசாங்கத்துடன் நிற்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்த எத்தனித்தது. ஆனால், சிறிலங்கா அரசாங்கத்தின் எண்ணப்பாடுகளை தேர்தல் முடிவுகள் தவிடுபொடியாக்கியுள்ளன.

'நாங்கள் வடக்கிற்கான பொருளாதார அபிவிருத்தியை எதிர்க்கவில்லை. அல்லது அரசியல் தீர்வு காணும் வரை பொருளாதார அபிவிருத்தி மற்றும் மீள்கட்டுமானமோ நடவடிக்கைகள் மேற்கொள்ளக்சுடாது என நாங்கள் கூறவில்லை, இது அது சம்பந்தமான விடயமல்ல' என தன்னை இனங்காட்ட விரும்பாத யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் ஏசியா ரைம்ஸுக்குக் கூறியுள்ளார்.

அரசியல் தீர்வுக்கு பாலங்கள், கட்டிடங்களையே பதிலீடாகக் கொள்வதற்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் முயற்சிப்பதையே தாங்கள் எதிர்த்துள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

வீதிகள், துறைமுகங்கள் நிர்மாணத்திலும் பார்க்க தமிழ் மக்களுக்கு அரசியல் விவகாரங்களில் தீர்வு காண்பதே முக்கியமானதாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், இறுதியான சமாதானத்திற்கு அரசியல் தீர்வு அத்தியாவசியமானது என்று தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசியில் தீர்வு காணப்படும் என்பதை வலியுறுத்தியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரப்புரைகளில்; ஈடுபட்டது. 'மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் அதனைப் போன்று ஏனைய நடவடிக்கைகள் கட்டமைப்புக்கு உட்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை உள்ளது. அந்த வழிமுறைகளை அரசியல் தீர்வுடன் அபிவிருத்தியை இணைப்பது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுடன் பார்க்க வேண்டியுள்ளது. அரசியல் தீர்வை ஓரங்கட்டுவதிலும் பார்க்க இதனைச் செய்ய வேண்டிய தேவை காணப்படுகிறது' என நோர்வே பல்கலைக்கழகப் பேராசிரியர் என்.சண்முகரெட்ணம் கூறுகின்றார்.

வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலுள்ள வாக்களிப்பு முறைமையில் இனரீதியான துருவ மயப்படுத்தப்பட்ட தன்மை முடிவுக்கு வர வேண்டுமானால், அரசியல் அரங்கிற்குள் இருக்கும் இனரீதியான வேறுபாடுகளின் இருப்பியலை மறுப்பதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என அரசியல் விமர்சகரான ஜெஹான் பெரேரா த ஐலண்ட் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்' என சுதா இராமச்சந்திரன் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={390A4E96-53D9-406F-872A-E93EF6D12559}

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா திரும்பத்திரும்ப சொன்னாலோ எழுதினாலோ போதுமா இலக்கை அடைய வழி ........................?

  • தொடங்கியவர்

சும்மா திரும்பத்திரும்ப சொன்னாலோ எழுதினாலோ போதுமா இலக்கை அடைய வழி ........................?

இந்தக்கட்டுரை பிரபல டைம்ஸ் இதழின் ஆசிய பதிவில் இடம்பெற்றுள்ளது. பல அரசியல், கொள்கை வகுப்பாளர்கள், பொருளாதார நிபுணர்களால் வாசிக்கப்படுவது.

அந்த வகையில் இந்த கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கட்டுரை பிரபல டைம்ஸ் இதழின் ஆசிய பதிவில் இடம்பெற்றுள்ளது. பல அரசியல், கொள்கை வகுப்பாளர்கள், பொருளாதார நிபுணர்களால் வாசிக்கப்படுவது.

அந்த வகையில் இந்த கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்தது.

இதைத்தான் நம்மவர்கள் தொடர்ந்து நம்பியும் சொல்லியும் வருகின்றனர் இந்த பிரபலங்கள் நிபுணர்கள் இருந்து என்ன பிரயோசனம் .......................?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.