Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய எடியூரப்பா பணிந்தார்

Featured Replies

பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய எடியூரப்பா பணிந்தார்

கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பு

பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., மேலிடத்தின் உத்தரவை ஏற்று நேற்று பதவி விலகினார். தன் ராஜினாமா கடிதத்தை, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரிக்கு, பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். ஆனால், எடியூரப்பா ராஜினாமா செய்யவில்லை, என்று பா.ஜ., தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளதால், கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பு காட்சிகள் அரங்கேறியுள்ளன.

சுரங்கத்தொழில் மோசடி குறித்து, கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அறிக்கை தாக்கல் செய்தவுடன், பா.ஜ., மேலிட அழைப்பின் பேரில், முதல்வர் எடியூரப்பா நேற்று முன்தினம் இரவு, டில்லி புறப்பட்டுச் சென்றார். டில்லியில், பா.ஜ., தலைவர்களிடம், தன் நிலைமையை விளக்கினார். அவரது கருத்தை, கட்சி மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்லை. புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்படி தலைமை அறிவுறுத்தியது.

நேற்று காலை பா.ஜ., உயர்மட்ட குழு கூட்டம் கூடுவதாக இருந்தது. இந்த கூட்டத்தில், முதல்வர் எடியூரப்பா பங்கேற்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, டில்லியிலிருந்து பெங்களூருக்கு எடியூரப்பா புறப்பட்டு வந்தார். அவருடன், அமைச்சர் பசவராஜ் பொம்மை உட்பட சிலர் மட்டுமே வந்தனர்.

பெங்களூரில் தன் இல்லத்தில், பா.ஜ., தலைவர்களுடன் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். எடியூரப்பா வீட்டில் நடந்த கூட்டத்தில், 30 தலைவர்கள் கலந்து கொண்டதாக தெரிகிறது. இதில், ஏழு அமைச்சர்களும், 22 எம்.எல்.ஏ.,க்களும் அடங்குவர். எடியூரப்பா நடத்திய கூட்டத்தில் பங்கேற்றவர்களில் அமைச்சர்கள் ÷ஷாபா, ரேணுகாச்சார்யா, உதாசி, உமேஷ் கட்டி, பசவராஜ் பொம்மை மற்றும் ஜீவராஜ், கட்டா சுப்பிரமணிய நாயுடு, யோகேஷ் பட், சந்திரகாந்த் பெல்லட், வால்மீகி நாயக், ஆயனூர் மஞ்சுநாத் ஆகியோர் முக்கியமானவர்கள்.

கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, "முதல்வர் வீடு மற்றும் கூட்டத்தை விட்டு அனைவரும் வெளியேறுங்கள்' என்று, டில்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது.

முதல்வர் எடியூரப்பாவை ராஜினாமா செய்யச் சொல்லி மேலிடம் உத்தரவிட்டதையடுத்து, எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்த பலரும், அவரை கைகழுவியதாக தெரிகிறது. இதுவரை எடியூரப்பாவை எதிர்த்து வந்த ரெட்டி சகோதரர்களும், பெல்லாரி எம்.எல்.ஏ.,க்களும், முதல்வர் எடியூரப்பாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர்.

தென்மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி அமைய அரும்பாடுபட்ட எடியூரப்பா, கர்நாடகாவின் முதல் பா.ஜ., முதல்வராக பொறுப்பேற்றார். அன்று முதல் பல சிக்கல்களை அவர் எதிர்கொண்டார். ஒவ்வொரு முறையும், மேலிட தலைவர்களின் ஆதரவுடன் அவர் தப்பித்துக் கொண்டே வந்தார். லோக் ஆயுக்தா அறிக்கை வெளியானவுடன், ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று காட்டிக் கொள்ள பா.ஜ., மேலிட தலைவர்கள் முடிவு செய்து, எடியூரப்பாவை ராஜினாமா செய்யும்படி கட்டளையிட்டனர். இதற்கிடையில், நேற்று மாலை 3.30 மணிக்கு கூடுவதாக இருந்த அமைச்சரவை கூட்டம், திடீரென ரத்து செய்யப்பட்டது. நேற்று மாலை 5.30 மணியளவில், முதல்வர் எடியூரப்பா, தனது ராஜினாமா கடிதத்தை, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரிக்கு, பேக்ஸ் அனுப்பியதாக தகவல்கள் வெளியானது.

ஆனால், இந்த தகவலை கர்நாடகா பா.ஜ., அமைச்சர் ரேணுகாச்சார்யா, பா.ஜ., தலைவர் லேஹர் சிங் ஆகியோர் மறுத்தனர். அவர் ஜூலை 31ம் தேதிதான் ராஜினாமா செய்வார், என்று தெரிவித்தனர்.

புதிய முதல்வரை தேர்வு செய்ய, டில்லியிலிருந்து பா.ஜ., தலைவர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி ஆகியோர் இன்று பெங்களூரு வருகின்றனர்.

யார் இந்த எடியூரப்பா? : மூன்று ஆண்டுகள், இரண்டு மாதம், கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா, நேற்று அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்ய, கட்சி உத்தரவிட்டது.

எடியூரப்பா, கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள புக்கனகரே என்ற கிராமத்தில், 1943, பிப்., 27ம் தேதி பிறந்தார். இவருக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். 2008ம் ஆண்டு, கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, தென் மாநிலங்களில் பா.ஜ., சார்பில் பதவியேற்ற முதல் முதல்வர் என்ற பெருமை பெற்றவர். இவரின் அரசியல் வாழ்க்கை பற்றிய பார்வை:

1970: சிக்கரிபுர் என்ற பகுதியின் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் செயலராக நியமிக்கப்பட்டார்.

1972: பாரதிய ஜன சங் அமைப்பின் தாலுகா தலைவராக பதவியேற்றார்.

1975: சிக்கரிபுர் நகராட்சி தலைவராக தேர்வானார்.

1975, 1977: நாட்டில் நெருக்கடி நிலை அமலில் இருந்த போது, சிறையில் அடைக்கப்பட்டார்.

1983: கர்நாடக சட்டசபைக்கு முதல்முறையாக எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றார். மொத்தம் ஆறு முறை எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1988: கர்நாடக பா.ஜ., கட்சியின் மாநில தலைவராக பதவியேற்றார்.

1994: கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரானார்.

2008, மே 30: கர்நாடக முதல்வராக பதவியேற்றார்.

2010: அடுத்தடுத்து 2 முறை இவரது அரசு, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு உள்ளானது.

2010 நவ., : அரசு நிலத்தை மகனுக்கு ஒதுக்கீடு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

2011 பிப்., 5: எடியூரப்பா, சொத்துக்கணக்கை வெளியிட்டார்.

ஜூலை 28: சட்ட விரோதமாக கட்சியினருக்கு நிலக்கரி உரிமம் வழங்கியதாக இவர் மீது, "லோக் ஆயுக்தா' அறிக்கை குற்றம் சாட்டியது. இதையடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சி உத்தரவிட்டது.

குற்றச்சாட்டு: சுரங்க ஊழல் தொடர்பாக, கர்நாடக மாநில அரசிடம் நேற்றுமுன்தினம் அறிக்கை சமர்ப்பித்த லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, "சுரங்க நிறுவனங்களிடம் இருந்து எடியூரப்பா குடும்பத்தினர், 30 கோடி ரூபாய் வரை பெற்றுள்ளனர்' என, தெரிவித்தார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், அவர் மீது வழக்குத் தொடரவும் பரிந்துரை செய்தார்.

பதவி விலக உத்தரவு: டில்லியில், நேற்று கூடிய பா.ஜ., பார்லிமென்டரி போர்டு கூட்டத்தில், எடியூரப்பா பதவி விலக உத்தரவிடப்பட்டது.

காரணம்: பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர், அடுத்த வாரம் துவங்க உள்ள நிலையில், எடியூரப்பாவை முதல்வர் பதவியில் நீடிக்க அனுமதித்தால், அது பா.ஜ.,வின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை பலவீனப்படுத்தி விடும் என, அந்தக் கட்சியினர் நம்புகின்றனர்.

முதல்வருக்கான போட்டியில் யார் யார்? : * சதானந்த் கவுடா - பாரதிய ஜனதா கட்சி எம்.பி., (கர்நாடக மாநில முன்னாள் பா.ஜ., தலைவர்) * வி.எஸ்.ஆச்சார்யா - கர்நாடக மாநில உயர் கல்வித் துறை அமைச்சர். * சுரேஷ் குமார் - சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் * கே.எஸ்.ஈஸ்வரப்பா - கர்நாடக பா.ஜ., தலைவர் * ஆர்.அசோக் - உள்துறை அமைச்சர்

பல பிரச்னைகளில் தப்பித்தவர் சுரங்க ஊழலில் வீழ்ந்தார்: மே 30, 2008 : எடியூரப்பா அரசு பெரும்பான்மை இழந்தது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் சுயேட்சைகளைக் கவர்ந்து, ஆட்சியை காப்பாற்றினார்.

அக்டோபர் 30, 2009 : எடியூரப்பாவை நீக்க வேண்டும் என, ரெட்டி சகோதரர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

நவம்பர் 10, 2010 : தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, பெங்களூரில் முதன்மையான இடத்தில், தன் மக்களுக்கு நிலம் ஒதுக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=284417

இந்துத்துவ, தேசப் பற்றை பேசும் பெரும்பாலான ஹிந்தி வெறியர்களைக் கொண்ட பா. ஜ. கட்சி உறுப்பினர்கள் ஊழலில் சிக்கி தமது உண்மை சுயரூபத்தைக் காட்டியுள்ளனர்.

இந்துத்துவ, தேசப் பற்றை பேசும் பெரும்பாலான ஹிந்தி வெறியர்களைக் கொண்ட பா. ஜ. கட்சி உறுப்பினர்கள் ஊழலில் சிக்கி தமது உண்மை சுயரூபத்தைக் காட்டியுள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.