Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலை வழக்கில் சிக்கி கைதாகிறார் அழகிரி?

Featured Replies

முதல்வரின் மகன், மத்திய அமைச்சர் என்கிற அதிகாரங்களைக் கையில் வைத்துக் கொண்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக அழகிரியும், அவரது அடியாட்களும் ஆடிய ஆட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஆட்சி மாறியதும் அடியாட்கள் ஒவ்வொருவராக, உள்ளே போய்க் கொண்டிருக்க, அடுத்த குறி அழகிரிதானாம். உளவுத்துறை ஏ.சி. ஒரு வரை வைத்து அழகிரியைக் கைது செய்ய வேலைகள் நடந்து வருகின்றன.

‘‘மதுரையை மீட்பேன்’’ என தேர்தலுக்கு முன்பு மதுரை பொதுக்கூட்டத்திலேயே ஜெயலலிதா முழங்கியபோது, அதற்கு மதுரை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு. கடந்த ஆட்சியில் காவல்துறை, அரசு அலுவலகங்கள் என எல்லாமும் மதுரையில் அழகிரி ராஜ்ஜியமாகத்தான் இருந்தது. அவரை எதிர்த்து யாரும் எதுவும் செய்ய முடியாத நிலை. மதுரை தினகரன் ஊழியர்கள் மூன்றுபேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதும், அந்தக் குற்றவாளிகள் வெளியே சுதந்திரமாய் திரிந்ததும் மக்கள் மனதில் மிகப்பெரிய கோபத்தையும், பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியது.

ஆட்சி மாறியதும் அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ், எஸ்ஸார் கோபி என அழகிரியின் கரங்கள் உள்ளே போய்க் கொண்டிருக்க, மதுரை மக்கள் அதைக் கொண்டாடு கிறார்கள். ‘அழகிரி எப்போது கைது செய்யப்படுவார்?’ என்கிற அவர்களது ஆர்வத்தையும் நிறைவேற்ற முழுவீச்சில் களமிறங்கி இருக்கிறார்கள் மதுரை போலீஸார். அவர்கள் அதிகம் சிரமப்பட தேவையில்லாமல், தோண்டத் தோண்ட புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் கொலை வழக்குகளும் அடக்கம்.

மதுரை ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை செய்யப்பட்ட வழக்குதான் மதுரையில் தற்போதைய பரபரப்பு. இந்த வழக்கு குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒரு வரிடம் பேசினோம். ‘‘கடந்த 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க.வினர் தவிர வேறு யாருக்கும் பூத் கமிட்டி அமைக்க இடம் தரக்கூடாது என தி.மு.க.வினர் மிரட்டினர். ஆனால் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் பூத் கமிட்டி அமைக்க தன்னுடைய இடத்தை சி.பி.எம். வேட்பாளருக்குக் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எஸ்ஸார் கோபி, தனது அடியாட்களுடன் சேர்ந்து, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாண்டியராஜனைத் தூக்கிக் கொண்டுபோய் அவனியாபுரத்தில் இருக்கும் தன் தோப்பில் வைத்து அடித்து நொறுக்கியுள்ளனர்.

பாண்டியராஜன் மயக்கமடைந்தவுடன் உயர் போலீஸ் அதிகாரி மற்றும் சில முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் செல்போன் மூலம் ஆலோசனை செய்துள்ளார். ‘தேர்தல் நேரத்தில் பாண்டியராஜனை உயிரோடு வெளியில் விடுவது ஆபத்து’ என அவர்கள் எச்சரித்துள்ளனர். அதனால் மயங்கிய நிலையில் இருந்த பாண்டியராஜனைத் தூக்கிச்சென்று ஈச்சனோடை என்ற இடத்தில் வைத்து தங்களுடைய காரில் ஏற்றிக் கொலை செய்து விட்டனர்’’ என்றார்.

இந்த வழக்கை மதுரை எஸ்.பி. அஸ்ரா கர்க் விசாரித்து வருகிறார். எஸ்ஸார் கோபியின் அடியாட்களைத் தூக்கி வந்து விசாரித்தபோது அவர்கள் உண்மையைச் சொல்லி இருக்கிறார்கள். இதனால்தான் 29-ம் தேதி அவசரமாக எஸ்ஸார் கோபி நீதிமன்றத்தில் சரண் அடைந்திருக்கிறார். இதுகுறித்து எஸ்.பி. அஸ்ரா கர்க்கிடம் பேசினோம், ‘‘பாண்டியராஜன் கொலை செய்யப்பட்டுள்ளார் என அவரது மனைவி பாண்டிச்செல்வி, தாயார் லட்சுமி ஆகியோர் ஏற்கெனவே பலமுறை புகார் கொடுத்துள்ளனர். என் னிடம் வந்த புகாரை விசாரித்ததில், கொலைதான் என உறுதியானது.

இதில் எஸ்ஸார் கோபி, அவரது சகோதரர் நல்ல மருது, ஒன்றியச் செயலாளர் கார்த்திகேயன், நகரச் செயலாளர் சுல்தான் சேட், பகுதிச் செயலாளர் முபாரக் மந்திரி, ஏட் டய்யா செந்தில் குமார், டிரைவர் பாண்டியன், கவுன்சிலர் மண்டை மணி உள்ளிட்ட 13 பேருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. எஸ்ஸார் கோபி சரணடைந்து விட்ட நிலையில், ஏட்டய்யா செந்தில், டிரைவர் பாண்டியன், கவுன்சிலர் மண்டை மணி ஆகியோரைக் கைது செய்துள்ளோம். மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர்’’ என்றார்.

இந்தக் கொலை, அழகிரியின் வழிகாட்டலில்தான் நடந்திருக்கும் என்பது போலீஸாரின் சந்தேகம். எஸ்ஸார் கோபியை போலீஸ் கஸ்டடியில் விசாரிக்கும்போது, அவர் உ ண்மையைச் சொல்லி விடுவார் என்கிறார்கள் போலீஸார். இதுதொடர்பாக, அப்போது பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ராமசுப்பு, டி.எஸ்.பி. சுந்தரேசன் ஆகியோரிடமும் விசாரணை நடக்க இருக்கிறதாம். அதேபோல் எஸ்ஸார் கோபிக்கு நெருக்கமாக இருந்த உளவுத்துறை உதவி ஆணையர் குமரவேல்தான் இந்தக் கொலை ஐடியாவைக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அவரிடமும் ரகசியமாக விசாரணை நடத்தப்படுகிறதாம். இவர்தான் போலீஸாருக்குக் கிடைத்திருக்கும் ஃபைனல் அஸ்திரம்.

காவல்துறை, அரசு வட்டாரங்களில் நடக்கும் ரகசியங்களை அழகிரிக்கு உடனுக்குடன் தெரிவிப்பவர் இந்த ஏ.சி. குமரவேல்தானாம். ஆட்சி மாறியதும் இடமாற்றம் செய்யப்பட்ட குமரவேல் இன்னமும் அழகிரியுடன் மிக நெருக்கமாகத்தான் இருக்கிறாராம். மதுரையில் நடந்த இரண்டு கொலைகள் தொடர்பாக மறு விசாரணைக்கு உத் தரவிடப்பட்டுள்ளதாம். இந்த வழக்கு உதவி கமிஷனரான குமரவேலைக் குறிவைத்து நடத்தப்படுகிறதாம்.

அதிகாரிமீது கூறப்படும் கொலைப் புகார்கள் பற்றி பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ‘‘அந்த உளவுத்துறை அதிகாரியிடம் டிரைவராக இருந்த ஏட்டய்யா சண்முகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ஏ.வி. மேம்பாலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, இறந்து விட்டதாக வழக்கு முடிக்கப்பட்டது. அதேபோல், அந்த உளவுத்துறை அதிகாரிக்கு எல்லாமுமாக இருந்த ஏட்டய்யா ஒருவர் விபத்தில் காயமடைந்து, ஒருவருடமாக கோமா ஸ்டேஜில் இருக்கிறார்’’ என்று கூறி அதிர்ச்சி அளித் தார்.

தொடர்ந்து அவரே, ‘‘முதலில் கொலை செய்யப்பட்ட டிரைவர், மதுரை ஏ.வி. மேம்பாலத்தில் இரவு 11 மணிக்கு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பு 11 மணிக்கு மார்க்கெட் செல்பவர்கள், சிம்மக்கலுக்கு செல்பவர்கள் என கூட்டம் அலைமோதும். இந்த இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோத வாய்ப்பே இல்லை. மேலும் விபத்து என்றால், ஏதாவது ஒரு பகுதியில் அடிபடும். ஆனால் அவருக்கு தலை, கை, கால்கள், உடம்பு என எல்லா இடத்திலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் இறப்பதற்கு முன் சிலகாலம் கோமா ஸ்டேஜில் இருந்தார்.

அடுத்த சில மாதங்களில் அந்த உளவுத்துறை அதிகாரிக்கு எல்லாமுமாக இருந்த மற்றொரு ஏட்டய்யா இதேபோல், மண்டை மற்றும் உடம்பு முழுவதும் எலும்பு முறிந்து கோமா ஸ்டேஜில் ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வருகிறார். அது எப்படி ஒருவருடன் நெருக்கமாக இருந்த இரண்டு பேருமே ஒரே மாதிரி அடிபட்டு, ஒரேமாதிரி விப த்தில் சிக்கி, கோமாவில் படுப்பார்கள்? இவை திட்டமிட்ட கொலைகள்தான். காரில் ஏற்றிக்கொலை செய்துவிட்டு, அதனை விபத்து வழக்காக மாற்றுவது அந்த அதிகாரிக்கு கைவந்த கலை. நிச்சயம் இந்தக் கொலை வழக்குகளில் அழகிரிக்குத் தொடர்பிருக்கும்’’ என்று கூறி அதிர்ச்சியை அதிகப்படுத்தினார்.

இந்த வழக்கில் இருவரையும் கொலை செய்ய உதவியது யார்? கூலிப்படை கொடுத்து உதவியது யார்? என்று இரண்டு நாட்கள் ராமநாதபுரத்தில் ரகசியமாக ஏ.சி. கு மரவேல் விசாரிக்கப்பட்டார். திங்களன்று ஐ.ஜி., கண்ணப்பன் விசாரித்துள்ளார். இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களை போலீஸ் கைப்பற்றியுள்ளது. குமரவேல் வாய் திறந்து உண்மையைச் சொன்னால் அழகிரி மீது கொலை வழக்கு பாயலாம் என்கிறார்கள்.

‘‘எல்லாமே பொய்வழக்குகள்’’ என்ற இரண்டு வார்த்தைகளை மட்டும் தி.மு.க.வினர் சொல்லிக் கொண்டிருக்க, ‘‘அழகிரியிடம் இருந்து மக்களை காப்பாத்துவோம்னு சொன்னோம். அதைத்தான் செய்யறோம். இதோட அழகிரி அரசியலை விட்டே போகணும். ஐந்து வருடமும் கோர்ட் வழக்குன்னு அலையணும். அப்பதான் மதுரை மக்களுக்கு நிம்மதி’’ என்று ஆவேசப்படுகிறார்கள் அ.தி.மு.க.வினர்.

‘‘தப்புச் செஞ்சவங்க அனுபவிக்கிறாங்க. இதில் வருத்தமென்ன வேண்டியிருக்கு?’’ எனச் சிரிக்கிறார்கள் மதுரை மக்கள்!

Thanks to Kumudam reporter.

இச்செய்தி குறித்த படங்கள் பார்க்க.....

http://www.thedipaar.com/news/news.php?id=31878

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இனைப்பிற்கு, குற்றம் செய்யத இவர்கள் கட்டாயம் தண்டனை அனுபவிச்சே ஆகனும், நடவடிக்கை எடுக்கிறம் என்று அப்பாவிகளையும் தனிப்பட்ட கரணங்களுக்கா மாட்டிவிடதேங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.