Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஷ்ட்ரேயில் உதிர்ந்திருக்கும் விரல்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆஷ்ட்ரேயில் உதிர்ந்திருக்கும் விரல்கள்

நேசமித்திரன்

மழை முடிந்திருக்கும் மரத்தின் கிளைகள் தாழ்ந்திருக்கின்றன .உன்னுடனான முதல் சொல்லை இத்தனைத் தயக்கங்களுடன் துவங்க நேரும் ஒரு பொழுதை எப்படி கடப்பது.தண்டவாளத்தின் குறுக்குக் கட்டைகளைப் போல் புதைபட்டிருக்கும் நினைவின் சாயைகளில் இருந்து மீட்டெடுக்க கூடாததாய் இருக்கிறது பகிர்ந்த கணங்களின் துடிப்பு மீதமிருக்கும் தசை.

உச்சிப் பகலில் உயரமாய் தெரிகிறது ஆகாயம்.குடித்துக் கொண்டிருக்கும் கன்றை வலிந்து இழுத்து கலயம் ஏந்தும் மடியில் சொட்டும் துளிகள் இந்த சொற்களுக்கான ஈரம் தரக் கூடும்.அதீதமான துக்கத்தை தருபவை மிக விழைந்த பிரியங்களாய் இருக்கின்றன .கிளையைப் போல் பிரிந்து பறவையைப் போல் பறந்து போவது என்பதெல்லாம் எழுதுவதைப்போல் எளிதாய் இல்லை.பரணில் இருந்து இறக்கி துடைக்கப்படும் குழந்தையின் விளையாட்டுப் பொருட்களை போல் பரிச்சயமானதாகவும் ஆனால் பருவங்கள் வரிசைப் படுத்த இயலாததாகவும் இருக்கிறது ஞாபகத்தூரில் இருந்து பட்டியலுறும் உன் பிரிவு நிமித்தங்கள்.

பிரசவ வயிற்றின் சுருக்கங்களுடன் புழுதியடங்கிய பாலை வெளி நிலவொளியில். புதிய வருகையை அறிவிக்கும் பெருவனத்தின் பறவைகள் குரல் மரம்தோறும் கடப்பதைப் போல் மெல்லப் பரவிய நின் வாசனை நீக்கமற நிரம்பிகிடக்கிறது .கோப்பைத் தேனீரில் விரல்களைக் காட்டிலும் அதிகம் பற்றும் குழந்தையின் உதடுகள் முத்தமிடுகையில் வாய்த்திருந்தது அந்தப் பிரியத்திற்கு.குமிழுடைந்த வெற்றிடத்தில் நொடிக்கும் குறைவாய் இருக்கும் ஈரவட்டம் சிணுங்கி..! உன் செல்லக் கோபங்கள்.

புலர்த்தும் பொழுதுகள் தோறும் கருவறை சுவராய் சூழ்ந்திருந்தது உன் குரல் . சாரமுதைத்துவரும் சர மழைப்பொழுதுகளில்(நன்றி :சூடிக் கொடுத்த சுடர்க் கொடி)கதவு கடந்து காலடிதேடும் வளர்ப்பு மிருகமாய் சுடரின் காம்பாய் திரியிருக்கும் குழல் ஒளியறுந்தப் பொழுதுகளில் அண்மைதேடும் கன்று தாயின் நாவுக்கு கழுத்துயர்த்தும் அணுக்கி.கசாப்புக்கட்டையின் மீது வெட்டுறும் மாமிசத்துண்டின் சப்தத்தை இசையொப்பக் கேட்டுக் காத்திருக்கும் நாய் எனக் காலம்.

நிரூபித்துக் கொண்டே இருக்கவியலாதாய் இருந்து விடுகிறது பிரியமும்.நட்சத்திரங்களை எல்லாம் ஒட்ட வைத்தால் பிறையெப்படி பௌர்ணமி ஆகும்?. காத்திருக்கும் நாளின் காலண்டர் தாளுக்கு எப்படி வருகிறது டிக்ஸ்னரியின் கனம் ? பித்து, மீன்காரியின் கூடையுள் உடல் மீது துள்ளும் உடல் .சூரியனளவு கடலின் ஈரல் வரைத்தீண்ட முடிவதில்லை நிலா ஆனால் அலை குலவையிடும் பெண்ணின் நாவாய் நில்லாது இசைத்தபடி இருக்கிறது.

மிகாமல் மீட்சிக்கும் தொலைதலுக்கும் இடையில் புன்னகைத்தபடி தடுப்புக் கம்பத்துக்கு அப் புறம் கடந்து போகும் ரயில் ஜன்னல் நொடிமுகங்கள். முன்னம் நதி நடந்த வெளியில் காகப் பொன் மேலெழ பெய்து போன முகில்களின் பஞ்சாலை சுவர் ஆகாயம்.குளித்த உடலின் சேர்ந்திருக்கும் ரோமம் அளவு மீதமிருக்கும் அடர்ந்த(?) வனத்தில் இருந்து சாலை கடக்கும் யானைக் கூட்டத்தில் கடைசியாய் கடக்கும் கன்றின் நடை. யாருமற்ற தேவாலயத்தில் இடுப்பளவு எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியும் பிரார்த்தனை பெஞ்சின் மீது இன்னும் காயாமல் இருக்கும் இரண்டு சொட்டுக் கண்ணீரும் .சண்முக நதியின் ஊற்றைத்தேடிய பயணத்தில் அடைந்த மண்டபத்தில் பாதி செதுக்கிய சிலையின் கண்களும் .உண்ணிகள் கவ்வும் உடலை சிலிர்க்கும் பசுவாய் ஆக்கிப் பார்க்கும் உதிரத்தை பாதரசமாய் .

கிணற்று சுவரில் பெயர்ந்த செங்கலின் பிறையில் கூடு கட்டியிருக்கும் குருவியின் அடையில் புதிய குரல்கள்... பெய்யாதிருக்கட்டும் மழை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.