Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச ரீதியில் இலங்கை தனிமைப்படுத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது: மடு தேவாலய திருப்பலி நிகழ்வில் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ரீதியில் இலங்கை தனிமைப்படுத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது: மடு தேவாலய திருப்பலி நிகழ்வில் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு.

[Tuesday, 2011-08-16 10:51:30]

archbishop-albert-malcolm-ranjit_150.jpg

சர்வதேச ரீதியில் இலங்கை தனிமைப்படுத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக அதி வணக்கத்திற்குரிய கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எச்சரிக்கை விடுத்துள்ளார். மன்னார் மருத மடு தேவாலய திருவிழா திருப்பலியில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச சமூகத்தினால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை சரியான முறையில் எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

சகல விடயங்களையும் நிராகரிக்க முடியாது எனவும், அவ்வாறு செய்தால் உலகின் சிறிய நாடொன்றைச் சேர்ந்த நாம் தனிமைப்படுத்தப்படுவதனை தடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆயுதப் போராட்டம் முடிவுறுத்தப்பட்டுள்ள போதிலும், தேசிய சுயநலவாதத்திற்கு எதிராக யுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஆயுதப் போராட்டத்தை விடவும் இந்த யுத்தம் மிகவும் சவால் மிக்கது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்து தெற்கு சிங்கள மக்கள் கவனம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஏழு நாட்கள் நடைபெற்ற மருதமடு தேவாலய திருவிழா நிகழ்வுகளில் சுமார் இரண்டு லட்சம் பக்தர்கள் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பான்மை மக்களுக்கு சிறுபான்மையினர் சவாலாகத் திகழ்வார்கள் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். சட்ட ரீதியில் ஐக்கியப்பட்டுள்ள நாம் இதய ரீதியாக பிளவடைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் இதயங்களை வென்றெடுக்கக் கூடிய வகையில் சிங்கள மக்கள் செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படாவிட்டால் மற்றுமொரு யுத்தம் ஏற்படுவதனை தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

சகல இனங்களுக்கும் இடையில், ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்:

முப்பது வருடங்கள் நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நாட்டின் அமைதியான நிலைமை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், சகல இனங்களுக்கும் இடையில், ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையிலான நடைமுறை ஒன்றை உருவாக்கி, பல்வேறு கோணங்களில் வரும் சர்வதேச சக்திகளை எதிர்க்கொள்ள கூடிய வலுவான சக்தியை ஒன்றை நாட்டில் கட்டியெழுப்ப வேண்டிய அனைவரது கடமை என வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார் மடு தேவலாயத்தின் வருடாந்த மகோஹ்சவத்தை நிறைவு செய்து, ஆலயத்தில் நடைபெற்ற விசேட திருப்பலி பூஜையில் கலந்துக்கொண்டு நேற்று (15) உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த திருப்பலி பூஜையில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்கள் கலந்துக்கொண்டனர்.

திருப்பலி பூஜையை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நடத்தியதுடன், இதில், மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், ஆனுராதபுரம் ஆயர் நோபட் அந்ராதி உள்ளிட்ட பல ஆயர்கள் கலந்துக்கொண்டனர்.

http://www.seithy.co...&language=tamil

Edited by தமிழ் அரசு

சர்வதேச ரீதியில் இலங்கை தனிமைப்படுத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது:

சட்ட ரீதியில் ஐக்கியப்பட்டுள்ள நாம் இதய ரீதியாக பிளவடைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் இதயங்களை வென்றெடுக்கக் கூடிய வகையில் சிங்கள மக்கள் செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவர் ஊசி போகிற இடம் தெரியும், ஊலக்கை போகிற இடம் தெரியாது என்கிற படித்த முட்டாள் கூட்டைதை சேர்ந்தவர். "சட்ட ரீதியில் ஐக்கியப்பட்டுள்ள நாம்" என்று எதை கூறுகிறார் ? 1948ல் 50/50 சட்டரீதியாக வேண்டும் என்று கேட்டவர்கள் தமிழ்ர்கள்.

நாடு சர்வாதிகாரத்திற்குள் தள்ள பட்டு மகிந்தா தான் நெப்போலியன் மாதிரி சக்கரவர்த்தி என்று வெளிப்படையாக கூறுகிறார்.

சிங்களவர்கள் கிட்லர், ஸ்டலின் முசோலினி போன்ற சர்வாதிகளின் கீழ் தங்கள் மக்கள் பட்ட கஸ்டத்தை பட போகிறார்கள். இதை இனி மோடயச் சிங்கள்வர்கள் எவ்விதத்திலும் தவிர்க்க முடியாது. யாராவது நேரத்திற்கே ஐ.நா வின் உதவியை கேட்டால் நாட்டுக்கு நேரப்போகும் அழிவை தடுக்கலாம். இல்லையேல் இவர்கள் யப்பான், சேர்மனி, ஈராக், லிபியா பார்த்ததை பார்த்தேயாக வேண்டும்.

நாடு பேரழிவை சந்திக்கபோகுது. (தமிழருக்காவல்ல. மேற்குலகின் நலங்களுக்காக) அதைவிடுத்து இலங்கை தனிமைப்படுத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது என்று கவலைப்படுகிறார் இவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.