Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியத் தலைநகரில் யாழ்ப்பாண மாணவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஓகஸ்ட் 2011, 07:50 GMT ] [ அ.எழிலரசன் ]

jaffna_1.jpgகடந்த காலங்களில் சிறிலங்காவின் யுத்த தலைநகராக விளங்கிய யாழ்ப்பாணத்திற்கு வெளியேயான முதலாவது பயணமாகஅவர்களுக்கு இது அமைந்துள்ளது.

160 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த யாழ்ப்பாணப் பாடசாலை ஒன்றைச் சேர்ந்த 10 பாடசாலை மாணவர்கள் டில்லிக்குத் தாம் செல்லவுள்ள செய்தியைக் கேட்டபோது மிகவும் ஆச்சரியமடைந்தார்கள்.

இந்தியாவின் சுதந்திர நாளை முன்னிட்டு அங்கு சென்றுள்ள இந்த யாழ்ப்பாணத்து மாணவர்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் ஒருவார காலத்தில் அந்நாட்டு மாணவர்கள், உணவுவகைகள், வாழ்க்கை முறைமை, வரலாற்று ரீதியான நினைவுச் சின்னங்கள் போன்ற பல்வேறு விடயங்களை அறியவுள்ளனர்.

"இது உண்மையில் மிகவும் ஆச்சரியப்படக் கூடிய ஒரு அனுபவமாகவே உள்ளது" என 1860ல் யாழ் மாவட்டத்தில் நிறுவப்பட்ட புனித பத்திரிசியார் கல்லூரியின் [சென் பற்றிக்ஸ் கல்லூரி] அதிபராகக் கடமையாற்றுகின்ற வணக்கத்திற்குரிய எம். ஜெரோ செல்வநாயகம் தெரிவித்துள்ளார்.

"இவர்கள் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தகாலத்தில் பிறந்த மாணவர்களாவர். இவர்கள் யுத்தங்களை மட்டுமே இதுவரை பார்த்திருக்கிறார்கள். இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீள்கட்டுமானப்பணிகள் மற்றும் அபிவிருத்திகள் என்பன இடம்பெறுகின்றன. மிகப் பொருத்தமான நேரத்தில் இந்தியாவிற்கான இப்பயணம் இவர்களுக்கு அமைந்துள்ளது" இவ்வாறு அதிபர் செல்வநாயகம் IANS இடம் தெரிவித்துள்ளார்.

யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியிலிருந்து இந்தியாவிற்குச் சென்றுள்ள இந்த மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் இந்தியத் தலைநகரில் ஒரு வார காலத்தைக் கழித்த பின்னர் வரும் திங்கட்கிழமை அன்று சிறிலங்காவிற்குத் திரும்பவுள்ளனர்.

மேற்கு டில்லியின் ஜானகபுரி என்ற இடத்திலுள்ள St Francis de Sales Senior Secondary School என்ற மேல்நிலைப் பாடசாலையின் ஆதரவுடனேயே இவர்கள் தற்போது இந்தியா சென்றுள்ளனர். இப்பாடசாலையானது கடந்த ஆண்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவிகளையும் இந்தியாவிற்கு அழைத்திருந்தது.

"எமது மாணவர்கள் கூச்சப்படுகிறார்கள். இங்குள்ள மாணவர்கள் மிகவும் துடிப்பானவர்களாகக் காணப்படுகின்றனர். தொடர்பாடல்கள் மற்றும் தகவல் பரிமாறல்களை மேற்கொண்ட பின்னர் எமது மாணவர்களும் தன்னம்பிக்கையைப் பெற்றுக்கொள்வார்கள். உண்மையில் இது ஒரு ஆச்சரியப்படத்தக்க ஒரு அனுபவமாகும்" என அதிபர் செல்வநாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

"இதுவரையில் இந்த தமிழ் மாணவர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியிடங்களுக்குச் செல்லவில்லை. இது அவர்களுக்கு புதியதோர் அனுபவமாக உள்ளது. நான் சிறிலங்காவிற்குத் திரும்பிச் சென்ற பின்னர் இதுபோன்ற பல மாணவர் பரிமாற்றல் நிகழ்வுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன்" என அதிபர் குறிப்பிட்டார்.

டில்லிப் பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றும் பாதிரியாரான மெலோரி அல்மெய்டா, தற்போது தனது பாடசாலைக்கு வருகை தந்துள்ள யாழ்ப்பாணத் தமிழ் மாணவர்கள் தொடர்பாகவும், சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான பரிமாற்றல் நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் மிகவும் மகிழ்வடைகின்றார்.

'இவ்வாறான நிகழ்வுகள் மூலம் மட்டுமே இந்த மாணவர்கள் தம்மை வெளிப்படுத்திக் கொள்ள முடியும். இந்த தமிழ் மாணவர்கள் தற்போது விடுதியில் தங்கியுள்ளனர். இந்திய மாணவர்களின் இல்லங்கள் போன்றவற்றிற்கு இவர்களைக் கூட்டிச்சென்று தன் மூலம் இந்திய மாணவர்களளுடனும் அவர்களது பெற்றோர்களுடனும் கலந்துரையாடி தமது மனதை வெளிப்படுத்திக் கொள்ள முடியும்' என அதிபர் மெலோரி அல்மெய்டா தெரிவித்துள்ளார்.

'இம்மாணவர்கள் வட இந்திய உணவு வகைகளை சுவைத்துள்ளனர். இவர்கள் டில்லி, இந்தியா தொடர்பாக அறிந்து கொள்கின்றனர். இப்பயணத்தை இவர்கள் மிகவும் சந்தோசமாக அனுபவிக்கிறார்கள் என்றே நாம் நினைக்கிறோம்.' என்கிறார் அதிபர் அல்மெய்டா.

"எமது பாடசாலை ஆசிரியர்களுடன் தற்போது இங்கு வந்துள்ள யாழ் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் நெருங்கிய தொடர்பைப் பேணி வருகின்றனர். இங்கு எம்மால் வழங்கப்பட்டுள்ள வசதிவாய்ப்புக்கள் தொடர்பாகவும் மற்றும் எல்லாவிதமான செயற்பாடுகள் தொடர்பாகவும் இவர்கள் மிகவும் கவரப்பட்டுள்ளனர்" என அவர் மேலும் தெரிவித்தார்.

அக்ராவில் உள்ள தாஜ்மஹாலைப் பார்த்த இந்த மாணவர்கள் பெரிதும் புளகாங்கிதம் அடைந்துகொண்டனர். அத்துடன் இவர்கள் இந்தியத் தலைநகரையும் கண்டுகளித்தனர்.

ஞாயிறன்று இம்மாணவர்கள் கிழக்கு டில்லியில் அமைந்துள்ள Akshardham என்ற ஆலயத்தைப் பார்வையிடவுள்ளனர். அத்துடன் உத்தரப் பிரதேசத்திலுள்ள Noida வையும் பார்வையிடவுள்ளனர்.

இந்தியாவிற்குச் சென்றுள்ள புனித பத்திரிசியார் பாடசாலை மாணவர்கள், இந்தியப் பாடசாலையில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வின் போது சிங்கள தமிழ் ஆகிய இரு கலாசார நிகழ்வுகளையும் மேற்கொண்டனர்.

"அவர்கள் தாம் இங்கு பார்த்த எல்லா விடயங்கள் தொடர்பாகவும் மிகவும் ஆச்சரியமடைந்துள்ளனர். அத்துடன் நாம் இந்த யாழ்ப்பாணத்து மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட காற்பந்தாட்டத் திறமையை நினைத்த ஆச்சரியடைகின்றோம். இவர்கள் 10 பேர் மட்டுமே இருந்தபோதிலும் அணி ஒன்றை உருவாக்கி மிகச் சிறப்பாக விளையாடியிருந்தனர்" என அதிபர் மெலோரி அல்மெய்டா குறிப்பிட்டார்.

http://www.puthinappalakai.com/view.php?20110821104517

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.