Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். தீவுப்பகுதியில் இந்தியாவின் உதவியுடன் சிங்கள மீனவக் குடியேற்றம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Aug 22, 2011 / பகுதி: செய்தி /

யாழ். தீவுப்பகுதியில் இந்தியாவின் உதவியுடன் சிங்கள மீனவக் குடியேற்றம்!

யாழ். குடாநாட்டின் தீவுப் பகுதியை நோக்கி தெற்கின் கவனம் திரும்பியுள்ள நிலையில் உள்ளூர் மீனவர்களிடையே அச்சமான சூழல் எழுந்துள்ளது. அண்மையில் புங்குடுதீவை வந்தடைந்த தெற்கு பெரும்பான்மையின மீனவர்கள் தொடர்ந்தும் அங்கு தங்க வைக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் மீனவர்களிடையே சந்தேகம் தொடர்கின்றது.

அதேவேளை நெடுந்தீவிற்கும் தெற்கு மீனவர்கள் வருகை தரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அங்கும் குழப்பகரமான சூழலொன்றை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக் காலமாக வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சங்கு பிடிப்பதற்கென கூறி நூற்றுக்கணக்கான தெற்கு மீனவர்கள் வருகை தந்து தங்கியுள்ளனர். இவர்கள் பாதுகாப்பு அமைச்சினதும், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சினதும் அனுமதியுடனேயே குடா நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்களுக்கான படகுகள் மற்றும் வதிவிட உதவிகளை உள்ளூர் மீனவர்கள் வழங்கி வருகின்றனர். பெருமளவு தென்னிலங்கை மீனவர்கள் முகாம் சூழல்களிலும் தங்கியுள்ளனர்.

எனினும் தென்னிலங்கை மீனவர்கள் அதி கூடிய வெளியிணைப்பு இயந்திரங்களை பயன்படுத்துவதாகவும் இதனால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் உள்ளூர் மீனவர்கள் குரல் எழுப்பத்தொடங்கியுள்ளனர். அத்துடன் தென்னிலங்கை மீனவர்களுக்கு படகுகளையோ, வதிவிடங்களையோ உள்ளூர் மீனவர்கள் வழங்கக் கூடாதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஒன்று கூடிய மீனவ சங்கங்கள் இம்முடிவை எடுத்திருந்தன.

இத்தகைய இழு பறிகளின் மத்தியிலேயே தெற்கு மீனவர்களது கவனம் கடற்படையினரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தீவகப் பகுதிகளை நோக்கி திரும்பியுள்ளது. கடற்படையினரது பாதுகாப்புடன் வந்திருந்த நூற்றுக்கணக்கான தென்னிலங்கை மீனவர்கள் புங்குடுதீவு கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சங்கு பிடிக்கும் தொழிலில் ஈடுபட முற்பட்டுள்ளனர்.

எனினும் இதற்கு உள்ளூர் மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து உட்பட்ட முறுகல் நிலையை தீர்க்க உள்ளூர் மீனவ சங்க பிரதி நிதிகளை கடற்படை அழைத்திருந்தது. அவ்வேளைமீனவ சங்க பிரமுகர்கள் கொலை அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட பிராந்திய கடற்படை கட்டளை தளபதியுடன் பேச்சுகளை நடத்தியதையடுத்து சுமுக நிலை ஏற்படுத்தப்பட்டிருந்தது. தென்னிலங்கை மீனவர்களை அனுமதிக்கப் போவதில்லை எனவும் கூறப்பட்டது.

இத்தகைய இழுபறிகளின் மத்தியிலேயே நெடுந்தீவிலுள்ள அரச காணிகளில், தென்னிலங்கை மீனவர்களை குடியமர்த்தும் முயற்சிகள் தொடர்பான செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆழ்கடல் மீன் பிடியில் ஈடுபடக் கூடியதாக, தொழில் உபகரணங்கள் சகிதம் இம் மீனவ குடும்பங்கள் குடியமர்த்தப்படவுள்ளன.

இவர்களுக்கு இந்திய வீடமைப்பு திட்ட உதவியின் கீழ் நிரந்தர வீடுகளை அமைத்து வழங்கவும் திட்டமிடப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

http://www.pathivu.com/news/18036/57//d,article_full.aspx

சீனாவை 'உள்ளுக்குள் விடக்கூடாது' என்ற எண்ணத்தில் இந்தியா 'உதவிகளை' செய்கிறது, சிங்களம்,

முதல் கட்டமாக அதை தமது 'ஆட்களை' குடியேற்ற பயன்படுத்துகின்றது. அடுத்த கட்டமாக சீனா அங்கு 'அபிவிருத்திகளை' மேற்கொள்ளும். அப்போதும் இந்தியா அதற்கும் மேலாக 'உதவிகளை' வழங்கும் <_<

இந்த உள்ளூர் உதவிகளை மன்னன் டக்லஸ் வழங்குகின்றார் போலுள்ளது.

அண்மைக் காலமாக வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சங்கு பிடிப்பதற்கென கூறி நூற்றுக்கணக்கான தெற்கு மீனவர்கள் வருகை தந்து தங்கியுள்ளனர். இவர்கள் பாதுகாப்பு அமைச்சினதும், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சினதும் அனுமதியுடனேயே குடா நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்களுக்கான படகுகள் மற்றும் வதிவிட உதவிகளை உள்ளூர் மீனவர்கள் வழங்கி வருகின்றனர். பெருமளவு தென்னிலங்கை மீனவர்கள் முகாம் சூழல்களிலும் தங்கியுள்ளனர்.

Edited by akootha

ஓட்டுமொத்த ஈழத் தமிழ் இனத்தையும் கூண்டோடு அழிப்பதே இந்திய கன்னட கொள்கை வகுப்பாளர்களின் நோக்கம்.இதை நிறைவேற்றுவதற்கு இவர்களின் முதல் தெரிவு சீனா உள்ளுக்குள் வந்துவிடும் என்ற சாட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவில், சிங்கள மீனவர்கள் குடியேறினால்....

அங்கிருந்து, கச்சதீவு கூப்பிடு தூரம். தமிழக மீனவர்களுக்கு நிரந்தர தலையிடி ஆரம்பபாகப் போகின்றது.

அத்துடன் நெடுந்தீவுஒரு சிறிய பகுதி. அங்கு பரம்பரையாக வாழும் தமிழ் மக்களுக்கும் ஆபத்து தான்...

சில வருடங்களின் பின், அங்கிருக்கும் தமிழர்களை திரத்திவிட்டு.... நெடுந்தீவை முழு சிங்கள இடமாக மாற்றக் கூடிய சாத்தியங்களும் நிறையவே உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.