Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கே போனது நம் தமிழ் உணர்வு? - சேரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

07.jpg 31.08.11 சினிமா சேரன் பேசினால் அதில் அர்த்தமுள்ள பதிவுகள் அதிகமிருக்கும். ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது சேரனின் மனதை மிகவும் பாதித்திருக்கிறது. ‘முரண்’ திரைப்பட வேலைகளில் ஈடுபட்டிருந்த பரபரப்பான சூழலிலும் தமிழர்களின் நிலையை நினைத்துப் பொங்குகிறார்.

”தமிழ்ப் பத்திரிகைகளில் இடம்பெறுகிற சில தொடர்கள், கட்டுரைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக்கூட, தமிழனின் உயிர் பாதிக்கப்படும்போது யாருமே அதைப்பற்றி கவலைப்படாமல் இருப்பது எப்படி முடிகிறது? எதனால் இவ்வளவு அலட்சியம், அஜாக்கிரதை? மனிதன் மனதில் இந்த மாதிரியான உணர்வுகளை ஏன் உருவாக்கினார்கள்? எப்படி உருவாக்கினார்கள்? என்று ஆச்சரியமாக இருக்கிறது. நம்முடைய முப்பாட்டனும், பாட்டனும் தானே நம் சுதந்திரத்திற்காகப் போராடினார்கள். அவர்களுடைய வாரிசுகளான நம்மிடம் மட்டும் ஏன் இந்த மெத்தனம்? முப்பாட்டன்களிடம் இருந்த அந்த இனம், மான உணர்வு நம்மிடம் ஏன் இல்லாமல் போனது? நம்மை மழுங்க வைத்து, சுயநலவாதியாக மாற்றியது எது? எதுவும் புரியவில்லை.

மனித சங்கிலிப் போராட்டம் என்றால் அதில் கலந்துகொள்பவர்கள் ஆயிரம் பேர் என்றால், அதை வேடிக்கை பார்த்தபடி போகிறவர்கள் மூவாயிரம் பேர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்களா? எல்லோரும் தமிழர்கள்தானே? நம் உறவுகளுக்காக நடக்கும் போராட்டம் என்று இறங்கி வந்து கை கோர்த்துப் போராட வேண்டுமென்ற உணர்வு ஏன் இல்லாமல் போனது? எல்லாவற்றையும் அரசியலாகத்தான் பார்க்கிறார்களா? அரசியலுக்காக, ஓட்டுகளுக்காக இந்தப் பிரச்னைகளை அரசியல்வாதிகள் முன்னிறுத்தியதைப் பார்த்து, உண்மையான பிரச்னைகளுக்குக் கூட களமிறங்கிப் போராட வேண்டுமென்ற எண்ணமே தமிழனுக்கு இல்லாமல் போய்விட்டதா? இல்லை, மனித உயிர்கள் சாதாரணமாகப் போய்விட்டதா?

குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படுவதற்கு முன்பே, குற்றப் பத்திரிகை வாசிக்கப் படுவதற்கு முன்பே இருபது வருடங்கள் மூன்று உயிர்களை சிறையிலடைத்தார்கள். விரைவில் அந்த மூன்று உயிர்களைத் தூக்கிலிடப் போகிறார்கள். ராஜிவ் காந்தி படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என்று இவர்களைச் சொல்கிறார்களே தவிர, இவர்களுக்கும் அந்தக் கொலைக்கும் நேரடித் தொடர்பு இருந்ததாக நிரூபிக்கப்படவில்லை. இதில் பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்கிறார்கள். ஒரு டீக்கடையில் இருக்07a.jpgகும் மூன்று பேருக்கு நான் வம்படியாக டீ எடுத்துக் கொடுக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அந்த மூன்றுபேரும் பாதிக்கப்பட்டால், டீக்கடைக்காரரை குற்றவாளி என்று அறிவிக்கலாமே தவிர, டீ எடுத்துக் கொடுத்த என்னையும் சேர்த்துக் குற்றவாளி என்றால் என்ன அர்த்தம்? இதே போலத்தான் பேரறிவாளன் என்ற இளைஞரை இருபது வயதில் சிறையில் அடைத்தார்கள். இப்போது இருபது வருடங்கள் ஓடி விட்டது. சிறைத் தண்டனையை முடித்து, அவரை வெளியே விடாமல் இன்னும் தூக்கு தண்டனை இருக்கிறது என்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? ஒரு மனித உயிரைத் தூக்கிலிடுவதால் என்ன சாதித்துவிட முடியும்? நம்மிடமிருந்து எதிர்ப்புகள் எதுவுமில்லை என்பதால்தானே இந்த நிலை நீடிக்கிறது. இந்த விஷயங்களை எல்லாம் எதிர்த்துக் கேட்க திராணியற்ற கூட்டமாக தமிழன் மாறி இருப்பது என்னை கவலைக்குள்ளாக்கி இருப்பதோடு, இனி எதையும் பேசவே கூடாது என்ற நிலைக்குத் தள்ளியிருக்கிறது.’’

இயக்குநர் சங்க விவகாரத்தில் பாரதிராஜா உங்கள் மீதும் சில குற்றச்சாட்டுகளை வைத்தார். அது குறித்து உங்கள் பதில் என்ன?

“இன்றைக்குள்ள இயக்குநர்கள் பலருக்கு பாதை போட்டுக் கொடுத்து, சினிமாவை கூண்டுக்குள்ளிருந்து வெளியே பறக்கச் செய்த மிகப்பெரிய புரட்சியாளர். அவருடைய படைப்புகள் பற்றி யாராவது தவறாகச் சொன்னார்கள் என்றால், அவர்களுடைய சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்கும் வேகம் எனக்குள் இருக்கிறது. அப்படிப் பேச யாருக்கும் அருகதை இல்லை. ஆனால் சங்கம் சார்ந்த விஷயங்களை வெளியே பேசவேண்டிய அவசியம் எதுவுமில்லை. இயக்குநர்களுக்கான பிரச்னைகள், சண்டைகளை பத்திரிகைகளின் மூலமாக பொது மக்களிடம் சொல்வதால் எந்த லாபமும் இல்லை. மக்களுக்கும் பயன் எதுவுமில்லை. சங்கத்தில் பேசித் தீர்க்கவேண்டிய விஷயம் அது. பாரதிராஜா அவர்களை ‘அப்பா’ என்று கூப்பிடுவது என் மனசாட்சிக்குத் தெரியும். அந்த மரியாதையை, உறவைச் சொன் னால் ஊர் என்னைப் பாராட்டும் என்பதற்காகச் சொல்லவில்லையே. எனக்குத் தோன்றியது. கூப்பிட்டேன். பார்க்கிறவர்களை எல்லோரையும் ‘அப்பா’ என்று கூப்பிட்டால் அந்த உறவுக்கு என்ன மரியாதை இருக்கும்? இயக்குநர் பாலசந்தர் சாருடனும் பழகுகிறேன், அவரை நான் ‘அப்பா’ என்று கூப்பிட்டது இல்லையே. பாரதிராஜா அவர்கள் இன்றும் எனக்கு அப்பாதான்.’’.

இரா.ரவிஷங்கர்.

படங்கள் : சித்ரம் மத்தியாஸ்

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.