Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூரியன் உதிக்குமுங்க ஈழத்தில் காரிருள் மறையுமுங்க…

Featured Replies

42 வருட சர்வாதிகாரத்தின் மீதான வெறுப்பே கடாபியின் வீழ்ச்சி

சூரியன் உதிக்குமுங்க ஈழத்தில் காரிருள் மறையுமுங்க… சரித்திரம் மாறுதுங்க எல்லாம் சரியா போயிடுங்க

அரபு நாடுகளில் சட்டத்திற்கு முரணாக ஆட்சியில் இருக்கும் சர்வாதிகார ஆட்சிகளை வீழ்த்துவதற்கான போராட்டம் லிபியாவுடன் முடிவடையவில்லை அது தனது பயணத்தைத் தொடர்கிறது என்று இன்றைய மேலைத்தேய பத்திரிகைகள் எழுதியுள்ளன.

மேலும் லிபியாவில் நேட்டோ கூட்டுப்படைகள் தாக்குதல்களை நடாத்தினாலும்கூட அங்கு ஆட்சி சரிவதற்கு பிரதான காரணம் கடாபியின் 42 வருடகால சர்வாதிகார ஒடுக்குமுறையே என்றும் சுட்டிக்காட்டியுள்ளன.

கேணல் கடாபி உண்மையாக ஒரு இஸ்லாம் நேசர் என்ற கோணத்திலேயே தனது ஆரம்பகால அரசியலை ஆரம்பித்தவர். அந்தப் பின்னணியில் முன்னேறிய அவரை கையில் குவிந்த பணம், அதிகாரம் என்பன ஒரு கட்டத்தில் முற்றாகவே மாற்றின.

2001 ல் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் இஸ்லாமியர்களுக்கு எதிராக திசை திரும்பியபோது இஸ்லாமிய நேசராக இருந்தால் இவரே அதற்கு பிரதான எதிர்ப்பாளராக இருந்திருக்க வேண்டும். பல அப்பாவி இஸ்லாமியர் கொல்லப்பட்டபோது இவர் சிறிய குரலையாவது கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இவரோ உறைந்த மௌனம் காத்தார். மேலும் அனைத்து இஸ்லாம் சக்திகளையும் கைவிட்டு, ரொனி பிளேயரோடு உறவு வைத்து மேலை நாடுகளின் நண்பராக மாறிக்கொண்டார். இஸ்லாமிய நாடுகள் இவருடைய அந்தர் பல்டியை ஆச்சரியமாகப் பார்த்தன.

அத்துடன் நிற்கவில்லை இத்தாலியின் பெற்றோலியத்தில் 22 வீதத்தை வழங்கினார், பிரான்சின் தேவையில் 15 வீதத்தை பூர்த்தி செய்தார். பிரிட்டனுக்கு எண்ணெய்க் குதங்களை வாரி வாரி வழங்கினார், அதன் மூலம் தனது சர்வாதிகார ஆட்சியை பாதுகாத்துக் கொண்டார். இதுபோலத்தான் மகிந்த ராஜபக்ஷ சீனாவுக்கு அம்பாந்தோட்டையையும், இந்தியாவுக்கு திருமலை எண்ணெய்க்குதத்தையும் வழங்கிய கதை உள்ளது.

மேலை நாடுகள் நம்பக்கம் என்ற துணிவில் கடாபியின் ஏழு மகன்மாரும், மகளும், அவர்களுடைய உளவுப் பிரிவினரும் நாட்டில் ஒரு காட்டுத்தர்பாரையே நடாத்தினார்கள்.

சிறீலங்காவில் மகிந்த ராஜபக்ஷ குடும்பம் போல, சிரியாவில் சர்வாதிகாரி ஆஸாட் குடும்பம்போல, பர்மாவில் ஜிந்தா சர்வாதிகார குடும்பம்போல தனது குடும்ப சர்வாதிகாரத்தை பலப்படுத்தினார். கடாபி என்பவர் இஸ்லாமிய நேசரோ, மேலைத்தேய எதிர்ப்பாளரோ அல்ல அதையெல்லாம் தாண்டி அதிகாரத்தையும் பணத்தையும் காக்க போராடும் ஒருவர் என்பதை அவருடைய கடைசிகால செயற்பாடுகள் தெளிவாக விளக்கின. வறுமை, அடாவடித்தனம், விடிவில்லாத நிலையில் இராணுவம் குவிந்து கிடந்தது லிபியாவில். நாட்டின் தேசிய வருமானத்தில் 95 வீதத்தை இராணுவத்திற்கே கொட்டி இறைத்தார் கடாபி.

சிறீலங்கா அரசு வடக்குக் கிழக்கில் இராணுவத்தை வைத்திருப்பதைப் போல இவரும் இராணுவத்தை வைத்து ஆட்சி வண்டியை ஓட்டினார். ஆனால் மக்கள் மனதில் இராணுவ சீருடைகளும், உளவுப்பிரிவுகளும் ஓங்காளிப்பையும், அருவருப்பையும் ஏற்படுத்தியதை கடாபி கவனிக்க மறந்தார்.

இன்று சிறீலங்கா அரசு மறுப்பதைப் போலவே மக்களுக்கு யாதொரு அதிகாரத்தையும் கொடுக்க முடியாது என்று மறுத்தார். மேலை நாடுகளின் அனைத்து புத்திமதிகளையும் புறந்தள்ளினார்.

ரூனிசியாவில் ஏற்பட்ட புரட்சி எகிப்து போய் அந்த வழியாக லிபியா வந்தபோது அதைத் தடுக்கும் வல்லமை மேலை நாடுகளிடம் இருக்கவில்லை. 42 வருடகால அநீதியில் இருந்து தங்களை விடுவிக்க மக்கள் விரும்பினார்கள். புதிய உலகத்திற்கு இத்தகையதொரு மாற்றம் தேவைப்பட்டதால் மேலைநாடுகளும் துணைக்குப் போயின.

மரத்தில் இருக்கும் பழங்களை ஒரே தரத்தில் அடித்து மடியில் போடக்கூடாது. விதை நெல்லை சமையலுக்கு எடுக்கக் கூடாது என்பதில் மேலை நாடுகள் கவனமாக செயற்பட்டன. ஏற்கெனவே கடாபி போன்ற சர்வாதிகாரிகள் தமது முதலீட்டை மேலை நாடுகளில் கொட்டி இறைத்துவிட்டார்கள். இரண்டாம் உலக யுத்தம்போல ஒரு யுத்தத்தை நடாத்தி இனி பணம் பறிக்க வேண்டிய தேவை இல்லை. இப்படிப்பட்ட மக்கள் போராட்டத்தின் மூலம் பறிக்க வேண்டிய பொருளாதாரப் பழங்களை மேலை நாடுகள் பறிக்க ஆரம்பித்துவிட்டன.

2001 ல் ஆரம்பித்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிவடைந்து இப்போது குடும்ப சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிரான போர் ஆரம்பித்துள்ளது. அடுத்து சிரிய சர்வாதிகாரி தனது சொத்துக்களையும் அதிகாரத்தையும் இழக்கவுள்ளார். இன்று உலகில் ஏற்பட்டுள்ள மாபெரும் பொருளாதார இடைவெளிகளை நிரவல் செய்ய இவர்களுடைய சொத்துக்களே உலகிற்கு உதவப்போகின்றன.

இந்திய தலைவர்கள் நாட்டை வறுகி சுவிஸ் வங்கியில் போடும்வரை பார்த்திருந்தன மேலை நாடுகள். இப்போது சுவிஸ் வங்கி தான் ஒரு இரகசிய வங்கி அல்ல என்று அறிவித்துள்ளது. இந்த அலை இந்தியாவிற்குள்ளும் அன்னா ஹர்சரேயின் ஊழல் போராட்டமாக நுழைந்துவிட்டது. இந்தியாவில் இனிமேல்தான் வேடிக்கைகள் ஆரம்பமாகும்.

இதுபோல மடைத்தனமாக கிறீஸ் மனிதனை அனுப்பி ஒரு மக்கள் போராட்டத்திற்கு வழி சமைத்துவருகிறது சிறீலங்கா இனவாத அரசு. கடந்த 60 வருடங்களாக ஈழத் தமிழ் மக்களின் மனதில் எழுந்துள்ள வெறுப்பு சிங்கள இராணுவத்தை அந்த மண்ணில் இருந்து அகற்றும் கடும் கோபத்திற்குள் போகமாட்டாது என்று அறுதியிட்டுக் கூற முடியாது. இரண்டு கிறீஸ் பூதங்களை அடித்துக் கொன்றதுபோல பல பூதங்களை மக்கள் துவம்சம் செய்யும் நாட்கள் நெருங்குகின்றன. இராணுவம் களமிறங்கினால் நேட்டோ குண்டு வீச்சு பலாலியிலும் இடம் பெற முடியாது என்று கூற முடியாது. அதற்கேற்ற போர்க்குற்றச்சாட்டு உலகளவில் சிறீலங்கா மீது வைக்கப்பட்டுவிட்டது.

கடாபியின் வீழ்ச்சி…

குடும்ப சர்வாதிகாரத்தை நடாத்தும் அத்தனை தலைவர்களுக்கும் சாவு மணியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது. 21 ம் நூற்றாண்டிற்கான உலகத்தின் புதிய மாற்றங்களுக்கு வழி கொடுக்காவிட்டால் அனைவருமே கடாபி போல மக்களால் தூக்கி வீசப்படுவார்கள். மக்கள் எழுச்சியை கிறீஸ் பூதங்களால் தடுக்க முடியும் என்றால் கடாபி அதை எப்பொழுதோ செய்திருப்பார். இதை சிங்கள அரசு புரிய வேண்டும். இன்று போராளிகள் மிதித்துக் கொண்டிருக்கும் கடாபியின் தலை ஒன்றல்ல பானை நிறைய கிடக்கும் பல்லாயிரம் சர்வாதிகார தலைகளுக்கு ஒரு பதச்சோறுதான்.

கடாபி போல சிங்கள இனவாதமும் வீழ்ச்சியடையும் நாட்கள் தொலைவில் இல்லை..

கடாபியின் வீழ்ச்சியில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கான நல்ல காலமும் மெல்லிய தென்றலாக வீசுவது தெரிகிறது..

மக்கள் விட்ட கண்ணீர் கூரிய வளைவிட மோசமானது..

மேலை நாடுகளுக்கு கடாபி கொட்டிய பணத்தையா சிறீலங்கா கொட்டப்போகிறது. பாவம் தனது நாட்டை சீனனுக்கும், வட இந்தியனுக்கும் தாரைவார்க்கிறது. இப்படிப்பட்ட தாரை வார்ப்புக்களால் மக்கள் வெறுப்பை மூடிவைத்த காலம் மலையேறி வருகிறது. புகையை போர்வையால் மறைக்க முடியாது..

லிபியா போல சிறீலங்காவிலும்…

சூரியன் உதிக்குமுங்க ஈழத்தில் காரிருள் மறையுமுங்க… சரித்திரம் மாறுதுங்க எல்லாம் சரியா போயிடுங்க…

http://www.alaikal.com/news/?p=80260

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தற்கால அரசியல் ஆரய்வு கட்டுரை நன்றி அகூதா இணைப்பிற்கு. கட்டாயம் "லிபியா போல சிறீலங்காவிலும்…

சூரியன் உதிக்குமுங்க ஈழத்தில் காரிருள் மறையுமுங்க… சரித்திரம் மாறுதுங்க எல்லாம் சரியா போயிடுங்க…"

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தற்கால அரசியல் ஆரய்வு கட்டுரை நன்றி அகூதா இணைப்பிற்கு. கட்டாயம் "லிபியா போல சிறீலங்காவிலும்…

சூரியன் உதிக்குமுங்க ஈழத்தில் காரிருள் மறையுமுங்க… சரித்திரம் மாறுதுங்க எல்லாம் சரியா போயிடுங்க…"

அது சரி உடையார் அதற்க்கு முதலே ஒற்றுமையாய் இருப்போம் என சொல்லிக்கொண்டே தமிழர்கள் அடிபட்டு செத்திடுவார்கள் போல் உள்ளதே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.