Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா கொடுத்த அழுத்தமே அவசரகாலச் தடைச் சட்டம் நீக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா கொடுத்த அழுத்தமே அவசரகாலச் தடைச் சட்டம் நீக்கம்.

28 வருடங்களாக இலங்கைத் தீவில் நடைமுறையிலிருந்த அவசரகாலச் தடைச் சட்ட நீக்கத்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்கா இந் நடவடிக்கை ஒரு சாதக மனப்பாண்மையை வளர்க்கும் செயலென பாராட்டியுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரான திருவாட்டி விக்ரோறியா நுலாண்ட் “நாங்கள் ராஜபக்ச பாராளுமன்றில் அவசரகாலச் சட்டத்தை நீக்குவது குறித்து பரிந்துரைத்ததை வரவேற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இது ஒரு ஆரோக்கியமான நடவடிக்கை. எங்களின் தென்னாசியாவிற்கான இராஜதந்திரச் செயலரான றொபேட் ஈ.பிளேக் அவர்களை ஆகஸ்ட் 29 முதல் ஆகஸ்ட் 31 வரை இலங்கை செல்லவும் வைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் அவர் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் தொடர்பாகக் பேசுவதற்கு தமிழ்க் கட்சிகளுடன் சந்திப்பை மேற்கொள்வார் என்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வார் என்றும் தெரிவித்தார்.

அரச, அரச சார்பற்ற மற்றும் கட்சிகளுடன் விரிவான பேச்சுக்களில் ஈடுபடுவார் என்றும் நாங்கள் சிறீலங்கா அரசை மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மதிப்பது தொடர்பாகவும் கடந்த காலத்தில் அது தொடர்பாக நடைபெற்றவை தொடர்பாகவும் தேசிய ரீதியாக விசாரிக்கச் சொல்வோம் எனவும் தெரிவித்தார்.

அவர்கள் அவ்வாறு தங்களால் அதைச் செய்ய முடியாவிட்டால் இந்த விவகாரத்தில் சர்வதேசம் தலையிடும் என்பதை றொபேட் பிளேக் அவர்கள் ராஜபக்சவின் ஆட்சிக்குத் தெரிவிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சாவின் இந்நடவடிக்கை குறித்துக் கருத்துத் தெரிவித்த சர்வதேச ஊடகமொன்று தமிழர்களுடான இறுதிப்போரில் சிறீலங்கா மேற்கொண்ட நடைமுறைகள் குறித்து அமெரிக்கா கொடுத்த அழுத்தமே அவரை இச்சட்ட நீக்கத்திற்கு இட்டுச் சென்றுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

http://www.pathivu.c...ticle_full.aspx

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகநாடுகள் கேட்டுக்கொண்டபடி மனிதாபிமான சீர்திருத்தங்களை விரைந்து சிறிலங்காவில் நடைமுறைப்படுத்துவதாயின் அதற்குப் பிரதியுபகாரமாக அந்நாடுகளில் இருக்கும் பெயர்குறிப்பிட்ட விடுதலைப்புலி ஆதரவு அமைப்புகளையும் தனிநபர்களையும் கண்காணிக்கவும் தேவைப்பட்டால் சட்டநடவடிக்கை எடுக்கவும் உதவி வழங்கப்படும் என்ற உடன்படிக்கை எட்டப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனவே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள நம்மவர் அமைப்புகள் மற்றும் தனிநபர் ஆகியோர் மீது மேற்குலக நாடுகளின் பொலிஸ் படை பாயலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.