Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசாரணை முடியாமல் தண்டனை? -குமுதம் ரிப்போட்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

16.jpg 04.09.11 மற்றவை ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவரின் மரண தேதி குறிக்கப்பட்டு விட்டது. ராஜிவ் கொலை வழக்கில் இவர்களுக்கு உண்மையில் பங்கு இருந்ததா, விசாரணை முறையாக நடைபெற்றதா? என்கிற கேள்விகளை ஒதுக்கி விட்டு இறந்தவர் முன்னாள் பிரதமர் என்கிற ஒற்றை காரணத்தை முன்வைத்து அமைதியாக இருக்கிறோம்.

மரணம் இன்றோ, நாளையோ தனக்கு நடக்கும் என்கிற பதைபதைப்பில் இருபது ஆண்டுகளாக தூக்குக் கயிற்றின் அடியில் நிற்கும் மூவரும் தங்கள் பக்கத்து நியாயத் தையும் கேட்டு விட்டு தீர்ப்பு எழுதுங்கள் என கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

ராஜிவ் காந்தியைக் கொல்லப் பயன்படுத்திய வெடிகுண்டுக்கு 9 வாட் கொண்ட இரண்டு பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பதுதான் தூக்குக் கயிற்றின் முன் நிற்கும் பேரறிவாளன் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு.

விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவு பொறுப்பாளராக சாந்தன் இருந்தார். ராஜிவ் கொலை வழக்கில் சிவராசனுக்கு உதவி செய்வதற்காக சாந்தன் அனுப்பி வைக்கப்பட்டார். ராஜிவ் கொலையானதும், கோடியக்கரை வழியாக இலங்கைக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டார். அடுத்த இருபத்தைந்து நாட்கள் சாந்தனை தொடர்ந்து கண்காணித்து, கைது செய்தோம்.

ராஜிவ் காந்தி கொலைச் சதிக்காக யாழ்ப்பாணத்தில் சிவராசனும், முருகனும் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். முருகன்தான் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் என்கிற இரு இளைஞர்களை சதி வேலைகளுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தார். 91 மார்ச் மாதம் சதிக்காக முருகன் சென்னை வந்தார். பாக்கியநாதன் வீட்டில் அவரோடு நளினியும், முருகனும் கொலை பற்றி விவாதித்தார்கள். பிறகு மனித வெடிகுண்டாக செயல்பட்ட தனு, சுபாவோடு நளினி வீட்டில் தங்கினார். எல்லா சதிச்செயலும் முரு கனுக்குத் தெரிந்தே நடந்தது. நளினி முருகனைக் காதலித்தார். அதை வைத்துக் கொண்டு சதிச்செயலில் உடன்பட சாந்தனும், முருகனும் நளினியை வற்புறுத்தினார்கள்’’ இதுதான் முருகன், சாந்தன், நளினி மீதான குற்றச்சாட்டு.

ஆனால், விசாரணை நடைபெற்ற விதத்திலும், விசாரணை அறிக்கையிலும் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருப்பதை விசாரணையை கவனிக்கும் எவராலும் புரிந்து கொள்ள முடியும். ராஜிவ் கொலை குறித்த சதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருக்கும் தெரியும் என்பது தான் சி.பி.ஐ. வைக்கும் வாதம்.

விடுதலைப் புலிகள்தான் ராஜிவை கொலை செய்தனர் என்பதற்கு ஆவணமாக ஒயர்லெஸ் தகவல் ஒன்றை புலனாய்வுத் துறையினர் வைத்தனர். ராஜிவ் கொலை செய்யப்படுவதற்கு 14 நாட்கள் முன்பு சிவராசன் சென்னையில் இருந்து பொட்டு அம்மானுக்கு அனுப்பிய செய்தி தான் அது. அதில், ‘‘நமது நோக்கம் எங்கள் மூவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது’’ என்று குறிப்பிடுகிறார்.

அதாவது, சிவராசன், தனு, சுபா மூவரைத் தவிர வேறு யாருக்கும் ராஜிவ் கொலை பற்றித் தெரியாது. இதை நீதிபதி வாத்வா தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருக்கிறார். கு ண்டுவெடிப்பு நிகழ்ந்த மறுதினம் அதாவது 22-ம் தேதி, பொட்டு அம்மான் சிவராசனுக்கு அனுப்பிய செய்தியில், ‘‘உயர்நிலைகளில் இருக்கும் நம்மவர்களுக்குக் கூட நமக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு எதுவும் இல்லை என்பதைத் தெரியப்படுத்தினோம்’’ என்று குறிப்பிடுகிறார். அதாவது, விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்களுக்குக் கூட இந்தக் கொலை குறித்து தெரியாது என்று சொல்கிறார். இதையும் நீதிபதி வாத்வா, தடா நீதிமன்றத்தின் கீழ் விசாரிப்பது தொடர்பான வழக்கில் பதிவு செய்கிறார்.

மனித வெடிகுண்டாகச் செயல்பட்ட தனு சம்பவ இடத்திலேயே இறந்து போகிறார். சிவராசன், சுபா ஆகியோர் கமாண்டோ படையிடம் சிக்காமல், தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

தன்னிடம் விசாரணை நடந்த விதத்தை பேரறிவாளன் இப்படிக் குறிப்பிடுகிறார். ‘‘ராஜிவ் கொலை நடந்து 20 நாட்களுக்குப் பின்னர் சென்னை பெரியார் திடலில் என் பெற்றோர் என்னை விசாரணைக்கென சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தனர். மல்லிகை அலுவலகத்தின் மாடியில் என்னை அழைத்துச் சென்றனர்.அங்கிருந்த அதிகாரிகள் என் கல்வித்தகுதி பற்றிக் கேட்டார்கள். ‘எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’ எனக் கூறியதும், ‘நீதான் வெடிகுண்டு செய்தவனா?’ எனக் கேட்டார்கள். எனது படிப்பு வெடிகு ண்டோடு எப்படி தொடர்புடையது என புரியாமல் தவித்தேன்.

நான் போட்டிருந்த சட்டையின் கீழ்ப்பக்கம் சிறுதுளை இருந்தது. ‘இந்த துளை குண்டுவெடிப்பில் ஏற்பட்டது தானே?’ எனக்கேட்டபோது நான் மறுத்தேன். ‘சரியான முறையில் கவனித்தால் ஒப்புக்கொள்வான்’ எனக்கூறி இரண்டு ஆய்வாளர்களிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் என்னை கடும் சித்திரவதை செய்தார்கள்.

மறுநாள் மல்லிகை அலுவலகத்தின் சித்திரவதைக் கூடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். அங்கு எனக்கு குடிநீரோ, உணவோ மறுக்கப்பட்டது. நாற்காலியில் அமர்வது போன்ற பாவனையில் அமர வைத்து பின்னங்காலில் அடிப்பார்கள். பைப்பில் சிமெண்ட் அடைத்து என் முழங்கையில் அடித்துத் துன்புறுத்தினார்கள். கீழே அமர்ந்து காலை 180 டிகிரிக்கு இருபுறமும் விரிக்கச் சொல்வார்கள். ஷூ கால்களால் சுண்டு விரலில் மிதிப்பது, நகத்திற்கிடையில் ஊசிகளை குத்துவது என தாங்க முடியாதவாறு சி த்திரவதை செய்தார்கள். அதில் ஒருவர், ‘நாடு விட்டு வந்த அகதி எங்க தலைவர கொன்னுடுவியா’ என்று கேட்டார்.

என்னுடைய சொந்த ஊர் வேலூர் மாவட்டம். நான் யாரென்றே தெரியாமல் அவர்கள் நடந்து கொண்டார்கள் என்பதற்காக இதைச் சொல்கிறேன். இந்த சட்டவிரோதக் காவல் எட்டு நாட்கள் தொடர்ந்தது. 19-ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டேன். நாங்கள் வாயே திறக்கக்கூடாது என்று மிரட்டினார்கள். ஒருமாதம் காவல் நீட்டிப்பு வாங்கப்பட்டு, மீண்டும் சித்திரவதை தொடர்ந்தது. மீண்டும் காவல் நீட்டிப்பு, மீண்டும் சித்திரவதை....

3.08.1991 அன்று பூந்தமல்லி கிளைச்சிறையில் அடைத்தார்கள். காவல் கண்காணிப்பாளர் தியாகராசன் என்னைத் துன்புறுத்தி பல பக்கங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். அதைப் படிக்கக்கூட அனுமதிக்கவில்லை. கையெழுத்துப் போட்டால் விட்டு விடுவதாகவும் கூறினார்கள். என்னைக் கைது செய்திருந்த ‘தடா’ சட்டம் அது தமிழகத்திற்கே புதிது’’ என்று தான் அனுபவித்த சித்திரவதைகளையும், மிரட்டப்பட்டதையும் சொல்கிறார் பேரறிவாளன்.

பெல்ட் பாம் தயாரிக்க பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் பெல்ட் பாம் எங்கே, யார் தயாரித்தார்கள் என்பது இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.பெல்ட் பாம் தயாரித்தவர்கள்,ஒரு சாதாரண பேட்டரிக்காக ஒரு இளைஞரை நம்பினார்கள் என்பது முரணாக இல்லையா?

பேரறிவாளன் கொடுத்ததாகச் சொல்லப் படும் வாக்குமூலத்தில் மே முதல் வாரம் அவர் பேட்டரி வாங்கியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பேட்டரி விற்ற கடைக்காரர் மொய்தீன் என்பவரின் வாக்குமூலத்தில் மே இரண்டாம் வாரம் பேட்டரி வாங்கியதாக அறிக்கையில் உள்ளது.

சாந்தன் விஷயத்திலும் முரண்பாடுகள் கொட்டிக் கிடக்கின்றன. முதலில் இந்த வழக்கில் தொடர்புடையவர் என்று திருச்சி சாந்தன் பெயர் சொல்லப்பட்டது. தான் தேடப்ப டுகிறோம் என்று தெரிந்ததும் அவர் தற்கொலை செய்து கொள்கிறார். திடீரென சின்ன சாந்தன் என்று கூறி இவர் பெயரை இணைத்து,திருச்சி சாந்தன் பெரிய சாந்தனாக மாற்றப்பட்டு, அவர்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் சின்ன சாந்தன் மீது சொல்லப்பட்டன.

ராஜிவ் கொலை நடந்த மறுதினம், சிவராசன், நளினி, சுபாவோடு வெள்ளை உடையில் சாந்தன் கிண்டி கத்திப்பாரா சாலை வழியாகச் சென்றதாக விசாரணை அறிக்கையில் உள்ளது. சி.பி.ஐ. அதிகாரி ரகோத்தமன் வெள்ளை உடையில் சென்ற அந்த நான்காவது நபர் யாரென இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை என 2005-ல் ஒரு பேட் டியில் குறிப்பிடுகிறார்.

ராஜிவ் கொலைக்கு இரு தினங்களுக்கு முன்பாக, நளினியும், முருகனும் திருப்பதி கோயிலுக்குச் சென்றதாக நளினியின் வாக்குமூலம் உள்ளது. அதே தினத்தில் திருச்சி சாந்தனைச் சந்திக்க முருகன் சென்றதாக சி.பி.ஐ. பதிவு செய்த முருகனின் வாக்குமூலம் சொல்கிறது.இருவரும் தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் வில்லிவாக்கம் வீட்டு உரிமையாளர் அந்த தினத்தில் இருவரும் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லவில்லை.வீட்டிற்குள்ளேயே இருந்தனர் என்று தன் வாக்குமூலத்தில் தெரிவிக்கிறார். அதிகாரிகள் தங்கள் விசாரணையில் நளினி, தனு, சுபா மூவரும் மகாபலிபுரத்திற்கு சுற்றுலா சென்றனர் என்று உள்ளது. ஒரே நாளில் ஒரே நபர் இத்தனை இடங்களில் இருந்திருக்க முடியுமா? என்கிற முருகனின் கேள்விக்கு பதில் சொல்ல யாருமில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கேட்கும் கேள்வி தவிர, குற்றம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைகளும் இன்னமும் முடியவில்லை என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது. 1998-ல் பா.ஜ. ஆட்சியில் ராஜிவ் கொலை தொடர்பாக, வர்மா கமிஷன், ஜெயின் கமிஷன் என இரண்டு கமிஷன்கள் அமைக்கப்பட்டன.

இதில் ஜெயின் கமிஷன் குண்டுவெடிப்பு தொடர்பாக, 2 ஆயிரம் பேரிடம் வாக்குமூலங்களைப் பெற்றது. அதன்படி, சந்திராசாமி 1991 மே 20-ம் தேதி ‘‘நாளை ஒரு நல்ல காரியம் நடக்கப் போகிறது’’ என்று சொல்லி ஆசிரமத்தில் அனைவருக்கும் இனிப்பு கொடுத்துள்ளார். இதை ஜெயின் கமிஷன் 300 பேரிடம் வாக்குமூலம் பெற்று உறுதிப்படுத்தியுள்ளது. இனிப்பின் பின்னணி என்ன என்பது இதுவரை விசாரிக்கப்படவில்லை.

பெங்களூர் ரங்கநாத் என்பவர் ஜெயின் கமிஷன் முன்பு ஆஜராகி, ‘‘தனு, சிவராசன் இருவரும் பெங்களூரில் தங்கியிருந்த போது அடிக்கடி போன் செய்வதற்காக வெளியே போவார்கள். கேட்டபோது. சந்திராசாமி எங்களுக்கு பக்கபலமாக இருப்பதாக உறுதி அளித்துள்ளார் என்று கூறியதாகத் தெரிவித்தார்.

தவிரவும், ராஜிவ் காந்தியைக் கொல்லப் பயன்படுத்திய பெல்ட் பாமை சந்திராசாமி ஆசீர்வதித்துக் கொடுத்ததாகவும், சிவராசனை நேபாளம் அனுப்ப உறுதியளித்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஜெயின் கமிஷன் முன்பு அப்படியே உள்ளன.

ஜெயின் கமிஷன் சந்திராசாமி, சுப்பிரமணியன் சுவாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் தெரிவித்தது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட ப ல்நோக்கு புலனாய்வு விசாரணை இன்னமும் முடிவடையவேயில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பதால், தடா சட்டம் பொருந்தாது என்று உச்ச நீதிமன்றமே சொன்ன நிலையிலும், இவர்கள் மூவரும் தடா சட்டத்தின் கீழ் இன்று தூக்குக்கு காத்திருக்கிறார்கள்.

‘‘பல்நோக்குப் புலனாய்வு விசாரணையின் கீழ் விசாரணையைத் தொடர்வது என்று முடிவெடுத்து விட்டீர்கள். எங்களை தூக்கிலிட்டு விட்டால் விசாரணையை எப்படித் தொடர்வீர்கள்? ஒருவேளை நாங்கள் நிரபராதிகள் என்று முடிவானால் எங்கள் உயிரை எப்படி மீட்டுத் தருவீர்கள்?’’என்கிற மூவரின் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்.

ப்ரியா தம்பி

15.jpg 04.09.11 மற்றவை

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி மேடைகளில் அனல் பறக்கப் பேசி வருகிறார் வழக்கறிஞர் சங்கரசுப்பு. அவரது சட்டரீதியான வாதங்கள் போராட்டக் களத்தில் இருப்போருக்கு புதுத் தெம்பைக் கொடுத்துள்ளது.

வழக்கறிஞர் சங்கரசுப்புவிடம் பேசினோம்.

“மூவரையும் தூக்கில் போடுவது என்பது அரசியலமைப்புச் சட்டம் 21-ன்படி வாழும் உரிமையைப் பறிப்பதாகும். 91-ம் வருடம் மே 21-ம் தேதி ராஜிவ் படுகொலை நடந் தது. குற்றவாளிகள் என்று சொல்லப்பட்டவர்கள் மீது தடா சட்டத்தின்கீழ் 60 நாள் விசாரணை நடந்தது. குற்றவியல் சட்டம் 167-ன்படி 15 நாள்தான் விசாரிக்கப்பட வேண்டும். இவர்களை அடித்துத் துன்புறுத்தி 59-வது நாள்தான் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கினர்.

இந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் பல பக்கங்களில் நளினியின் கையெழுத்து வாங்கப்படவில்லை. இது சட்டப்படி செல்லாது. இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை மீது உச்ச நீதிமன்றத்தில் வாதம் நடந்தபோது நீதிபதிகள் ராமசாமி,வெங்கட்ராம ரெட்டி ஆகியோர், ‘இயற்கை நீதிக்கு முரணான வாக்குமூலம் இது. 1872-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தின்படி வாங்கப்பட்ட வாக்குமூலத்தை 100 ஆண்டுகளுக்குப் பிறகும் பயன்படுத்தக் கூடாது’ எனப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், ராஜிவ் படுகொலை வழக்கில் 26 பேருக்கு கீழ் நீதிமன்றம் விதித்த தீர்ப்பைப் படித்துப் பார்த்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘இந்தத் தீர்ப்பு நீதித்துறை நடத்திய இனப்படுகொலை’ என வர்ணித்தனர். இந்த வழக்கில் ஆஜரான என்.நடராஜனின் வாதத்தையும் நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு நான்கு பேருக்கு மட்டும் தூக்கு தண்டனை விதித்தனர். இதன் பிறகு நடந்த வழக்கில் முதல் குற்றவாளி எனச் சொல்லப்படும் நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தனர்.

இதற்குக் காரணமாக நளினி அவரது தம்பிக்கு எழுதிய கடிதத்தைச் சொல்கிறார் நீதிபதி கே.டி.தாமஸ். அந்தக் கடிதத்தில், ‘கொலைச் செய்தி பற்றி சிவராசன், பொட்டு அம்மான், பிரபாகரன் ஆகியோருக்குத் தெரியும். ஸ்ரீபெரும்புதூர் சென்ற பிறகுதான் இந்தக் கொலைச் சதியே எனக்குத் தெரியும். நான் பின்வாங்கினால் என்னைக் கொன்று விடுவார்கள்’ எனக் கூறியுள்ளதாகத் தெரிவித்தனர். இதைக் காரணமாக வைத்து தூக்கு தண்டனையை ஆயுளாகக் குறைத்தார்கள். ‘தடா சட்ட வாக்குமூலத்தை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது’ என நீதிபதி தாமஸும் பதிவு செய்திருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தில் தூக்கு தண்டனை உறுதி என்று தீர்ப்பு வந்ததும் 99-ம் ஆண்டே ஜனாதிபதிக்குக் கருணை மனு அனுப்பியுள்ளனர். இந்தக் கருணை மனு 11ஆண்டுகளுக்குப் பிறகு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதைக் காரணமாக வைத்தே இவர்களின் தூக்கு தண்டனையை ஆயுளாகக் குறைக்க முடியும்.

அதேபோல், கூத்தாநல்லூரில் 73-ம் ஆண்டு காஜாமொய்தீன் என்பவர் விஷ ஊசி போட்டு பல பேரைக் கொன்று நகை,பணத்தைக் கொள்ளையடித்தார் என்பது வழக்கு. இவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை மீதான கருணை மனு கால தாமதத்தைக் காரணமாக சுட்டிக்காட்டி நீதிபதிகள் ராமலிங்கம், அருணாச்சலம் ஆகியோரைக் கொண்ட உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தண்டனைக் குறைப்பு செய்தது.

செங்கல்பட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரைக் கொன்ற வழக்கில் ஜெயப்பிரகாஷ் என்பருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவருக்கும் கருணை மனு காலதாமதத்தைக் காரணம் காட்டி ஆயுள் தண்டனையாகக் குறைத்தார்கள்.

மேலும், ஸ்ரீராம் என்ற சிறுவனை ஐந்து லட்ச ரூபாய் பணத்திற்காகக் கடத்திக் கொன்ற புஷ்பராஜ், கோபி கிருஷ்ணன், மோகன் ஆகியோரில் முதலாம் நபருக்கு ஆயுளும், மற்றவர்களுக்குத் தூக்கும் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கும் கருணை மனு காரணம் காட்டப்பட்டது.

இந்திராகாந்தி வழக்கில் ‘சதி நிரூபிக்கப்படாத வரையில் தூக்கு தண்டனை கொடுக்கக் கூடாது. சூழ்நிலை சாட்சிகளை யார் வேண்டுமானாலும் ஏற்படுத்தலாம். இதன் அடிப்படையில் தூக்கு தண்டனை கூடாது’ எனத் தீர்ப்பில் கூறியிருக்கிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சந்திரசூட். ராஜிவ் கொலை வழக்கில் சூழ்நிலை சாட்சிகளை வைத்துத்தான் தண்டனை வழங்கியிருக்கிறார்கள். கொலைச் சதியில் இவர்களுக்கு நேரடிப் பங்களிப்பு எதுவும் இல்லை.

ராஜிவ் படுகொலை தமிழக அரசின் எல்லைக்குள்தான் நடந்தது. குற்றம் சுமத்தப்பட்டவர்களும் தமிழர்கள்தான்.இவர்களது தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் அரசியலமைப்புச் சட்டம் 161-ன்படி மத்திய அரசு, தமிழக அரசு, ஆளுநர் ஆகியோருக்கு உள்ளது.

முதல் குற்றவாளி என்று சொல்லப்பட்ட நளினிக்கு கொலைச் சதியில் நேரடிப் பங்கு இல்லை என்ற கடிதத்தை ஆதாரமாகக் கொண்டே தண்டனைக் குறைப்பு நடந்தது. இந்த வழக்கில் பேரறிவாளன் 18-வது குற்றவாளி என்பதையும் நாம் பார்க்க வேண்டும். நளினிக்குப் பொருந்தும் தீர்ப்பு பேரறிவாளனுக்குப் பொருந்தாதா?’’ என்று கேட் கிறார் சங்கரசுப்பு.

படங்கள்: ஞானமணி

ஆ.விஜயானந்த்

நம்பிக்கையளிக்கும் உதாரணம்!

மூன்று முறை தூக்குக் கயிற்றின் முன் சென்று, மேல்முறையீடு, கருணை மனு அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், 24 மணிநேரத்தில் உயிர் காப்பாற்றப்பட்ட கட் டபொம்மனின் நேரடி வாரிசான குருசாமி இப்போது ஒரு நம்பிக்கையளிக்கும் உதாரணம்.

இந்த வழக்கில், குருசாமிக்காக வாதாடிய வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் என்ன சொல்கிறார்?

‘‘குடும்பச் சண்டையில், மாமனார் ஆயுதத்தோடு தாக்க வரும்போது, தன்னை தற்காத்துக் கொள்ள குருசாமி நடத்திய சண்டையில், குருசாமியின் மாமனார் இறந்து போனார். இந்த வழக்கில் திருநெல்வேலி அமர்வு நீதிமன்றமும், மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றமும் குருசாமிக்கு தூக்குத் தண்டனை விதிக்கிறது. உச்ச நீதிமன்றமும் இதையே உறுதி செய்தது.

1984 ஷூன் 21-ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என உத்தரவு வெளிவந்தது. தூக்குக்கு இரு நாட்களுக்கு முன்பு வைகோவும், நானும் வழக்கறிஞர் வானமாமலையை சந்தித்தோம். சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் குருசாமியை தந்தி அனுப்பச் சொன்னோம். அந்த தந்தியையே ரிட் மனுவாக பாவித்து, தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை வழங்கப்பட்டது.

அதன்பின், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தேன். அதில் குருசாமியின் நன்னடத்தை குறித்து பாளையங்கோட்டை ஷெயிலர்களும் சிறைக்கைதிகளும் தந்த சான்றிதழ்களை இணைத்திருந்தேன். அதன்படி குருசாமியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தாமதம் ஆனால்,அதுவே தண்டனைதான் என்று ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பையும் குருசாமி வழக்கில் நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள்’’ என்றார் ராதாகிருஷ்ணன்.

- ரஜினி

தங்களது தவறுகள் உலகிற்குத் தெரியாமல இருப்பதற்குத் தேவை இவர்களைத் தூக்கிலிடுவது. இதில் விசாரணை முடிந்தாலென்ன? முடியாவிட்டாலென்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.