Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் சிக்கப்போகும் அழகிரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

01.jpg 08.09.11 கவர் ஸ்டோரி

முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அனைவரும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது எதிர்பாராத ஒன்று. யாரும் கொலை செய்யவில்லை என்றால்... தா.கிருட்டிணனே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்துகொண்டாரா?’

தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா எழுப்பிய இந்தக் கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியது. ‘குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பேன்’ என தேர்தல் வாக்குறுதியும் அளித்தார். இதன்படி, வாக்குறுதியை நிறைவேற்ற போலீஸாரும் தீவிரம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

கடந்த 2001-ம் ஆண்டு தி.மு.க.விலிருந்து அழகிரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் செல்வாக்கு சரிந்திருந்தது. மதுரையில் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் செல் வாக்கும் சிவகங்கையில் ‘தா.கி.’ என்று தி.மு.க.வினரால் அன்பாக அழைக்கப்படும் தா.கிருட்டிணனின் செல்வாக்கும் ஓங்கியிருந்தது.

இந்நிலையில், 2003-ம் ஆண்டு தி.மு.க. உள்கட்சித் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் இருந்துதான் அழகிரி ராஜ்ஜியத்துக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்ட அழகிரி, இந்த தருணத்துக்காகவே காத்திருந்தார்.

உள்கட்சித் தேர்தலில் தனது ஆதரவாளர்களை நிறுத்தி வெற்றி பெற வைத்து, தனது ‘பவரை’ கட்சி மேலிடத்துக்குக் காட்டவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கினார்.

சிவகங்கையின் மாவட்டச் செயலாளராக தனது ஆதரவாளர் சிவராமனைக் கொண்டு வர அழகிரி கடும் முயற்சி செய்தார். இதற்கு தா.கி முட்டுக்கட்டையாக இருந்தார். பெரியகருப்01a.jpgபனை மாவட்டச் செயலாளராக கொண்டு வருவதற்கு அவர் வரிந்துகட்டிக் கொண்டு இறங்கினார்.

இந்த விவகாரத்தில் தா.கி. மற்றும் அழகிரிக்கு இடையே மறைமுகமாக நடந்த மோதல் வெளிப்படையாக நடக்க ஆரம்பித்தது. கட்சியினர் கலந்து கொள்ளும் கூட் டங்களிலும் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் அளவுக்கு மோதல் உருவானது.

இந்தப் பஞ்சாயத்து, கட்சித் தலைமை வரை போனது. அழகிரி விஷயத்தில் குறுக்கிட கட்சித் தலைமை ஆர்வம் காட்டவில்லை. நாளுக்கு நாள் அழகிரியின் ஆதிக்கம் அதிகமானதால், நொந்து போன தா.கி., தலைமைக்கே புகார் செய்தார். அப்போதும் இந்தப் பிரச்னை கண்டுகொள்ளப்பட வில்லை.

தலைமை மௌனம் சாதிப்பதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தது அழகிரி கோஷ்டி. இதனையடுத்து, அழகிரியின் நடவடிக்கை குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு பல கடிதங்கள் எழுதினார் தா.கிருட்டிணன். அந்தக் கடிதங்களும் குப்பைத் தொட்டிக்கே சென்றது.

இரு தரப்பிலும் கோஷ்டி அரசியல் உச்சத்தை அடைந்த நிலையில்தான் தா. கி. கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்.

20.5.2003 அன்று அதிகாலை நடைப்பயிற்சிக்குச் சென்ற அவர், மர்ம நபர்களால் கண்டந்துண்டமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சராக இ ருந்தவரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தா.கி. படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தக் கொலை வழக்கில் அழகிரி முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். துணை மேயர் மன்னன், எஸ்ஸார் கோபி, முபாரக் மந்திரி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மதுரை அண்ணாநகர் போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. தமிழகத்தில் இந்த வழக்கு முறையாக நடக்காது, இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என முத்துராமலிங்கம் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இதனையடுத்து, இந்தக் கொலை வழக்கு ஆந்திர மாநிலம், சித்தூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

‘‘இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் போடப்பட்டுள்ளது’’ என்று கூறி, அழகிரி உள்ளிட்ட 13 பேரையும் சித்தூர் நீதிமன்றம் விடுதலை செய்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, இந்தத் தீர்ப்பை கடுமையாக விமர்சித்தார். ‘யாருமே கொல்லவில்லை என்றால், தா.கிருட்டிணனே தானே கத்தியை எடுத்து கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டாரா?’ என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், இந்த வழக்கிற்காக ஆரம்பம் முதல் போராடிவரும், தி.மு.க .இளைஞரணியின் முன்னாள் அமைப்பாளரும், தற்போதைய அ.தி.மு.க. வழக்கறிஞருமான பசும்பொன் பாண்டியனிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம்.

‘‘அழகிரி தன்னை மிரட்டியதாக கருணாநிதிக்கே பல கடிதங்களை எழுதியுள்ளார் தா.கி. இந்நிலையில், கூலிப்படையை வைத்து அவரை அந்த முக்கியப் புள்ளிதான் கொலை செய்தார் என்பது ஊர் அறிந்த விஷயம். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது இந்த வழக்கு முறையாக நடக்காது என்று தான் வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டது.

அதிகாரத்தைக் கையில் வைத்திருந்ததால், சாட்சிகளை மிரட்டி பிறழ் சாட்சிகளாக மாற்றி இந்த வழக்கில் இருந்து அழகிரியும், மற்றவர்களும் எளிதாகத் தப்பியுள்ளனர்.

இந்த வழக்கில் தா.கி.யின் மனைவி பத்மாவதி, தம்பி ராமையா மற்றும் அரசு சாட்சிகள் உட்பட 131 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

‘என் கணவரைக் கொலை செய்தவர்களை கடவுள் தண்டிப்பார்’ என்று கூறி தா.கி.யின் மனைவி பத்மாவதி நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரவில்லை. தா.கி.யின் தம்பி ராமையாவும், அவரது குடும்பத்தினரும் ஆளும் கட்சியினரால் கடுமையாக மிரட்டப்பட்டனர்.

நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வராமல் இருப்பதற்காக தா.கி. குடும்பத்தார் சிலருக்கு கட்சியில் பதவிகள் தரப்பட்டது. இதுதவிர, அரசு ஊழியர்களாக இருக்கும் சாட்சிகளும் மிரட்டப்பட்டனர்.

google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

முக்கிய சாட்சிகள் எல்லாம் ‘பல்டி’ அடிக்கவே, இந்த வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அதன்பிறகு, தமிழக அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவில்லை. ஏன் மேல்முறையீடு செய்யவில்லை என்று கேட்டபோது, ‘இந்த வழக்கு மேல் முறையீடு செய்ய உகந்தது அல்ல’ என்று ஆந்திர அரசு வழக்கறிஞர் கூறிவிட்டார்’ என்று விளக்கம் கொடுத்தார் கருணாநிதி.

ஆந்திர வழக்கறிஞர் அப்படி கூறியதற்கான ஆதாரத்தை ஆந்திர அரசிடமும், தமிழக அரசிடமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டு பல மாதங்களாகியும் பதில் வரவில்லை. மேலும், கருணாநிதிக்கு தா.கி. எழுதிய கடிதத்தின் நகல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.

குற்றம்சாட்டப்பட்டவர் முதல்வர் மகன் என்ற ஒரே காரணத்திற்காக, கொலை வழக்கில் போலீஸார் மேல் முறையீடு செய்யவில்லை. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள் ளதால், மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகிக் கொண்டே போகிறது.

இப்போது தா.கி.யின் மனைவி பத்மாவதி சாட்சி சொல்லத் தயாராக இருக்கிறார். இந்த வழக்கை நீதிமன்ற மறுவிசாரணை செய்யக்கோரி நீதி மன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்போகிறேன்’’ என்றார்.

இது ஒருபுறமிருக்க, தா.கி. படுகொலை வழக்கை மீண்டும் விசாரிக்க போலீஸாரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் ஒரு போலீஸ் ‘டீம்’ சி த்தூர் சென்று வந்துள்ளது. அந்த ‘டீம்’ சித்தூர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையை அலசி ஆராய்ந்து வந்துள்ளது.

இந்த டீம் கொண்டு வந்த ஆதாரங்களைக் கொண்டு இந்த வழக்கை மறுவி01b.jpgசாரணை செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் மதுரை போலீஸார்.

இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

‘‘இந்த வழக்கை அப்படியே மேல்முறையீடு செய்தால், ஒரு பயனும் இருக்காது. எனவே, இந்த வழக்கில் சாட்சிகளை மீண்டும் ‘மறு விசாரணை’ செய்ய நடவடிக்கை எ டுத்து வருகிறோம். எந்த வழக்கிலும் அரசு ஊழியர்களாக இருக்கும் சாட்சிகள், பிறழ் சாட்சியாக மாறமாட்டார்கள். ஆனால் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் அனைவரும் பிறழ்சாட்சியாக மாறியுள்ளனர்.

வி.ஏ.ஓ.க்கள் ஸ்ரீதரன், சுப்பிரமணியன், குருநாதன், ஜெயசீலன், அண்ணாதுரை, வருவாய் அலுவலர்கள் ராஜேந்திரன், சௌந்திரபாண்டியன், தாசில்தார்கள் சுந்தரராஜமூர்த்தி, கொம்பையன், முத்துச்சாமி, துணை கலெக்டர் திருமூர்த்தி ஆகியோர் இந்த வழக்கில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் ஆளும் கட்சியினரால் மிரட்டப்பட்டு, பிறழ்சாட்சியாக மாறிவிட்டனர். இவர்களில் பலர் இப்போது ஓய்வும் பெற்றுவிட்டனர். இவர்கள் நடந்த உ ண்மையைச் சொல்ல தற்போது முன்வருகிறார்கள். அதேபோல், தா.கி.யின் மனைவி பத்மாவதி மற்றும் சிலரும் அழகிரிக்கு எதிராக சாட்சி சொல்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அப்படி அழகிரிக்கு எதிராக சாட்சி சொல்ல வருபவர்களிடம் தனியாக ஒப்புதல் வாக்குமூலம் பெற்று, அந்த வாக்குமூலங்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, மறுவிசாரணை கேட்கப்போகிறோம்.

சித்தூர் நீதிமன்றத்தில் சாட்சிகள் தமிழில் சொன்ன விஷயங்களை, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக தெலுங்கில் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். மேலும், கடந்த மாதம் நடந்த ரெய்டின்போது, எஸ்ஸார் கோபி தோட்டத்தில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், இந்தக் கொலை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்தக் கடிதத்தையும், கருணாநிதிக்கு தா.கி. கைப்பட எழுதிய கடிதத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் போகிறோம். குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை முதலமைச்சராக இருந்ததால், மேல்முறையீடு செய்யவில்லை என கால தாமதத்திற்குக் காரணம் கூறினால் கண்டிப்பாக எங்களுக்கு சாதகமாக நீதிமன்றம் உத்தரவிடும்’’ என்றார்

நம்பிக்கையுடன்.

ஏற்கெனவே அழகிரி மீது பல வழக்குகள் இருந்தபோதிலும் இந்த வழக்கில் அவர் நிச்சயம் சிக்குவார். அழகிரிக்கு இது ‘ஃபைனல் பஞ்ச்’ என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

படங்கள்: ராமசாமி

வீர. வெற்றிப்பாண்டியன்

-குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.